மேலும் அறிய

புதுச்சேரியில் பயங்கரம்: செல்போனுக்கு வந்த ஒரு குறுஞ்செய்தி... ஒரே நாளில் 10 பேரிடம் ரூ.3 லட்சம் சுருட்டல்...!

புதுச்சேரியில் போலி 'ஏ.பி.கே' (APK) செயலி மற்றும் ஆன்லைன் லிங்க் மூலமாக ஒரே நாளில் அடுத்தடுத்து 10 பேரிடம் சுமார் ரூ.2 லட்சத்து 96 ஆயிரம் சுருட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் சமீபகாலமாக ஆன்லைன் மற்றும் பகுதிநேர வேலைவாய்ப்பு, செயலிகளை பதிவிறக்கம் செய்யக் கோருதல் போன்ற பல்வேறு நூதன வழிகளில் பொதுமக்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது போலி 'ஏ.பி.கே' (APK) ஃபைல் மூலமாக புதுச்சேரியைச் சேர்ந்த 10 பேரிடம் சுமார் 2 லட்சத்து 96 ஆயிரத்து 813 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஏ.பி.கே (APK) செயலி மூலம் விழுந்த முதல் விக்கெட்!

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் மொபைல் போனுக்கு அண்மையில் குறுஞ்செய்தி (SMS) ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், தான் ஒரு பிரபல தனியார் கார் வாடகைக்கு விடும் (Rental Car) நிறுவனத்தின் பிரதிநிதி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

மேலும், தங்களது நிறுவனத்தின் பிரத்யேக செயலியை இன்ஸ்டால் செய்தால் பல்வேறு சலுகைகள் மற்றும் வருமானம் கிடைக்கும் என ஆசைவார்த்தைகளைக் கூறியுள்ளார். அதனை நம்பிய காலாப்பட்டு நபர், அந்த மர்ம நபர் அனுப்பிய லிங்க் மூலமாக ஒரு குறிப்பிட்ட ஏ.பி.கே (APK) ஃபைலை தனது மொபைலில் பதிவிறக்கம் செய்து நிறுவியுள்ளார்.

அடுத்தடுத்து 10 பேர் சிக்கினர்

இதேபோல் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் ஆன்லைன் லிங்க்குகள் மூலமாக அடுத்தடுத்து 9 பேர் தங்களது பணத்தை பறிகொடுத்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

  • காந்திநகரை சேர்ந்த நபர் - ரூ.48,000
  • கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்த நபர் - ரூ.39,000
  • கோவிந்த சாலையை சேர்ந்த பெண் - ரூ.39,000
  • மிஷன் வீதியை சேர்ந்த பெண் - ரூ.39,000
  • காலாப்பட்டை சேர்ந்த மற்றொரு நபர் - ரூ.35,000
  • கோரிமேட்டை சேர்ந்த நபர் - ரூ.27,000
  • கோரிமேட்டை சேர்ந்த மற்றொருவர் - ரூ.25,000
  • ஒதியன்சாலையை சேர்ந்த நபர் - ரூ.6,828
  • பங்கூரை சேர்ந்த நபர் - ரூ.1,394

புதுச்சேரியில் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 10 பேர் தங்களது வங்கி கணக்குகளில் இருந்து ரூ.2 லட்சத்து 96 ஆயிரத்து 813-ஐ இழந்துள்ளனர்.

எப்படி நடந்தது திருட்டு?

அந்த போலியான செயலியில் தனது வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் ரகசிய எண்களை அவர் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து, மொபைலுக்கு வந்த ஓ.டி.பி (OTP) எண்ணையும் மர்ம நபரிடம் பகிர்ந்துள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 59,081 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. அதிர்ச்சியடைந்த அவர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்தார்.

சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை

ஒரே நேரத்தில் இத்தனைப் பேர் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தது தொடர்பாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸாருக்கு அடுத்தடுத்து புகார்கள் வந்தன. பாதிக்கப்பட்டவர்களின் புகார்களைப் பெற்றுக்கொண்ட போலீஸார், மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மோசடிப் பேர்வழிகள் பயன்படுத்திய வங்கி கணக்குகள், மொபைல் எண்கள் மற்றும் அவர்கள் அனுப்பிய ஏ.பி.கே லிங்க்குகளின் ஐபி முகவரி (IP Address) ஆகியவற்றை வைத்து சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சைபர் கிரைம் போலீஸாரின் அவசர எச்சரிக்கை:

அன்னிய நபர்களிடம் இருந்து வாட்ஸ்அப் அல்லது எஸ்.எம்.எஸ் மூலமாக வரும் எந்தவொரு 'APK' ஃபைல்களையும் மொபைலில் இன்ஸ்டால் செய்யக் கூடாது. கூகுள் பிளே ஸ்டோர் தவிர்த்து பிற வழிகளில் செயலிகளை பதிவிறக்குவது ஆபத்தானது. மேலும், எந்தவொரு சூழ்நிலையிலும் வங்கி கணக்கு விவரங்களையோ, ஓ.டி.பி (OTP) எண்களையோ யாருக்கும் பகிர வேண்டாம் எனப் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆன்லைன் மோசடிக்கு உள்ளானால் உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணை அழைக்கவும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
"எப்போது இடிந்து விழுமோ?" - மயிலாடுதுறையில் 20 குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்!
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thai Maman Thanga Mothiram : குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
ARUN IPS: தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
Carens Clavis EV: 490KM ரேஞ்ச் கொடுக்கும் மின்சார காருக்கு ரூ.1.8 லட்சம் தள்ளுபடி - விலை, அம்சங்கள், வசதிகள்
490KM ரேஞ்ச் கொடுக்கும் மின்சார காருக்கு ரூ.1.8 லட்சம் தள்ளுபடி - விலை, அம்சங்கள், வசதிகள்
Gold and silver rate today : ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...
ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Embed widget