Share Market opened  :  இன்று காலை தொடங்கிய பங்கு சந்தையானது சரிவுடன் தொடங்கியுள்ளது.


இன்று காலை தொடங்கிய பங்கு சந்தையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 20.35 புள்ளிகள் சரிந்து 62,390.33 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 9.45 புள்ளிகள் சரிந்து 18,554.15 புள்ளிகளாக உள்ளது. 






லாபம்-நஷ்டம்


கோடக் மகேந்திரா, எஸ்பிஐ லைப் இன்சுரன்ஸ், டாடா மோட்டார்ஸ், எச்டிஎஃப்சி லைப், டிசிஎஸ், மாருதி சுசிகி, பாரதி ஏர்டெல், ஏசியன் பெயின்ட்ஸ், நெஸ்ட்லே, ஐடிசி, எச்டிஎஃப்சி வங்கி, சன் பார்மா, ஹிரோ மோட்டோகார்ப், யுபிஎல், ஹின்டல்கோ, என்டிபிசி, டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


பிரிட்டானியா, எம்எம், ஐசிஐசிஐ வங்கி, அப்போலோ மருத்துவமனை, பிபிசிஎல், டெட்டன் கம்பெணி, எஸ்பிஐ, லார்சன், கோல் இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜாஜ் பின்சர்வ், டாடா ஸ்டீல், விப்ரோ, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. 


வட்டி விகிதம் உயர்வு


 குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.35 சதவீதமாக இந்திய ரிசர்வ் வங்கி நேற்று உயர்த்தியுள்ளது. வட்டி விகிதம் உயர்ந்ததை அடுத்து ரெப்போ வட்டி விகிதம் 5.9 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக அதிகரித்துள்ளது.ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் தனிநபர், வாகன கடன்களுக்கான வட்டி வகிதம் உயரக்கூடும் என்று கூறப்படுகிறது. 


இந்த வட்டி விகித உயர்வு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று தொடங்கிய பங்குச்சந்தையானது மந்தமாகவே தொடங்கியுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து, சந்தையில் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.


ரூபாய் மதிப்பு:






அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 13 காசுகள் அதிகரித்து 82.34 ரூபாயாக ஆக உள்ளது.