குஜராத் : அகமதாபாத்தில் உள்ள சந்த்கேடா குடியிருப்பு வளாகத்தில் இருந்த லிப்ட்டில் 9 வயது சிறுமியை 62 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இந்த சம்பவம் முழுவதும் லிப்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, 9 வயது மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஜகத்பூரைச் சேர்ந்த பானுபிரதாப் ராணாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 


இதுகுறித்து சந்த்கேடா காவல்துறையினர் தெரிவிக்கையில்,“ 9 வயது மைனர் பெண் குடியிருப்பு வளாகத்தில் 11 வது மாடியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக லிப்டில் நுழைந்தபோது, அப்போது அந்த லிப்ட்டில் 62 வயதான பானுபிரதாப் ராணா ஏற்கனவே இருந்துள்ளார்.  லிப்ட்டில் யாரும் இல்லாத நேரத்தில், முதியவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்கு வந்த சிறுமி, நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துனர். இதையடுத்து, பெற்றோர் லிப்ட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.


பின்னர், அந்த காட்சிகளை சந்த்கேடா காவல்துறையினரிடம் ஒப்படைத்து 62 வயதான பானுபிரதாப் ராணா மீது புகார் அளித்தனர்.  குழந்தையின் பெற்றோரின் புகாரின் அடிப்படையில், சந்த்கேடா காவல்துறையினர் ராணா மீது ஐபிசி பிரிவு 354 மற்றும் (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்) (போக்சோ) பிரிவுகளின் கீழ் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


போக்சோ சட்டம் : 


கடந்த சில ஆண்டுக்களாக 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் இதுபோன்ற செய்திகள் சமூக ஊடங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும் நாம் காதுகளில் வந்து தஞ்சமடைக்கின்றது. இத்தகைய கொடுமைகள் இனி எந்தவொரு சிறுமிகளுக்கும் நடைபெற கூடாது எனவும், பொதுமக்கள் கடுமையான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற தவறு செய்பவர்களுக்கு காவல்துறையினரால் போக்சோ சட்டம் பதியப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். இந்த நிலையில், போக்சோ சட்டம் என்ன என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.


18 வயதிற்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகளை பாதுகாக்கப்படுபதற்கு கொண்டுவரப்பட்டதே இந்த போக்சோ சட்டம். இந்த சட்டம் எந்த அளவிற்கு பாதுகாப்பானது. இதன் சட்டம் மற்றும் ஷரத்துகள் பின்வருமாறு : 



  • Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்

  • Aggravated penetrative sexual assault - தீவிரமான ஊடுருவும் பாலியல் தாக்குதல்

  • Sexual Assault - பாலியல் தொல்லை

  • Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை

  • Sexual Harassment - பாலியல் தொந்தரவு

  • Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்


இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றனர்.



  • 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை

  • இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை

  • 12 வயதிற்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது)