<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>சீர்காழி அருகே கொடூரம்; முதியவரை ஈவு இரக்கமின்றித் தாக்கி செல்ஃபி எடுத்த தவெக நிர்வாகி: அரங்கேறிய மனிதாபிமானமற்ற செயல்..!</title><atom:link href="https://tamil.abplive.com/crime/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 22 Jul 2026 15:50:23 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-railway-officer-upi-bribe-private-cables-evidence-tnn-268597</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-railway-officer-upi-bribe-private-cables-evidence-tnn-268597#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 14:47:37 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-railway-officer-upi-bribe-private-cables-evidence-tnn-268597</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;மயிலாடுதுறை ரயில்வே கோட்டத்தில், தகுந்த உரிமம் (License) இன்றி மேம்பாலங்கள் வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்ட தனியார் தொலைத்தொடர்பு கேபிள்களுக்காக ரூ.50,000 வரை லஞ்சம் கோரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான தொலைபேசி உரையாடல் ஆடியோ மற்றும் யுபிஐ (UPI) பணப் பரிவர்த்தனை ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் ரயில்வே விஜிலன்ஸ் அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விதிகளை மீறி செயல்படும் தனியார் நிறுவனங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ரயில்வே இருப்புப் பாதை தண்டவாளங்களை மேம்பாலங்களின் வழியாகவோ அல்லது நிலத்தடி (Underground) பாதைகள் வழியாகவோ கடந்து செல்லும் தனியார் ஃபைபர் மற்றும் தொலைத்தொடர்பு கேபிள் இணைப்புகளுக்கு, ரயில்வே நிர்வாகத்திடம் உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்குரிய கட்டணங்களைச் செலுத்தி, தடையில்லாச் சான்று (NOC) பெற்ற பின்னரே கேபிள் இணைப்புகளைக் கொண்டு செல்ல வேண்டும் என்பது கடுமையான விதியாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆனால், மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் உள்ள சாரங்கபாணி ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு பாலங்களின் வழியாக, எந்தவித அனுமதியும் கட்டணமும் இன்றி 15-க்கும் மேற்பட்ட தனியார் கேபிள் இணைப்புகள் முறையற்ற வகையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது தற்செயலாகக் கண்டறியப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ரூ.50,000 லஞ்சம்: அம்பலமான ஆடியோ மற்றும் UPI ஆதாரங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முறையான உரிமம் இல்லாமல் கேபிள்களைக் கொண்டு சென்ற தனியார் நிறுவனங்களிடம், அன்றைய காலகட்டத்தில் பணியில் இருந்த ரயில்வே உயர் அதிகாரியான சீனியர் செக்சன் என்ஜினியருக்காக (SSE) லஞ்சம் கேட்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே ட்ராலிமேனாகப் பணிபுரியும் கார்த்தி என்பவர், லஞ்சம் கேட்டு தனியார் கேபிள் நிறுவன உரிமையாளரிடம் பேசிய தொலைபேசி உரையாடல் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஆடியோ உரையாடலின் சுருக்கம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&quot;முறையான லைசென்ஸ் இல்லாமல் மேம்பாலம் வழியாகச் செல்லும் கேபிள் இணைப்புகளுக்கு, எனது உயரதிகாரி தலா ரூ.50,000 லஞ்சமாக எதிர்பார்க்கிறார். இதைக் கொடுத்தால் மட்டுமே கேபிள்களை தொடர்ந்து இயக்க முடியும்.&quot; என அந்த உரையாடல் உள்ளது. இந்த ஆடியோவைத் தொடர்ந்து, தனியார் நிறுவன நபர் லஞ்சப் பணத்தின் ஒரு பகுதியை யுபிஐ (UPI) செயலி மூலம் செலுத்திய ஆதாரமும் வெளியாகியுள்ளது. அதில், கடந்த டிசம்பர் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முறையே ரூ.8,000 மற்றும் ரூ.20,000 என மொத்தம் ரூ.28,000 இரண்டு தவணைகளாகச் செலுத்தப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மேலதிகாரிகளின் அலட்சியமும் ஊழியர்களின் கொந்தளிப்பும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ரயில்வே துறைக்கு நேர்மையான முறையில் வர வேண்டிய பல லட்சம் ரூபாய் வருவாய், சில ஊழல் அதிகாரிகளின் சுயநலத்தால் தனிநபர்களின் பைகளுக்குச் சென்றுள்ளது. இது குறித்து நேர்மையான ரயில்வே ஊழியர்கள், தகுந்த ஆதாரங்களுடன் ரயில்வே துறை மேலதிகாரிகளுக்கும், ரயில்வே விஜிலன்ஸ் (Railway Vigilance) அதிகாரிகளுக்கும் ஏற்கனவே பலமுறை புகார் அனுப்பியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இருப்பினும், இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எந்தவித மேல்நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தவறு செய்த அதிகாரிகளைக் காப்பாற்றச் சிலர் முயல்வதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அரசுக்குச் சேர வேண்டிய வருவாயைச் சூறையாடி, லஞ்ச வேட்டையில் ஈடுபட்ட உயர் அதிகாரி மற்றும் அவருக்குத் துணையாகச் செயல்பட்ட ட்ராலிமேன் கார்த்தி மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வெளியாகியுள்ள ஆடியோ மற்றும் யுபிஐ பரிவர்த்தனை ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, தென்னக ரயில்வே பொதுமேலாளர் மற்றும் விஜிலன்ஸ் துறை உடனடியாகத் தலையிட்டு நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், லஞ்சப் புகாரில் தொடர்புடைய அனைவரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் ரயில்வே ஊழியர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/72864a335a13f3c4982fcac307481a4c1784711803093186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ரூ.63 லட்சம் அவுட் !! சினிமா பாணியில் நடந்த தங்க மோசடி !! உணவகத்தில் நடந்தது என்ன ?]]></title><link>https://tamil.abplive.com/news/chennai/chennai-gold-trader-duped-63-lakhs-four-arrested-egmore-tnn-268539</link><comments>https://tamil.abplive.com/news/chennai/chennai-gold-trader-duped-63-lakhs-four-arrested-egmore-tnn-268539#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 11:42:52 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ சென்னை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/chennai/chennai-gold-trader-duped-63-lakhs-four-arrested-egmore-tnn-268539</guid><description><![CDATA[&lt;div class=&quot;text__StyledText-sc-n3xoc4-0 hRGIKp&quot;&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;&quot; குறைந்த விலையில் தங்கம் &quot;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர் அன்மோல் ஜெயின். தங்க வியாபாரியான இவர் தனது உறவினர் நமீத் என்பவருடன் இணைந்து மொத்தமாக தங்கம் வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 17-ந்தேதி , நமீத் தனது உறவினர் அன்மோல் ஜெயினுக்கு போன் செய்து , குறைந்த விலைக்கு தங்கம் கிடைக்கும் இடம் ஒன்று இருப்பதாகவும் , அங்கு சென்று தங்கம் வாங்கிக் கொள்ளுமாறும் கூறி உள்ளார். இதனையடுத்து , தங்கம் வாங்குவதற்காக ரூ.63 லட்சத்தை தனது ஊழியர் ராஜேந்திர ஜெயின் மூலம் எழும்பூர் பவுண்டன் பிளாசாவிற்கு அன்மோல் ஜெயின் வரவழைத்து உள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;&quot; தங்கத்தையும் - ரசீதையும் எடுத்து வருகிறேன் &quot;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;குறைந்த விலைக்கு தங்கம் விற்பனை செய்பவர்களை அடையாளம் காட்டுவதற்காக ஸ்ரீராம் என்பவர் அன்மோலைச் சந்தித்துள்ளார். ஸ்ரீராம் தன்னுடன் சக்தி என்ற வாலிபரை அழைத்து வந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;சக்தியும் அவரது தந்தை சாந்தகுமாரும் எழும்பூர் பவுண்டன் பிளாசாவில் கடை வைத்திருப்பதாகவும் , பெரிய அளவில் தங்கம் வியாபாரம் செய்வதாகவும் அன்மோல் ஜெயினிடம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளனர்.&lt;/p&gt;
&lt;div class=&quot;text__StyledText-sc-n3xoc4-0 hRGIKp&quot;&gt;
&lt;p&gt;இதையடுத்து , பவுண்டன் பிளாசா அருகே வைத்து 63 லட்சம் ரூபாயை அன்மோல் ஜெயின் கொடுத்து உள்ளார். பணத்தை வாங்கிய சக்தி , மேலே சென்று பணத்தை வைத்து விட்டு , தங்கத்தையும் ரசீதையும் எடுத்து வருகிறேன் எனக் கூறி விட்டு சென்று உள்ளார்.&lt;/p&gt;
&lt;div class=&quot;text__StyledText-sc-n3xoc4-0 hRGIKp&quot;&gt;
&lt;p&gt;சிறிது நேரத்தில் சாந்தகுமார் ஒரு போன் அழைப்பு வந்ததாக நாடகமாடி , அன்மோல் ஜெயினை ஜெமினி பாலம் அருகே உள்ள ஸ்ரீமிட்டாய் உணவகத்திற்கு வரச் சொல்லி உள்ளார். அங்கு தங்கம் ஒப்படைக்கப்படும் என நம்பிச் சென்ற அன்மோல் , அங்கு நீண்ட நேரம் காத்திருந்தும் யாரும் வராததால் அதிர்ச்சி அடைந்தார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;காவல் நிலையத்தில் புகார் - 5 பேர் கைது&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;மீண்டும் ஸ்ரீராமைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது , அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அன்மோல் ஜெயின், இது பற்றி எழும்பூர் போலீசில் புகார் அளித்தார்.&lt;/p&gt;
&lt;div class=&quot;text__StyledText-sc-n3xoc4-0 hRGIKp&quot;&gt;
&lt;p&gt;இது பற்றி தீவிர விசாரணை நடத்திய போலீசார் சாந்தகுமார் , ஸ்ரீராம் , ராம் குமார் மற்றும் உதய் கிரண் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மோசடிக்கு மூளையாக செயல்​பட்ட சக்​திவேல் ( வயது 23 ) என்​பவரும் பிடிபட்​டுள்​ளார்.&lt;/p&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/d5c90c854749a837b31384707962475a17847011011261310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[9 வாரிசுகளை மறைத்துப் பத்திரப்பதிவு: விவசாயியின் நிலத்தை ஆட்டையைப் போடப் பார்த்த நபர் சிக்கியது எப்படி?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/marakkanam-nadukuppam-village-administrative-officer-signature-forgery-land-registration-268549</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/marakkanam-nadukuppam-village-administrative-officer-signature-forgery-land-registration-268549#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 11:42:43 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/marakkanam-nadukuppam-village-administrative-officer-signature-forgery-land-registration-268549</guid><description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம்: மரக்காணம் அருகே கிராம நிர்வாக அலுவலரின் (V.A.O.) கையெழுத்து மற்றும் அரசு முத்திரையைப் போலியாகப் பயன்படுத்தி, விவசாயி ஒருவரின் நிலத்தை அபகரித்து பத்திரப்பதிவு செய்த நபரை மரக்காணம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கும் இந்தச் சம்பவத்தில் அம்பலமாகியுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். விவசாயியான இவரது தாத்தா அரிகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமாக நடுக்குப்பம் கிராமத்தில் சர்வே எண் 155/1-ல் நிலம் உள்ளது. அரிகிருஷ்ணனின் மறைவுக்குப் பிறகு, இந்த நிலத்திற்கு வீரப்பன் உள்ளிட்ட 9 பேர் சட்டப்பூர்வ வாரிசுதாரர்களாக உள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் அவரது மகன் முருகன் (32) ஆகிய இருவரும் இந்தச் சொத்தின் மீது கண் வைத்துள்ளனர். நிலத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன், உண்மையான 9 வாரிசுதாரர்களையும் முற்றிலும் மறைத்து, தாங்களே அரிகிருஷ்ணனின் வாரிசுகள் எனக் கூறிச் சென்னையில் இருந்து போலி இறப்பு மற்றும் வாரிசுச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு&lt;/h2&gt;
&lt;p&gt;அத்துடன் நிற்காமல், நடுக்குப்பம் மேற்கு கிராம நிர்வாக அலுவலரின் (V.A.O.) கையொப்பம் மற்றும் அரசு அலுவலக முத்திரையைப் போலியாகப் பயன்படுத்தி, போலி 'அடங்கல்' ஆவணத்தைத் தயாரித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த போலி ஆவணங்களைக் கொண்டு, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மரக்காணம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் அந்த நிலத்தைத் தங்கள் பெயருக்கு வெற்றிகரமாகப் பத்திரப்பதிவும் செய்து முடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;வெளிச்சத்திற்கு வந்த உண்மை&lt;/h2&gt;
&lt;p&gt;தன் நிலத்தின் ஆவணங்களில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை அறிந்த நிலத்தின் உரிமையாளர் வீரப்பன், நடுக்குப்பம் மேற்கு கிராம நிர்வாக அலுவலரிடம் நேரடியாகச் சென்று, &quot;எங்கள் நிலத்திற்கு நீங்கள் எவ்வாறு தவறான ஆவணங்களைக் கொடுத்தீர்கள்?&quot; என நியாயம் கேட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதனால் அதிர்ச்சியடைந்த கிராம நிர்வாக அலுவலர், சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவு ஆவணங்களை வாங்கிப் பரிசோதனை செய்தார். அப்போது, அந்த ஆவணங்களில் இருப்பது தன் கையொப்பம் இல்லை என்பதும், அரசு அலுவலக முத்திரை போலியாக உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டிருப்பதும் அம்பலமானது.&lt;/p&gt;
&lt;h2&gt;காவல் நிலையத்தில் புகார் &amp;amp; வாலிபர் கைது&lt;/h2&gt;
&lt;p&gt;இதனைத் தொடர்ந்து, தனது போலி கையொப்பம் மற்றும் அரசு முத்திரையைப் பயன்படுத்தி நில மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம நிர்வாக அலுவலர் மரக்காணம் காவல் நிலையத்திலும், வட்டாட்சியர் அலுவலகத்திலும் உடனடியாகப் புகார் அளித்தார். மேலும், நிலத்தின் வாரிசுதாரர்களில் ஒருவரான ரகுராமன் என்பவரும் இது குறித்து தனியாகப் புகார் அளித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தப் புகார்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த மரக்காணம் காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலி ஆவணங்கள் மூலம் நில மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து, நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (32) என்பவரை மரக்காணம் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;அரசு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!&lt;/h2&gt;
&lt;p&gt;இவ்வளவு பெரிய நில மோசடி நடைபெறும்போது, மரக்காணம் வட்டாட்சியர் மற்றும் சார்-பதிவாளர் ஆகியோர் முறையான வாரிசுச் சரிபார்ப்போ அல்லது கள ஆய்வோ (Field Inspection) செய்யாமல் பட்டா மாற்றம் மற்றும் பத்திரப்பதிவு செய்து கொடுத்தது எவ்வாறு? என்ற வலுவான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இதுபோன்று அரசு அதிகாரிகளின் போலி முத்திரைகள் மற்றும் கையொப்பங்களைப் பயன்படுத்தி மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேறு யாரேனும் நிலங்களை அபகரித்துள்ளனரா என்பது குறித்தும், இந்த மோசடியில் தொடர்புடைய பிற நபர்கள் குறித்தும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/2ef713e5565e1af4e684e05d57d5583b1784701255083194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[" ஊட்டிக்கு போறோம் தேடாதீங்க " நண்பர்கள் கூறிய பொய் !! தலை துண்டிக்கப்பட்ட தொழிலாளி]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tenkasi-kadayanallur-man-murder-case-arrest-tnn-268522</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tenkasi-kadayanallur-man-murder-case-arrest-tnn-268522#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 09:55:22 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tenkasi-kadayanallur-man-murder-case-arrest-tnn-268522</guid><description><![CDATA[&lt;h2 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;&quot; ஊட்டியில் சுற்றுலா - தேட வேண்டாம் &quot;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்த வலசை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன் ( வயது 27) கூலித் தொழிலாளியான இவர் கடந்த 6 - ம் தேதி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் அவரது மனைவி புவனேஸ்வரி சேர்ந்தமரம் போலீசில் புகார் அளிக்கச் சென்றார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;அப்போது மகேந்திரனின் நண்பர்கள் அவருக்கு போன் செய்து உங்களது கணவருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளோம் தேட வேண்டாம் என கூறினர். இதை உண்மை என நம்பிய புவனேஸ்வரி , போலீசில் புகார் கொடுக்காமலே வீடு திரும்பியதாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;ஆனால், 10 தினங்கள் கடந்த போதும் மகேந்திரன் வீட்டிற்கு வராததுடன் செல்போனிலும் தொடர்பு கொள்ளாததால் சந்தேகமடைந்த புவனேஸ்வரி சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் கடந்த 14 - ம் தேதி புகார் அளித்தார். அதன் பேரில் வாலிபர் மாயம் என வழக்குப் பதிந்து போலீசார் தேடி வந்தனர்.&lt;/p&gt;
&lt;h2 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;முள் செடியில் தூக்கி வீசப்பட்ட சடலம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகேந்திரனின் மொபட், மேலகடையநல்லூர் &amp;ndash; காசிதர்மம் செல்லும் சாலையில் குளத்துக்கரை அருகே கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.&lt;/p&gt;
&lt;p&gt;அதாவது, மேல கடையநல்லூரைச் சேர்ந்த 3 சிறார்கள் உட்பட 4 பேர் மகேந்திரனை கொலை செய்ததுடன், அவரது உடலை கடையநல்லூர் புதிய பஸ் நிலையம் மதுரை &amp;ndash; தென்காசி தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள மடத்துக்கு சொந்தமான பராமரிப்பு இல்லாத முள்செடிகள் நிறைந்த பகுதியில் சிறிய கிணற்றில் போட்டதும் தெரிய வந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;இதையடுத்து போலீசார் 3 சிறார்களை அழைத்துச் சென்று அந்த கிணற்றில் இருந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் கத்திக் குத்து காயத்துடன் கிடந்த மகேந்திரன் உடலை கைப்பற்றினர். ஆனால், தலையை காணவில்லை. குற்றாலம் கலைவாணர் கலையரங்கம் பின்புறம் உள்ள வாட்டர் டேங்க் பகுதியில் புதைத்ததாக சிறார்கள் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு சென்று தலையை மீட்டனர். இதையடுத்து வாலிபர் மாயம் வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;இச் சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது ;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;மகேந்திரனுக்கு மேலக்கடையநல்லூரை சேர்ந்த சிறுவனுடன் பழக்கம் இருந்துள்ளது. மது அருந்த சிறுவனை அழைத்து சென்றுள்ளார். பின்னர் சிறுவனிடம் மகேந்திரன் ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இதனைத் தொடர்ந்து அந்த சிறுவன் மற்றொரு சிறுவனை செல்போனில் அழைத்து வரச்சொல்லி இருக்கிறார். பின் இரண்டு சிறுவர்களும் சேர்ந்து மகேந்திரனிடம் சண்டை போட்ட போது மகேந்திரன் இருவரையும் தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு சிறுவனுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அவர் 23 வயது மதிக்கத்தக்க ஒரு நபரை அழைத்து வந்துள்ளார். நான்கு பேரும் சேர்ந்து மகேந்திரனை தாக்கியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;மயங்கி விழுந்தவரை கடையில் கத்தி மற்றும் கயிறு வாங்கி வந்து வயிறு பகுதியில் கத்தியால் குத்தியும் தலையை துண்டாக வெட்டியும் கொலை செய்துள்ளனர். உடலை அருகில் இருந்த ஒரு கிணற்றில் கயிற்றை கட்டி தள்ளி விட்டு, தலையை ஒரு பேக்கில் வைத்து குற்றாலம் கலைவாணர் கலையரங்கம் அருகே புதைத்துள்ளனர். பின்னர் இரவில் அங்கு உள்ள விடுதி ஒன்றில் தங்கி விட்டு மறுநாள் ஊருக்கு திரும்பி உள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/01/5ec4beef3e357cecc498db86b16cdb461730477083039211_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சைபர் மோசடியில் சிக்கிய புதுச்சேரி மாநிலம்; தினந்தோறும் பணத்தை இழக்கும் மக்கள்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-cyber-crime-online-scam-bitcoin-atm-card-fraud-268524</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-cyber-crime-online-scam-bitcoin-atm-card-fraud-268524#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 09:12:54 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-cyber-crime-online-scam-bitcoin-atm-card-fraud-268524</guid><description><![CDATA[&lt;p dir=&quot;ltr&quot;&gt;புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ஆன்லைன் மற்றும் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த 5 பேரிடம் பல வகையான தந்திரங்களைப் பயன்படுத்தி மொத்தம் ₹96,544 பணத்தைச் சுருட்டியுள்ளது ஒரு சைபர் கிரைம் கும்பல்.&lt;br /&gt;ஒரே நாளில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த மோசடி சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மோசடி விவரங்கள்&lt;/p&gt;
&lt;h2 dir=&quot;ltr&quot;&gt;1. அரியாங்குப்பம் (வங்கி கணக்கு ஊடுருவல்):&lt;/h2&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து, அவருக்குத் தெரியாமலேயே ₹2,144 எடுக்கப்பட்டுள்ளது. வங்கியிலிருந்து வந்த குறுஞ்செய்தியைப் பார்த்த பிறகே பணம் பறிபோனது அவருக்குத் தெரியவந்தது.&lt;/p&gt;
&lt;h2 dir=&quot;ltr&quot;&gt;2. அரியூர் (ஏ.டி.எம். கார்டு திருட்டு &amp;amp; பணப் பறிப்பு):&lt;/h2&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;அரியூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவரின் மொபைல் போனுக்கு, வங்கிக் கணக்கிலிருந்து ₹20,000 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் தனது கைப்பையைச் சோதித்தபோது ஏ.டி.எம். கார்டு காணாமல் போனது தெரியவந்தது. உடனடியாக வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில், மர்ம நபர்கள் மொத்தம் ₹40,000 பணத்தைச் சுருட்டியிருப்பது தெரியவந்தது.&lt;/p&gt;
&lt;h2 dir=&quot;ltr&quot;&gt;3. மேட்டுப்பாளையம் (பகுதிநேர வேலை ஆசைவார்த்தை):&lt;/h2&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பெண்ணைத் தொடர்புகொண்ட மர்ம நபர்கள், &quot;வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் கணிசமாகச் சம்பாதிக்கலாம்&quot; என ஆசைவார்த்தை கூறியுள்ளனர். அதை நம்பி முன்பணமாக ₹4,000 செலுத்திய அப்பெண்ணை, பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;h2 dir=&quot;ltr&quot;&gt;4. சாரம் (டெலிகிராம் &amp;amp; பிட்காயின் மோசடி):&lt;/h2&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;சாரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை 'டெலிகிராம்' செயலி மூலம் தொடர்புகொண்ட மர்ம நபர், பிட்காயின் (Bitcoin) வணிகத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறியுள்ளார். இதை உண்மை என நம்பி அந்தப் பெண் ₹48,000 பணத்தை அனுப்பிய நிலையில், அந்த நபர் இணைப்பைத் துண்டித்து ஏமாற்றியுள்ளார்.&lt;/p&gt;
&lt;h2 dir=&quot;ltr&quot;&gt;5. வில்லியனூர் (ஆன்லைன் ஷாப்பிங் &amp;amp; கூரியர் மோசடி):&lt;/h2&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;வில்லியனூரைச் சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் வந்த கவர்ச்சிகரமான விளம்பரத்தைப் பார்த்து சில பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். பொருட்களை டெலிவரி செய்ய 'கூரியர் கட்டணம்' செலுத்த வேண்டும் எனக் கூறி, மர்ம நபர்கள் அவரிடமிருந்து ₹2,400 பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;h2 dir=&quot;ltr&quot;&gt;காவல்துறை நடவடிக்கை&lt;/h2&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;பாதிக்கப்பட்ட ஐந்து நபர்களும் தனித்தனியாகப் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள சைபர் கிரைம் போலீசார், பணப் பரிவர்த்தனை நடைபெற்ற வங்கிக் கணக்குகள், போலி தொலைபேசி எண்கள் மற்றும் டெலிகிராம் முகவரிகளைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h2 dir=&quot;ltr&quot;&gt;பொதுமக்களுக்கான எச்சரிக்கை:&lt;/h2&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;தெரியாத நபர்களிடமிருந்து வரும் பகுதிநேர வேலை வாய்ப்பு மற்றும் கிரிப்டோகரன்சி முதலீட்டு ஆசைகளை நம்பிப் பணம் செலுத்த வேண்டாம்.&lt;br /&gt;ஏ.டி.எம். கார்டு மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை எச்சரிக்கையுடன் வைத்துக்கொள்ளவும்.&lt;br /&gt;ஆன்லைன் மோசடிக்கு ஆளானால் தாமதிக்காமல் உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணிற்கு அழைக்கவும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/22/c74ad15179cfc78ed7b1caedb0a506d31779441692251402_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[" ஜி.எஸ்.டி மோசடி வழக்கும்...கடத்தல் பிளானும் " டீக்கடையில் விரித்த வலை !! சிக்கிய கும்பல்]]></title><link>https://tamil.abplive.com/news/chennai/chennai-businessman-kidnapped-extortion-four-arrested-tnn-268502</link><comments>https://tamil.abplive.com/news/chennai/chennai-businessman-kidnapped-extortion-four-arrested-tnn-268502#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 23:10:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ சென்னை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/chennai/chennai-businessman-kidnapped-extortion-four-arrested-tnn-268502</guid><description><![CDATA[&lt;h2 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;ரூ.50 லட்சம் கேட்டு காரில் கடத்தல்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் கமலேஷ் ஆபிரகாம் ( வயது 57 ) தொழிலதிபரான இவர் சென்னை சேத்துப்பட்டில் தற்போது வசித்து வருகிறார். இவர், சவுகார்பேட்டையில் அலுமினியம் மொத்த வியாபாரமும், திருவேற்காட்டில் பழைய இரும்பு வியாபாரமும் நடத்தி வருகிறார். வழக்கம் போல் கமலேஷ் ஆபிரகாம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மைதானத்திற்கு அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;அப்போது முகமூடி அணிந்து வந்த கும்பல் ஒன்று , தொழிலதிபர் கமலேஷ் ஆபிரகாமை கத்திமுனையில் காரில் நடத்தினர். அப்போது தொழிலதிபர் சத்தம் போட்ட போது, மர்ம கும்பல் தங்களிடம் துப்பாக்கி இருப்பதாகவும், சத்தம் போட்டால் சுட்டு கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த தொழிலதிபர் சத்தம் போடாமல் இவர்களுடன் சென்றுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;அப்போது மர்ம கும்பல் பூந்தமல்லி நோக்கி காரில் செல்லும் போது, ரூ.50 லட்சம் பணம் தர வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு தொழிலதிபர் ரூ.1 லட்சம் தருவதாக கூறியுள்ளனர். அதற்கு மர்ம நபர்கள் உங்களை கொல்ல ரூ.10 லட்சம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதை கேட்டு தொழிலதிபர் அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு ஒரு வழியாக பேரம் பேசி ரூ.30 லட்சம் பணம் தருவதாக தொழிலதிபர் ஒப்புக் கொண்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ரகசியமாக பின் தொடர்ந்த போலீசார்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;பின்னர் தொழிலதிபரை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் பணம் , செல்போன் பெற்றுக் கொண்டு , அவர் அணிந்து இருந்த 5 சவரன் செயினை பறித்து கொண்டு மீண்டும் கடத்தப்பட்ட இடத்திலேயே இறக்கி விட்டு விட்டு சென்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;பிறகு ரூ.50 லட்சம் பணம் கேட்டு தன்னை கடத்திய சம்பவம் குறித்து தொழிலதிபர் கமலேஷ் ஆபிரகாம் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி விசாரணை நடத்தி வந்தனர். அதற்கிடையே தொழிலதிபரை கடத்திய கும்பல் பணம் கேட்டு மீண்டும் தொழிலதிபரை தொடர்பு கொண்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;அப்போது தொழிலதிபர் பணம் ஏற்பாடு செய்து விட்டேன் என்று கூறியுள்ளார். உடனே எதிர் முனையில் பேசிய நபர் பணத்துடன் பிராட்வேயில் உள்ள தேநீர் கடை அருகே பணத்தை கொண்டு வரும்படி கூறியுள்ளார். இது குறித்து தொழிலதிபர் போலீசாரிடம் தெரிவித்தார். பிறகு போலீசார் யோசனைப்படி பணத்துடன் தொழிலதிபர் பிராட்வே பகுதிக்கு சென்றுள்ளார். அவரை ரகசியமாக போலீசாரும் பின் தொடர்ந்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;ஒரு கட்டத்தில் தொழிலதிபரிடம் பணத்தை பெறும் போது அங்கு மறைந்து இருந்த போலீசார் 4 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பிறகு அவர்களிடம் விசாரணை நடத்திய போது, வடசென்னையை சேர்ந்த ஜெயக்குமார் ( வயது 33 ) , ஜெய் சரவணன் ( வயது 20 ), ராம்குமார் ( வயது 23 ), பொன்னிவளவன் ( வயது 25 ) என தெரிய வந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;கடத்தப்பட்ட தொழிலதிபர் மீது ஜிஎஸ்டி மோசடி மற்றும் கள்ள நோட்டுகள் பயன்படுத்திய வழக்கு நிலுவையில் இருப்பதை தெரிந்து கொண்டு, அவரை திட்டமிட்டு காரில் கடத்தி ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியது தெரிய வந்தது. அதை தொடர்ந்து, போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/989a8302cf8bcdae94d5033d8d451cf517846556202681310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[" என் கணவரை பிடிக்கல " வெளியூரில் ரூம் போட்டு திருமணம் மீறிய உறவு - சிக்கிய எலக்ட்ரிஷியன்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/pollachi-cop-bribe-audio-viral-electrician-extramarital-affair-case-tnn-268460</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/pollachi-cop-bribe-audio-viral-electrician-extramarital-affair-case-tnn-268460#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 20:39:28 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/pollachi-cop-bribe-audio-viral-electrician-extramarital-affair-case-tnn-268460</guid><description><![CDATA[&lt;h2 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;&quot; என் கணவரை பிடிக்கல விவகாரத்து செய்ய போறேன் &quot;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் முகேஷ். இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் அந்த பெண் எனக்கு என் கணவரை பிடிக்கவில்லை , விவாகரத்து செய்ய போகிறேன் என கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;எனவே இவர்களது பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் அடிக்கடி வெளியூருக்கு சென்று தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த இலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த பெண் முகேஷுடன் சேர்ந்து வெளியூருக்கு சென்று அறை எடுத்து தங்கியிருந்திருக்கின்றனர். எனவே நீண்ட நாட்களாகியும் வீடு திரும்பாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அந்த பெண்ணின் கணவன் அவரை தேடி கண்டுபிடித்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கணவன் - மனைவி தற்கொலை முயற்சி&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இதன் காரணமாக கோபமடைந்த முகேஷ் தொடர்ந்து அந்த பெண்ணை தன்னுடன் வருமாறு தொல்லை கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான கணவன் - மனைவி இருவரும் தற்கொலைக்கு முயற்சித்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இது குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரச்சனைக்கு காரணமான முகேஷ்யை காவல் நிலையத்திற்கு அழைத்து காவல் உதவி ஆய்வாளர் ஜான்சன் விசாரணை மேற் கொண்டு இனி மேல் பிரச்சனை செய்யக் கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;பின்னர் முகேஷிடம் காவல் உதவி உதவியாளர் ஜான்சன் ரூபாய் 5,000 லஞ்சம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. லஞ்சம் வாங்கியது வெளியில் தெரிய வரவே சிறிது நேரத்திலேயே தொலைபேசியில் முகேசை தொடர்பு கொண்ட தலைமை காவலர் நாகராஜன் 'SI ஜான்சன் நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்கச் சொன்னார் நீங்க எங்கே இருக்கிறீர்கள் எனக் கேட்டு பேசியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;அப்போது முகேஷ் 'நான் வெளியில் இருக்கிறேன் காலையில் கோவை சென்று விடுவேன் இப்போது வர முடியாது. காலில் வேண்டுமானாலும் விழுகிறேன் கொடுத்த பணம் கொடுத்ததாகவே இருக்கட்டும் பணம் எனக்கு வேண்டாம் இந்த பிரச்சனையிலிருந்து எனக்கு தீர்வு கிடைத்தால் போதும் என கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும் திருமணம் ஆகவில்லை எனக் கூறி தான் அந்தப் பெண் என்னிடம் பழகினார் எனவும் இனி மேல் நான் எந்த பிரச்சனைக்கு வரமாட்டேன் என முகேஷ் புலம்பும் ஆடியோ வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/f9304fc0bb50f39cd674a5a2d3a233d917846467552951310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பட்டுக்கோட்டை ராஜா அக்‌ஷயா வழக்கு...சிறையில் இருந்து வந்து ராஜா உணர்ச்சிகரமாக வீடியோ]]></title><link>https://tamil.abplive.com/crime/pattukkottai-raja-new-video-akshaya-statement-wife-attack-case-latest-268476</link><comments>https://tamil.abplive.com/crime/pattukkottai-raja-new-video-akshaya-statement-wife-attack-case-latest-268476#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 18:00:35 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராகேஷ் தாரா ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/pattukkottai-raja-new-video-akshaya-statement-wife-attack-case-latest-268476</guid><description><![CDATA[&lt;p class=&quot;p1&quot;&gt;பட்டுக்கோட்டை அருகே மனைவியை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ராஜா&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு வெளியிட்டுள்ள புதிய வீடியோ பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;தொடக்கத்தில் மனைவி அக்ஷயாவுக்கும் திருச்சியைச் சேர்ந்த ஜோஸ் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டிய ராஜா&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;தற்போது தனது பேச்சை மாற்றி உருக்கமான விளக்கத்தை அளித்துள்ளார்&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2 class=&quot;p1&quot;&gt;&lt;span class=&quot;s1&quot;&gt;பட்டுக்கோட்டை ராஜா அக்&amp;zwnj;ஷயா வழக்கு&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p class=&quot;p1&quot;&gt;தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வட்டாத்திக்கோட்டையைச் சேர்ந்த ராஜா என்ற தர்மராஜா&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;தனது மனைவி அக்ஷயாவை வீட்டில் கத்தியால் சரமாரியாக தாக்கியதாக கைது செய்யப்பட்டார்&lt;span class=&quot;s1&quot;&gt;.&amp;nbsp; &lt;/span&gt;தாக்குதலுக்குப் பிறகு&lt;span class=&quot;s1&quot;&gt; 4 &lt;/span&gt;வயது மகனுடன் அவர் வெளியிட்ட வீடியோவில்&lt;span class=&quot;s1&quot;&gt;, தனது மனைவி தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தானும் தனது மகனும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் &lt;/span&gt;&amp;nbsp;கண்ணீருடன் பேசியிருந்தார்&lt;span class=&quot;s1&quot;&gt;. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகவே &lt;/span&gt;&amp;nbsp;சில மணி நேரங்களிலேயே போலீசார் ராஜாவை கைது செய்து&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அக்ஷயாவை மருத்துவமனையில் அனுமதித்தனர்&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2 class=&quot;p1&quot;&gt;&lt;span class=&quot;s1&quot;&gt;அக்&amp;zwnj;ஷயா வாக்குமூலம்&amp;nbsp;&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p class=&quot;p1&quot;&gt;சிகிச்சை பெற்று வந்த அக்ஷயா பின்னர் அளித்த வாக்குமூலத்தில்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;தன்னைப் பற்றி பரவிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;ஜோஸ் தனது நண்பர் மட்டுமே என்றும்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;கணவரின் தொடர் சந்தேகமே குடும்பத்தில் பிரச்சினையை உருவாக்கியதாகவும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகின&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;தனது தரப்பை முழுமையாக கேட்காமல் ஆத்திரத்தில் ராஜா இத்தகைய முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2 class=&quot;p1&quot;&gt;&lt;span class=&quot;s1&quot;&gt;சிறையில் இருந்து திருபிய ராஜா வெளியிட்ட வீடியோ&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p class=&quot;p1&quot;&gt;இந்த நிலையில்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;சிறையில் இருந்து வெளியே வந்த ராஜா வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் முற்றிலும் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார்&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;அதில்&lt;span class=&quot;s1&quot;&gt;, &quot;&lt;/span&gt;நான் கோபத்தில் செய்தது மிகப்பெரிய தவறு&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;என் மனைவி மீது எந்தத் தவறும் இல்லை&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;நான் சந்தேகப்பட்ட விதமும்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;எடுத்த முடிவும் தவறானது&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;ஜோஸ் மீதும் தேவையில்லாமல் பழி சுமத்திவிட்டேன்&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;அவர் மீதும் எந்தத் தவறும் இல்லை&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;என் கோபத்தால் என் வாழ்க்கையையும்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;என் குடும்பத்தையும் நானே அழித்துக்கொண்டேன்&lt;span class=&quot;s1&quot;&gt;&quot; &lt;/span&gt;என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;p1&quot;&gt;மேலும்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;யாரும் தங்கள் வாழ்க்கையில் சந்தேகத்தையும் கோபத்தையும் வளர்க்கக் கூடாது என்றும்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;ஒரு நிமிட ஆத்திரம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத துயரத்தை ஏற்படுத்திவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;தற்போது தனது மகனின் எதிர்காலமே தனக்கு மிகப்பெரிய கவலையாக இருப்பதாகவும்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;நடந்த தவறை திருத்த முடியாவிட்டாலும்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;உண்மையை அனைவரிடமும் சொல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த வீடியோவை வெளியிட்டதாகவும் ராஜா தெரிவித்துள்ளார்&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;p1&quot;&gt;ராஜாவின் இந்த புதிய வீடியோ வெளியாகியுள்ள நிலையில்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;பட்டுக்கோட்டை தாக்குதல் வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;வழக்கு தொடர்பான சட்டநடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;இந்த சம்பவம் குடும்ப உறவில் சந்தேகமும் ஆத்திரமும் ஏற்படுத்தும் மோசமான விளைவுகளுக்கான மற்றொரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;p1&quot;&gt;&lt;span class=&quot;s1&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/technology/5-things-to-notice-before-scanning-a-qr-code-267827&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/0afa682c359af8b4344f073c75e873f917846370805141270_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[இயற்கையைச் சூறையாடிய விவகாரம்: மயிலாடுதுறையில் ரூ.49 லட்சம் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை..]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-illegal-sand-quarry-violations-49-lakh-fine-district-collector-tnn-268435</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-illegal-sand-quarry-violations-49-lakh-fine-district-collector-tnn-268435#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 13:31:55 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-illegal-sand-quarry-violations-49-lakh-fine-district-collector-tnn-268435</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல் குவாரிகளில் நடைபெற்ற கடுமையான விதிமீறல்கள் மற்றும் சட்டவிரோத மணல் கொள்ளை மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி ஆய்வில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி மணல் அள்ளியதும், அனுமதிக்கப்பட்ட ஆழத்தை மீறி பிரம்மாண்ட பள்ளங்கள் தோண்டப்பட்டதும் கண்டறியப்பட்டு, குவாரிக்கு ரூபாய் 49 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சமூகநல ஆர்வலரின் துணிச்சலான புகார்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இயங்கி வரும் மணல் குவாரிகளில், அரசு நிர்ணயித்த விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாகவும், சட்டவிரோதமாகவும் மணல் அள்ளப்பட்டு வருவதாக நீண்டகாலமாகவே குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த சமூகநல ஆர்வலர் ஷங்கமித்திரன் என்பவர், மாவட்டத்தின் சில குறிப்பிட்ட குவாரிகளில் நடைபெற்றுவரும் முறைகேடுகள் குறித்த தகுந்த ஆதாரங்களுடன் கடந்த ஜூன் 15ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் நேரில் சென்று விரிவான புகார் மனு ஒன்றை அளித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த மனுவில், குவாரி உரிமையாளர்கள் தங்களது ஒப்பந்த எல்லைகளை மீறி விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளிலும் சட்டவிரோதமாக மணல் அள்ளி வருவதாகப் பல அதிருப்திகரமான தகவல்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அதிரடி கள ஆய்வு மற்றும் அதிகாரிகள் குழு அமைப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சமூகநல ஆர்வலர் அளித்த புகாரின் தீவிரத்தை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், உடனடியாக இது குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கிடங்கல் கிராமத்தில் அமைந்துள்ள குறிப்பிட்ட மணல் குவாரியை நேரில் சென்று ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகத்தால் உத்தரவிடப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனைத் தொடர்ந்து, சுரங்கத்துறை அதிகாரிகள், நில அளவையாளர்கள் (சர்வேயர்கள்), வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறைப் பணியாளர்கள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் அடங்கிய சிறப்புப் படை கிடங்கல் கிராமத்தில் உள்ள மணல் குவாரிக்குச் சென்று தீவிரமான மற்றும் விரிவான ஆய்வை மேற்கொண்டனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதிகாரிகள் நடத்திய கூட்டு ஆய்வில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கூடுதல் பரப்பளவு பறிப்பு:&lt;/strong&gt; அரசு அனுமதி வழங்கிய குறிப்பிட்ட எல்லைப் பகுதிக்கு அப்பால், சுமார் 2 ஏக்கர் கூடுதல் பரப்பளவில் எந்தவித அனுமதியுமின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளது நில அளவையில் உறுதிப்படுத்தப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;அதிவேக ஆழம் குறைப்பு:&lt;/strong&gt; விதிகளின்படி மணல் குவாரிகளில் அதிகபட்சமாக 5 அடி ஆழம் மட்டுமே மணல் தோண்ட அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால், இந்த விதியை முற்றிலும் மீறி 25 அடிக்கும் அதிகமான ஆழத்திற்கு ராட்சத இயந்திரங்கள் மூலம் மணல் தோண்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;அடையாளங்களை மறைக்க முயற்சி:&lt;/strong&gt; அதிகாரிகள் ஆய்வுக்கு வரவிருப்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட குவாரி நிர்வாகத்தினர், தாங்கள் சட்டவிரோதமாகத் தோண்டிய பிரம்மாண்ட பள்ளங்களை அவசர அவசரமாக மணலைக் கொட்டி மூடி மறைக்க முயன்றதும் அதிகாரிகளின் விசாரணையில் அம்பலமானது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;குவாரிக்கு சீல் மற்றும் அபராதம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆய்வுப் பணிகள் நிறைவடைந்தவுடன், அதிகாரிகள் குழு தங்களது முழுமையான மற்றும் விரிவான ஆய்வறிக்கையை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் உடனடியாக சமர்ப்பித்தது. அறிக்கையை ஆய்வு செய்த ஆட்சியர், விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்ட அந்த மணல் குவாரியை உடனடியாக மூட அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், தொடர் சட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அரசு விதிமுறைகளைத் தீவிரமாக மீறிச் செயல்பட்டதற்கும், இயற்கையைச் சூறையாடியதற்கும் குற்றவியல் அடிப்படையில் அந்த மணல் குவாரிக்கு ரூ.49 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சமூக ஆர்வலர்களின் தொடர் கோரிக்கைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கிடங்கல் கிராமத்தில் நடைபெற்ற இந்த அதிரடி நடவடிக்கையை அப்பகுதி பொதுமக்களும், சமூகநல ஆர்வலர்களும் வரவேற்றுள்ளனர். இருப்பினும், மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வரும் பிற மணல் குவாரிகளிலும் இதேபோன்று முறைகேடுகள் அரங்கேறி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எனவே, மாவட்ட நிர்வாகம் கிடங்கல் கிராமத்துடன் நின்றுவிடாமல், மாவட்டத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளிலும் தொடர் மற்றும் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சமரசமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் மயிலாடுதுறை வட்டாரத்தில் மணல் வியாபாரிகள் மத்தியில் கடுமையான அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/d495e7d1ecc89370089f12be2dc264691784620855229186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சீர்காழி அருகே கொடூரம்; முதியவரை ஈவு இரக்கமின்றித் தாக்கி செல்ஃபி எடுத்த தவெக நிர்வாகி: அரங்கேறிய மனிதாபிமானமற்ற செயல்..!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-sirkazhi-tvk-jilla-mani-elderly-man-brutal-assault-selfie-video-viral-tnn-268419</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-sirkazhi-tvk-jilla-mani-elderly-man-brutal-assault-selfie-video-viral-tnn-268419#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 12:16:40 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-sirkazhi-tvk-jilla-mani-elderly-man-brutal-assault-selfie-video-viral-tnn-268419</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியப் பகுதியில், மனிதாபிமானமற்ற முறையில் முதியவர் ஒருவர் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கடுமையான கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஆளும்கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ, எந்த அரசியல் பின்புலமாகக் இருந்தாலும் பொதுமக்களுக்கு எதிராக நடக்கும் இதுபோன்ற வன்செயல்கள் சமூகத்தில் மன்னிக்க முடியாத குற்றமாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கியப் பொறுப்பில் உள்ள நிர்வாகி ஒருவரே நேரடியாக ஈடுபட்டிருப்பது ஒட்டுமொத்த பொதுமக்களையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கொடூரத் தாக்குதலும் செல்ஃபி மோகமும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சீர்காழி ஒன்றியப் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் துணைச் செயலாளராகப் பதவியில் இருந்து வருபவர் 'ஜில்லா மணி'. இவர் எளிய முதியவர் ஒருவரிடம் எந்தவிதமான மனிதநேயமும் இன்றி ஈவு இரக்கமின்றி நடந்துகொண்டுள்ளார். எவ்விதத் தற்காப்புப் பலமுமற்ற அந்த முதியவரை அந்த நபர் கடுமையாகத் தாக்கி துன்புறுத்தியுள்ளார். அத்துடன் இந்த வன்முறையை இத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், முதியவர் வலியால் அலறித்துடிக்கும் வேதனையான காட்சியைக் தனது கைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட முதியவர் பின்னணியில் இருக்க, தான் சிரித்த முகத்துடன் அருகில் நின்று 'செல்ஃபி' புகைப்படமும் எடுத்துள்ளார். ஒரு மனிதன் மீது மற்றொரு மனிதன் நிகழ்த்தும் வன்முறையைக் கூடக் கொண்டாட்டமாக மாற்றி, அதனைத் தன் கைபேசியில் படம்பிடித்து மகிழ்ந்த அந்தத் தவெக நிர்வாகியின் மனிதாபிமற்ற இந்தக் கொடூரச் செயல் சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் பரவி பெரும் கண்டன அலையை உருவாக்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;[tw]&lt;/p&gt;
&lt;blockquote class=&quot;twitter-tweet&quot;&gt;
&lt;p dir=&quot;ltr&quot; lang=&quot;ta&quot;&gt;சீர்காழி அருகே கொடூரம்; முதியவரை ஈவு இரக்கமின்றித் தாக்கி செல்ஃபி எடுத்த தவெக நிர்வாகி: அரங்கேறிய மனிதாபிமானமற்ற செயல்..! &lt;a href=&quot;https://t.co/BQmAy3EBJ4&quot;&gt;pic.twitter.com/BQmAy3EBJ4&lt;/a&gt;&lt;/p&gt;
&amp;mdash; JAGANNATHAN (@Jaganathan_JPM) &lt;a href=&quot;https://x.com/Jaganathan_JPM/status/2079467034614833562?ref_src=twsrc%5Etfw&quot;&gt;July 21, 2026&lt;/a&gt;&lt;/blockquote&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;
&lt;script src=&quot;https://platform.x.com/widgets.js&quot; async=&quot;&quot; charset=&quot;utf-8&quot;&gt;&lt;/script&gt;
[/tw]&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சமூக வலைதளங்களில் வைரலான காட்சிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஜில்லா மணி தன் கைபேசியில் பதிவு செய்து வெளியிட்ட அந்த வக்கிர புத்தியைக் காட்டும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், எக்ஸ் (ட்விட்டர்) உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் வேகமாகப் பரவின. இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் கடும் கொந்தளிப்பு அடைந்தனர். அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பவர்கள் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டுமே தவிர, இப்படி பொதுமக்களையே அச்சுறுத்தும் வகையிலும், பலவீனமானவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பதும் எத்தகைய நாகரிக அரசியல் என்று கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இணையம் முழுவதும் ஜில்லா மணியின் இந்தச் செயலுக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுமக்களின் ஆவேசமும் கோரிக்கையும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனும் தத்துவத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபர் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, அல்லது எத்தகைய செல்வாக்குள்ளவராக இருந்தாலும் சரி, அவர் மீது காவல் துறையினர் உடனடியாகச் சுயேச்சையான வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வயது முதிர்ந்த ஒரு முதியவர் மீது கைநீட்டி, அதனைப் பெருமையாக வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிரும் ஒரு நபர் பொதுவாழ்வில் இருக்க எந்தத் தகுதியும் இல்லை என்றும், &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; தலைமை உடனடியாக இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சமூக ஆர்வலர்களின் கருத்து&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், &quot;திருவள்ளுவர் பாடிய 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற உயர்ந்த சமத்துவக் கொள்கை வெறும் ஏட்டுச் சுவடிகளில் மட்டுமே இருக்கக் கூடாது; நடைமுறை வாழ்க்கையிலும் அது சாமானிய மனிதனுக்கும் காக்கப்பட வேண்டும். ஒரு முதியவருக்கு எதிரான இந்தத் தாக்குதல் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே எதிரான வன்முறையாகும். பாதிக்கப்பட்ட அந்த எளிய முதியவருக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும். காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் இதில் தலையிட்டு, சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டரீதியான கடுமையான விரைவு நடவடிக்கையை எடுக்க வேண்டும்&quot; என ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சமூகத்தில் அமைதியைக் குலைக்கும் வகையிலும், வன்முறையை நியாயப்படுத்தும் வகையிலும் செயல்படும் இது போன்ற நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே எதிர்காலத்தில் இதுபோன்ற கொடூரச் செயல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;[tw]&lt;/p&gt;
&lt;blockquote class=&quot;twitter-tweet&quot;&gt;
&lt;p dir=&quot;ltr&quot; lang=&quot;ta&quot;&gt;முதியவர் தாக்கப்பட்ட வீடியோ விவகாரம் - விளக்கம் அளித்த தவெக நிர்வாகி..! &lt;a href=&quot;https://t.co/j0lbI3IxK3&quot;&gt;pic.twitter.com/j0lbI3IxK3&lt;/a&gt;&lt;/p&gt;
&amp;mdash; JAGANNATHAN (@Jaganathan_JPM) &lt;a href=&quot;https://x.com/Jaganathan_JPM/status/2079465766861385784?ref_src=twsrc%5Etfw&quot;&gt;July 21, 2026&lt;/a&gt;&lt;/blockquote&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;script src=&quot;https://platform.x.com/widgets.js&quot; async=&quot;&quot; charset=&quot;utf-8&quot;&gt;&lt;/script&gt;
[/tw]&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஜில்லா மணி விளக்க வீடியோ&lt;/h3&gt;
&lt;p&gt;முதியவர் தாக்கப்பட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவும் நிலையில், இது தொடர்பாக ஜில்லா மணி விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனக்கு கும்பகோணதை சேர்ந்த ரேவதி என்பவர் பணம் தரவேண்டும் என்றும், அதனை அவர் தராமல் காலம் தாழ்த்தி வந்தால் அவரது வீட்டிற்கு கேட்க சென்ற போது, அவர் இல்லாததால் அவர் தந்தையினை அழைத்து காரில் வைத்து பேசியபோது கைகலப்பு ஏற்பட்டதாகவும், இந்த சம்பவம் கடந்த 2023 ஆண்டு நடைபெற்று, அப்போது கும்பகோணம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, தான் அந்த முதியவரிடம் மன்னிப்புக்கேட்டு, பிரச்சினை முடிக்க வைக்கப்பட்டது. ஆனால், தற்போது தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் பழைய வீடியோவை சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/9be031924d10bdc8541e059759f627571784616335360186_original.jpg" width="220"/></item></channel></rss>