Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது சரிவில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.


மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 71.78 அல்லது 0.12% புள்ளிகள் குறைந்து 59,984.32 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 20.25 அல்லது 0.29% புள்ளிகள் குறைந்து 17,723.15 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.


லாபம்-நஷ்டம்


யுபிஎல், டெக் மகேந்திரா, சன் பார்மா, கோடக் மகேந்திரா, சிப்ளா, இன்போசிஸ், டிசிஎஸ், எச்டிஎஃப்சி லைப், எச்டிஎஃப்சி வங்கி, விப்ரோ, நெஸ்டீலே, டைட்டன் கம்பெணி, பிபிசிஎல், மாருதி சுசிகி, ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


பஜாஜ் பைனான்ஸ், பிரிட்டானியா, எஸ்பிஐ, ஓஎன்ஜிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட், டாடா ஸ்டீல், கிராசிம், ஹிரோ மோட்டோகோர்ப், லார்சன், அப்போலா மருத்துவமனை, பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, கோல் இந்தியா, எம்எம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


கடந்த வாரம் முழுவதும்  இந்திய பங்குச்சந்தை சரிவில் காணப்பட்டன. ஆனால் இந்த வாரத்தின் முதல் நாள் ஏற்றத்தில் காணப்பட்டது.  இன்றைய வர்த்தக தொடக்கத்தில் இந்திய பங்குச்சந்தை சரிவில் தொடங்கியிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பங்குச்சந்தையில் பல மாதங்களாக நஷ்டத்தை சந்தித்து வரும் பழைய வாடிக்கையாளர்கள், பங்குச்சந்தையில் தொடர முடியாமல் சவால்களை சந்தித்து வருகின்றனர்.


அதன் விளைவாக, கடந்த 9 மாதங்களில் பங்குச் சந்தையில் இருந்து 53 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர் என தேசிய பங்கு சந்தையின் தரவுகள் வழியாக தெரிய வந்துள்ளது. இதன் தாக்கத்தால் கூட இந்திய பங்குச்சந்தை இன்றைய வர்த்தக தொடக்கத்தில் சரிவை சந்தித்துள்ளதாக தெரிகிறது.








இந்நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82.87 ஆக உள்ளது.