<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>பக்கவாத கணவர்...கள்ளக் காதலனுடன் உல்லாசம்.. காட்டிக் கொடுத்த தாய்...நடுங்க வைத்த கொடூரம்</title><atom:link href="https://tamil.abplive.com/crime/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 17 Sep 2026 10:47:23 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA["குடும்பம் நடத்த வா " மறுத்த மனைவி.. ஆத்திரத்தில் 3 பேரை கத்தியால் சரித்த மருமகன்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/wife-and-in-laws-stabbed-by-husband-after-dispute-in-rk-pettai-tiruvallur-tnn-274733</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/wife-and-in-laws-stabbed-by-husband-after-dispute-in-rk-pettai-tiruvallur-tnn-274733#respond</comments><pubDate>Thu, 17 Sep 2026 10:09:48 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/wife-and-in-laws-stabbed-by-husband-after-dispute-in-rk-pettai-tiruvallur-tnn-274733</guid><description><![CDATA[&lt;h2 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;கணவன் - மனைவி இடையே தகராறு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை வட்டம் பத்மாபுரம் அருகே&amp;nbsp;இடப்பற்றை கிராமத்தைச் சேர்ந்த ரவி , அவரது மனைவி சாந்தி ஆகியோருடன் அவர்களது மகள் ரேகா வசித்து வருகிறார். கணவர் ராஜேஷுடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனை காரணமாக ரேகா, கணவரைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த நிலையில் ராஜேஷ் திடீரென ரேகாவின் வீட்டிற்குச் சென்று , தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ் , திடீரென கத்தியை எடுத்து ரேகாவை வெட்டியதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த அவரது மாமனார் ரவியும், மாமியார் சாந்தியும் ராஜேஷை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;மாமியார் - மாமனாருக்கு வெட்டு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அப்போது மேலும் ஆத்திரமடைந்த ராஜேஷ், மாமனார் ரவி மற்றும் மாமியார் சாந்தி ஆகிய இருவரையும் கத்தியால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் மூவரும் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதையடுத்து ராஜேஷ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;சம்பவம் குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த ரேகா, ரவி மற்றும் சாந்தி ஆகிய மூவரையும் ஆம்புலன்ஸ் மூலம் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் , மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மூவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து , தப்பியோடிய ராஜேஷை தீவிரமாக தேடி வருகின்றனர். மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஏற்பட்ட தகராறில், மனைவி உள்ளிட்ட மூன்று பேரை மருமகன் கத்தியால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/17/ea025d0af65b1473320632bdeb06281617896200498051310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[“ஆசிரமத்துக்கு சொத்தை எழுதி விடுவேன்”... ஆத்திரத்தில் தந்தையை வெட்டிய மகன்! தாயும் கைது!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/kanchipuram-crime-news-retired-bus-driver-murdered-over-property-dispute-son-and-mother-arrested-tnn-274667</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/kanchipuram-crime-news-retired-bus-driver-murdered-over-property-dispute-son-and-mother-arrested-tnn-274667#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 08:48:45 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/kanchipuram-crime-news-retired-bus-driver-murdered-over-property-dispute-son-and-mother-arrested-tnn-274667</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சொத்து தகராறு காரணமாக ஓய்வு பெற்ற மாநகர பேருந்து ஓட்டுநர் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தையை கொலை செய்ததாக மகனும், கொலைக்கான தடயங்களை அழித்து மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடியதாக அவரது தாயும் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் விசாரணையில் சொத்து தொடர்பான பிரச்சனை கொலைக்கான காரணமாக தெரியவந்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பெருங்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற பஸ் டிரைவர்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் சிவபாதம், 70. மாநகர அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ரேணுகா, 50. இவர்களுக்கு மதுசூதனன், 39, என்ற மகன் உள்ளார். பொறியியல் பட்டதாரியான மதுசூதனன் தனியார் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சிவபாதம் குடும்பத்தினருக்கு சென்னை பெருங்குடி மற்றும் ஓஎம்ஆர் சாலை பகுதிகளில் பல்வேறு வீடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வீடுகளில் இருந்து கிடைக்கும் வாடகை வருவாய் குடும்பத்தின் முக்கிய வருமானமாக இருந்து வந்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மகன்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்நிலையில், மதுசூதனன் தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு சுமார் 10 மாதங்களுக்கு முன்பு பெருங்குடியில் உள்ள வீட்டுக்கு திரும்பியுள்ளார். பின்னர் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். குடும்பத்தின் செலவுகள் பெரும்பாலும் சென்னையில் உள்ள வீடுகளின் வாடகை வருவாயை நம்பியே நடைபெற்றதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதற்கிடையே, சிவபாதத்திற்கு நீரிழிவு நோய் இருந்ததுடன், மதுபழக்கமும் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மருந்து, மாத்திரைகள் மற்றும் பிற செலவுகளுக்காக அவர் பணம் செலவு செய்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வாலாஜாபாத் அருகே தனியாக தங்கிய சிவபாதம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மனைவி மற்றும் மகனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சிவபாதம், வாலாஜாபாத் அருகே உள்ள மருதம் கிராமத்தில் இருக்கும் தனது வீட்டில் அவ்வப்போது தங்கி வந்துள்ளார். அதுபோல, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து மருதம் கிராமத்திற்கு சென்று அங்கேயே தங்கியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அப்போது அவரிடம் நீரிழிவு நோய்க்கான மருந்து, மாத்திரைகள் வாங்குவதற்கும் அன்றாட செலவுகளுக்கும் போதிய பணம் இல்லாமல் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கிராமத்தில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி தனது செலவுகளை சமாளித்து வந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வாடகை பணத்தை கேட்டதால் தகராறு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சில நாட்களுக்கு முன்பு மருதம் கிராமத்தில் உறவினர் ஒருவரின் கிரகப்பிரவேச நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்காக சென்னையில் இருந்து ரேணுகாவும், மதுசூதனனும் மருதம் கிராமத்தில் உள்ள சிவபாதத்தின் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது, சிவபாதம் மாதக்கணக்கில் தனியாக தங்கியிருப்பது மற்றும் தேவையில்லாமல் செலவு செய்வது குறித்து தாயும் மகனும் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. மேலும், சென்னைக்கு திரும்பி வந்தால் குடும்பத்துடன் இருந்து பிரச்சனைகளை தவிர்க்கலாம் என அவர்கள் அழைத்ததாகவும் தெரிகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆனால், சிவபாதம் சென்னைக்கு வர மறுத்ததுடன், சென்னையில் உள்ள வீடுகளில் இருந்து கிடைக்கும் வாடகை பணத்தை தன்னிடம் வழங்குமாறு கேட்டுள்ளார். அந்த பணத்தை தனது மருந்து மற்றும் அன்றாட செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்வதாக கூறியுள்ளார். இதற்கு தாயும் மகனும் சம்மதிக்காததால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சொத்துகளை ஆசிரமத்திற்கு எழுதி விடுவேன் என மிரட்டல்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வாக்குவாதம் முற்றிய நிலையில், தனது செலவுக்கு பணம் வழங்காவிட்டால் தனது பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தையும் உறவினர்களுக்கும், அனாதை ஆசிரமத்திற்கும் எழுதி வைத்து விடுவேன் என சிவபாதம் கூறியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தகவல் தாயும் மகனும் அதிர்ச்சியடைய காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குடும்பத்திற்குள் சொத்து தொடர்பான பிரச்சனை மேலும் தீவிரமடைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்நிலையில், சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நாளுக்கு முன்தினம் அதிகாலையில் ரேணுகா கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். வீட்டில் சிவபாதமும் அவரது மகன் மதுசூதனனும் இருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மதுசூதனன், கத்தியால் தனது தந்தை சிவபாதத்தின் கால் மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த சிவபாதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மாரடைப்பால் இறந்ததாக நாடகம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சம்பவத்துக்குப் பிறகு மதுசூதனன் தனது தாய் ரேணுகாவிடம் நடந்ததை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் வீட்டிலும், சிவபாதத்தின் உடலிலும் இருந்த ரத்தக்கறைகளை துடைத்து அகற்றியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் சிவபாதம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளனர். இதனை நம்ப வைக்கும் வகையில் இருவரும் கதறி அழுதபடி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சிவபாதத்தின் உடலை எரியூட்டுவதற்காக இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வாலாஜாபாத் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து உத்திரமேரூர் டிஎஸ்பி கேசவன், ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி கீர்த்திவாசன், வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சிவபாதத்தின் உடலை கைப்பற்றி, சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பிரேதப் பரிசோதனையில் வெளிச்சத்துக்கு வந்த கொலை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிவபாதத்தின் உடலை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவரது கால் மற்றும் கழுத்துப் பகுதிகளில் வெட்டுக்காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து சிவபாதத்தின் மனைவி ரேணுகா மற்றும் மகன் மதுசூதனன் ஆகியோரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;போலீசாரின் தீவிர விசாரணையில், சொத்து தொடர்பான பிரச்சனை காரணமாக சிவபாதத்திற்கும் அவரது மகன் மதுசூதனனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அவர் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக இருவரும் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வாலாஜாபாத் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ரேணுகா மற்றும் மதுசூதனன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரும் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சொத்துப் பிரச்சனையில் ஓய்வு பெற்ற பேருந்து ஓட்டுநர் கொலை செய்யப்பட்டதும், அவரது மரணத்தை மறைத்து தாய் மற்றும் மகன் மாரடைப்பு என நாடகமாடியதாக கூறப்படும் சம்பவமும் மருதம் கிராமம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/4c0ab8f4401907702f854f6fc99b352117895286744881319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[kallakurichi : பேய் என்ற பெயரில் மாணவிக்கு கொடூர சித்ரவதை! கற்பூரம், துடைப்பத்தால் தாக்கிய சக மாணவிகள்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/kallakurichi-chinnasalem-student-hostel-torture-camphor-broom-ghost-possession-274557</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/kallakurichi-chinnasalem-student-hostel-torture-camphor-broom-ghost-possession-274557#respond</comments><pubDate>Tue, 15 Sep 2026 09:48:02 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/kallakurichi-chinnasalem-student-hostel-torture-camphor-broom-ghost-possession-274557</guid><description><![CDATA[&lt;p&gt;கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் மகளிர் பொறியியல் கல்லூரி விடுதியில், மாணவிக்கு பேய் பிடித்ததாக கூறி கையில் கற்பூரம் ஏற்றி, துடைப்பத்தால் அடித்து துன்புறுத்தியதாக சக மாணவிகள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;விடுதியில் தங்கியிருந்த மாணவி&lt;/h2&gt;
&lt;p&gt;கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தனியார் மகளிர் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் வாணாபுரம் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி முதலாம் ஆண்டு சி.எஸ்.இ. படித்து வருகிறார். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி அவர் படித்து வந்துள்ளார். அதே விடுதியில் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு பொறியியல் மாணவி, வாணாபுரம் பகுதியைச் சேர்ந்த பி.டெக் முதலாம் ஆண்டு மாணவி, சி.எஸ்.இ. முதலாம் ஆண்டு படிக்கும் மேலும் 2 மாணவிகள் மற்றும் கடலூர் பகுதியைச் சேர்ந்த பி.டெக் முதலாம் ஆண்டு மாணவி ஆகியோரும் தங்கி படித்து வந்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;பேய் பிடித்ததாக கூறி கொடுமை&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த நிலையில், வாணாபுரம் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவிக்கு பேய் பிடித்திருப்பதாக அவரது சக மாணவிகள் சிலர் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அவருடன் விடுதியில் தங்கியிருந்த 4 சக மாணவிகள் சேர்ந்து, அந்த மாணவியை விசித்திரமான முறையில் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.&lt;br /&gt;குறிப்பாக, மாணவியின் கையில் கற்பூரத்தை ஏற்றி வைத்ததுடன், துடைப்பத்தால் அவரை அடித்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டல்&lt;/h2&gt;
&lt;p&gt;மேலும், விடுதியில் நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்றும், இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் சக மாணவிகள் மிரட்டியதாக கூறப்படுகிறது. சக மாணவிகளின் தொடர் துன்புறுத்தலை பொறுத்துக்கொள்ள முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, இந்த சம்பவம் குறித்து சின்னசேலம் போலீசில் புகார் அளித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;4 மாணவிகள் மீது வழக்குப்பதிவு&lt;/h2&gt;
&lt;p&gt;மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், அவருடன் விடுதியில் தங்கியிருந்த 4 சக மாணவிகள் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாணவியை கற்பூரம் ஏற்றி துன்புறுத்தியது, துடைப்பத்தால் அடித்தது மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;br /&gt;கல்லூரி விடுதியில் மாணவிகளுக்கு இடையே நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் புகாரின் அடிப்படையில் சம்பவத்தின் முழு பின்னணி, மாணவியை துன்புறுத்தியதற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/15/bf40c7fad4847142a20eef828e42fee61789445641517194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சிஎம் விஜய் பெயரில்  ‘AI Deep Fake’ வீடியோ.! யார் அந்த குற்றவாளி- ராஜஸ்தானில் தட்டி தூக்கிய போலீஸ்]]></title><link>https://tamil.abplive.com/crime/cm-vijay-ai-deepfake-video-rajasthan-cyber-criminal-arrested-274549</link><comments>https://tamil.abplive.com/crime/cm-vijay-ai-deepfake-video-rajasthan-cyber-criminal-arrested-274549#respond</comments><pubDate>Tue, 15 Sep 2026 07:02:33 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கு. அஜ்மல்கான் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/cm-vijay-ai-deepfake-video-rajasthan-cyber-criminal-arrested-274549</guid><description><![CDATA[&lt;h2&gt;சிஎம் விஜய் குரலில் மோசடி வீடியோ&lt;/h2&gt;
&lt;p&gt;நவீன காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பங்களும் மாறி வருகிறது. அந்த வகையில், உள்ளங்கைக்குள் உலகம் வந்துவிட்டது. இந்த நிலையில் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி மோசடி சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;யின் இந்தி குரல்வடிவத்துடன் கூடிய Al மூலம் உருவாக்கப்பட்ட 'டீப் ஃபேக்' வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் பரப்பப்பட்டது. அந்த வீடியோக்களில், நிதி உதவி பெற ஒரு வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக வந்த புகாரையடுத்து தமிழக போலீசார் அந்த குற்றவாளியை கண்டுபிடிக்க களத்தில் இறங்கினர். இதனையடுத்து ராஜஸ்தானில் வைத்து அந்த மோசடி நபரை போலீசார் தட்டி தூக்கியுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;நிதி உதவி பெற ஒரு வாட்ஸ்அப் எண்&lt;/h2&gt;
&lt;p&gt;இது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சிபிசிஐடி (CBCID) சைபர் குற்றப் பிரிவு மேற்கொண்ட வழக்கமான இணையவழி கண்காணிப்பின் போது. தமிழ்நாடு முதலமைச்சர் போன்று உருவகப்படுத்தி, இந்தி குரல்வடிவத்துடன் கூடிய Al மூலம் உருவாக்கப்பட்ட 'டீப் ஃபேக்' வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் பரப்பப்பட்டது கண்டறியப்பட்டது. அப்பாவி பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த வீடியோக்கள். ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் பரப்பப்பட்டுள்ளன. அந்த வீடியோக்களில், நிதி உதவி பெற ஒரு வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்கப்பட்டிருந்தது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;2 தனிப்படைகள் அமைப்பு&lt;/h2&gt;
&lt;p&gt;மோசடி செய்பவர்கள் இந்த AI வீடியோக்களைப் பயன்படுத்தி மத்தியப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பலரை ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இந்த டீப் ஃபேக் Al வீடியோக்களை நீக்கியதுடன். சேவை வழங்குநரிடமிருந்து தகவல்களைப் பெற்ற சிபிசிஐடி, டிஜிட்டல் ஆதாரங்களை விரிவாக ஆய்வு செய்து, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் சந்தேக நபர்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி உயரதிகாரிகளின் மேற்பார்வையில் பல்வேறு தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான காவல் ஒருங்கிணைப்பு மூலம் கைது நடவடிக்கை திட்டமிடப்பட்டு குற்றவாளியைக் கண்டுபிடிக்க ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு 2 தனிப்படைகள் அனுப்பி வைக்கப்பட்டன.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;ராஜஸ்தானில் குற்றவாளி கைது&lt;/h2&gt;
&lt;p&gt;ராஜஸ்தான் காவல்துறையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு. முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ராஜஸ்தான் மாநிலம். ஆல்வார் மாவட்டம், லட்சுமண்கர், பூந்தோலியைச் சேர்ந்த ஜஹூர் கானின் மகன் ஷயாபு கான் (28) என்பவர் 12.09.2026 அன்று ஆல்வார் மாவட்டத்தின் உட்பகுதியில் கைது செய்யப்பட்டார். குற்றத்திற்க்காக பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்கள், சிம் கார்டுகள் மற்றும் சிபியு (CPU) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குற்றவாளி ராஜஸ்தானில் இருந்து PT வாரண்ட் மூலம் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.&lt;/p&gt;
&lt;h3&gt;&amp;nbsp;பாகிஸ்தான் ஃபேஸ்புக் ஐடியில் போலி வீடியோ&lt;/h3&gt;
&lt;p&gt;குற்றவாளி தனியாகச் செயல்பட்டாரா அல்லது ஏதேனும் பெரிய நெட்வொர்க்கின் ஒரு பகுதியாகச் செயல்பட்டாரா என்பதைக் கண்டறிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், இதுபோன்ற பல வீடியோக்கள் பாகிஸ்தானைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஃபேஸ்புக் ஐடிகளில் பகிரப்பட்டு வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், வெளிநாட்டு குற்றவாளிகளைக் கண்டறியவும், அவர்களுக்கு உள்ளூர் அளவில் உதவியவர்களை வெளிக்கொண்டு வரவும் தீவிர டிஜிட்டல் விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/rice-or-roti-which-is-better-for-energy-274499&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/15/aa9d991dc93830701060edfd4c6ffebf17894357272191321_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சாக்கு மூட்டையில் பெண் சடலம் !! 3 நாட்களாக பிணத்துடன் தங்கியிருந்த புரோட்டா மாஸ்டர்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/periyakulam-woman-missing-case-turned-murder-abdul-rahman-arrested-theni-tnn-274545</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/periyakulam-woman-missing-case-turned-murder-abdul-rahman-arrested-theni-tnn-274545#respond</comments><pubDate>Mon, 14 Sep 2026 22:58:14 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/periyakulam-woman-missing-case-turned-murder-abdul-rahman-arrested-theni-tnn-274545</guid><description><![CDATA[&lt;h2&gt;&lt;strong&gt;வீட்டில் வெளியான துர்நாற்றம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அழகர் சாமி புரத்தில் உள்ள சி.எஸ்.ஐ சர்ச் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தங்கி வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்ச வள்ளி ( வயது 38 ) கடந்த 9 - ம் தேதி மகன் , மகள் கல்லூரிக்கு சென்ற பிறகு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் காணாததால் , 2 தினங்களுக்கு முன் மகள் பெரிய குளம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து அம்ச வள்ளியை தேடி வந்தனர். அவரது செல்போனை ஆய்வு செய்ததில் அவர் கடைசியாக தேனியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவரிடம் பேசியது தெரிய வந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்நிலையில் தேனி அருகே , பழனிசெட்டிப்பட்டி சவுடேஸ்வரி நகரில் குடியிருக்கும் புரோட்டா மாஸ்டரான அப்துல் ரகுமான் ( வயது 36) என்பவரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் பழனி செட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பழனிசெட்டிபட்டி போலீசாரும், செல்போன் ஆய்வு தொடர்பாக பெரியகுளம் போலீசாரும் அப்துல் ரகுமான் வீட்டிற்கு சென்றுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;வீடு பூட்டியிருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அப்துல் ரகுமான் இருந்தார். அவர் அருகே சாக்கு மூட்டையில் அம்சவள்ளி தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். போலீசார், அம்ச வள்ளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிந்து அப்துல் ரகுமானை கைது செய்தனர். எஸ்பி பிரவின் கவுதம் சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;இது குறித்து போலீசார் கூறுகையில் ;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அப்துல் ரகுமானுக்கு செல்போன் மூலம் அம்சவள்ளியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. கடந்த 9 - ம் தேதி அம்சவள்ளி, அப்துல் ரகுமான் வீட்டிற்கு வந்த போது இருவருக்கும் இடையே மீண்டும் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக வாக்குவாதம் எழுந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இதில் ஆத்திரமடைந்த அப்துல் ரகுமான் அருகில் இருந்த கல்லால் அவரது தலையில் பலமாக தாக்கியதில் உயிரிழந்தார். யாருக்கும் தெரியாமல் வெளியே கொண்டு போய் வீசி விடலாம் என நினைத்து, சாக்கு மூட்டையில் கட்டி வைத்துள்ளார். தெருவில் ஆள் நடமாட்டம் இருந்ததாலும் , எங்கே கொண்டு செல்வது என தெரியாமலும் வீட்டிலேயே பிணத்துடன் இருந்தது தெரிய வந்தது என கூறினர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/14/bd9802e5cc3cd58a58fc2edf437dc63f17894068491671310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பூம்புகார் கடலில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்? மீனவர் வாழ்வாதாரத்திற்குப் பேராபத்து!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/mayiladuthurai-district-poompuhar-sea-hydrocarbon-project-prof-jayaraman-opposes-tnn-274530</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/mayiladuthurai-district-poompuhar-sea-hydrocarbon-project-prof-jayaraman-opposes-tnn-274530#respond</comments><pubDate>Mon, 14 Sep 2026 19:31:46 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/mayiladuthurai-district-poompuhar-sea-hydrocarbon-project-prof-jayaraman-opposes-tnn-274530</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை:&lt;/strong&gt; மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே கடல் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று ஹைட்ரோ கார்பன் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள சம்பவம் காவிரி டெல்டா மாவட்ட மக்களிடையேயும் மீனவர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பூம்புகார் கடற்கரையை ஒட்டியுள்ள சுமார் 81 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான கடல் பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டு, இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்காக ஹாட்லி என்ற தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, அப்பகுதியில் 5 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி அந்த நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைக்கு மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்கள் பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மீனவர் வாழ்வாதாரம் மற்றும் கடல் வளத்திற்குப் பேராபத்து&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், இத்திட்டத்தினால் ஏற்படும் அபாயங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்போது நிகழும் கடல்சார் மாசுபாடு, மீன் வளத்தை முற்றிலுமாக அழித்துவிடும் என்று அவர் எச்சரித்தார். ஏற்கனவே வங்கக்கடலில் சுமார் 51 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இத்தகைய தொடர்ச்சியான திட்டங்களால் கடல்சார் நீர்நிலைகளில் வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு, மீன் இனங்கள் அந்தப் பகுதிகளை விட்டு முற்றிலும் இடப்பெயர்ச்சி அடையும் அபாயம் உருவாகியுள்ளது. இதன் காரணமாகக் கடலை மட்டுமே நம்பி வாழும் ஆயிரக்கணக்கான பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மத்திய அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராகத் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு தனது அழுத்தமான எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று பேராசிரியர் ஜெயராமன் வலியுறுத்தினார். இத்திட்டத்திற்கு அனுமதி மறுத்து மத்திய அரசுக்குத் தமிழக முதல்வர் உடனடியாகக் கடிதம் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், தனியார் நிறுவனம் இந்தத் திட்டத்திற்கான அடுத்தகட்ட நகர்வாகத் தமிழக கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி கோரி விண்ணப்பிக்கும் போது, எந்தக் காரணம் கொண்டும் அந்த அனுமதியை வழங்கக் கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள நிலையில், அதனையொட்டிய கடல் பகுதியிலும் இத்தகைய அழிவுத் திட்டங்களை அனுமதிக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு அழைப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இயற்கைச் சூழலுக்கும், கடலோர மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பேராபத்தை விளைவிக்கும் இத்தகைய திட்டங்கள் நாட்டின் வளர்ச்சி என்ற போர்வையில் திணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நிலப்பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, தற்போது தனியார் நிறுவனங்களின் கவனம் கடல் பகுதியை நோக்கித் திரும்பியுள்ளது கவலையளிப்பதாக அமைந்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழக மக்களின் நலனுக்கும், மீனவர்களின் வாழ்வாதார உரிமைக்கும் எதிராக அச்சுறுத்தல் விடுக்கும் இந்த ஆபத்தான திட்டத்தை முறியடிக்க அரசியல் கட்சிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மீனவ அமைப்புகள் அனைவரும் கட்சி எல்லைகளைக் கடந்து ஒன்றாக இணைய வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து வீரியமிக்க போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலமே நமது கடல் வளத்தையும் மக்கள் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முடியும் என்று பேராசிரியர் ஜெயராமன் அழைப்பு விடுத்துள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/14/ec88a66bd829a42480dd6671d258c9541789394479722186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Crime News: சுகர் டாடியால் வந்த வினை.. மனைவியின் தலை துண்டிப்பு, குடும்பமே காலி - கணவன் விபரீத முடிவு]]></title><link>https://tamil.abplive.com/crime/assam-man-who-chopped-off-wife-s-head-dies-after-jumping-from-police-car-crime-news-274481</link><comments>https://tamil.abplive.com/crime/assam-man-who-chopped-off-wife-s-head-dies-after-jumping-from-police-car-crime-news-274481#respond</comments><pubDate>Mon, 14 Sep 2026 13:10:01 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/assam-man-who-chopped-off-wife-s-head-dies-after-jumping-from-police-car-crime-news-274481</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Crime News:&lt;/strong&gt; மனைவியின் தலையை துண்டித்து அதனை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்;.&lt;/p&gt;
&lt;h2&gt;மனைவியை கொன்ற கணவன் மரணம்&lt;/h2&gt;
&lt;p&gt;மனைவியின் தலையை துண்டித்து, அதனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் , அசாம் மாநிலம் கவுகாதியை சேர்ந்த 30 வயது நபர் கைது செய்யப்பட்டார். காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் ஓடும் காரில் இருந்து கீழே குதித்த அந்த நபர் படுகாயமடைந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுகாதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைகளை முடித்த பிறகு, ராமானுஜ் கோஸ்வாமி அனும் அந்த நபரை போலீசார் ஹதிகான் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது, ​​இந்த விபரீத முடிவை அவர் எடுத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/mobiles/where-should-you-sell-your-old-iphone-details-in-pics-274480&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ஓடும் காரில் இருந்து குதித்து தற்கொலை&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;ஹதிகான் காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்படி, நரகசூர் பஹார் பகுதிக்கு அருகே கோஸ்வாமி திடீரென காவலர்களை தாக்கிவிட்டு, ஓடும் வாகனத்தில் இருந்து குதித்தார். அப்போது அருகிலிருந்து ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கோஸ்வாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 3 அன்று கவுகாதியில் உள்ள தங்களது குடியிருப்பில், 25 வயதான தன் மனைவி ரியா தாலுக்தாரைக் கொலை செய்ததாகக் கோஸ்வாமி கைது செய்யப்பட்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/Q5OBC5tFhA8?si=JI8w1_xQ6-ATsr6-&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;மனைவியின் தலையை துண்டித்து படுகொலை?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசியதாக அக்கம்பக்கத்தினர் புகார் அளித்ததை அடுத்து இந்தக் குற்றம் வெளிச்சத்திற்கு வந்தது. அதனைத் தொடர்ந்து, குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த ஒரு கருப்பு பாலித்தீன் பையில் இருந்து ரியாவின் துண்டிக்கப்பட்ட தலையையும் விரல்களையும் காவல்துறையினர் மீட்டெடுத்தனர். விசாரணையில் தனது மனைவி தனக்குத் துரோகம் செய்வதாக சந்தேகித்து கொலை செய்ததாக கூறியுள்ளார். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவல்துறையின் விசாரணைக் காவலில் இருந்த வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். மனைவியை கொலை செய்தது குறித்து எந்தவித வருத்தமோ குற்ற உணர்வையோ அவர் வெளிக்காட்டவில்லை எனவும்,&amp;nbsp;சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டால், தனது மனைவி 'சுகர் டாடி' என்று குறிப்பிட்ட நபரை கொல்வேன் எனவும் விசாரணையின் போது கூறியதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;Accident CCTV: ஒதுங்கிப் போக சொன்ன பெண் BIKER.. இடித்து தள்ளிய கார் DRIVER - பரபரப்பு டேஷ்கேம் வீடியோ&quot; href=&quot;https://tamil.abplive.com/news/india/woman-on-sports-bike-hit-by-car-in-gurugram-for-asking-driver-to-stay-away-video-goes-viral-274453&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படியுங்கள்: Accident CCTV: ஒதுங்கிப் போக சொன்ன பெண் BIKER.. இடித்து தள்ளிய கார் DRIVER - பரபரப்பு டேஷ்கேம் வீடியோ&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ஆதாரங்கள் பறிமுதல்..!&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், ரத்தக்கறை படிந்த அரிவாளை காவல்துறையினர் மீட்டெடுத்துள்ளனர். குற்றம் நடந்தபோது கோஸ்வாமி போதையில் இருந்ததாகவும், அதேவேளையில் வீட்டில் இருந்து காலி மது பாட்டில்கள் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கோஸ்வாமிக்கு போதைப்பொருள் பழக்கம் இருந்ததாகவும், அவரது மருத்துவப் பிரச்சினைகளை மறைத்து வந்ததாகவும், மேலும் 2019-ஆம் ஆண்டில் ஒரு நிதி மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் ரியாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/14/1045dcb7ebbe458334e7bc789b0ca8fa1789371570160732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[EMI கட்டுவதில் தகராறு.. திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் கொலை... உடலை புதைத்த காதலன்!]]></title><link>https://tamil.abplive.com/crime/missing-woman-found-dead-in-karnataka-over-on-pay-bike-emi-274482</link><comments>https://tamil.abplive.com/crime/missing-woman-found-dead-in-karnataka-over-on-pay-bike-emi-274482#respond</comments><pubDate>Mon, 14 Sep 2026 12:51:05 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/missing-woman-found-dead-in-karnataka-over-on-pay-bike-emi-274482</guid><description><![CDATA[&lt;p&gt;கர்நாடகா மாநிலத்தில் இஎம்ஐ கட்டுவது தொடர்பான புகாரில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 மாதமாக போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்துள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;கடந்த ஜூலை மாதம் பெலகாவி மாவட்டம் முடலகி தாலுக்காவில் உள்ள கௌஜலகி கிராமத்தில் &amp;nbsp;அண்ணப்பூர்ணா என்ற பெண் திடீரென காணாமல் போனார். அவரது கணவர் போலீசார் புகாரளிக்க காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். கிட்டதட்ட 2 மாதங்கள் விசாரணை நடந்த நிலையில் அன்னபூர்ணா காணாமல் போன அன்றே கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கோகாக் தாலுக்காவின் சிங்கலபுரா கிராமத்தைச் சேர்ந்த திலீப் கடகாரி என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்குள்ள கரும்பு தோட்டம் ஒன்றில் அன்னபூர்ணா உடலானது கண்டெடுக்கப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;VD Satheesan on Vijay &amp;quot;நண்பர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;யை விட நல்லா டான்ஸ் ஆடியிருக்கேன்&amp;quot; கேரளா முதல்வர் கலகல | Keralam&quot; src=&quot;https://www.youtube.com/embed/MJ3cSGE_gqY&quot; width=&quot;1101&quot; height=&quot;619&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கொலை நடந்தது எப்படி?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அன்னபூர்ணா கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி அந்த கிராமத்திற்கு வந்தார். அவருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். அன்னபூர்ணா கணவருக்கு 2 ஏக்கர் நிலம் இருந்ததால் அதனை வைத்து வாழ்க்கையை நடத்தி வந்தனர். இப்படியான நிலையில் தான் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் வீடு கட்டும் வேலைக்காக கௌஜாலா சென்றிருந்த திலீப்புக்கு அன்னபூர்ணா அறிமுகமாகியுள்ளார். ஆரம்பத்தில் பெரிதாக பேசிக் கொள்ளாதவர்கள் பின் செல்போன் எண்ணை பரிமாறி மணிக்கணக்கில் உரையாடியுள்ளனர். அவர்களுக்கிடையே நாளடைவில் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து பாலியல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;திலீப்பிற்கும் ஏற்கனவே திருமணமாகி 4 குழந்தைகள் இருந்த நிலையில் அவர் தன் &amp;nbsp;குடும்பத்தை அன்னபூர்ணாவுடனான உறவுக்காக கைவிட்டார். இந்த நிலையில் தான் கடந்த சில மாதம் முன்பு, இஎம்ஐ மூலம் திலீப் ஒரு பைக் வாங்கினார். அதற்கு மாதத்தவணை செலுத்த பணம் இல்லாமல் தவித்துள்ளார். அன்னபூர்ணாவிடம் கேட்டதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் ஆத்திரமடைந்த திலீப், ஜூலை 23ம் தேதி வெளியூருக்கு வரவழைத்து கரும்பு தோட்டத்தில் வைத்து பேசி கழுத்தை நெறித்து கொன்று அன்னபூர்ணா அணிந்திருந்த நகைகள், செல்போன் ஆகியவற்றை திருடிவிட்டு உடலை புதைத்துள்ளார். இதனிடையே காணாமல் போன வழக்கை விசாரித்த போலீசார், கடைசியாக அன்னபூர்ணா போனில் யாரை அழைத்தார் என பார்த்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;மேலும் அந்த போனின் ஐஎம்இஐ நம்பரைக் கொண்டு சோதனைச் செய்ததில் அதில் மற்றொரு சிம் இருந்துள்ளது. அந்த எண்ணிற்கு அழைத்தால் மத்தியப்பிரதேசத்தில் இருந்து பேசிய ஒருவர் செல்போனை விற்றுவிட்டதாக கூறியுள்ளார். அது யார் என விசாரிக்கையில் திலீப் பெயர் அடிபட்டது. அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். திலீப்பை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/can-these-problems-be-stopped-with-pineapples-274220&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/14/dfd135b26d0a35ef4ad0626c1e603ea317893703367181322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மதுபோதையில் விபரீதம்! பிரியாணிக்காக கொதிக்க வைத்த வெந்நீர் அண்டாவில் தவறி விழுந்த ஓட்டுநர் பலி]]></title><link>https://tamil.abplive.com/crime/puducherry-villianur-driver-drunk-hotel-biryani-hot-water-death-274465</link><comments>https://tamil.abplive.com/crime/puducherry-villianur-driver-drunk-hotel-biryani-hot-water-death-274465#respond</comments><pubDate>Mon, 14 Sep 2026 11:40:13 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/puducherry-villianur-driver-drunk-hotel-biryani-hot-water-death-274465</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: வில்லியனூரில் உறவினர் நடத்தி வரும் ஹோட்டலுக்கு மதுபோதையில் சென்ற ஓட்டுநர், பிரியாணி தயாரிப்பதற்காக கொதிக்க வைத்திருந்த வெந்நீர் அண்டாவில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வில்லியனூர் தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் தேவநாதன். ஓட்டுநராக பணியாற்றி வந்த இவர், சரிவர வேலைக்குச் செல்லாமல் மது அருந்தும் பழக்கத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;மதுபோதையில் ஹோட்டலுக்கு சென்றார்&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த நிலையில், கடந்த 8-ஆம் தேதி தேவநாதன் மதுபோதையில் வில்லியனூரில் உள்ள தனது உறவினர் நடத்தி வரும் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது ஹோட்டலில் பிரியாணி தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததாக தெரிகிறது. பிரியாணி தயாரிப்பதற்காக பெரிய பாத்திரம் ஒன்றில் தண்ணீர் கொதிக்க வைக்கப்பட்டிருந்தது. அந்த பகுதியில் தேவநாதன் இருந்தபோது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கொதித்துக் கொண்டிருந்த வெந்நீர் அண்டாவுக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;உடல் வெந்த நிலையில் மீட்பு&lt;/h2&gt;
&lt;p&gt;கொதிக்கும் வெந்நீரில் விழுந்ததில் தேவநாதனின் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் அவர் அலறித் துடித்துள்ளார். இதையடுத்து ஹோட்டலில் இருந்த ஊழியர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை தீவிரமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.&lt;/p&gt;
&lt;h2&gt;சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு&lt;/h2&gt;
&lt;p&gt;அரசு மருத்துவமனையில் தேவநாதனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், உடலில் ஏற்பட்டிருந்த கடுமையான தீக்காயங்கள் காரணமாக அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேவநாதன் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.&lt;/p&gt;
&lt;h2&gt;போலீசார் விசாரணை&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த சம்பவம் தொடர்பாக வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேவநாதன் ஹோட்டலுக்கு வந்தது முதல் வெந்நீர் அண்டாவில் தவறி விழுந்தது, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களின் முழு விவரங்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஹோட்டலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா, விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வில்லியனூரில் மதுபோதையில் ஹோட்டலுக்குச் சென்ற ஓட்டுநர் கொதிக்கும் வெந்நீரில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/09/d0102e8b7749ac32c78e63d5f82041a01725868552382651_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பக்கவாத கணவர்...கள்ளக் காதலனுடன் உல்லாசம்.. காட்டிக் கொடுத்த தாய்...நடுங்க வைத்த கொடூரம்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/bengaluru-paralyzed-man-murdered-by-wife-and-lover-avalahalli-tnn-270880</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/bengaluru-paralyzed-man-murdered-by-wife-and-lover-avalahalli-tnn-270880#respond</comments><pubDate>Sun, 13 Sep 2026 23:47:04 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/bengaluru-paralyzed-man-murdered-by-wife-and-lover-avalahalli-tnn-270880</guid><description><![CDATA[&lt;h2&gt;&lt;strong&gt;திடீர் உடல் நலக் குறைவு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;பெங்களூர் அவலஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எல்லப்பா கார்டனில் வசித்து வந்தவர் முபாரக். இவருக்கும் ஷாஹினா பானு என்பவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முபாரக்கிற்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரால் எழுந்து நடமாடவில்லை. வேலைக்கு செல்ல முடியாத நிலை வந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இதனால் அவரது குடும்பம் பொருளாதார ரீதியாக பிரச்சனையை எதிர்கொள்ள தொடங்கியது. இந்த சமயத்தில் ஷாஹினா பானுவின் குடும்பத்துக்கு அதே பகுதியை சேர்ந்த நஹிம் குரேஷி என்பவர் உதவி செய்தார். உணவு பொருட்கள், செலவுக்கு பணம் கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நஹிம் குரேஷி மற்றும் ஷாஹினா பானு ஆகியோர் இடையேயான பழக்கம் நட்பாக மாறியது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;திருமணம் மீறிய உறவு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இருவரும் செல்போன் எண்களை பரிமாறி பேச தொடங்கினர். இந்த நெருக்கம் கள்ளக் காதலாக மாறியுள்ளது. கணவர் முபாரக் வீட்டில் படுக்கையில் இருக்கும் போதே நஹிம் குரேஷி வீட்டுக்கு வந்து ஷாஹினா பானுவுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை முபாரக் கண்டித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதனால் கோபமடைந்த ஷாஹினா பானு கணவர் முபாரக் தங்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கருதினார். அதோடு அவரை தீர்த்து கட்டிவிட்டு கள்ளக்காதலன் நஹிம் குரேஷியுடன் சேர்ந்து வாழ முடிவு செய்தார். இதுபற்றி அவர் கள்ளக்காதலன் நஹிம் குரேஷி மற்றும் தாய் ஹசீனாவிடம் கூறினர். இருவரும் ஒப்புக்கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இதையடுத்து கடந்த 9 ம் தேதி படுக்கையில் படுத்து கிடந்த முபாரக்கை அவர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பிறகு கொலையை மறைக்க அவர்கள் நாடகமாடினர். முபாரக் உடல் நலக் குறைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்தனர். இருப்பினும் அவர்களின் நடத்தையில் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் வந்ததுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;3 பேர் கைது&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இது பற்றி அவர்கள் அவலஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து முபாரக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது முபாரக் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;இதையடுத்து போலீசார் ஷாஹினா பானுவை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவரை காப்பாற்ற முடியவில்லை. இதனால் அவரை கொன்று கள்ளக் காதலன் நஹிம் குரேஷியுடன் வாழ முடிவெடுத்து கொலை செய்தேன். இதற்கு கள்ளக் காதலன் நஹிம் குரேஷி , தாய் ஹசீனா உதவினர் என்று கூறினார். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/13/b3d98626384149fc5240266276b992cc17893233758241310_original.jpg" width="220"/></item></channel></rss>