சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சங்களை தொட்டு, தங்கம் வாங்குவோரின் வயிற்றில் புளியை கரைத்து வருகிறது. இந்த சூழலில், இன்று சவரனுக்கு மேலும் 120 ரூபாய் விலை உயர்ந்த தங்கம், ஒரு சவரன் 91 ஆயிரத்து 200 ரூபாயை தொட்டுள்ளது.

Continues below advertisement


தினம்தோறும் உச்சங்களை எட்டும் தங்கம் விலை


தொடர் உயர்வை சந்தித்து புதிய உச்சங்களை தொட்டுவரும் தங்கத்தின் விலை, கடந்த அக்டோபர் 1-ம் தேதி, கிராம் 10,950 ரூபாயாகவும், சவரன் 87,600 ரூபாயாகவும் இருந்தது. 2-ம் தேதியும் அதே விலையில் நீடித்தது.


இந்நிலையில், 3-ம் தேதி விலை சற்று குறைந்து, ஒரு கிராம் 10,900 ரூபாயாகவும், ஒரு சவரன் 87,200 ரூபாயாகவும் விற்பனையானது. 4-ம் தேதி சற்று விலை உயர்ந்து ஒரு கிராம் மீண்டும் 10,950 ரூபாய்க்கும், ஒரு சவரன் 87,600 ரூபாய்க்கும் சென்றது.


தொடர்ந்து 5-ம் தேதி அதே விலையில் நீடித்த நிலையில், 6-ம் தேதி அதிரடியாக விலை உயர்ந்து, புதிய உச்சத்தை அடைந்தது. அதன்படி, ஒரு கிராம் 11,060 ரூபாய்க்கும், ஒரு சவரன் 88,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.


இந்நிலையில், அன்று மாலையே மீண்டும் விலை உயர்ந்து, சவரன் 89 ஆயிரத்தை அடைந்தது. அதன்படி, ஒரு கிராம் 11,125 ரூபாய்க்கும், ஒரு சவரன் சரியாக 89,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.


அதைத் தொடர்ந்து, 7-ம் தேதி மீண்டும் விலை உயர்ந்து புதிய உச்சத்திற்கு சென்ற தங்கம், ஒரு கிராம் 11,200 ரூபாய்க்கும், ஒரு சவரன் 89,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று மீண்டும் அதிரடியாக விலை உயர்ந்து, ஒரு சவரன் 90 ஆயிரம் ரூபாயை கடந்தது.


அதன்படி, கிராமிற்கு 100 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் 11,300 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் விலை உயர்ந்து ஒரு சவரன் 90,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.


இந்நிலையில், நேற்று மாலையே மீண்டும் விலை உயர்ந்து சவரன் 91 ஆயிரம் ரூபாயை கடந்தது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் 11,385 ரூபாய்க்கும், ஒரு சவரன் 91,080 ரூபாய்கும் விற்கப்பட்டது.


இன்றைய விலை நிலவரம் என்ன.?


இந்நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது தங்கம் விலை. அதன்படி, ஒரு கிராமிற்கு 15 ரூபாய் விலை உயர்ந்து கிராம் 11,400 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் விலை உயர்ந்து ஒரு சவரன் 91,200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.


வெள்ளியின் விலையும் வரலாறு காணாத புதிய உச்சம்


தங்கத்துடன் போட்டி போட்டி வெள்ளி விலையும் தொடர் உயர்வை சந்தித்து வருகிறது.


கடந்த 1-ம் தேதி கிராம் 161 ரூபாயாக இருந்த வெள்ளி, 2-ம் தேதி கிராமிற்கு 3 ரூபாய் விலை உயர்ந்து 164 ரூபாயை எட்டியது. 3-ம் தேதி கிராமிற்கு 2 ரூபாய் விலை குறைந்து, கிராம் 162 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


இந்நிலையில், 4-ம் தேதி மீண்டும் அதிரடியாக கிராமிற்கு 3 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 165 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. தொடர்ந்து 5-ம் தேதி அதே விலையில் நீடித்தது.


இந்நிலையில், 6-ம் தேதி மீண்டும் 2 ரூபாய் விலை உயர்ந்து, கிராம் 167 ரூபாயை எட்டியது. அதைத் தொடர்ந்து, 7-ம் தேதி அதே விலையில் நீடித்த வெள்ளி, நேற்று ஒரு கிராமிற்கு 3 ரூபாய் விலை உயர்ந்து, புதிய உச்சமாக கிராம் 170 ரூபாய்க்கு சென்றது.


இந்நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்த வெள்ளி, ஒரு கிராம் 171 ரூபாயாக மற்றொரு புதிய உச்சத்தை அடைந்தது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 71 ஆயிரம் ரூபாயாக உள்ளது.


தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து, 91 ஆயிரம் ரூபாயை கடந்துள்ள நிலையில், விரைவிலேயே ஒரு லட்சம் ரூபாயை எட்டிவிடும் போல் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.