மும்பையில் 20 மாத பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 35 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மும்பையின் வோர்லி பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு 20 மாத குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்த தம்பதியினரின் குழந்தையை கடந்த சில நாட்களாக பக்கத்து வீட்டில் இருந்த 35 வயதான நபர் ஒருவர் நோட்டமிட்டு வந்துள்ளார். 


இந்தநிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு குழந்தையின் தந்தை வேலைக்கு சென்ற நிலையில், தாய் அருகிலிருந்த கடைக்கு சென்றுள்ளார். இதை பயன்படுத்திகொண்டு அந்த நபர் அந்த சிறுமியை பாலியல்  வன்கொடுமை செய்துள்ளார். 


பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் திரும்பி வந்தபோது அந்த 20 மாத குழந்தை தொடர்ந்து அழுதுள்ளது. என்னவென்று தெரியாத பெற்றோர்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 


குழந்தையை பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், குழந்தையை யாரோ ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர், தங்களது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து குற்றவாளிமீது ஐபிசி பிரிவு 376 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ்   நேற்று முன் தினம் கைது செய்தனர். 


போக்சோ சட்டம் : 


கடந்த சில ஆண்டுக்களாக 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் இதுபோன்ற செய்திகள் சமூக ஊடங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும் நாம் காதுகளுக்கு வந்து சேர்கிறது. இத்தகைய கொடுமைகள் இனி எவருக்கும் நடைபெறக்கூடாது எனவும், பொதுமக்கள் கடுமையான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற தவறு செய்பவர்களுக்கு காவல்துறையினரால் போக்சோ சட்டம் பதியப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். இந்த நிலையில், போக்சோ சட்டம் என்ன என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.


18 வயதிற்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகளை பாதுகாக்கப்படுபதற்கு கொண்டுவரப்பட்டதே இந்த போக்சோ சட்டம். இந்த சட்டம் எந்த அளவிற்கு பாதுகாப்பானது. இதன் சட்டம் மற்றும் ஷரத்துகள் பின்வருமாறு : 



  • Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்

  • Aggravated penetrative sexual assault - தீவிரமான ஊடுருவும் பாலியல் தாக்குதல்

  • Sexual Assault - பாலியல் தொல்லை

  • Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை

  • Sexual Harassment - பாலியல் தொந்தரவு

  • Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்


இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றனர்.



  1. 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை

  2. இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை

  3. 12 வயதிற்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது)