தெலங்கானா மாநிலத்தில் காதலித்து திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் சகோதரி கணவரை சரமாரியாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். 

Continues below advertisement

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள பொம்மலராமரம் மண்டலில் தான் இச்சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள நெரெட்மெட்டைச் சேர்ந்த அஜய், ராமலிங்கம்பள்ளியைச் சேர்ந்த ஒரு இளம் பெண் ஒருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு அப்பெண்ணின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால் அதையும் மீறி இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் அந்த இளம் பெண்ணின் குடும்பத்தில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அவரது சகோதரர் பெரும் கோபத்தில் இருந்துள்ளார். இந்த விவகாரத்தில் தனது சகோதரி கணவரை பழிவாங்க திட்டமிட்டார். 

இந்த நிலையில் பிப்ரவரி 25ம் தேதி அந்த இளம் பெண்ணின் மொபைல் போனில் இருந்து அஜய்க்கு சகோதரர் மெசெஜ் அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறு அழைத்துள்ளார். தனது மனைவி தான் அழைப்பதாக நம்பி அஜய் அங்கு சென்றார். அவர் சென்ற இடம் கிராமத்தின் புறநகர்ப் பகுதியாக இருந்துள்ளது. அந்த இடத்தை அடைந்தவுடன் அஜயை அங்கு மறைந்திருந்த அந்த பெண்ணின் சகோதரரும் அவரின் நண்பர்களும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். மேலும் அஜய் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவி பின்னர் கத்தியால் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். 14 முறை கத்தியால் குத்தியதில் இரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். 

Continues below advertisement

ஆனால் அஜய் இறந்து விட்டதாக நினைத்த அந்த பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு அக்கம் பக்கத்து மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் விரைந்து சென்று அஜயை மீட்டு ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இளம்பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர். 

காதல் திருமணம் செய்ததால் சகோதரி கணவர் மீது கொடூரமான தாக்குதல் நடைபெற்ற சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதுதொடர்பாக சம்பவத்தை நேரில் பார்த்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.