Just In





Cooker Murder : கொடூரமாக கொல்லப்பட்ட மனைவி! யூடியூப்பில் தப்பிக்க வழி தேடிய கணவன்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்
Cooker Murder : ஹைதராபாத் குக்கர் கொலை வழக்கில் மனைவியை கொன்ற பிறகு, குற்றவாளி யூடியூப்பில் தப்பிப்பதற்கான வழிகளைத் தொடர்ந்து தேடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஹைதராபாத் கொலை வழக்கு:
ஹைதராபாத்தில் இருந்து ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் தனது மனைவியைக் கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி, பிரஷர் குக்கரில் கொதிக்க வைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாட்சியங்களை அழிக்கும் நோக்கத்தில், குற்றம் சாட்டப்பட்ட உடலை வேகவைத்து ஏரியில் வீசினர்.
குற்றவாளி தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். பெண் காணாமல் போனது மற்றும் வழக்கின் மற்ற அம்சங்கள் குறித்து தடயங்களைப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். போலீஸ் விசாரணையில் குற்றவாளி பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
குக்கரில் வெந்த உடல் பாகங்கள்:
சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு, குருமூர்த்தி மாதவியை திருமணம் செய்து கொண்டார், அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். விசாரணையில் குருமூர்த்திக்கு மனைவி மீது சந்தேகம் இருந்ததும், இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக மாதவியை கொலை செய்ய குருமூர்த்தி திட்டமிட்டார். கொலைக்குப் பிறகு, குற்றவாளி கத்தியை வைத்து உடலை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் போட்டு வேகவைத்துள்ளார்.
தப்பிக்க யூடியூப்பில் வீடியோ தேடிய கொலையாளி:
கொலைக்குப் பிறகு, குற்றவாளி யூடியூப்பில் தப்பிப்பதற்கான வழிகளைத் தொடர்ந்து தேடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இறந்தவரின் பெற்றோர் குருமூர்த்தியிடம் தங்கள் மகள் குறித்து கேட்டபோது, சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறினார். குருமூர்த்தியின் பேச்சை நம்பாத மாதவியின் பெற்றோர்கள் காவல் நிலையம் சென்றனர்.
எஃப்.ஐ.ஆரில், ஜனவரி 16-ம் தேதி, அந்த பெண் குருமூர்த்தியுடன் சண்டையிட்டு, யாருக்கும் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறினார். கடந்த ஜனவரி 18ஆம் தேதி மீர்பேட்டை காவல் நிலையத்தில் குருமூர்த்தியின் உறவினர்கள் புகார் அளித்தபோதும் அவர் அவர்களுடன்தான் இருந்தார்.
இதையும் படிங்க: துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
விஷயத்தின் தீவிரத்தை பார்த்த போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மாதவியை தேட, போலீசார் குருமூர்த்தியை கைது செய்து விசாரித்ததில், அவர் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். அதில் மனைவியுடன் சண்டையிட்டு கொடூரமாக தாக்கியதில் மாதவி உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் போட்டு வேக வைத்து அருகில் உள்ள ஏரியில் வீசியதாக கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணை:
இது குறித்து எல்பி நகர் காவல் துணை ஆணையர் சி பிரவீன் குமார் கூறியதாவது “ விசாரணையில் அவரது வாக்குமூலத்தை நாங்கள் சரிபார்த்து வருகிறோம், தற்போது வரை, இறந்த பெண்ணின் உடல் உறுப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. விசாரணையில் நல்ல முன்னேற்றம் வருகிறது, என்று கூறினார்.