திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா எடக்கல் பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி (வயது 52). இவருக்கு திருமணமாகி மீனாட்சி (வயது 50) என்ற மனைவியும் விக்னேஷ் (வயது 27) அபிராமி (வயது 23) ஸ்ரீதர் (வயது 16) இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் வீராசாமி தென்கருபலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கேஷியராக பணியாற்றி வந்தார்.இந்த நிலையில் முறைகேடு சம்பவத்தில்கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அதிகாரி வீராசாமியை பணியிடம் நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார். இதனால் அவர் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.


இந்தநிலையில்  கடந்த ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி தனது விவசாய நிலத்திற்கு சென்ற வீராசாமி நீண்ட நேரம் மாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை விவசாய நிலம் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தேடிப் பார்த்தனர். ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை பின்னர் அருகில் உள்ள ஒரு விவசாய கிணற்றின் அருகில் அவரது செருப்பு மற்றும் செல்போன் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள். அதன் பிறகு அருகில் இருந்த கிணற்றில் பார்த்தபோது ஆழமான பகுதியில் வீராசாமியின் உடல் இருந்ததை கண்டுள்ளனர். இது குறித்து உடனடியாக வாணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 


 


 


 




 


மேலும் போலீசார் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் அவரது உடலை கிணற்றில் இருந்து மீட்டு மேலே கொண்டு வந்தனர். வீராசாமியின் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு காயம் இருந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அப்போதைய கிராமிய துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வினி ஆய்வாளர் தனலட்சுமி துணை ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவல்துறையினர் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அவரது மனைவி மீனாட்சி வாணாபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதில் தனது கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து வாணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் குற்றவாளிகளை கண்டறிவதற்கு எந்தவிதமான தடயங்களும் கிடைக்காததால் தொடர்ந்து பல்வேறு கோனங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு சம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் வீராசாமி கொலை குற்றவாளிகளை உடனடியாக கண்டறிய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதனால் ஆய்வாளர் செல்வநாயகம் தலைமையில் தனி படை அமைத்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


 


 




 


கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து செல்போன் சிக்னலை வைத்து போலீசார் குற்றவாளியை கண்டுபிடிக்க முடிவு செய்து சைபர் க்ரைம் போலீசாரின் உதவியோடு தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி (வயது 58) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை கண்காணித்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தின் அருகில் வீராசாமியின் விவசாய நிலம் இருப்பதாகவும் எங்கள் நிலத்திலிருந்து பாதை இல்லாததால் பாதை கேட்டு வந்து பலமுறை தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் இதனால் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததும் தெரிவித்தார்.


மேலும் பாதை விடாமல் இருக்கும் வீராசாமியை கொலை செய்ய திட்டம் தீட்டிய சுப்பிரமணி அதற்காக ஆண்டியார் பாளையத்தைச் சேர்ந்த சக்ரவர்த்தி மகன் விஷ்ணு (வயது 29) மற்றும் கமல், ஜோயல் ஆகிய மூன்று பேரின் உதவியோடு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி வீராசாமி தனது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் படுத்திருந்த போது அவரை உருட்டு கட்டையால் பலமாக அடித்து சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்து அவரை அருகில் இருந்த கிணற்றில் வீசியதாகவும் தெரிவித்தனர்.


இதில் சுப்ரமணி விஷ்ணு ஆகிய இருவரும் கைது செய்த நிலையில் கமல கண்ணன் மற்றும் ஜோயல் ஆகிய இருவரையும் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையில் தனிபடை அமைத்து போலீசார் தேடிவந்த நிலையில் அவர்கள் திருப்பத்தூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர்.