செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள கடமலைபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் கடந்த 12ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தபோது இரவில் திடீரென முகமூடி அணிந்து இருந்த அடையாளம் தெரியாத 9 மர்ம நபர்கள்,  ஜெகநாதன் வீட்டிற்குள் புகுந்து அவரையும் அவரது குடும்பத்தினரையும், கத்தியை காட்டி மிரட்டியதோடு அவர்கள் அனைவரையும் கட்டிப்போட்டு அவர்கள் அணிந்திருந்த தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.



 இது குறித்து ஜெகநாதன் உடனடியாக அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உடனடியாக கொள்ளையர்களை கைது செய்ய மதுராந்தகம் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பரத் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து 30க்கும் மேற்பட்டோர் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

 

இந்நிலையில் அச்சரபாக்கம் பகுதியிலேயே சம்பந்தப்பட்ட கொள்ளையர்கள், இதேபோல் மற்றொரு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சம்பவ இடத்தில் போலீசார் அங்கு வாகன சோதனை மேற்கொண்டனர். 



இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 1.கேசவன் 2.பிரபு 3.சசிகுமார் 4.முகமது அப்துல்லா 5.அருள்முருகன் 6.ராஜா கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 7.சதீஷ்குமார்  கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் ஆகிய 8 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஒப்புக்கொண்டனர்.



மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் மீது கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களிலும் தமிழகத்தில் கொலை கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் எட்டு பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



 

கொள்ளை அடிக்கப்பட்ட 12 சவரன் தங்க நகை 250 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய 10 செல்போன்கள், கத்தி,  இருசக்கர வாகனம், சொகுசு கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்து விசாரணைக்கு பின் அவர்களை சிறையில் அடைத்தனர்.


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண