சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் குறைந்த நிலையில், மாலையில் 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. இதனால், தங்கத்தின் விலை எந்த திசையில் செல்லும் என்பதே தெரியாமல் பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். வெள்ளியின் விலையும் இதேபோல் காலையில் குறைந்து மாலையில் உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை என்ன என்பதை பார்க்கலாம்.

Continues below advertisement

தங்கம் விலை நிலவரம்

  • பிப்ரவரி 16 - சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,17,680 ரூபாய்க்கும் விற்பனை.
  • பிப்ரவரி 17- சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1,17,200 ரூபாய்க்கு விற்பனை.
  • பிப்ரவரி 18- சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து 1,16,560 ரூபாய்க்கு விற்பனை.
  • பிப்ரவரி 19- சவரனுக்கு 2160 ரூபாய் குறைந்து 1,14,400 ரூபாய்க்கு விற்பனை. மாலையிலும் சவரனுக்கு 3200 ரூபாய் குறைந்து 1,11,200 ரூபாய்க்கு விற்பனை.
  • பிப்ரவரி 20- சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 1,11,600 ரூபாய்க்கு விற்பனை.
  • பிப்ரவரி 21- ஒரு சவரன் 2640 ரூபாய் குறைந்து 1,08,960 ரூபாய்க்கு விற்பனை.
  • பிப்ரவரி 22- சவரன் ஒன்றுக்கு 5,360 ரூபாய் குறைந்து 1,03,600 ரூபாய்க்கு விற்பனை 

23-ம் தேதி இருமுறை குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை

தங்கத்தின் விலையானது நேற்று காலையில் சவரனுக்கு 5,360 ரூபாய் குறைந்த நிலையில், மாலையிலும் தங்கம் விலை சரிந்தது. அதன்படி, நேற்று ஒரே நாளில் 7,600 ரூபாய் அளவிற்கு சரிந்து, நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. மொத்தமாக நேற்று காலை மற்றும் பிற்பகலில் விலை குறைந்து, ஒரே நாளில் கிராமுக்கு 950 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 12,670 ரூபாய்க்கும், சவரனுக்கு 7,600 ரூபாய் குறைந்து, ஒரு சரவன் 1,01,360 ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்த சூழலில், மாலையில் திடீரென தங்கத்தின் விலை பெரும் அளவில் உயர்ந்தது. அதன்படி, கிராமிற்கு 670 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 13,340 ரூபாய்க்கு எகிறியது. சவரனுக்கு 5,360 ரூபாய் அதிகரித்து, 1,06,720 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.

Continues below advertisement

இன்றும் காலையில் குறைந்து மாலையில் விலை உயர்ந்த தங்கம்

இதேபோல், இன்று காலையில் விலை குறைந்த தங்கம் மாலையில் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு 2,720 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1,04,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் 340 ரூபாய் குறைந்து, கிராம் 13,000 ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்நிலையில், மாலையில் அதிரடியாக சவரனுக்கு 2,000 ரூபாய் விலை உயர்ந்தது. அதன்படி, ஒரு சவரன் 1,06,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராமிற்கு 250 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலையும் உயர்வு

இதேபோல், வெள்ளி விலையும் இன்று காலை கிராமிற்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 240 ரூபாயாக விற்பனையான நிலையில், மாலையில் 10 ரூபாய் விலை உயர்ந்து கிராம் மீண்டும் 250 ரூபாயை எட்டியது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தினம்தோறும் குறைவதும், உயர்வதுமாய் இருப்பதால், பொதுமக்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ட்ரம்ப் அறிவித்த போதிலும், தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார். இதனால், அங்கு நிலவும் குழப்பம் இங்கும் எதிரொலிப்பது போல் தெரிகிறது.