Share Market : இந்திய பங்குச்சந்தையானது இன்று காலை சரிவில் தொடங்கியுள்ளது


மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 215.79 புள்ளிகள் உயர்ந்து 60,829.95 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 64.10 புள்ளிகள் உயர்ந்து 18,101.25 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. வாரத்தில் கடந்த மூன்று நாட்களாக ஏற்றத்தில் இருந்த பங்குச் சந்தையானது, இன்று சரிவில் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.






லாபம்-நஷ்டம்


எச்எடிஎஃப்சி, ஆக்சிஸ் வங்கி, யுபிஎல், சிப்ளா, பிபிசிஎல், ஏசியன் பையின்ட்ஸ், ஐடிசி, ஓஎன்ஜிசி, பிரிட்டானியா, சன்பார்மா, பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசிகி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன


ஹின்டல்கோ, கோடக் மகேந்திரா, டெட்டன் கம்பெணி, லார்சன், விப்ரோ, அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜாஜ் பின்சர்வ், இன்போசிஸ், டெக் மகேந்திரா, பாரதி ஏர்டெல், எச்டிஎஃப்சி, கோல் இந்தியா, டிசிஎஸ், எஸ்பிஐ, அப்போலோ மருத்துவமனை, டாடா ஸ்டீல், டாடா கான்ஸ், பஜாஜ் பின்சர்வ், எஸ்பிஐ, நெஸ்டீலே, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ், என்டிபிசி, கிராசிம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


முதலீட்டாளர்கள் கவலை


கடந்த மூன்று நாட்களாகவே இந்திய பங்குச்சந்தையானது முதலீட்டாளர்களை ஆறுதல் படுத்தும்படி ஏற்றத்தில் இருந்தது. ஆனால் இன்று பங்குச்சந்தை சரிவில் தொடங்கியுள்ளது.  பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கிகளானது தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரித்து வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் போர் 11 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இதுவும் பங்குச்சந்தைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.


இதுமட்டுமின்றி, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்கமானது அதிகரித்து வருகிறது.  இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட சீனாவில் கொரோனா அதிகரித்து வருவதால், முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது.


ரூபாய் மதிப்பு








அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் குறைந்து  81.45 ரூபாயாக உள்ளது.