Share Market Closing Bell: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.


மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ்  64.55 அல்லது 0.11% புள்ளிகள் சரிந்து  59,632.35 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி  4.60 புள்ளிகள் அல்லது 0.3% புள்ளிகள் சரிந்து 17,623.35 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.


இந்த வாரத்தில் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்று நாட்களாக சரிவுடன் முடிவடைந்தன.


இன்றைய வர்த்தக நேர முடிவில் பார்மா துறை பங்குகள் லாபத்தில் வர்த்தகமாகின. இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதையெடுத்து ஃபார்மா மெடிக்கல் பங்குகளின் மதிப்பு அதிகரித்தது.


லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்


டாடா மோட்டார்ஸ், என்.டி.பி.சி. ஏசியம் பெயிண்ட்ஸ், அதானி போர்டஸ், பஜார்ஜ் ஆட்டோ, பாரதி ஏர்டெல், எஸ்.பி.ஐ.டெக் மஹிந்திரா, அப்பல்லோ மருத்துவமனை, லார்சன், விப்ரோம், டி.சி,எஸ்.,டைட்டன், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹீரோ மோட்டர்கார்ப் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.


நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்


தேவிஸ் லேப்ஸ்,ஈச்சர் மோட்டர்ஸ், ஜெ.எஸ்.டபுள்யூ., பிரிட்டானியா, சிப்ளா, சன் பார்மா, ஹின்லாகோ,நெஸ்லே, அதானி எண்டர்பிரைசர்ஸ், யு.பி.எல். அட்ராடெக் சிமெண்ட், ஆக்ஸிஸ் வங்கி, கோல் இந்தியா, ரிலையன்ஸ்,டாடா ஸ்டீல், கோடாக மஹிந்திரா வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.  


காலை நிலவரம்:


 இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.


மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 211 அல்லது 0.36% புள்ளிகள் உயர்ந்து 59,779.56 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 51.25 அல்லது 0.29% புள்ளிகள் உயர்ந்து 17,670.00 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. கடந்த 3 நாட்களாகவே இந்திய பங்குச்சந்தை சரிவில் காணப்பட்ட நிலையில், இன்று ஏற்றத்தில் வர்த்தகம் தொடங்கியிருப்பது முதலீட்டளார்களுக்கு சற்று நிம்மதியாக உள்ளது.


காரணம்


கடந்த 3 நாட்கள் பங்குச்சந்தை சரிவை சந்தித்து வந்தது. அதுமட்டுமின்றி, பங்குச்சந்தையில் பல மாதங்களாக நஷ்டத்தை சந்தித்து வரும் பழைய வாடிக்கையாளர்கள், பங்குச்சந்தையில் தொடர முடியாமல் சவால்களை சந்தித்து வருகின்றனர். அதன் விளைவாக, கடந்த 9 மாதங்களில் பங்குச் சந்தையில் இருந்து 53 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர் என தேசிய பங்கு சந்தையின் தரவுகள் வழியாக தெரிய வந்துள்ளது.


 தொடர்ந்து 9ஆவது மாதமாக, தேசிய பங்கு சந்தையின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சரிவை சந்தித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு, ஜூன் மாதம், தேசிய பங்கு சந்தையில் 3.8 கோடி முதலீட்டாளர்கள் இருந்துள்ளனர். ஆனால், தற்போது 53 லட்சம் பேர் வெளியேறி உள்ளதால் அந்த எண்ணிக்கை 3.27 கோடியாக குறைந்துள்ளது. இதன் தாக்கத்தால் கூட பங்குச்சந்தை சரிவை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.




மேலும் வாசிக்க..


TN 10th Exam 2023: முடிந்த 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; ஏப்.25-ல் விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்..


Summer Holiday : கொளுத்தியெடுக்கும் வெயில்...பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவித்த ஒடிசா அரசு...!