சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து விற்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 66வது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் இன்று சென்னையில் விற்கப்படுகிறது. உலக பொருளாதாரம் தொடர்ந்து மீட்சி பெற்று வருவதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை சற்றே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே, இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மிக விரைவில் ஏற்றக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2021 நவம்பர் மாத தொடக்கத்தில் 80 அமெரிக்க டாலராக இருந்த கச்சா எண்ணெயின் விலை, மாத இறுதியில் 70.86 அமெரிக்க டாலராக குறைந்தது. மேலும், அமெரிக்கா போன்ற நாடுகளின் நிர்பந்தத்தால் ஒபெக்+ எனப்படும் ரஷ்யா உள்ளிட்ட பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பு உற்பத்தி கட்டுப்பாடுகளை நீக்க முடிவு செய்துள்ளதால், கச்சா எண்ணெய் விலையை சரியத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய, ஒமிக்ரான் தொற்று பரவலில் முழுமையான எல்லை மூடலை எந்த நாடும் அறிவிக்கவில்லை. இதன்காரணமாக, தற்போது கச்சா எண்ணையின் நுகர்வு அதிகரித்துள்ளது. அதன் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை சற்றே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் அமெரிக்க பொருளாதாரம் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. அதில் குறிப்பாக கச்சா எண்ணெய் தேவை மீட்சி அங்கு காணப்படுகிறது. இதன், காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மேலும் கணிசமாக அதிகரிக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்