மத்திய பிரதேச மாநிலம் கந்தாவா மாவட்டத்தில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை சிறுமியின் தந்தை கொலை செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 


கந்தாவா மாவட்டத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அஜ்னல் ஆற்றில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி அடையாளம் கண்டனர். அதில், கொல்லப்பட்டவர் 50 வயதான த்ரிலோக்சந்த் என்பவர் தெரிய வந்துள்ளளது. 



மேலும் விசாரணை மேற்கொண்டதில், கொல்லப்பட்ட த்ரிலோக்சந்த உறவுக்கார சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அதனால், சிறுமியின் தந்தையும், உறவினர் ஒருவரும் சேர்ந்து த்ரிலோக்சந்தை வெட்டி கொலை செய்துள்ளனர். மீன் வெட்ட பயன்படும் கத்தியை கொண்டு உடலை இரண்டாக வெட்டி ஆற்றில் வீசி விட்டு சென்றுள்ளனர். அதனை அடுத்து, வழக்குப்பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் சிறுமியின் தந்தை, உறவுக்காரரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 




மேலும் படிக்க: WhatsApp Update: அடேங்கப்பா இவ்வளவா? இனிமே இதுவும் புதுசு.. வாட்சப் கொடுத்த புது அப்டேட்..




சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது அனைவரது மனநிலையையும் பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. இது போன்ற குற்றச்சம்பவங்களுக்கு எதிராக தண்டனைகள் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே அனைவரது எண்ணமாக இருக்கிறது. அந்த வரிசையில், பாலியல் வன்கொடுமையை கணவன் செய்தாலும் அது குற்றம்தான் என ஒரு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு அசத்தி இருந்தது. முன்னதாக, இடுப்பில் அணியப்படும் உள்ளாடை மீது ஆணுறுப்பை செலுத்தினாலும், பாலியல் வன்கொடுமைதான் என மேகாலையா உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு தெரிவித்தது. 


இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 375(பி)-ன் கீழ் பாலியல் வன்கொடுமை வழக்கில் புகாரை பதிவு செய்யலாம் என தெரிவித்தது. இந்த தீர்ப்பு பலரது வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பதிவாகி வரும் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு இது போன்ற தீர்ப்பு வழங்க வேண்டும் என கருத்துகள் முன்வைக்கப்படுகிறது.




பிற முக்கியச் செய்திகள்:






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண