Crime: அரவக்குறிச்சியில் 16 ஆடுகளை திருடிய பாஜக நிர்வாகி கைது

அரவக்குறிச்சி பகுதியில் 16 ஆடுகளை திருடிய கொடைக்கானல் பாஜக நிர்வாகி உட்பட 3 நபர்கள் கைது.

Continues below advertisement

அரவக்குறிச்சி பகுதியில் 16 ஆடுகளை திருடிய கொடைக்கானல் பாஜக நிர்வாகி ரஞ்சித் குமார் உட்பட 3 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இரண்டு பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Continues below advertisement

 


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே கடந்த 27 ஆம் தேதி அதிகாலை TN 01 AB 2333 என்ற பதிவு எண் கொண்ட இனோவா காரில் வந்த ஐந்து நபர்கள் 16 ஆடுகளை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் 

 


கொடைக்கானல், கீழ் மலை பாஜக நிர்வாகி ரஞ்சித் குமார் (38) மற்றும் சதீஷ்குமார் (26), சிவகுமார் (25) உட்பட 5 நபர்கள் பாஜக கட்சி கொடி கொண்ட இனோவா காரில் ஆடு திருடியது தெரியவந்தது.

 



இதனை தொடர்ந்து மூன்று நபர்கள் போலீசார் கைது செய்து ஒரு ஆட்டுக்குட்டி மற்றும் காரை  போலீசார் கைப்பற்றி  விசாரணை மேற்கொண்டு அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இரண்டு நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 


இவர்கள், தென்னிலை, பரமத்தி மற்றும் அரவாக்குறிச்சி காவல் நிலைய பகுதிகளில் ஆடுகளை திருடி இன்னோவா காரில் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டு ஆடு மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola