ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோ லாரி மீது மோதியதில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






தூக்கி வீசப்பட்ட பள்ளி குழந்தைகள்:


விசாகப்பட்டினத்தில் இருக்கும் சங்கம் சாரத் திரையரங்கம் அருகே இன்று காலை வழக்கம் போல் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த லாரி மீது அந்த ஆட்டோ மோதியதில் அதில் பயணம் செய்த 8 குழந்தைகளும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். உடனே அருகில் இருந்தவர்கள் சாலையில் கவிழ்ந்த ஆட்டோவை தூக்கி, சாலையில் வீசப்பட்ட குழந்தைகளை மீட்டனர். 8 குழந்தைகளில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் மற்றவர்கள் காயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பப்வ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.