<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!</title><atom:link href="https://tamil.abplive.com/crime/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 12 Aug 2026 02:21:01 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!]]></title><link>https://tamil.abplive.com/crime/puducherry-thavalakuppam-nallavadu-aadi-thiruvizha-45-sovereign-gold-theft-270856</link><comments>https://tamil.abplive.com/crime/puducherry-thavalakuppam-nallavadu-aadi-thiruvizha-45-sovereign-gold-theft-270856#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 21:53:29 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/puducherry-thavalakuppam-nallavadu-aadi-thiruvizha-45-sovereign-gold-theft-270856</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: புதுச்சேரி தவளக்குப்பம் அருகே ஆடித்திருவிழாவை முன்னிட்டு குடும்பத்தினர் கோயிலுக்குச் சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்தி, கப்பல் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;புதுச்சேரி தவளக்குப்பத்தை அடுத்துள்ள நல்லவாடு மீனவர் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் விஜயேந்திரன் (41). இவர் மும்பையில் உள்ள ஒரு தனியார் கப்பல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முகுந்தாவதி, ஒரு மகள் மற்றும் மகனுடன் வசசித்து வருகிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;நேற்று நல்லவாட்டில் அமைந்துள்ள புகழ்பெற்ற குட்டியாண்டவர் கோயிலில் ஆடிமாதத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவில் பங்கேற்பதற்காக முகுந்தாவதி தனது பிள்ளைகள் மற்றும் சென்னையிலிருந்து வருகை தந்திருந்த உறவினர்களுடன் வீட்டைப் பூட்டிவிட்டு கோயிலுக்குச் சென்றுள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;அதிர்ச்சி தந்த காட்சி:&lt;/h2&gt;
&lt;p&gt;திருவிழா நிகழ்வுகள் முடிந்து இரவில் குடும்பத்தினர் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கதவு மற்றும் உள்ளே இருந்த 2 பீரோக்களின் கதவுகள் திறந்து கிடப்பதைக் கண்டு முகுந்தாவதி கடும் அதிர்ச்சியடைந்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;உள்ளே சென்று சோதித்துப் பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 45 பவுன் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. குடும்பத்தினர் அனைவரும் கோயிலுக்குச் சென்றதை நைஸாக நோட்டமிட்ட மர்ம நபர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;போலீஸார் விசாரணை தீவிரப்படுத்தல்:&lt;/h2&gt;
&lt;p&gt;இச்சம்பவம் குறித்து முகுந்தாவதி உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் அளித்தார். புகாரின் பேரில் தவளக்குப்பம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து தடயங்களைச் சேகரித்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;h2&gt;பொதுமக்கள் அச்சம்:&lt;/h2&gt;
&lt;p&gt;அண்மையில்தான் இதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் 15 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன. அந்தச் சம்பவத்தின் வடு மாறுவதற்குள்ளேயே, தற்போது மீண்டும் 45 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது நல்லவாடு கிராம மக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர் திருட்டில் ஈடுபடும் நபர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் எனப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/11/269b1122cc179b284062e9a88e8f72c21786465265317194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/cuddalore-panruti-school-teacher-arrested-child-sexual-abuse-case-tnn-270846</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/cuddalore-panruti-school-teacher-arrested-child-sexual-abuse-case-tnn-270846#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 21:31:56 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/cuddalore-panruti-school-teacher-arrested-child-sexual-abuse-case-tnn-270846</guid><description><![CDATA[&lt;h2 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;&quot; மாணவிக்கு பாலியல் தொல்லை &quot;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சாத்திப்பட்டு கிராமத்தில் செயல் பட்டு வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு 2-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 24 வயதான ஆங்கில ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 1,500-க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். வருகின்ற சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியில் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்நிலையில் கலை நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த 2 - ம் வகுப்பு மாணவியை வீட்டிற்கு செல்ல விடாமல் அதே பள்ளியில் பணியாற்றி வந்த ஆங்கில ஆசிரியர் அகஸ்டின் ( வயது 24 ) என்பவர் பாலியல் தொல்லை அளித்தக்கதாக கூறப்படுகிறது&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;&quot; பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதம் &quot;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த பொது மக்கள் சிலர் ஆசிரியரை தாக்கியதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இதையடுத்து , இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் பள்ளிக்கு வந்துள்ளனர். மேலும் மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் குற்றச் சாட்டப்பட்ட ஆசிரியரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;பின்னர் , பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியர் அகஸ்டீன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து சென்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/11/790add92dcb89b2a1cf12d5b418a5a4817864640581611310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மயிலாடுதுறையில் பரபரப்பு: 25 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது - முழு விவரம்!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-ganja-seller-history-sheeter-detained-under-goondas-act-cuddalore-prison-tnn-270849</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-ganja-seller-history-sheeter-detained-under-goondas-act-cuddalore-prison-tnn-270849#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 20:41:11 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-ganja-seller-history-sheeter-detained-under-goondas-act-cuddalore-prison-tnn-270849</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோத கஞ்சா விற்பனை, மதுவிலக்கு குற்றங்கள் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது காவல்துறையினர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி (History Sheeter) மற்றும் அவரது கூட்டாளி ஆகிய இருவர் மயிலாடுதுறை காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் (Goondas Act) கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ரகசியத் தகவலும் கஞ்சா வேட்டையும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த ஜூலை 13, 2026 அன்று, மயிலாடுதுறை காவல் சரகத்திற்குட்பட்ட பல்லவராயன்பேட்டை மதகு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஷ்-க்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில், காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று திடீர் 'கஞ்சா வேட்டை' மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கே ரகசியமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவரை காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதனைத் தொடர்ந்து பிடிபட்டவர்களிடம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் மயிலாடுதுறை காவல் நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளியான (History Sheeter) முருகேசன் என்பவரது மகன் 27 வயதான அபாயம் (எ) சுதர்சன் மற்றும் சுதர்சனின் கூட்டாளியான வீராசாமி என்பவரது மகன் விக்கி (எ) விக்னேஷ் (26) என்பது தெரியவந்தது.&amp;nbsp; அதனையடுத்து&amp;nbsp; அவர்களிடமிருந்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கைது செய்யப்பட்ட அபாயம் (எ) சுதர்சன் மற்றும் விக்கி (எ) விக்னேஷ் ஆகிய இருவரும் தொடர்ச்சியாக கஞ்சா விற்பனை மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கும் சமூக அமைதிக்கும் அச்சுறுத்தலாக இருந்து வந்ததால், அவர்களைத் தடுப்புக் காவல் சட்டத்தின் (Goondas Act) கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் &amp;nbsp;மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார். மாவட்ட எஸ்பி-யின் பரிந்துரையை ஏற்று, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் காவலர்கள், குற்றவாளிகள் இருவரையும் கடலூர் மத்திய சிறையில் &amp;nbsp;அடைத்தனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நடப்பாண்டில் 25 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது!&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தக் காவல்துறை எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு 2026-ஆம் ஆண்டில் மட்டும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட மொத்தம் 25 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;குற்றங்களின் வாரியான விவரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;* கொலை வழக்குகள்: 05 நபர்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;* பொது அமைதிக்குக் பங்கம் விளைவித்தல்: 07 நபர்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;* மதுவிலக்கு குற்றங்கள்: 06 நபர்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;* கஞ்சா விற்பனை / கடத்தல்: 06 நபர்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;* பாலியல் குற்றங்கள்: 01 நபர்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மாவட்ட எஸ்பி கடுமையான எச்சரிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்களை மிரட்டும் ரௌடிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர், கஞ்சா, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையாளர்கள்,&lt;br /&gt;சட்டவிரோத மது விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் ஆகியோர் மீது எவ்விதத் தாட்சண்யமும் இன்றி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.சினேஹா பிரியா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/11/3547c20807ec0e6ba95ad01545c9b0681786460966213186_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[பூட்டிய வீட்டில் துணிகரத் கொள்ளை: 12 மணி நேரத்திற்குள் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை தட்டிக் தூக்கிய போலீசார்...]]></title><link>https://tamil.abplive.com/crime/mayiladuthurai-manalmedu-house-burglary-history-sheeter-arrested-12-hours-270827</link><comments>https://tamil.abplive.com/crime/mayiladuthurai-manalmedu-house-burglary-history-sheeter-arrested-12-hours-270827#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 17:31:48 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/mayiladuthurai-manalmedu-house-burglary-history-sheeter-arrested-12-hours-270827</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே பூட்டியிருந்த வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து, உள்ளே புகுந்து வெள்ளிப் பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனத்தைக் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில், மணல்மேடு காவல் நிலைய வரலாற்றுப் பதிவேடு குற்றவாளி உட்பட 3 பேரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த 12 மணி நேரத்திற்குள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து திருடப்பட்ட அனைத்துப் பொருட்களும் முழுமையாக மீட்கப்பட்டு, அவர்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சம்பவத்தின் முழுமையான பின்னணி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு காவல் சரக எல்லைக்கு உட்பட்ட இராதநல்லூர் கிராமம், மெயின்ரோடு பகுதியில் வசித்து வருபவர் ராஜசேகர். இவரது மனைவி ராணி (வயது 48). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி (07.08.2026) அன்று இரவு தனது வீட்டை வழக்கம்போல் பத்திரமாகப் பூட்டிவிட்டு, அருகில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மறுநாள் காலை (08.08.2026) ராணி தனது வீட்டிற்குத் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டுத் திறந்து கிடப்பதைக் கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பதற்றத்துடன் வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த 96 கிராம் எடை கொண்ட வெள்ளிப் பொருட்கள் மற்றும் வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;காவல் நிலையத்தில் புகார்&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தனது வீட்டில் நடைபெற்ற இந்தத் துணிகரத் திருட்டுச் சம்பவம் குறித்து ராணி உடனடியாக மணல்மேடு காவல் நிலையத்திற்குச் சென்று முறைப்படி புகார் அளித்தார். அளித்த புகாரின் அடிப்படையில் மணல்மேடு காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, குற்றச் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று முதற்கட்ட தடயவியல் ஆய்வுகளையும் கள விசாரணையையும் மேற்கொண்டனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தனிப்படை அமைப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பூட்டிய வீடுகளைக் குறிவைத்து நடைபெறும் இதுபோன்ற குற்றச் சம்பவங்களைத் தடுத்து, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து திருடு போன சொத்துக்களை மீட்க வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹா ப்ரியா, மணல்மேடு காவல்துறையினருக்குக் கடுமையான அறிவுறுத்தல்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அவரது உத்தரவின் பேரில், மயிலாடுதுறை உட்கோட்ட தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை முடுக்கிடப்பட்டது. மணல்மேடு காவல் ஆய்வாளர் முத்துலெட்சுமி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் நரசிம்மபாரதி ஆகியோர் தலைமையில் தனிப்படை போலிசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) மற்றும் பழைய குற்றவாளிகளின் நடமாட்டத்தைக் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கினர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;12 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள்&amp;nbsp; கைது&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தனிப்படையினரின் தீவிரத் தொடர் விசாரணையில், மணல்மேடு காவல் நிலைய வரலாற்றுப் பதிவேடு (History Sheeter) குற்றவாளியான தாழ்சேரி, கொற்கை பகுதியைச் சேர்ந்த தங்கராசு மகன் ரஜினி (வயது 51) என்பவர் இக்குற்றச் சம்பவத்தில் முதன்மையாக ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனைத் தொடர்ந்து ரஜினியைப் பிடித்துப் போலிசார் நடத்திய தீவிர விசாரணையில், அவர் தனது கூட்டாளிகளான திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் குமார் (வயது 34) மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் மகன் சுபாஷ் (வயது 29) ஆகியோருடன் இணைந்து இந்தத் திருட்டுச் சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது&amp;zwnj;.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;திருடப்பட்ட சொத்துக்கள் மீட்பு மற்றும் சிறையிலடைப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குற்றவாளிகள் அளித்த தகவலின் அடிப்படையில், திருடப்பட்ட 96 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை காவல்துறையினரால் சேதமின்றி முழுமையாக மீட்கப்பட்டன. அதனை தொடர்ந்து இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான ரஜினி, குமார் மற்றும் சுபாஷ் ஆகிய மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதியின் உத்தரவின்படி நீதிமன்றக் காவலுக்கு (Judicial Custody) உட்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மாவட்ட எஸ்பி பாராட்டு மற்றும் பொதுமக்கள் வரவேற்பு.&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குற்றச் சம்பவம் நடந்த தகவலறிந்த குறுகிய காலத்தில், அதாவது 12 மணி நேரத்திற்குள்ளாகவே தீவிர விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ததோடு, திருடப்பட்ட பொருட்கள் அனைத்தையும் மீட்ட மணல்மேடு காவல் ஆய்வாளர் முத்துலெட்சுமி, சிறப்பு உதவி ஆய்வாளர் நரசிம்மபாரதி தலைமையிலான மயிலாடுதுறை உட்கோட்ட தனிப்படை மற்றும் மணல்மேடு காவல் நிலைய அதிகாரிகளின் சிறப்பான சேவையைப் பாராட்டி, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹா ப்ரியா வெகுவாகப் பாராட்டினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காவல்துறையின் இந்த அதிவிரைவான அதிரடி நடவடிக்கை இராதநல்லூர் மற்றும் மணல்மேடு சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்களிடையே பெரும் நிம்மதியையும் பாராட்டுக்களையும் பெற்றுத் தந்துள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/11/4d65aed8dce4cb203613a46dbf538b951786449402300186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பொத்தேரி அருகே அதிர்ச்சி! அரசு நிலத்தில் பல கோடி ரூபாய் மரம் கடத்தல் புகாரா? - அதிகாரிகளின் விளக்கம் என்ன?]]></title><link>https://tamil.abplive.com/crime/chengalpattu-kattupakkam-research-station-news-collector-inspects-tree-felling-allegationsteak-trees-being-illegally-cut-tnn-270822</link><comments>https://tamil.abplive.com/crime/chengalpattu-kattupakkam-research-station-news-collector-inspects-tree-felling-allegationsteak-trees-being-illegally-cut-tnn-270822#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 16:42:39 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/chengalpattu-kattupakkam-research-station-news-collector-inspects-tree-felling-allegationsteak-trees-being-illegally-cut-tnn-270822</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அடுத்த பொத்தேரி அருகே காட்டுப்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. இந்த பிரம்மாண்ட ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட பல்வேறு வகையான கால்நடைகளுக்கான பிரத்யேக பண்ணைகள், ஆராய்ச்சி கூடங்கள் மற்றும் கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீவனம் பயிரிடப்படும் நிலங்கள் அமைந்துள்ளன. இதுமட்டுமன்றி, வளாகத்தைச் சுற்றியுள்ள ஏராளமான காலி இடங்களில் மதிப்புமிக்க பல்வேறு வகையான மரங்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பல கோடி ரூபாய் மதிப்பிலான மரங்கள் வெட்டப்பட்டதாக குற்றச்சாட்டு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்நிலையில், இந்த ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் வளர்க்கப்பட்டு வந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான 300 தேக்கு மரங்கள் சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்பட்டதாக திடீரெனக் கடுமையான குற்றச்சாட்டுகளும் புகார்களும் எழுந்தன. இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அரசுக்குச் சொந்தமான ஆராய்ச்சி மையத்தில் இவ்வளவு பெரிய அளவில் மரங்கள் மாயமாகியிருப்பதாக வெளிவந்த தகவல் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நேரில் விசாரணை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புகார்களின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வீரப்பன் மற்றும் மாவட்ட வன அலுவலர் பால்வே கிரிஷ் ஹரிபா ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆராய்ச்சி நிலைய வளாகத்தின் பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்ட அதிகாரிகள், அங்கிருந்த கால்நடை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளிடம் மரங்கள் பராமரிப்பு மற்றும் புகார் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் வனச்சரகத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வளாகம் முழுவதும் அங்குலம் அங்குலமாகச் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வனத்துறை அதிகாரிகளின் விளக்கம் மற்றும் தொடர் விசாரணை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தச் சோதனை மற்றும் விசாரணை குறித்து வனத்துறை அதிகாரிகள் விரிவான விளக்கம் அளித்துள்ளனர். அதில், ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ஆய்வு செய்த வரை அங்குச் சந்தன மரங்கள் இருந்ததற்கான எந்தவிதமான தடயமும், சான்றுகளும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும், இதுவரை நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் இங்கு எந்த மரங்களும் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு விற்பனை செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும், இந்த விவகாரத்தின் உண்மைத் தன்மையை முழுமையாகக் கண்டறிய வனத்துறை மட்டுமன்றி, கால்நடைப் பராமரிப்புத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளும் இணைந்து தீவிரமான விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/11/d4bf64f657ba3af3dc42e9dbb0d00d8e17864466962361319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. பாம் சரவணனை தட்டி தூக்கிய சென்னை கிரைம் போலீஸ்.. திருவள்ளூரில் பரபரப்பு]]></title><link>https://tamil.abplive.com/crime/bomb-saravanan-arrested-thiruvallur-court-chennai-crime-branch-murder-270809</link><comments>https://tamil.abplive.com/crime/bomb-saravanan-arrested-thiruvallur-court-chennai-crime-branch-murder-270809#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 15:08:38 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/bomb-saravanan-arrested-thiruvallur-court-chennai-crime-branch-murder-270809</guid><description><![CDATA[&lt;p&gt;கொலை வழக்கில் கைதாகி உள்ள பாம் சரவணன் திருவள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சென்னை கிரைம் பிராஞ்ச் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மனைவி மற்றும் வழக்கறிஞர்களுடன் வந்தபோது காரில் ஏற்றி சென்றபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு தமது மனைவி மகாலட்சுமி மற்றும் வழக்கறிஞர்களுடன் காரில் வந்த பிரபல ரவுடி பாம் சரவணனை சென்னை கிரைம் பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர். ஐசிஎம்ஆர் அருகே வந்த போது காரை மடக்கி காரில் இருந்து இறக்கி போலீசாரின் வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/PKXmOe46fE4?si=Oy77b9BGFB2HFhsH&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;அப்போது பாம் சரவணனுடன் வந்த அவரது மனைவி மற்றும் வழக்கறிஞர்கள் கைது செய்தவர்கள் யார்? என தெரியாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எதற்காக அழைத்துச் செல்கிறார்கள் என தெரியாமல் அவசர எண் 100-க்கு பாம் சரவணனின் மனைவி செல்போனில் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். சென்னை கிரைம் பிராஞ்ச் போலீசாரால் கைது செய்யப்பட்டு காரில் அழைத்து சென்ற போது அவரது காரை துரத்தி வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.&lt;/p&gt;
&lt;p&gt;விசாரணையில், பிரபல ரவுடி பாம் சரவணனின் சகோதரர் தென்னரசு என்பவரை கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய ஜெயசீலன் என்பவரை 2016-ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில் &amp;nbsp;குற்றவாளியான பாம் சரவணன் திருவள்ளூர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக வந்தபோது சென்னை போலீசார், அவரை மடக்கி பிடித்து கைது செய்த சம்பவம் தெரிய வந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;சினிமாவை போல் பிரபல ரவுடி பாம் சரவணன் திருவள்ளூரில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/11/e3735c66d9785194652cbc2d260dab8f1786440864264113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பெற்றோர்களே உஷார்! வீட்டின் முன்னே விளையாடிய குழந்தைகளுக்கு 'பேட் டச்'... முதியவரை தூக்கிய போலீஸ்!]]></title><link>https://tamil.abplive.com/crime/tirupattur-protection-children-sexual-offense-act-elderly-man-arrested-pocso-act-270790</link><comments>https://tamil.abplive.com/crime/tirupattur-protection-children-sexual-offense-act-elderly-man-arrested-pocso-act-270790#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 13:19:31 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/tirupattur-protection-children-sexual-offense-act-elderly-man-arrested-pocso-act-270790</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;திருப்பத்தூரில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த இரு&amp;zwnj; குழந்தைகளிடம் பேட் டச் செய்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா ஜி ராவ் மகன் பாபு (54) என்பவரின் வீட்டின் அருகே 8 வயது மற்றும் 4 வயது என இரண்டு பெண் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/VquzuqqfHwg?si=u3NcHD5f-P5NBMZk&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இந்த நிலையில், பாபு இரு குழந்தைகளும் வீட்டிற்கு அழைத்துச் சென்று பேட் டச் செய்து பாலியல் அத்துமீறல் ஈடுபட முயன்றுள்ளார். அந்த இரு குழந்தைகளும் பாபு வீட்டில் இருந்து புறப்பட்டு அவர்களது &amp;nbsp;பெற்றோரிடம் கூறியுள்ளனர். பின்னர் பெற்றோர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முதியவர் பாபு மீது வழக்கு பதிந்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரு குழந்தைகளிடம் பேட் டச் செய்து போக்சோ சட்டத்திற்கு கீழ் கைதான முதியவரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;போக்சோ சட்டம்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இந்தியாவில் குழந்தைகள் பாதுகாக்கும் கொள்கைகளின் ஓரு பகுதியாக உருவாக்கப்பட்டது தான் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 (The protection of children from sexual offense(pocso) Act 2012). இந்த சட்டம் சுருக்கமாக போக்சோ சட்டம் என அழைக்கப்படுகிறது, மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10 தேதியும், மக்களவையில் மே மாதம் 22 தேதியும் நிறைவேற்றப்பட்டது, நவம்பர் 14-ஆம் தேதி அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு வரை குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெறும் பொழுது ஐபிசி சட்டம் பிரிவு 375 கற்பழிப்பு, பிரிவு 354 பெண்ணின் அடக்கத்தை மீறுதல், பிரிவு 377 இயற்கைக்கு மாறான குற்றங்கள் எனும் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;போக்சோ சட்டத்தின் பொது அம்சங்கள்:&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்,வன்முறை, பாலியல் துன்புறுத்தல், சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. இசட்டத்தில் கீழ் 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடியவேண்டும். &amp;nbsp;இசட்டத்தில் குற்றம் புரிந்த குற்றவாளிகளுக்கு சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம், சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல்துறை பிரிவும் ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/11/7c873d223ec28873472a93cca19229e81786434526455113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!]]></title><link>https://tamil.abplive.com/crime/villupuram-husband-acid-attack-divorced-wife-anburani-ramachandran-arrested-270762</link><comments>https://tamil.abplive.com/crime/villupuram-husband-acid-attack-divorced-wife-anburani-ramachandran-arrested-270762#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 10:49:48 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/villupuram-husband-acid-attack-divorced-wife-anburani-ramachandran-arrested-270762</guid><description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம்: விழுப்புரத்தில் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து சென்ற மனைவி மீது ஆசிட் வீசிவிட்டுத் தப்பியோடிய கணவரை நகரக் காவல் நிலையப் போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு இன்று கைது செய்தனர். இச்சம்பவத்தில் அருகில் நடந்து சென்ற முதியவர் ஒருவரும் காயமடைந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;குடும்பத் தகராறு மற்றும் விவாகரத்து:&lt;/h2&gt;
&lt;p&gt;விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட முத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி அன்புராணி. இந்தத் தம்பதியினருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவன்-மனைவிி இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் நீதிமன்றத்தை நாடி, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு முறைப்படி விவாகரத்து பெற்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;விவாகரத்திற்குப் பிறகு, அன்புராணி தனது மூன்று குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இருப்பினும், ராமச்சந்திரன் அடிக்கடி அன்புராணியின் வீட்டிற்குச் சென்று &quot;குழந்தைகளைப் பார்க்க வேண்டும்&quot; எனச் சண்டையிட்டு வந்ததோடு, செல்போனில் தொடர்புகொண்டும் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;நடுரோட்டில் நடந்த கொடூரம்:&lt;/h2&gt;
&lt;p&gt;இந்நிலையில், நேற்று அன்புராணி விழுப்புரம் நகரப் பகுதியான திரு.வி.க வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த ராமச்சந்திரன், தான் கையோடு எடுத்து வந்த கழிப்பறை சுத்திகரிப்புக்கு பயன்படுத்தும் ஆசிட்டைத் (Toilet Acid) திடீரென அன்புராணியின் முகத்தில் வீசியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;ஆசிட் வீச்சில் அன்புராணி அலறித் துடித்த நிலையில், அருகில் நடந்து சென்று கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி என்ற முதியவர் மீதும் எதிர்பாராதவிதமாக ஆசிட் சிதறி விழுந்தது. தாக்குதலை நடத்திய உடனடியாக ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.&lt;/p&gt;
&lt;h2&gt;மருத்துவமனையில் அனுமதி:&lt;/h2&gt;
&lt;p&gt;இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த விழுப்புரம் நகரக் காவல் நிலையப் போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆசிட் வீச்சால் காயமடைந்த அன்புராணி மற்றும் முதியவர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரையும் மீட்டு, அருகில் உள்ள நகராட்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;அதன் பின்னர், முகத்தில் பலத்த காயமடைந்த அன்புராணி மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;கணவர் கைது:&lt;/h2&gt;
&lt;p&gt;இச்சம்பவம் தொடர்பாகப் வழக்குப் பதிவு செய்த நகரக் காவல் துறையினர், தப்பியோடிய ராமச்சந்திரனைப் பிடிக்க தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த ராமச்சந்திரனைப் போலீசார் இன்று அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;பட்டப்பகலில் பெண் மீது ஆசிட் வீசப்பட்ட இச்சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/11/ff6a255d47b3f9b0cf0991dc0d7541791786425457930194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[" கள்ளக் காதலை கைவிடாத தாய் " கஞ்சா போதையில் மகன் செய்த கொடூர காரியம்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tirupathur-jolarpettai-son-kills-mother-illegal-affair-crime-tnn-270746</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tirupathur-jolarpettai-son-kills-mother-illegal-affair-crime-tnn-270746#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 09:17:04 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tirupathur-jolarpettai-son-kills-mother-illegal-affair-crime-tnn-270746</guid><description><![CDATA[&lt;h2 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;&quot; தகாத உறவு - எச்சரித்த மகன் &quot;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட கருப்பனூர் MGR நகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை அவருடைய மனைவி கஸ்தூரி ( வயது 53). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். மகன் சத்தியமூர்த்தி ( வயது 26 ) மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் மகள் திருமணமாகி தருமபுரி பகுதியில் வசித்து வருகிறார்&lt;/p&gt;
&lt;p&gt;மேலும் , கஸ்தூரியின் கணவர் அண்ணாதுரை கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் கஸ்தூரி குடும்பத்தை காப்பாற்ற பூ வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். மேலும் கஸ்தூரியின் மகன் சத்திய மூர்த்தி சென்னையில் பானிபூரி கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் , கஸ்தூரிக்கும் வேறொரு நபருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இந்த உறவு குறித்து கஸ்தூரியின் மகனுக்கு தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தாயார் கஸ்தூரியை சத்தியமூர்த்தி பலமுறை அவரது மகன் கண்டித்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கஞ்சா போதையில் தாக்குதல்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அதனை கண்டு கொள்ளாத கஸ்தூரி மீண்டும் அந்த நபருடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சென்னையிலிருந்து வந்த கஸ்தூரியின் மகன் சத்திய மூர்த்தி ஆத்திரமடைந்து கஞ்சா போதையில் கஸ்தூரியை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். மகன் தாக்கியதில் கஸ்தூரி படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;அதன் பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு டி எஸ் பி முரளி தலைமையிலான போலீசார் விரைந்து வந்துள்ளனர். அப்போது தாய் கஸ்தூரியை கட்டையால் தாக்கி கொலை செய்து விட்டு அவரது மகன் சத்திய மூர்த்தி தப்பி செல்லாமல் வீட்டின் அருகே அமர்ந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;பின்னர், அவரை கைது செய்த ஜோலார்பேட்டை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தகாத உறவில் பெற்ற தாயை மகனே கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/11/350d84f67190ce008961320bab5d2abb17864199664891310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-government-sets-up-65-special-anti-drug-task-forces-with-1-600-police-personnel-under-cm-vijay-s-direct-control-tnn-270742</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-government-sets-up-65-special-anti-drug-task-forces-with-1-600-police-personnel-under-cm-vijay-s-direct-control-tnn-270742#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 07:32:24 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-government-sets-up-65-special-anti-drug-task-forces-with-1-600-police-personnel-under-cm-vijay-s-direct-control-tnn-270742</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்கும் வகையில், 65 சிறப்பு அதிரடி படைகளை அமைக்கவும், அதற்காக ரூ.264 கோடி நிதி ஒதுக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றபோது, &quot;போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க மாவட்டம் தோறும் சிறப்பு அதிரடி படை அமைக்கப்படும்&quot; என அறிவித்திருந்தார். அதனைச் செயல்படுத்தும் விதமாக இந்த 65 சிறப்பு அதிரடி படைகளை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; இன்று இந்த அதிரடி படையை தொடங்கி வைக்க உள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அரசாணை விவரங்கள் மற்றும் செயல்பாடுகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சிறப்பு அதிரடி படைக்காக நிதி ஒதுக்கீடு செய்து உள்துறை செயலர் மணிவாசன் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க அமைக்கப்படும் இந்த 65 சிறப்பு அதிரடி படைகளும் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும். மாநில அளவில் கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் இந்த சிறப்பு படை செயல்படும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மாவட்ட வாரியாக படைகளின் பகிர்வு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு போதைப்பொருள் சிறப்பு படை என மொத்தம் 37 படைகளும், சென்னையில் 12 சிறப்பு படைகளும் அமைக்கப்படுகின்றன. மேலும் ஆவடி, தாம்பரம், சேலம், கோவை, திருப்பத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தலா இரண்டு சிறப்பு படைகள் அமைக்கப்படும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;படை கட்டமைப்பு மற்றும் பணியிடங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பணிகளுக்காக மொத்தம் 65 இன்ஸ்பெக்டர்கள், 260 சப்-இன்ஸ்பெக்டர்கள், 1,300 போலீஸ் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிறப்பு அதிரடி படையிலும் ஒரு இன்ஸ்பெக்டர், நான்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 20 போலீசார் இடம்பெறுவர். போதைப்பொருள் தடுப்பு பணியின் தலைமைமையகம், கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் இயங்கும் என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/11/f760f906c0476e601f22c15793d573a917864137298891319_original.jpg" width="220"/></item></channel></rss>