Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.


மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ்  221.31 அல்லது 0.34% புள்ளிகள் உயர்ந்து 58,822.28 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 62.25 அல்லது 0.37 % புள்ளிகள் உயர்ந்து 17,050.65 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.  வாரத்தின் முதல் நாளான நேற்று இந்திய பங்குச்சந்தை பலத்த அடிவாங்கிய நிலையில், இன்று ஏற்றத்தில் வர்த்தகம் தொடங்கியது முதலீட்டாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.


லாபம்-நஷ்டம்


பஜாஜ் பைனான்ஸ், நெஸ்டீலே, ரிலையன்ஸ், பாரதி ஏர்டெல், டைட்டன் கம்பெனி, பிரிட்டானியா, லார்சன், ஆக்சிஸ் வங்கி, அல்ட்ரா டெக் சிமெண்ட், அப்போலா மருத்துவமனை, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, மாருதி சுசிகி, ஓஎன்ஜிசி, கோடக் மகேந்திரா, கிராசிம், பஜாஜ் ஆட்டோ, கோல் இந்தியா, யுபிஎல், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


டெக் மகேந்திரா, ஐடிசி, எச்சிஎல் டெக், டிசிஎஸ், சிப்ளா, இன்போசிஸ், விப்ரோ, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட  நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


வாரத்தின் முதல் நாளான நேற்று இந்திய பங்குச்சந்தை சரிவுடன் காணப்பட்டது. அதாவது 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று, வர்த்தக தொடக்கத்தில் பங்குச்சந்தை ஏறுமுகத்தில் இருந்தது. 


இதற்கிடையில்,  பெடரல் ரிசர்வ் வங்கி கூட்டமானது இன்றும், நாளையும் நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் வட்டி விகிதத்தை மீண்டும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இந்திய பங்குச்சந்தையில் அன்னிய முதலீடுகள் என்பது வெளியேறி வருகிறது. வரவிருக்கு நாட்களில் அன்னிய முதலீட்டானது முக்கிய பங்கு வகிக்கலாம் என்று கூறப்படுகிறது. இது அமெரிக்கா வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


ரூபாய் மதிப்பு






இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து 82.54 ஆக  உள்ளது.