கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே வெல்டிங் தொழிலாளர்களுக்கு இடையே துணி துவைப்பதில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் கிழித்ததில் இரண்டு பேர் காயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்தவர் அபுதாஹிர் 29. இவர் கரூர் மாவட்டம் புகழூரில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலையில் வெல்டிங் பணிகளுக்காக இன்ஜினியர் ஒப்பந்தம் பெற்றுள்ளார். இந்த நிலையில் வெல்டிங் வேலை செய்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் பொத்தூர் அம்மாபேட்டை பகுதி சேர்ந்தவர் ஸ்ரீதர் மகன் சசிகுமார் 18. அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்த் 21.


 




சிவகங்கை மாவட்டம் சாத்தரசன் பட்டி அரண்மனை பகுதியைச் சேர்ந்த டார்வின் குமார் 25 ஆகியவரை வெல்டிங் ஒப்பந்த பணிக்காக அழைத்து வந்து கரூர் மாவட்டம் செம்படபாளையம் பகுதியில் உள்ள மருதாணி என்பவர் வீட்டில் இவருடன் எட்டு பேர் தங்க வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை துணி துவைப்பது சம்பந்தமாக டார்வின் குமார் சசிகுமார் விக்னேஷ் ஆகிய மூவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த டார்வின் குமார் தனது கையில் வைத்திருந்த பட்டன் கத்தியால்  சசிகுமார் மற்றும் விக்னேஷ் ஆகியோரை கிழித்தது சசிகுமாருக்கு வலது கழுத்து பகுதியில் பலத்த காயமும் விக்னேஷுக்கு இடது வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து கத்தி குத்தப்பட்ட பலத்த காயம் அடைந்த இருவரையும் வேலாயுதபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 




அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பில்டிங் கான்கிரீட் ஒப்பந்ததாரர் அபுதாஹிர் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கத்தியால் குத்தி  கிழித்து தப்பி ஓடி தலைமறைவாக உள்ள டார்வின் குமாரை தேடி வருகின்றனர்.




வீட்டிற்குள் கஞ்சா செடி வளர்த்த வாலிபர்.


கரூரில் கஞ்சா பயிரிட்ட சிறுவன் கைது செய்யப்பட்டு உள்ளார். கரூர் தான்தோன்றி மலை தென்றல் நகர் பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக கரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று மதியம் போலீஸ் எஸ்ஐ சரவணன் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வீட்டில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்தது .போலீஸ் விசாரணையில் அந்த வீட்டைச் சேர்ந்த 19 வயது சிறுவன் கஞ்சா பயிரிட்டது தெரியவந்தது. கஞ்சா பயிர் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் எஸ்ஐ சரவணன் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்து காவலில் வைத்தார்.