மாதத் தவணைகளைத் தவறவிடுபவர்கள் கடன் வாங்கியவர்களால் துன்புறுத்தப்படாமல் இருப்பதை தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இதன் கடன் வாங்கியவர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். 

Continues below advertisement

கடன் வாங்குவதும், வழங்குவதும் என்பது நம் சமூகத்தில் ஊறிப்போன ஒரு விஷயமாக உள்ளது. தனி நபர் கடன், வீட்டுக்கடன், கார், நகை என பல வகையான கடன்கள் வழங்கப்படுகிறது. அதனைத் தவிர தனி நபர்களும், தனியார் நிதி நிறுவனங்களும் கடன் வழங்குகிறார்கள். வாங்கும்போது அனைத்து விதிகளையும் சரியாக பின்பற்றுவேன் என சொல்லும் நபர்களால் சில நேரங்களில் மாதத்தவணை அல்லது கடனை குறிப்பிட்ட நேரத்தில் திரும்ப செலுத்த முடியாமல் போகிறது. 

இதனால் சில நேரங்களில் கடன் பெற்ற நபர்கள் மீது தாக்குதல், வீட்டு பொருட்களை சூறையாடுதல், வாகனங்களை தூக்குவது, வீட்டிற்கு பூட்டுப் போடுவது போன்ற மோசமான செயல்களில் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் அல்லது பணம் கொடுக்கும் நபர்கள் ஈடுபடுகின்றனர். இது காவல்துறை, நீதிமன்றம் வரை சட்ட பிரச்னையாகவும் செல்கிறது. அதேசமயம் தற்கொலை போன்ற விபரீத முடிவுக்கு செல்லும் சூழலும் உருவாகிறது. இதனை தடுக்கும் பொருட்டு ரிசர்வ் வங்கி சட்டமியற்றி உள்ளது. 

Continues below advertisement

இதில் வங்கிகளும், கடன் வழங்குபவர்களும், கடன் வாங்கியவர்களை எவ்வாறு தொடர்புகொள்வது, கடன் வாங்க செல்லும் முகவர்கள் என்ன கூறலாம், எப்போது அழைக்கலாம் மற்றும் களப் பயணங்களை எவ்வாறு மேற்கொள்வது என்பன போன்றவற்றில் கடுமையான விதிகளைப் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் ஜனவரி 1, 2027 முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கிகளும், கடன் பெற செல்பவர்களும்  காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே கடனாளிகளைத் தொடர்பு கொள்ளலாம். இந்த நேரங்களுக்கு வெளியே அழைப்பதோ அல்லது சந்திப்பதோ கடன் பெற்றவர்கள் கோரிக்கை விடுத்திருந்தாலோ அல்லது அனுமதி அளித்திருந்தாலோ மட்டுமே அனுமதிக்கப்படும்.

துக்க நிகழ்வு, மருத்துவ அவசரநிலை அல்லது திருமண விழா போன்ற குடும்ப நிகழ்வுகளின் போது கடன் வாங்கியவர்களைத் தொடர்புகொள்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தகாத அல்லது மிரட்டும் வகையிலான வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது. அடையாளம் தெரியாத அல்லது அச்சுறுத்தும் அழைப்புகளைச் செய்யக்கூடாது. கடன் வாங்கியவர்களைத் திரும்பத் திரும்பத் தொடர்பு கொள்ளவோ , அவர்களைப் பொதுவெளியில் அவமானப்படுத்தவோ அல்லது அவர்களின் குடும்பம், சொத்துக்கள் அல்லது நற்பெயருக்கு அச்சுறுத்தல் விடுக்கவோ கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் சமூக ஊடகங்களில் கடன் பெற்றவர்கள் பற்றி எந்தவொரு தகவலும் பகிரக்கூடாது. 

கடன் தொகை, வட்டி என எது வாங்க வருவதாக இருந்தாலும் ஒருநாள் முன்பே தெரிவிக்க வேண்டும். எங்கு வர வேண்டும் என்பதையும் கடன் பெற்றவர்கள் தான் சொல்ல வேண்டும். கடன் வாங்கியவர் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்திற்கு மீண்டும் மீண்டும் வராமல் தவறினால் ஊழியர் கடன் வாங்கியவரின் வீட்டிற்கோ அல்லது பணியிடத்திற்கோ நேரில் செல்லலாம். கடனைப் பெற செல்லும் ஊழியர்கள் அடையாள ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.