ஆரணி அருகே கோவிலுக்கு சென்றபோது விபத்து: 8 மாத குழந்தை பலி

ஆரணி அருகே கோவிலுக்கு சென்ற பக்தர்களின் வேன் டயர் வெடித்து 8 மாதகுழந்தை பலி படுகாயம் அடைந்த 20 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

ஆரணி அருகே பாண்டிச்சேரி கோவிலுக்கு சென்ற பக்தர்களின் வேன் பின் பக்கம் டயர் வெடித்து விபத்துகுள்ளானது. இதில் 8மாத குழந்தை பலி படுகாயமடைந்த

Continues below advertisement

20பேர் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆரணி அருகே வேன் கவர்ந்து 8 மாத குழந்தை பலி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே துந்தரீகம்பட்டு கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மாத மாதம் பாண்டிச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற பிரித்திரிங்க தேவி அம்மன் திருக்கோயிலுக்கு செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் இன்று ஆரணி நகர அருணகிரிசத்திரம் பகுதியிலிருந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாண்டிச்சேரி பிரித்திரிங்க தேவியம்மன் ஆலயத்திற்கு செல்ல டூரிஸ்ட் வேனில் புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது அருணகிரிசத்தரம் பகுதியை சேர்ந்த டிரைவர் முரளி வேனை ஓட்டி வந்துள்ளார். 


அதனைத் தொடர்ந்து ஆரணி விழுப்புரம் நெடுஞ்சாலை விண்ணமங்கலம் கூட்ரோடு அருகில் சென்ற போது திடிரென வேனின் பின் பக்கம் டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில் பயணம் செய்த அருணகிரி சத்திரம் பகுதியை சேர்ந்த நடராஜன் அமுதவள்ளி

தம்பதியினரின் 8 மாத குழந்தை யேமேஷ்வரன் என்ற குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானார்.

5வயது சிறுவன் மேல் சிகிச்சைக்காக வேலு மருத்துவமனையில் அனுமதி

பின்னர் படுகாயமடைந்த 20-பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 தகவல் அளித்து பின்னர் ஆம்பூலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த 5 வயது சிறுவனை மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஆரணி கிராமிய காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆரணி அருகே கோவிலுக்கு சென்ற பக்தர்களின் வேன் டயர் வெடித்து 8 மாதகுழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

Continues below advertisement
Sponsored Links by Taboola