முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரும், மாநில மத்திய கூட்டுறவு வங்கியின் மாநில தலைவருமான இளங்கோவனின் வீடு, உறவினர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த மாதம் 22 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 18 மணி நேரம் நீடித்த இந்த சோதனையில் எந்தவித ஆவணங்கள் கைப்பற்றவில்லை என இளங்கோவன் தரப்பிலிருந்து சொல்லப்பட்டது. மேலும், 26க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. சோதனையில் கைப்பற்றப்பட்ட இரண்டு வங்கி லாக்கர் சாவிகள் இருந்தது. நீதிமன்றத்தின் அனுமதியோடு நேற்று அயோத்தியாபட்டினம் கூட்டுறவு வங்கியில் உள்ள லாக்கர் மற்றும் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி லாக்கர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 30க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல கோடி ரூபாய் மதிப்பிலான இந்த சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  



ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் இளங்கோவன் வீடு உள்ளிட்ட 26 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்பட்டது. அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்தவித அறிவிப்பும் இதுவரை வரவில்லை. 



முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வலது கரமாக செயல்பட்டு வரும் இளங்கோவன் கடந்த 2014 முதல் 2020 ஆம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இளங்கோவன் மகன் பிரவின் குமார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திர கவுண்டம்பாளையத்தில் உள்ள இளங்கோவன் வீடு உட்பட அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த மாதம் 22 ஆம் தேதி காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை சோதனை நடத்தப்பட்டது.


இளங்கோவனின் சகோதரர் மற்றும் சகோதரி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆட்சிக் காலத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக நகை கடன் உள்ளிட்ட பல்வேறு கரங்களை வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பல்வேறு முறைகேடுகளில் மூலம் வருவாய்க்கு அதிகமாக 131 சதவீதம் சொத்து சேர்த்ததாக இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். புத்திர கவுண்டம்பாளையத்தில் இளங்கோவன் தற்பொழுது பிரமாண்டமாக வீடு ஒன்றை கட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.