எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில், வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

Continues below advertisement

எஸ்பிஐ ஊழியர்கள் வேலை நிறுத்தம்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஊழியர்கள் மே 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதற்கு முன் மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் அதன் பிறகு பக்ரீத் விடுமுறையும் உள்ளது. எனவே, எஸ்பியை வங்கி 2 நாட்கள் வரை மூடப்பட்டிருக்கும்.

இந்த நிலையில், வேலை நிறுத்தம் தொடர்பாக வங்கி தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு ஆலோசனையை வெளியிட்டது. வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், எனவே வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தால் என்ன செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Continues below advertisement

 

வங்கி ஆலோசனை வெளியீடு

வங்கியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு பகிரப்பட்டது. இதன் மூலம், வேலைநிறுத்தத்தின்போது வங்கிக் கிளைகளில் அத்தியாவசிய வங்கி சேவைகளைத் தொடர முயற்சிப்பதாக வங்கி வாடிக்கையாளர்களுக்குத் தகவல் அளித்துள்ளது. இருப்பினும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்க மாற்று வங்கி சேவைகளை பயன்படுத்த வங்கி அறிவுறுத்தியுள்ளது.

 

அந்தப் பதிவில், ‘அகில இந்திய ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஸ்டாப் கூட்டமைப்பு (AISBISF) மே 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். கிளைகளில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான வசதிகளை வழங்க நாங்கள் முழு முயற்சி செய்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு, வங்கி வாடிக்கையாளர்களிடம் மூன்று முக்கிய விஷயங்களை தெரிவித்துள்ளது.

  • பணம் தேவைப்பட்டால் ATM/ADWMகளைப் பயன்படுத்தவும்.
  • வாடிக்கையாளர் சேவை மையங்களைப் பயன்படுத்தவும் (CSPs)
  • இணைய வங்கி, யோனோ, மொபைல் வங்கி, UPI மற்றும் பிற டிஜிட்டல் தளங்களை விரும்புங்கள்.

இதன் பிறகு, வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வங்கி மன்னிப்பு கேட்டுள்ளது.