முழு அலர்ட்டில் காஞ்சிபுரம்..! ஏடிஎம் கொள்ளை எதிரொலி..! குற்றவாளியை சுத்து போடும் போலீஸ்..!

தொடர் ஏடிஎம் கொள்ளை எதிரொலி காஞ்சியில் உள்ள லாட்ஜ்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24 இடங்களில் தடுப்பு வைத்து வாகன சோதனையில் 460 காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் அடுத்தடுத்து தொடர்ந்து நான்கு ஏடிஎம் களில் மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டு ஏடிஎம் களில் இருந்த ரூ.75 லட்சம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் தமிழகத்தில் உலுக்கி சென்றுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்த நிலையில் பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
 
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பெயரில் காஞ்சிபுரம் எல்லைப் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் பொதுமக்கள் அதிகம் உள்ள இடங்கள் என 24 இடங்களில் தடுப்புகள் வைத்து 460 போலீசார் ரோந்து மட்டும் வாகன சோதையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
மேலும் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள 50-க்கும் மேற்பட்ட விடுதிகளில் சந்தேகத்துக்கு இடமான  யாரேனும் விடுதியில் தங்கி கொண்டார்களா என 20க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை செய்து வருகின்றனர். மக்கள் அதிகம் கொடுமுள்ள பகுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
 
திருவண்ணாமலையில் அடுத்தடுத்து கொள்ளை.. ஏ.டி.எம் மையங்களில் தடய அறிவியல் துறையினர் ஆய்வு!
 
திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள தண்டராம்பட்டு சாலை தேனீமலை அருகே இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஏடிஎமில் மர்ம கொள்ளையர்கள் முதலில் கொள்ளை அடித்துக் கொண்டு, அதன் பின்னர் குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் 10-வது தெருவில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஏடிஎம்மில் மர்ம கொள்ளையர்கள் கொள்ளையடித்துகொண்டு பின்னர் ஆந்திரா மாநிலத்திற்கு தப்பி செல்லும் வழியில் உள்ள கலசப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே இயங்கி வரும் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்துக்கொண்டு மற்றும் போளூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் ஏடிஎம் மையத்தில் மர்ம கொள்ளையர்கள் கொள்ளையடித்துக்கொண்டு கண்ணமங்கலம் வழியாக ஆந்திரா மாநிலத்திற்கு தப்பி சென்று இருக்கலாம் என காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.


Continues below advertisement

 

 

இதனைத் தொடர்ந்து மாரியம்மன் கோவில் 10வது தெரு, தேனிமலை, கலசப்பாக்கம் மற்றும் போளூர் பேருந்து நிலையம் ஆகிய நான்கு ஏ.டி.எம் மையங்களில் தடய அறிவியல் துறையினர் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.நான்கு ஏ.டி.எம் மையங்களில் இருந்து தடய அறிவியல் துறையினர் மாதிரிகளை சேகரிக்கப்பட்டு சென்னை ஆய்யோகத்திற்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது மட்டுமின்றி திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து நகரில் பல்வேறு இடங்களில் சந்தேகத்திற்கு உரிய நபர்கள் யாரேனும் உள்ளார்களா எனவும், திருவண்ணாமலை நகருக்கு வரும் அனைத்து சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். மேலும் ஆந்திரா மாநிலத்திற்கு எஸ்பி தலைமையில் ஒரு தனிப்பட்டையும் , தெலுங்கனா மாநிலத்திற்கு ஒரு தனிப்பட்டையினர் , கர்நாடக மாநிலத்திற்கு ஒரு தனிப்பட்டை என 3 எஸ்பி தலைமையில் மூன்று மாநிலத்திற்கு விசாரணைக்கு சென்றுள்ளனர்.

 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola