சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி கற்பக விநாயகர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த குமார் (61). இவர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் பணி செய்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் இவரது மகன் ஆகியோர் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுதே பீரோக்கள் இருந்த அறையின் ஜன்னலை உடைத்து கதவை தாழிட்டு விட்டு பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகை, வைர மோதிரம் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் ஐம்பதாயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






இரவு உள்ளறையில் இருந்து சத்தம் கேட்டபோது மனைவி அறையில் தூங்குவதாக  நினைத்து உள்ளார் ஆனந்தகுமார். அதன் பின்பு காலையிலும் அறை கதவு திறக்கப்படாததால் எதிரில் வசிக்கும் தனது மகளை அழைத்து அம்மா உள்ளறையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் கதவை திறக்கவில்லை என்று கூறிய பொழுது  மகள் அம்மா எங்கள் வீட்டில் தான் இருக்கிறார் அங்கு எப்படி இருப்பார் ? என்று கேட்டுள்ளார்.

 


 


 


அதன் பின்பு தான் ஆனந்த குமாரும் அவரது மகனும் பின்பக்கமாக சென்று ஜன்னலை பார்க்கும் பொழுது தான் ஜன்னல் உடைக்கப்பட்டு உள்பக்கமாக கதவை தாழிட்டு விட்டு கொள்ளையர்கள் பீரோவில் இருந்த நகை,பணத்தையும் வெள்ளி பொருட்களையும் வைர நகையையும் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து ஆனந்தகுமார் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காரைக்குடி வடக்கு காவல் துறையினர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.



 




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண