உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் 21 வயது பெண் ஒருவர் தனது மூத்த சகோதரியின் கணவர் மற்றும் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவளை கொலை செய்த பின்னர், ஆதாரங்களை அழிப்பதற்காக அவர்கள் உடலை எரித்ததாக போலீசார் தெரிவித்தனர். 

Continues below advertisement

பெண் காணவில்லை:

ஜனவரி 23 அன்று தங்கள் வீட்டு பெண்ணைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர். காவல்துறை அதிகாரிகளின் தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களும் அவரது உதவியாளர்களும் அந்த பெண்ணை தங்களுடன் வருமாறு ஏமாற்றி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து பின்னர், கழுத்தை நெரித்து கொன்றனர். பின்னர், சாட்சியங்களை அழிப்பதற்காக அவர்கள் அவரது உடலை எரித்ததாகக் கூறப்படுகிறது, கைது செய்யப்பட்ட ஆஷிஷ், தான் செய்த கொடூரமான குற்றத்தை  ஒப்புக்கொண்டார்.

பெண்ணின் சடலத்தின் மண்டை ஓடு எரிந்த நிலை மீட்கப்பட்டுள்ளதாகவும், தடயவியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஆஷிஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் தப்பி ஓடிய அவரது கூட்டாளிகளை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Continues below advertisement

குற்றம் சாட்டப்பட்ட ஆஷிஷ், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண்ணுக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது . புத்தனா பகுதியில் அமைந்துள்ள பவானா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஓட்டலில் இளம்பெண் கற்பழிப்பு

மேலும் இதே மாவட்டத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில்,  ஓட்டல் ஒன்றில் 15 வயது சிறுமி இருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சிறுமியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக புகார் பதிவு செய்ததில்- விஷால், அவரது நண்பர் அங்கித் மற்றும் கஃபே உரிமையாளர் அக்ஷய் சர்மா - மற்றும் மூவரும் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 10-ம் வகுப்பு மாணவனை ஓட்டலுக்கு வருமாறு கூறியதாகவும், பின்னர் விஷால் மற்றும் அங்கித் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குடும்பத்தினர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

அவரது ஓட்டலில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்காக ஓட்டலின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.