தங்கத்தின் மீது அதிகரிக்கும் முதலீடு

தங்கத்தின் விலையானது நடுத்தர வர்க்க மக்கள் வாங்க முடியாத வகையில் தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 59 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை ஜனவரி 29ஆம் தேதி ஒரு சவரன் ஒரு லட்சத்து 34ஆயிரம் ரூபாயை எட்டியது. இதனால் நடுத்தர வர்க்க மக்களுக்களுக்கு தங்கநகைகள் எட்டாக்கனியாகவே மாறியது.

Continues below advertisement

அந்த வகையில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி வரலாற்றில் புதிய உச்சமாக ஒரு கிராம் 16,800 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,34,400 ரூபாய் என விற்பனையானது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், அடுத்தடுத்து தொடர்ந்து 3 நாட்கள் தங்கத்தின் விலையானது குறைந்தது.

தங்கம் விலை நிலவரம்

  • ஜனவரி 30ஆம் தேதி ஒரு கிராம் 950 ரூபாய்  குறைந்து 15,850 ரூபாய்க்கும், சவரனுக்கு 7,600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1,26,800 ரூபாய்க்கும் விற்பனையானது.
  • ஜனவரி 31ஆம் தேதியும மீண்டும் தங்கத்தின் விலையானது கிராமிற்கு 950 ரூபாய் குறைந்து  14,900 ரூபாய்க்கும், சவரனுக்கு 7,600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1,19,200 ரூபாய்க்கும் விற்க்கப்பட்டது.
  • ஜனவரி 2ஆம் தேதி தங்கத்தின் விலையானது கிராம் ஒன்றுக்கு 950 ரூபாய் குறைந்து 13,950 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சவரனுக்கு 7,600 ரூபாய்க்கு குறைந்து ஒரு சவரன் 1 லட்சத்து 11ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
  •  கடந்த 3 நாட்களில் மட்டும் அதிரடியாக 22,800 ரூபாய் குறைந்தது

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் அதிரடியாக உயர தொடங்கியது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 80 ரூபாய் உயர்ந்து  14ஆயிரத்து 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 12ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Continues below advertisement

வெள்ளியின் விலையும் கடந்த 3 நாட்களாக சுமார் ஒரு லட்சம் ரூபாய் அளவிற்கு குறைந்தது. அந்த வகையில் நேற்று வெள்ளி ஒரு கிலோவிற்கு 20ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ வெள்ளி 3லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்றும் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிலோவிற்கு 20ஆயிரம் குறைந்துள்ளது.