சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சமீபமாக தாறுமாறாக உயர்ந்து வந்ததால், விரைவில் ஒரு லட்சம் ரூபாயை எட்டிவிடும் என்று பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். அதிலும், ஒரு நாளைக்கு இரண்டு முறை என விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று கணிசமான அளவு குறைந்துள்ளது. இன்றைய விலை என்ன.? பார்க்கலாம்.
தாறுமாறாக உயர்ந்துவந்த தங்கம் விலை
சமீபத்தில், பல நாட்கள் இரண்டு முறை என்ற கணக்கில் அசுர வேகத்தில் ஏறிவந்தது தங்கத்தின் விலை. இந்த வாரத்தின் தொடக்க நாளான 6-ம் தேதி, அதிரடியாக விலை உயர்ந்து, புதிய உச்சத்தை அடைந்தது. அதன்படி, ஒரு கிராம் 11,060 ரூபாய்க்கும், ஒரு சவரன் 88,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், அன்று மாலையே மீண்டும் விலை உயர்ந்து, சவரன் 89 ஆயிரத்தை அடைந்தது. அதன்படி, ஒரு கிராம் 11,125 ரூபாய்க்கும், ஒரு சவரன் சரியாக 89,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, 7-ம் தேதி மீண்டும் விலை உயர்ந்து புதிய உச்சத்திற்கு சென்ற தங்கம், ஒரு கிராம் 11,200 ரூபாய்க்கும், ஒரு சவரன் 89,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் 8-ம் தேதி மீண்டும் அதிரடியாக விலை உயர்ந்து, ஒரு சவரன் 90 ஆயிரம் ரூபாயை கடந்தது. அதன்படி, கிராமிற்கு 100 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் 11,300 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் விலை உயர்ந்து ஒரு சவரன் 90,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொர்ந்து அன்று மாலையே மீண்டும் விலை உயர்ந்து சவரன் 91 ஆயிரம் ரூபாயை கடந்தது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் 11,385 ரூபாய்க்கும், ஒரு சவரன் 91,080 ரூபாய்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில், 9-ம் தேதியான நேற்று மீண்டும் விலை உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது தங்கம் விலை. அதன்படி, ஒரு கிராமிற்கு 15 ரூபாய் விலை உயர்ந்து கிராம் 11,400 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் விலை உயர்ந்து ஒரு சவரன் 91,200 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்று கணிசமாக குறைந்த தங்கத்தின் விலை
இப்படிப்பட்ட சூழலில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, கிராமிற்கு 165 குறைந்து ஒரு கிராம் 11,260 ரூபாய்க்கும், ஒரு சவரன் 90,080 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
அதிரடி காட்டும் வெள்ளி விலை
தங்கத்தின் விலை இன்று கணிசமாக குறைந்த நிலையில், வெள்ளி விலை கிராமிற்கு 3 ரூபாய் உயர்ந்து அதிரடி காட்டியுள்ளது.
கடந்த 6-ம் தேதி 2 ரூபாய் விலை உயர்ந்து, கிராம் 167 ரூபாயை எட்டியது வெள்ளி. அதைத் தொடர்ந்து, 7-ம் தேதி அதே விலையில் நீடித்த வெள்ளி, 8-ம் தேதி ஒரு கிராமிற்கு 3 ரூபாய் விலை உயர்ந்து, புதிய உச்சமாக கிராம் 170 ரூபாய்க்கு சென்றது.
இந்நிலையில், 9-ம் தேதியான நேற்று மீண்டும் விலை உயர்ந்த வெள்ளி, ஒரு கிராம் 177 ரூபாயாக மற்றொரு புதிய உச்சத்தை அடைந்தது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 77 ஆயிரம் ரூபாயாக விற்பனையானது.
இந்த சூழலில், இன்றும் விலை உயர்ந்துள்ள வெள்ளி, ஒரு கிராம் 180 ரூபாயாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை குறைந்த நிலையில், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவது, பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.