கோவில்பட்டியில் ஆபாசமாக பேசும் கந்துவட்டி கும்பல் - தற்கொலை செய்து கொள்ள அனுமதி கோரி கோட்டாட்சியர் காலில் விழுந்த பெண் பரபரப்பு
ஆனால் அங்கு சொன்னபடி ஊதியம் கொடுக்கமால் குறைவான ஊதியம் கொடுத்த காரணத்தினால் வட்டி கொடுக்க முடியாத சூழ்நிலைக்கு வனிதா குடும்பத்தினர் தள்ளப்பட்டுள்ளனர். வேறு வழியில்லமால் வட்டி கொடுக்க வேண்டும் என்பதற்காக மேலும் சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 4 லட்ச ரூபாய் பணத்திற்காக வட்டி கொடுக்க மற்றவர்களிடம் பணம் வாங்கி தற்பொழுது 20 லட்ச ரூபாய் கடனில் வனிதா குடும்ப தத்தளித்து வருகிறது. இதில் பலருக்கும் வாங்கிய முதலை விட அதிகமாக கொடுத்த போதிலும், வனிதா குடும்பத்திற்கு பணம் கொடுத்தவர்கள் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் வனதாவிற்கு கோவில்பட்டியயை சேர்ந்த ஆசிரியை புஷ்பா 1லட்சத்து 70 ஆயிரம் 10 பைசா வார வட்டிக்கு கொடுத்துள்ளார்.
வனிதாவும் தற்பொழுது வரை 2லட்ச ரூபாய் வட்டி கொடுத்துள்ளார். ஆனால் அசல் வட்டி என 6 லட்ச ரூபாய் தர வேண்டும் என்று ஆசிரியை புஷ்பா மற்றும் அவரது கணவர் ராமமூர்த்தி ஆகியோர் தொடர்ந்து வனிதாவை மிரட்டி வருவதாவுகம், ஆபாசமாக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து போன வனிதா, அவரது இருமகன்கள் மற்றும் அவரது அத்தை யசோதா ஆகியோர் கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாரணயனிடம் வந்தார். தாங்கள் தற்கொலை செய்து கொள்ள அனுமதி தர கோரி மனு அளித்தது மட்டுமின்றி, திடீரென வனிதா கோட்டாட்சியர் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையெடுத்து கோட்டாட்சியர் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்;