காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த இருங்காட்டு கோட்டை ரேஸ் மைதானத்தில் ரேஸ் கார் விபத்து தனியார் ஓட்டல் அதிபர் உயிரிழப்பு. விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



சென்னை தேனாம்பேட்டை போயஸ் ரோடு பகுதியில் வசிப்பவர் குமார் வயது (57). இவர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் sign inn என்ற  ஓட்டல் நடத்தி வந்தார். இவர்  கார் ரேஸில் மிகுந்த ஆர்வமாக இருந்து உள்ளார். பல கார் ரேஸில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று உள்ளார். இந்நிலையில் திருப்பெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் உள்ள கார் ரேஸ் மைதானத்தில் இன்று நடந்த 36 கிலோ மீட்டர் IJTC  கார் ரேஸில் கலந்து கொண்டார்.



ரேஸ் ட்ராக்கில்  கார்கள் சீறி பாய்ந்து சென்றன. அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக குமார் ஓட்டி சென்ற  கார் அவரின் கட்டு பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த குமார் தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கபட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பெரும்புதூர் காவல் ஆய்வாளர்  ரமேஷ் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருப்பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.