சென்னையில் அதிர்ச்சி... பாலியல் தொல்லையால் மருத்துவமனையில் மாணவர்.. தமிழ் ஆசிரியர் கைது

சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது.

Continues below advertisement

9ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை

Continues below advertisement

சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பெற்றோர் தனது மகனிடம் விசாரித்த பொழுது பள்ளியின் தமிழ் ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறியுள்ளார்.

ஆசிரியர் மீது வழக்கு பதிவு இல்லை

மாணவனுக்கு நோய் தொற்று ஏற்பட்டிருந்ததால், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புகார் அளித்தும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யாமல் , ஆசிரியர் தாக்கியது போன்று வழக்கை பதிவு செய்து ஆசிரியரை காப்பாற்றும் நடவடிக்கையில் பள்ளி நிர்வாகமும் காவல்துறையும் ஈடுபட்டு வருகிறது என மாணவனின் பெற்றோர் குற்றம் சாட்டினர்.

மாணவனிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தமிழ் ஆசிரியர் மீதும் , இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபொழுது பெற்றோரை காவல் துறையை வைத்து மிரட்டிய பள்ளி தலைமையாசிரியர் மீதும் பள்ளி தாளாளர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தினார்.

ஆசனவாய், பிறப்புறுப்பு பகுதிகளில் பாதிப்பு

பாதிக்கப்பட்டு ஒரு மாதம் மேலாக சிறுவன் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரக் கூடிய நிலையில் தற்பொழுது மாணவனுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு நிகழ்வுக்கு பிறகும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல் துறை இருப்பதால்தான் போராட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆகவே மாணவனை தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு பிறப்புறுப்பு ஆசனவாய் உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு ஏற்படும் வகையில் செய்த ஆசிரியர் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். 

இந்த நிலையில் குமரன் நகர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் சுதாகரை கைது செய்துள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola