பெரம்பூர் அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் சிறுவன் உட்பட ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து பட்டாக்கத்திகள் மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


சென்னை, பெரம்பூர் அதிமுக பகுதிக் கிளைச் செயலாளர் இளங்கோவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை கைது செய்தவர்களைப் பிடிக்க காவல் துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்படி, பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த சஞ்சய், கணேசன், வெங்கடேசன்,  அருண்குமார் மற்றும் சிறுவன் உட்பட மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து பட்டாக்கத்திகள் மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.