<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>ஸ்ரீபெரும்புதூரில் சோகம்: மூடி இல்லாத செப்டிக் டேங்கில் விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு!</title><atom:link href="https://tamil.abplive.com/crime/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Sat, 2 May 2026 06:25:06 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[சீர்காழி அருகே பயங்கரம்: நுங்கு விற்பனையில் ஏற்பட்ட தகராறில் உறவினரை வெட்டிக்கொன்ற இளைஞர்..!]]></title><link>https://tamil.abplive.com/crime/mayiladuthurai-sirkazhi-karaimedu-youth-murder-tnn-258109</link><comments>https://tamil.abplive.com/crime/mayiladuthurai-sirkazhi-karaimedu-youth-murder-tnn-258109#respond</comments><pubDate>Fri, 1 May 2026 21:59:23 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/mayiladuthurai-sirkazhi-karaimedu-youth-murder-tnn-258109</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சீர்காழி: &lt;/strong&gt;மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, பனை நுங்கு விற்பனை செய்த பணத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், வாலிபர் ஒருவரை அவரது உறவினரே நள்ளிரவில் வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா காரைமேடு மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன் (வயது 23). அதே பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). இவர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்கள் ஆவர். தற்போது கோடை காலம் என்பதால், இருவரும் இணைந்து பனை மரங்களில் இருந்து நுங்கு வெட்டி எடுத்து வந்து, சூரக்காடு பகுதியில் சாலையோரம் கடை அமைத்து நுங்கு விற்பனை செய்து வந்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உறவினர்கள் என்பதால் இருவரும் ஒருமித்த கருத்துடன் தொழில் செய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக விற்பனை செய்த பணத்தை வைப்பதிலும், கணக்கு பார்ப்பதிலும் இவர்களுக்குள் மனக்கசப்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த மூன்று நாட்களாக நடந்த விற்பனைக்கான தொகையை மருதுபாண்டியன் தன்னிடம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கார்த்திக் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நள்ளிரவு நடந்த கோர சம்பவம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்நிலையில், நேற்று இரவு கார்த்திக் வழக்கம் போல மருதுபாண்டியன் வீட்டிற்குச் சென்றுள்ளார். இரவு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த பிறகு, மருதுபாண்டியன் மற்றும் அவரது மனைவி முத்துலட்சுமி ஆகிய இருவரும் வீட்டிற்குள் உறங்கச் சென்றுள்ளனர். கார்த்திக் வீட்டின் வெளித் திண்ணையில் படுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அனைவரும் உறங்கிய பிறகு, நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில், தான் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதத்துடன் கார்த்திக் ஆவேசமாக எழுந்துள்ளார். வீட்டின் தகரக் கதவை பலவந்தமாகத் திறந்து உள்ளே சென்ற கார்த்திக், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மருதுபாண்டியனிடம், &quot;மூன்று நாட்களாகப் பனங்காய் விற்ற பணத்தை ஏன் என்னிடம் கொடுக்கவில்லை?&quot; என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மருதுபாண்டியன் சுதாரிப்பதற்குள், கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் மருதுபாண்டியனின் முகம், தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த மருதுபாண்டியன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். கணவனின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த முத்துலட்சுமி, ரத்தக் கறையுடன் நின்றிருந்த கார்த்திக்கைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து கூச்சலிட்டார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;போலீஸ் விசாரணை மற்றும் கைது&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முத்துலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் கார்த்திக் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து உடனடியாக சீர்காழி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ரத்த வெள்ளத்தில் கிடந்த மருதுபாண்டியனின் உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்வுக்காகச் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக் குற்றவாளியைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அப்போது, அதே பகுதியில் மது போதையில் சுற்றித் திரிந்த கார்த்திக்கைப் போலீசார் மடக்கிப் பிடித்தனர். ஆரம்பக் கட்ட விசாரணையில், நுங்கு விற்பனை செய்த பணத்தை மருதுபாண்டியன் தராமல் ஏமாற்றியதால், ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்ததாகக் கார்த்திக் வாக்குமூலம் அளித்ததாகத் தெரிகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கிராமத்தில் நிலவும் பதற்றம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நெருங்கிய உறவினர்களாக இருந்து, ஒன்றாகத் தொழில் செய்து வந்த இருவருக்குள் பணத்திற்காக நள்ளிரவில் கொலை நடந்த சம்பவம் காரைமேடு கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த மருதுபாண்டியனுக்குத் திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். ஒரு சிறிய பணத்தகராறு, ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தையே சிதைத்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கைது செய்யப்பட்ட கார்த்திக் மீது கொலை வழக்கு (IPC 302) பதிவு செய்துள்ள சீர்காழி போலீசார், அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் இந்தக் கொலை நடந்ததா அல்லது திட்டமிட்டு நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இச்சம்பவம் காரணமாகச் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/3f4835a116b827774711e1b452016c3d1777652931648186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கடலூரில் ரவுடி வெட்டிக்கொலை - வயல்வெளியில் சிதறிக்கிடந்த இரத்தம்; மக்கள் அதிர்ச்சி]]></title><link>https://tamil.abplive.com/crime/puducherry-rowdy-was-brutally-murder-in-a-field-near-cuddalore-258097</link><comments>https://tamil.abplive.com/crime/puducherry-rowdy-was-brutally-murder-in-a-field-near-cuddalore-258097#respond</comments><pubDate>Fri, 1 May 2026 18:41:31 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/puducherry-rowdy-was-brutally-murder-in-a-field-near-cuddalore-258097</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;கடலூர் அருகே வயல்வெளியில் பிரபல ரவுடி கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;கடலூர் தூக்கணாம்பாக்கம் அருகே வயல்வெளியில் பகுதிகளில் உடலில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சிதைந்த நிலையில் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் &amp;nbsp;உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/36dc3ae4f2718d926627e068b629eb9f1777640742591113_original.jpg&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;காவல்துறை நடத்திய விசாரணையில் அவர் புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி புகழ் என்கின்ற புகழேந்தி என்பது தெரிய வந்தது.&amp;nbsp; இவர் மீது இரண்டு கொலை வழக்கு, இரண்டு கொலை முயற்சி மற்றும் மற்றும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது என காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;ரவுடி புகழேந்தியை அழைத்து வந்து கொடூர கொலை செய்தார்களா? கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இந்த நிலையில், புதுச்சேரி பிரபல ரவுடி சடலமாகக் கிடந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு நடத்திய கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், குற்றவாளியை விரைந்து பிடிக்க உத்தரவிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;கடலூர் அருகே புதுச்சேரி மாநில ரவுடி வெட்டி படுகொலை செய்த சம்பவம் இரு மாநில எல்லைகளில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/benefits-of-eating-betel-leaves-empty-stomach-health-benifits-258065&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/69bd91fce00991ebf56211fceb5f9bd11777640623068113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி சடலமாக மீட்பு !! 24 மணி நேரத்தில் சிக்கிய கொலையாளி]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/karur-elderly-woman-murder-robbery-velliyanai-arrest-tnn-258023</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/karur-elderly-woman-murder-robbery-velliyanai-arrest-tnn-258023#respond</comments><pubDate>Thu, 30 Apr 2026 23:59:20 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/karur-elderly-woman-murder-robbery-velliyanai-arrest-tnn-258023</guid><description><![CDATA[&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;கை - கால்கள் கட்டிய நிலையில் இறந்து கிடந்த மூதாட்டி&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலப்பட்டியில் தனியாக வசித்து வந்தவர் 79 வயதுடைய தாயாரம்மாள். இவர் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை லந்தகோட்டையில் வசிக்கும் தனது மகள் மனோரஞ்சிதத்துடன் செல்போனில் பேசி விட்டு வீட்டிற்கு வெளியே உள்ள திண்ணை அருகே கட்டிலில் படுத்து உறங்கியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;மறுநாள் காலை மூதாட்டியின் உறவினர் அருணாச்சலம் அந்த வழியாக சென்றுள்ளார். வீட்டு வேலைகளை செய்யும் தாயாரம்மாள் அன்றைய தினம் நேரமாகியும் எழாததால் சந்தேகம் அடைந்து வீட்டு வாசல் கேட்டை திறந்து உள்ளே சென்று பார்த்த போது கை, கால்கள், மற்றும் வாய் ஆகியவை துணியால் கட்டப்பட்டு இறந்த நிலையில் தாயாரம்மாள் கிடந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர் அருணாச்சலம் மூதாட்டியின் மகள் மனோரஞ்சிதத்திற்கு போன் மூலம் தகவல் தெரிவித்த நிலையில், அவர் சாலப்பட்டிக்கு விரைந்து வந்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;காணாமல் போன நகை&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;தாயாரின் சடலத்தை பார்த்த மனோரஞ்சிதம் அவர் அணிந்திருந்த அரை சவரன் தோடு மற்றும் கால் சவரன் மூக்குத்தி ஆகியவை இல்லாததை கவனித்து இது குறித்து வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;தகவலின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்ததில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த 19 வயதுடைய பாண்டீஸ்வரன் என்பவர் தான் மூதாட்டி தயாரம்மாளை கொலை செய்து விட்டு தப்பியது தெரிய வந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;தொடர்ந்து அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் ரயிலில் பொதுப் பெட்டியில் அமர்ந்து பயணம் செய்வது தெரிய வந்தது. இதையடுத்து கரூர் மாவட்ட போலீசார் சென்னை சென்ட்ரல் போலீசாரை அலர்ட் செய்த நிலையில் சென்ட்ரல் போலீசார் பாண்டீஸ்வரனை கைது செய்து கரூர் மாவட்டம் வெள்ளியணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சென்னை விரைந்த வெள்ளியணை போலீசார், கொலையாளி பாண்டீஸ்வரனை கைது செய்து கரூர் அழைத்துச் சென்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/01/5ec4beef3e357cecc498db86b16cdb461730477083039211_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பிஞ்சு உயிரைப் பறித்த கரம்.. கோர்ட் காவலில் கருணாஸ்: தண்டனை குறித்த திக் திக் நிமிடங்கள் !]]></title><link>https://tamil.abplive.com/crime/puducherry-girl-murder-sensational-verdict-karunas-found-guilty-258005</link><comments>https://tamil.abplive.com/crime/puducherry-girl-murder-sensational-verdict-karunas-found-guilty-258005#respond</comments><pubDate>Thu, 30 Apr 2026 16:31:42 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/puducherry-girl-murder-sensational-verdict-karunas-found-guilty-258005</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி : புதுச்சேரியை உலுக்கிய 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட கருணாஸை குற்றவாளி என போக்சோ நீதிமன்றம் இன்று அறிவித்தது. அவருக்கான தண்டனை விவரம் வரும் மே மாதம் 5-ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;h2&gt;9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 5-ஆம் வகுப்பு மாணவி, கடந்த 2024 மார்ச் 2-ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது மாயமானார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, வீட்டின் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. இச்சம்பவம் புதுச்சேரி மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.&lt;/p&gt;
&lt;p&gt;இது தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியைச் சேர்ந்த கருணாஸ் (19) மற்றும் விவேகானந்தன் (59) ஆகிய இருவரைக் கைது செய்தனர். இதில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் கடந்த செப்டம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;நீதிமன்ற விசாரணை:&lt;/p&gt;
&lt;p&gt;இந்த வழக்கு புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன்னிலையில் நடைபெற்று வந்தது. காவல்துறை தரப்பில் 540 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 54 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, 80-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் மற்றும் தடய அறிவியல் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.&lt;/p&gt;
&lt;p&gt;விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட கருணாஸ் மீது சுமத்தப்பட்ட கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்: பாலியல் நோக்கில் குழந்தையைக் கடத்துதல்., சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்தல் (போக்சோ பிரிவு 6), கொலை செய்தல் மற்றும் ஆதாரங்களை மறைத்தல்.&lt;/p&gt;
&lt;h2&gt;அரசு தரப்பு வாதம்:&lt;/h2&gt;
&lt;p&gt;இது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் பச்சையப்பன் கூறுகையில், &quot;இந்த வழக்கு 'அரிதினும் அரிதான' பிரிவின் கீழ் வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிட்டுள்ளோம். பாதிக்கப்பட்ட சிறுமி 12 வயதுக்குட்பட்டவர் என்பதாலும், இது மிகக் கொடூரமான குற்றம் என்பதாலும் சட்ட நடைமுறைகளின்படி இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு மே 5-ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும்&quot; எனத் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;இன்று தீர்ப்பு வழங்கப்பட்டபோது உயிரிழந்த சிறுமியின் பெற்றோரும் உறவினர்களும் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்தனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கருணாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/30/f85875acdb72717b83093fb0eecf519d1777546833209194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சென்னையில் அதிர்ச்சி ; 76 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம் - 57 வயது பிளம்பர் கைது]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/elderly-woman-molested-in-chennai-57-year-old-plumber-arrested-tnn-257976</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/elderly-woman-molested-in-chennai-57-year-old-plumber-arrested-tnn-257976#respond</comments><pubDate>Thu, 30 Apr 2026 14:31:28 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/elderly-woman-molested-in-chennai-57-year-old-plumber-arrested-tnn-257976</guid><description><![CDATA[&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;தனியாக வசித்து வரும் மூதாட்டி&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;சென்னை புளியந்தோப்பு கே.எம். கார்டன் பகுதியில் வசித்து வருபவர் 76 வயதான மூதாட்டி சுந்தரி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) இவருக்கு நான்கு மகன்களும் ஒரு&amp;zwnj; மகளும் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் உயிரிழந்த நிலையில் நான்கு மகன்களுக்கும் கமலா தனியாக இருந்து திருமணம் செய்து வைத்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;பின்னர் நான்கு மகன்களும் சேர்ந்து மகள் கீதாவிற்கு திருமணம் செய்து வைத்த நிலையில் பிள்ளைகள் அனைவரும் குடும்பத்துடன் தனித் தனியாக வசித்து வருகின்றனர். எனவே மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். கீதா தனது கணவருடன் புரசைவாக்கத்தில் வாழ்ந்து வருவதால் தினமும் மாலை நேரத்தில் புளியந்தோப்பில் தனியாக உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று அவருக்கு தேவையான உதவிகளை செய்து வந்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;பிறப்புறுப்பில் வெளியான ரத்தம்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;வழக்கம் போல் கீதா தாய் வீட்டிற்கு சென்று அவரை குளிக்க வைக்க சென்ற போது கமலாவின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே தாயிடம் இது குறித்து கேட்ட போது , வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த 57 வயதான பிளம்பர் மருதப்பன் என்பவன் வீட்டில் புகுந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடி விட்டதாக தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;தொடர்ந்து மூதாட்டியை எழும்பூரில் உள்ள தாய் சேய் நல அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அவரது மகள் கீதா , இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடந்தது குறித்து மேற்கொண்டு மருதப்பன் மீது வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய அவரை தனிப்படை அமைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மருதப்பன் மீது வேறு ஏதேனும் புகார் உள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நிலையில் அரசு சார்பில் அவருக்கு தேவையான உதவிகளை காவல் துறையினர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/30/67a6e314042dbd07b3796e8f0814b0c017775396385091310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[முன்னாள் பிரதமர் படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர் வழக்கறிஞராகப் பதிவா? இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால்: சுதா எம்.பி கண்டனம்]]></title><link>https://tamil.abplive.com/news/politics/mayiladuthurai-mp-sudha-condemns-perarivalan-lawyer-registration-tnn-257980</link><comments>https://tamil.abplive.com/news/politics/mayiladuthurai-mp-sudha-condemns-perarivalan-lawyer-registration-tnn-257980#respond</comments><pubDate>Thu, 30 Apr 2026 13:37:23 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/mayiladuthurai-mp-sudha-condemns-perarivalan-lawyer-registration-tnn-257980</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்த ஏ.ஜி. பேரறிவாளன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்துள்ளதற்கு மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது இந்திய இறையாண்மைக்கு சவக்குழி தோண்டும் முயற்சி என்றும், நீதித்துறையின் மாண்பைக் குலைக்கும் செயல் என்றும் அவர் சாடியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வரலாற்றுத் துரோகம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&quot;பாரத ரத்னா&quot; விருது பெற்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களை, உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட எல்.டி.டி.இ (LTTE) தீவிரவாத அமைப்பின் மூலம் சதித் திட்டம் தீட்டி படுகொலை செய்த வழக்கில் ஏ.ஜி. பேரறிவாளன் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர். 31 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறை தண்டனை அனுபவித்த அவர், 2022-ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டது என்பது அவர் நிரபராதி என்பதற்காக அல்ல; மாறாக, அவரது கருணை மனு மீது முடிவெடுக்க மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே நிலவிய காலதாமதத்தை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே உச்ச நீதிமன்றம் அவரை விடுவித்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அத்தகைய நபர், இன்று சட்டத்தைக் காக்கும் வழக்கறிஞர் பணியில் தன்னை இணைத்துக் கொள்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத முரண். நாட்டின் பிரதமரையும், அவருடன் இணைந்து 16 அப்பாவி உயிர்களையும் காவு வாங்கிய ஒருவருக்குச் சட்ட அங்கீகாரம் வழங்குவது என்பது இந்திய நீதி வரலாற்றில் ஒரு கருப்புப் பக்கமாகும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அதிகாரப் பரவலாக்கின் நாயகன் படுகொலை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தியாவை வல்லரசுப் பாதையில் நடைபோடச் செய்த தொழில்நுட்ப நாயகன் ராஜீவ் காந்தி. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் மூலம் 15 லட்சம் உள்ளாட்சிப் பதவிகளை உருவாக்கி, அதிகாரத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்தவர் அவர். அத்தகைய பெரும் தலைவரைப் படுகொலை செய்த சதியில் பங்கெடுத்த ஒருவரை, &quot;வழக்கறிஞர்&quot; என்று அழைப்பது அந்தப் புனிதமான தொழிலுக்கே இழுக்காகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வ.உ.சிதம்பரனார் போன்ற தேசபக்த வழக்கறிஞர்கள் வாழ்ந்த இந்தப் பெருமைமிக்க வழக்கறிஞர் சமூகத்தில், நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைத்தவர் அங்கீகரிக்கப்படுவதை எப்படி அனுமதிக்க முடியும்? படுகொலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இன்றும் நீதிமன்றப் படிக்கட்டுகளில் நீதிக்காகக் காத்துக் கொண்டிருக்கும் வேளையில், தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு இத்தகைய வாய்ப்பு வழங்கப்படுவது நீதி தேவதையின் கண்களில் துகள்களைத் தூவும் செயலாகும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;எதிர்காலத் தலைமுறைக்குத் தவறான முன்னுதாரணம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இத்தகைய நடவடிக்கைகள் எதிர்காலத் தலைமுறையினரிடையே தவறான புரிதலை ஏற்படுத்தும். பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றாலும், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தித் தப்பித்துவிடலாம் என்கிற எண்ணம் மேலோங்கினால், அது நாட்டின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும். இது களையப்பட வேண்டிய அடிவேர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நிர்வாகங்களுக்குக் கோரிக்கை மனு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவைத் திரும்பப் பெறக் கோரி, இந்திய இறையாண்மையைக் காக்கும் பொருட்டு மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா அவர்கள் பல்வேறு தரப்பினருக்குக் கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* இந்திய உள்துறை அமைச்சகம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* மத்திய மற்றும் மாநில சட்ட அமைச்சர்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* இந்திய பார் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலகம்&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நீதிக்கானப் போராட்டம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&quot;இந்தக் கருப்பு தினத்தை நாம் ஒருபோதும் ஏற்க முடியாது. நீதித்துறைக்கு ஏற்படும் இந்தக் களங்கத்தை எதிர்த்து நாம் ஒன்றிணைய வேண்டும். படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். பயங்கரவாதத்திற்குத் துணை நின்றவர்களுக்குச் சட்ட அங்கீகாரம் கிடைப்பதை எதிர்த்துத் தொடர்ந்து போராடுவோம்,&quot; என்று சுதா எம்.பி தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியலிலும், வழக்கறிஞர்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/30/9399aa9916cb38aa5c177d9921d202461777536396101186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பாத்திரம் தேய்க்க சொன்னதால் தற்கொலையா? - மாணவியின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்; ஆங்கில ஆசிரியர் மீது பாயும் பாலியல் குற்றச்சாட்டு!]]></title><link>https://tamil.abplive.com/crime/mayiladuthurai-student-suicide-sexual-harassment-allegation-teacher-arrest-protest-tnn-257965</link><comments>https://tamil.abplive.com/crime/mayiladuthurai-student-suicide-sexual-harassment-allegation-teacher-arrest-protest-tnn-257965#respond</comments><pubDate>Thu, 30 Apr 2026 12:06:00 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/mayiladuthurai-student-suicide-sexual-harassment-allegation-teacher-arrest-protest-tnn-257965</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;மயிலாடுதுறை அருகே பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், பள்ளி ஆசிரியர் ஒருவரே காரணம் என உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தீக்குளித்த மாணவி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஒன்றியத்தை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அண்மையில் நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதியுள்ளார். இந்நிலையில், கடந்த 27-ஆம் தேதி (திங்கள்கிழமை) இரவு, மாணவி தனது வீட்டில் யாரும் எதிர்பாராத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர், பலத்த காயமடைந்த அவரை மீட்டு உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், தகவல் அறிந்த மயிலாடுதுறை குற்றவியல் நீதித்துறை நடுவர்-1 உமல்பரிதா, மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவியிடம் மரண வாக்குமூலம் பெற்றார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முதலுதவிக்குப் பிறகு, மேல் சிகிச்சைக்காக மாணவி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முன்னதாக, மாணவியின் பெற்றோர் மணல்மேடு காவல் நிலையத்தில் அளித்திருந்த புகாரில், &quot;வீட்டில் பாத்திரம் தேய்க்கச் சொன்னதால் ஏற்பட்ட கோபத்தில், மாணவி பூஜை அறைக்குள் சென்று கதவை தாளிட்டுக் கொண்டு தீக்குளித்தார்&quot; என்று குறிப்பிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் 194 BNS (பாரதிய நியாய சன்ஹிதா) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;திடீர் திருப்பம்: ஆசிரியர் மீது பாலியல் புகார்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இன்று மாணவியின் உடல் உடற்கூறாய்வு முடிந்து கடலங்குடியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி கிராம மக்கள் ஒன்று திரண்டனர். மாணவி படித்த அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியர் கார்த்திகேயன் (திருவிடைமருதூர் தாலுக்கா, மணக்குன்னம் பகுதியைச் சேர்ந்தவர்) என்பவர், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலிலேயே மாணவி தற்கொலை செய்துகொண்டதாகவும் புதிய திடுக்கிடும் தகவல் வெளியானது. இதனால் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் உறவினர்கள், கடலங்குடி மெயின் ரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மறியலில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;*மாணவியின் மரணத்திற்கு காரணமான ஆசிரியர் கார்த்திகேயனை உடனடியாக கைது செய்ய வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* பெற்றோர் அளித்த முதல் புகாரில் உள்ள முரண்பாடுகளைக் களைந்து, உண்மையான காரணத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;டி.எஸ்.பி பேச்சுவார்த்தை - போக்குவரத்து பாதிப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சாலை மறியல் போராட்டத்தால் அந்த வழியே சென்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாடுதுறை டி.எஸ்.பி பாலாஜி தலைமையிலான போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அப்போது டி.எஸ்.பி பாலாஜி கூறுகையில்:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&quot;மாணவி ஏற்கனவே நீதித்துறை நடுவரிடம் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்தப்படும். ஆசிரியர் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார்கள் குறித்து விசாரணை நடத்த எங்களுக்கு போதிய அவகாசம் தேவை. குற்றச்சாட்டு ஊர்ஜிதமாகும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர் மீது பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,&quot; என்று உறுதி அளித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காவல்துறையினரின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள், சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் மயிலாடுதுறை - கடலங்குடி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தொடரும் விசாரணை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆரம்பத்தில் சாதாரண தற்கொலை முயற்சியாகப் பார்க்கப்பட்ட இந்த வழக்கு, தற்போது பாலியல் குற்றச்சாட்டு காரணமாகத் தீவிரமடைந்துள்ளது. மாணவி உயிரிழப்பதற்கு முன் அளித்த மரண வாக்குமூலத்தில் ஆசிரியர் குறித்து ஏதேனும் குறிப்பிட்டுள்ளாரா என்பது குறித்தும், அவர் பயன்படுத்திய செல்போன் உரையாடல்கள் குறித்தும் சைபர் க்ரைம் போலீஸார் மூலம் விசாரணை நடத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு மாணவியின் மரணம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/30/82c8d529e089799d994b1e75601780c81777530912593186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[”காதலனோடு செட்டில் ஆகணும்” ரூ.45 லட்சத்தை சுருட்ட தத்தெடுத்து வளர்த்த தாயை கொன்ற 17 வயது மகள்]]></title><link>https://tamil.abplive.com/crime/teen-age-girl-killed-her-adopted-mother-lover-kill-they-wanted-her-dead-fathers-rs-45-lakh-job-jharkhand-crime-news-257942</link><comments>https://tamil.abplive.com/crime/teen-age-girl-killed-her-adopted-mother-lover-kill-they-wanted-her-dead-fathers-rs-45-lakh-job-jharkhand-crime-news-257942#respond</comments><pubDate>Thu, 30 Apr 2026 10:48:04 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/teen-age-girl-killed-her-adopted-mother-lover-kill-they-wanted-her-dead-fathers-rs-45-lakh-job-jharkhand-crime-news-257942</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Crime News:&lt;/strong&gt; வளர்ப்பு தாயை கொன்று 45 லட்சம் பணத்துடன் சொகுசு வாழ்க்கை வாழ முயன்ற இளம்பெண்ணை, காதலனுடன் சேர்த்து ஜார்கண்ட் போலீசார் கைது செய்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;வளர்ப்பு தாயை கொன்ற 17 வயது மகள்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த 17 வயது பதின்பருவ மகள், தனது தாயான நஹிதா பர்வீன் கழிவறையில் வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாக குடும்ப உறவினர்களுக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம் மற்றும் ஹசாரிபாக் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான உறவினர்கள் வந்து கடந்த ஞாயிறன்று இறுதி மரியாதையும் செலுத்தியுள்ளனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு எழுந்த சந்தேகத்தின் காரணமாக பர்வீனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொண்டதன் முடிவில், 17 வயது மகள் மற்றும் அவரது காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/food/best-foods-for-breast-cancer-patients-details-in-pics-257930&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;காதலனுக்கு பணத்தை கொடுக்க திருட்டு..&lt;/h2&gt;
&lt;p&gt;மணிடோலா பகுதியை சேர்ந்த நஹிதா பர்வீன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக கணவன் உயிரிழந்த நிலையில், தனது 17 வயது வளர்ப்பு மகளுடன் வசித்து வந்தார். மின்வாரியத்தில் அரசு ஊழியராக பணியாற்றி வந்த கணவனின் மரணத்திற்கு பிறகு, 45 லட்ச ரூபாய் நிதி உதவியாக கிடைத்துள்ளது. அதன் மூலம் வரும் வட்டி வருவாயை கொண்டு குடும்ப செலவுகளை பர்வீன் நிர்வகித்து வர, 17 வயது மகளோ அவ்வப்போது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து தனது 20 வயது காதலனான அர்பாஸிற்கு கொடுத்து வந்துள்ளார். இந்த விஷயத்தை கண்டறிந்த பர்வீன் மகளை கடுமையாக தீட்டி, மீண்டும் இதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்துள்ளார். இதனால், அந்த இளம் ஜோடி ஆத்திரமடைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/glTdZozrtm8?si=cTJbxjTd0NP9OokO&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ரூ.45 லட்சத்துடன் சொகுசு வாழ்கைக்கு ப்ளான்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தங்களது காதலுக்கும், பணத்திற்கும் பர்வீன் மட்டுமே தடையாக இருப்பதால், அவரை கொலை செய்ய இந்த இளம் ஜோடி திட்டமிட்டுள்ளது. பணத்திற்கான அணுகலை பெறுவது மட்டுமின்றி, தந்தையின் மரணத்தால் கருணை அடிப்படையில் கிடைக்கும் அரசு வேலை, வளர்ப்பு தாயின் மீதுள்ள சொத்துகளின் உரிமை ஆகியவற்றை கைப்பற்றி சொகுசு வாழ்க்கையையும் வாழவும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, கடந்த ஏப்ரல் 24ம் தேதியன்று காதலன் அவனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து, வளர்ப்பு மகளே தாயை கொலை செய்துள்ளார். இதற்கான காதலன் அடங்கிய குழுவிற்கு 12 லட்சம் ரூபாயை அவள் கொடுத்ததாக கூறப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கொலை நடந்தது எப்படி?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;விசாரணையில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, வெள்ளிக்கிழமை இரவு பர்வீன் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பவர்களில் ஒருவர் பர்வீனின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்த,ஒருவர் கைகள் இரண்டையும் இறுக்கி பிடிக்க, மற்றொருவர் கால்களை பிடித்து கொலை திட்டத்தை நிறைவேறியுள்ளனர். அப்போது உயிர் பிழைக்க தீவிரமாக போராடியதில் பர்வீனின் கழுத்தில் தீவிரமான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ரத்துபோக்கு காரணமாகவே அவரது உயிரும் பிரிந்துள்ளது. இதையடுத்து ஒரு ஃப்ரீசர் பாக்சில் அந்த சடலத்தை வைத்து, படுக்கையை வீட்டில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். மறுநாள் காலையில் குளியலறையில் வழுக்கி விழுந்து படுகாயமடைந்து, தாய் இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இறுதி சடங்குகள் செய்து உடலும் அடக்கம் செய்யப்பட்டது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;சந்தேகத்தில் சிக்கிய காதல் ஜோடி..&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;உடலை அடக்கம் செய்தாலும், கழுத்தில் இருந்த காயம் உறவினர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை அன்று பர்வீனின் மைத்துனர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சிறுமியை பிடித்து விசாரித்ததில் மொத்த உண்மைகளையும் கொட்டி, கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பேரில் பீகார் மாநிலம் கயாவில் தலைமறைவாக இருந்த காதலன் அர்பாஸ் உள்ளிட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். இதனிடையே, தோண்டி எடுக்கப்பட்ட பர்வீனின் சடலம், ராஜேந்திர மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (RIMS) பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/30/25af240cff10baede6e3102b68c336301777526089218732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[" தினமும் குடிச்சா உன் பொண்டாட்டி எப்படி வருவா " கேள்வி கேட்ட முதியவருக்கு நேர்ந்த கொடூரம்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/kalrayan-hills-double-murder-drunk-husband-arrested-tnn-257924</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/kalrayan-hills-double-murder-drunk-husband-arrested-tnn-257924#respond</comments><pubDate>Wed, 29 Apr 2026 23:37:17 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/kalrayan-hills-double-murder-drunk-husband-arrested-tnn-257924</guid><description><![CDATA[&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;குடிபோதைக்கு அடிமையான நபர்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் உள்ள களக்காடு அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி ( வயது 70 )&amp;nbsp;இவருக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் இருந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு முதல் மனைவி காந்தி உயிரிழந்தார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;பின்னர் ராமசாமி தனது இரண்டாவது மனைவியான பொன்னம்மாள் ( வயது 67 ) என்பவருடன் காட்டுக்கொட்டை பகுதியில் தனியாக தங்கி வாழ்ந்து வந்தனர். ராமசாமியின் முதல் மனைவியின் மகன் குப்புசாமிக்கு ஒரு மகள் உள்ள நிலையில் குப்புசாமி கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். எனவே பேத்தி மேகலாவை ராமசாமி வளர்த்து பெருக்கஞ்செடி கிராமத்தைச் சேர்ந்த சதிஷ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;ஒன்றாக சேர்ந்து இருக்க வற்புறுத்தல்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;தொடக்கத்தில் மனைவி மீது பாசமாக இருந்த சதீஷ் நாளடைவில் குடிபோதைக்கு அடிமையாகி உள்ளார். பின்னர் தொடர்ந்து தினந்தோறும் குடித்து விட்டு வந்து மனைவி மேகலாவை அடித்து துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் விரக்தியடைந்த மேகலா கடந்த இரண்டு வருடங்களாக சதீஷை பிரிந்து தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வந்திருக்கிறார். ஆனால் சதீஷ் விடாமல் மேகலாவை போனில் தொடர்பு கொண்டும், நேரில் சந்தித்தும் தன்னுடன் வாழ வேண்டும் என வற்புறுத்தி வந்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;&quot; தினமும் குடிச்சிட்டு வந்தா உன் பொண்டாட்டி எப்படி உன் கூட குடும்பம் நடத்துவா &quot;&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;இதற்கிடையில் கடந்த ஒரு வருடமாக மேகலா திருப்பூரில் தங்கி அங்குள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 24 - ம் தேதி மனைவியை தேடி அவரது தாத்தா ராமசாமி வீட்டிற்கு சென்ற சதீஷ் மேகலாவை பற்றி தகவல் கேட்டு முதிய தம்பதியினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;அப்போது ராமசாமி தினமும் குடிச்சிட்டு வந்த உன் பொண்டாட்டி எப்படி உன் கூட குடும்பம் நடத்துவா&amp;nbsp; என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் அங்கிருந்த அம்மிக்கல்லை பயன்படுத்தி ராமசாமி மற்றும் அவரது மனைவி பொன்னம்மாளை தலையில் அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;விரக்தியில் அம்மிக்கல் போட்டு கொலை&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;இந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரியாலூர் காவல் ஆய்வாளர் பாலமுரளி இருவரின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக் குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும் வயது முதிர்ந்த தம்பதியினரை அம்மிக்கல்லை தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய குற்றவாளி சதீஷை கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக சேலம், கெங்கவல்லி, கருமந்துறை, ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சல்லடை போட்டு தேடி வந்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;அப்போது சதீஷ் தர்மபுரி மாவட்டத்தில் தங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தர்மபுரி சென்ற காவல் துறையினர் சதீஷை மடக்கி பிடித்து கைது செய்தனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/14/7af55d86da371aae31413c2b80d1f7061734177034874211_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ஸ்ரீபெரும்புதூரில் சோகம்: மூடி இல்லாத செப்டிக் டேங்கில் விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/3-year-old-boy-tragically-died-after-falling-into-a-septic-tank-in-sriperumbudur-kanchipuram-district-where-modi-was-not-present-tnn-257893</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/3-year-old-boy-tragically-died-after-falling-into-a-septic-tank-in-sriperumbudur-kanchipuram-district-where-modi-was-not-present-tnn-257893#respond</comments><pubDate>Wed, 29 Apr 2026 18:16:45 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/3-year-old-boy-tragically-died-after-falling-into-a-septic-tank-in-sriperumbudur-kanchipuram-district-where-modi-was-not-present-tnn-257893</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மேவலூர் குப்பம் கிராமத்தில், வீட்டு உரிமையாளரின் அலட்சியத்தால் செப்டிக் டேங்கில் விழுந்து மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விளையாடிக்கொண்டிருந்தபோது நேர்ந்த விபரீதம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திண்டிவனம் அருகே உள்ள ஒமிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் &amp;ndash; கவிதா தம்பதியினர், வேலை நிமித்தமாக கடந்த 21 ஆண்டுகளாக மேவலூர் குப்பம் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தர்ஷன் (3&amp;frac12; வயது) என்ற ஒரே மகன் இருந்தான். கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி காலை 8 மணியளவில், சிறுவன் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது திடீரென சிறுவன் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தந்தையின் கண்ணீர்ப் போராட்டம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேடுதலின் போது, வீட்டின் அருகே இருந்த செப்டிக் டேங்க் மூடி இல்லாமல் திறந்து கிடப்பதைக் கண்டு பெற்றோர் சந்தேகமடைந்தனர். பதற்றமடைந்த தந்தை மோகன்ராஜ், உடனடியாக செப்டிக் டேங்கிற்குள் குதித்து தேடியபோது, உள்ளே மூழ்கியிருந்த குழந்தையை மீட்டு வெளியே கொண்டு வந்தார். உடனடியாக சிறுவனை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், தர்ஷன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வீட்டு உரிமையாளரின் அலட்சியமே காரணம்?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சம்பவம் நடந்த வீடு காட்டகரம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. இந்த செப்டிக் டேங்க் நீண்ட நாட்களாகப் பாதுகாப்பற்ற முறையில் மூடி இல்லாமல் இருந்ததாகவும், இது குறித்து பலமுறை வீட்டு உரிமையாளரிடம் முறையிட்டும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததே தங்கள் மகனின் உயிரிழப்புக்குக் காரணம் என அவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;காவல்துறை விசாரணை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒரே மகனைப் பறிகொடுத்த தம்பதியினரின் கதறல் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, வீட்டு உரிமையாளரின் அலட்சியம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/29/95df446d459dc9d6c026317dbb7f006317774667736641319_original.jpg" width="220"/></item></channel></rss>