Share Market: ஏற்றத்துடன் முடிந்த இந்திய பங்குச்சந்தை...! சென்செக்ஸ் எவ்வளவு உயர்வு..?

Share Market: இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் முடிவடைந்திருப்பதால் முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Continues below advertisement

Share Market Closing Bell: இன்றைய வர்த்தக முடிவில் இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடந்துள்ளன.  

Continues below advertisement

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 98.84 அல்லது 0.16 % புள்ளிகள் அதிகரித்து  61,872.62 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 35.75 அல்லது 0.20% புள்ளிகள் உயர்ந்து 18,321.15 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.  இன்றைய காலை வர்த்தக நேர தொடக்கத்தில், சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது.

லாபம் - நஷ்டம்

பஜாஜ் ஆட்டோ, பாரதி ஏர்டெல், ஐடிசி, டாடா கான்ஸ், எச்டிஎஃப்சி லைஃப், பவர் கிரிட் கார்ப், கோடக் மகேந்திரா, பிரிட்டானியா, லார்சன், சிப்ளா, பஜாஜ் பைனான்ஸ், அப்போலோ மருத்துவமனை, இன்போசிஸ், நெஸ்டீலே, ஆக்சிஸ் வங்கி, எச்சிஎல் டெக், எஸ்பிஐ, எச்சிஎல் டெக், எம்எம், மாருதி சுசிகி, கிராசிம், டைட்டன் கம்பெணி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.

விப்ரோ, டாடா மோட்டார்ஸ், யுபிஎல், எச்டிஎஃப்சி, சன் பார்மா, ஹின்டல்கோ, அல்ட்ரா டெக் சிமெண்ட், கோல் இந்தியா, எச்டிஎஃப்சி வங்கி, டாடா ஸ்டீல், டிசிஎஸ், என்டிபிசி, ஐசிஐசிஐ வங்கி, டெக் மகேந்திரா, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola