Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது சரிவில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.


மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 226.49 அல்லது  0.37 % புள்ளிகள் உயர்ந்து 61,093.02 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 60.15 அல்லது 0.33% புள்ளிகள் உயர்ந்து 17,975.70 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.  இந்த வாரத்தின் 4 நாட்களும் பங்குச்சந்தையானது ஏற்றத்தில் இருந்து வந்த நிலையில், இன்று வர்த்தக தொடக்கத்தில் பங்குச்சந்தை பலத்த அடிவாங்கியது. நிஃப்டி மீண்டும் 18 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


லாபம்-நஷ்டம்


அல்ட்ரா டெக் சிமெண்ட், யுபிஎல், அதானி போர்ட்ஸ், பிபிசிஎல், கிராசிம், என்டிபிசி, பாரதி ஏர்டெல், பிரிட்டானியா, டாடாஸ்டீல், டாடா கான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


நெஸ்டீலே, ஹிரோ மோட்டோகோர்ப், விப்ரோ, டெக் மகேந்திரா, டிசிஎஸ், அப்போலோ மருத்துவமனை, சிப்ளா,  எச்சிஎல் டெக், எச்டிஎஃப்சி, இன்போசிஸ், எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஓஎன்ஜிசி, ஐடிசி, பஜாஜ் பின்சர்வ், ரிலையன்ஸ், பஜாஜ் ஆட்டோ, லார்சன், டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, டெட்டன் கம்பெணி, எம்எம், கோல் இந்தியா, மாருதி சுசிகி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


அச்சத்தில் முதலீட்டாளர்கள்


கடந்த நான்கு நாட்களும் ஏற்றத்தில் இருந்ததற்கு காரணம் சர்வதே சந்தை சூழல் சாதமாக இருப்பது, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டியது தான். அதனால் தான் நிஃப்டி 18 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது. இதுமட்டுமின்றி, ஜனவரி மாதத்திற்கான அமெரிக்க சில்லறை விற்பனை தரவுகள், சாதகமக உள்ளதை தொடர்ந்து உள்நாட்டு பங்குகளின் விலை உயர்வை கண்டுள்ளது.


இந்த தரவுகள் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பில்லை என கூறப்படுவதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் , இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இப்படி சாதகமான சூழல் இருந்து வந்த நிலையில், இந்திய பங்குச்சந்தை  இன்று வர்த்தக தொடக்கத்தில்  பலத்த அடிவாங்கியது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ரூபாய் மதிப்பு


இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் குறைந்து 82.78 ரூபாயாக உள்ளது.