Share Market : கடந்த சில நாட்களாகவே ஏற்றத்துடன் இருந்த பங்குச் சந்தையானது இன்று காலை சரிவுடன் தொடங்கியுள்ளது.


இன்று காலை தொடங்கிய பங்கு சந்தையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 305.61 புள்ளிகள் சரிந்து 62,978.58 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 79.65 புள்ளிகள் சரிந்து 18,732.85 புள்ளிகளாக உள்ளது. 






லாபம்-நஷ்டம்


எம்&எம், டாடா கான்ஸ், பஜாஜ் ஆட்டோ, டிசிஎஸ், பஜாஜ் பின்சர்வ், ஆக்சிஸ் வங்கி, லார் சன், மாருதி சுசிகி, ஏசியன் பைன்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி, பவர் கிரிட் கார்ப், நெஸ்டல், சிப்ளா, எச்டிஎஃப்சி லைப், யுபிஎல், சன் பார்மா, கோடக் மகேந்திரா, டெட்டன் கம்பெணி, அல்ட்ரா டெக் சிமெண்ட், என்டிபிசி, விப்ரோ, எச்சிஎல் டெக், பாரதி ஏர்டெல், அதாணி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


ஓஎன்ஜிசி,  அப்போலோ மருத்துவமனை, கோல் இந்தியா, டெக் மகேந்திரா, டாடா ஸ்டீல், ஹிண்டல்கோ, பிபிசிஎல், எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


ரூபாயின் மதிப்பு:


சீனாவில், கொரோனா தொற்று காரணமாக, ஜீரோ கோவிட் திட்டம் கடைபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில், பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.  இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தது. இதனால் கச்சா எண்ணேய் விலை குறைந்தது. இதன் காரணமாக டால்ருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடையும் தன்மை காணப்படுகிறது.






இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 18 காசுகள் குறைந்து 81.08 ரூபாயாக ஆக உள்ளது.