கன்னியாகுமரியில் தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக மகளும், அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். 


கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே கடுக்கரை ஆலடி காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார். 47 வயதான இவர் கூலி வேலை செய்து வந்த நிலையில் மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். சுரேஷ் குமாருக்கு அடிக்கடி மது அருந்தும் பழக்கம் இருப்பதால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 2வது மகளுடன் மனைவி பிரிந்து சென்று விட்டார். முதல் மகளாக ஆர்த்தியுடன் சுரேஷ் குமார் வசித்து வந்தார். 


இப்படியான கடந்த ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி சுரேஷ் குமார் திடீரென உயிரிழந்தார். அவர் மது குடித்ததில் இறந்ததாக ஆர்த்தி பூதப்பாண்டி போலீசில் புகார் அளித்தார். சுரேஷ் குமார் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் சுரேஷ்குமார் தலையில் காயம் இருந்ததாகவும், அவர் கழுத்து நெறிக்கப்பட்டு இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் மர்ம மரணம் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு மகள் ஆர்த்தியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.


இதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் தந்தை சுரேஷ்குமாரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். 


இதுதொடர்பாக போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது, ‘ஆர்த்தி தான் அப்பாவை கொலை செய்ததாக கூறிய நிலையில் அவர் ஒருவர் மட்டும் இதை செய்திருக்க முடியாது என போலீசார் கருதியுள்ளனர். உடனடியாக தனிப்படை அமைத்து அவரின் செல்போனை ஆய்வு செய்தனர். இதில் ஆர்த்திக்கு ஏராளமான ஆண் நண்பர்கள் இருந்தது தெரிய வந்தது. 


அதில் ஒரு செல்போன் நம்பரில் இருந்து பலமுறை அழைப்பு வந்துள்ளது கண்டறியப்பட்டது. அது தெரிசனங்கோப்பு வாட்ஸ்புரத்தை சேர்ந்த சுரேஷ் பாபு என்பது தெரிய வந்தது. அவர் சுரேஷ் குமாரின் நெருங்கிய நண்பர் என்பது கண்டறியப்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரிடமும் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 


வெல்டிங் பட்டறை நடத்தி வரும் சுரேஷ்பாபு, சுரேஷ்குமாருக்கு மிகவும் நெருக்கம். இருவரும் ஒன்றாக அமர்ந்து மது குடிப்பது வழக்கம். இதில் சுரேஷ்குமார் போதையில் தூங்கியதும், சுரேஷ் பாபு ஆர்த்தியுடன் தனிமையில் இருப்பது வழக்கமாக இருந்துள்ளது. அப்படி ஒருநாள் இருவரும் ஒன்றாக இருந்ததை சுரேஷ்குமார் போதை தெளிந்து பார்த்துள்ளார். ஆத்திரத்தில் தகாத வார்த்தைகள் பேசியுள்ளார். இதனால் கடுப்பான சுரேஷ் பாபு அவரை கீழ தள்ள தலையில் அடிபட்டுள்ளது.பின்னர் அவர் வயிற்றில் மிதித்து கொலை செய்துள்ளனர். 


சுரேஷ் பாபுவுக்கு ஏற்கனவே 3 முறை திருமணம் நடந்துள்ளது. இதில் 2-வது மனைவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் மற்ற இருவரும் பிரிந்து சென்று விட்டனர் என கூறப்படுகிறது.