Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது சரிவில் தொடங்கி உள்ளது.


 மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 222.77 புள்ளிகள் உயர்ந்து 60,483.95 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 55.65 புள்ளிகள் உயர்ந்து 18,012.25 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. கடந்த வாரம் முழுவதும்  இந்திய பங்குச்சந்தை பலத்த அடிவாங்கிய நிலையில், இன்று ஏற்றத்தில் தொடங்கி இருப்பதால் முதலீட்டாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.


லாபம்-நஷ்டம்


பஜாஜ் பின்சர்வ், எச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, சன்பார்மா, சிப்ளா, கிராசிம், விப்ரோ, எச்சிஎல் டெக், ஐசிஐசிஐ வங்கி, ஹிரோ மோட்டோகோர்ப், கோடக் மகேந்திரா, பஜாஜ் ஆட்டோ, டெக் மகேந்திரா, மாருதி சுசிகி, ரிலையன்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், அப்போலா மருத்துவமனை, லார்சன், இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், எம்எம், என்டிபிசி, டாடா ஸ்டீல், கோல் இந்தியா, பவர்கிரிட் கார்ப், ஓஎன்ஜிசி, நெஸ்டீலே, பிரிட்டானியா, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி


கடந்த வாரம் நிலவரப்படி இந்திய பங்குச்சந்தையானது முதலீட்டாளர்களை கவலை ஏற்படுத்தி இருந்தது. கடந்த வாரத்தில் 4  நாட்கள் பங்குச்சந்தை பலத்த அடிவாங்கியது.  சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும், நிப்ஃடி 18 ஆயிரத்திற்கு கீழும் சரிந்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கு கவலை ஏற்படுத்தியிருந்தது. அதே போன்று இந்த வாரத்திலும் இருக்கும் என்று எதிர்பார்ப்பில் முதலீட்டளர்கள் இருந்தனர். ஆனால் இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தை ஏற்றத்தில் தொடங்கி உள்ளது.


ரூபாயின் மதிப்பு:








அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9  காசுகள் உயர்ந்து  81.29 ரூபாயாக உள்ளது.