Share Market opened : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கி உள்ளது.


இன்று காலை தொடங்கிய பங்கு சந்தையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 304.17 புள்ளிகள் உயர்ந்து 62,006.46 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 88.05 புள்ளிகள் உயர்ந்து 18,473.35 புள்ளிகளாக உள்ளது.






லாபம்-நஷ்டம்


யுபிஎல், எச்டிஎஃப்சி லைப், டெக் மகேந்திரா, அப்போலோ மருத்துவமனை, பஜாஜ் ஆட்டோ, டாடா ஸ்டீல், விப்ரோ, ஏசியன் பெயின்ட்ஸ், டாடா மோட்டார்ஸ்,  இன்போசிஸ், அதாணி போர்ட்ஸ், கோல் இந்தியா, சிப்ளா, எஸ்பிஐ, அல்ட்ரா டெக் சிமெண்ட், பிபிசிஎல், ஐசிஐசிஐ வங்கி, சன்பார்மா, எம்எம், டிசிஎஸ், பஜாஜ் பின்சர்வ், கிராசிம், நெஸ்டீலே, டெட்டன் கம்பெணி, ஐடிசி, ஓஎன்ஜிசி, ஹிரோ மோட்டாகோர்ப், பிரிட்டானியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


லார்சன், பாரதி ஏர்டெல், பிபிசிஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


சீனாவில் கொரோனா தாக்கம்


சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை 2023-ஆம் ஆண்டில் உருவாகும், அமெரிக்காவுக்கும் 2023-ஆம் ஆண்டில் பொருளாதார மந்தநிலையை நோக்கி நகர்கிறது என்ற தகவலும் முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. மேலும் சீனாவில் கொரோனா வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருகிறது. உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட சீனாவில் இன்னும் கொரோனா தாக்கம் குறையாதது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதன் காரணங்களால் நேற்றைய பங்குச்சந்தை பலத்த அடிவாங்கியது. அதன்படி, சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இன்றைய பங்குச்சந்தை முதலீட்டாளர்களை ஆறுதல் படுத்தும்படி ஏற்றத்தில் தொடங்கியுள்ளது.


ரூபாய் மதிப்பு: 






இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாய் மதிப்பானது 5 காசுகள் குறைந்து 82.75 ரூபாயாக ஆக உள்ளது.