தமிழகத்தின் IT புரட்சி: 25,500 வேலைவாய்ப்புகள்! புதிய TIDEL பூங்காக்கள் மூலம் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!
மாநிலம் முழுவதும் IT துறையை விரிவுபடுத்தும் இத்திட்டங்கள் மூலம் 25,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நிதியமைச்சர் இன்று இடைக்கால பட்ஜெட்டில் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு தனது இடைக்கால பட்ஜெட் 2026-இல் தகவல் தொழில்நுட்பத் துறையை மேலும் விரிவுபடுத்தும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் IT துறையை வளர்ச்சி அடைய செய்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் பல்வேறு TIDEL பூங்காக்கள் மற்றும் மினி IT பூங்காக்கள் அமைத்து வருவதை சுட்டிக்காட்டின. திருச்சி, மதுரை, ஓசூர் ஆகிய மூன்று இடங்களில் புதிய TIDEL பூங்காக்கள் பெரிய அளவில் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்துக்கு மொத்தம் ரூ.1,070 கோடி செலவிடப்பட உள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
இந்த பூங்காக்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு IT நிறுவனங்களை ஈர்த்து, உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும். குறிப்பாக திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் IT தொழில் வளர்ச்சி வேகமெடுக்கும். இந்தியாவில் ஐடி துறை வளர்ச்சி அடையும் வேளையில் தமிழ்நாட்டிற்கும் ஐடி துறை நிறுவனங்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக சென்னையில் முதல் முதலாக 1998ஆம் ஆண்டு டைடல் பார்க் கட்டுமானம் துவங்கியது.
சென்னையில் மட்டுமே இருந்த டைடல் பார்க் மாநிலத்தின் மற்ற மாவட்டங்களுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தது தமிழக அரசு. இதற்காக நியோ டைடல் பார்க் திட்டத்தை அறிமுகம் செய்து, அதை தொடர்ந்து மினி டைடல் பார்க் எனவும் பிரித்தது. விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், காரைக்குடி ஆகிய ஏழு இடங்களில் TIDEL Neo மினி IT பூங்காக்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவை சிறு மற்றும் நடுத்தர IT நிறுவனங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக இந்த neo டைடல் பார்க் திறக்கப்பட்ட 48 மணிநேரத்திற்குள் மொத்த அலுவலகமும் புக் செய்யப்பட்டது. இத்திட்டம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்களுக்கு அருகிலேயே உயர்தர வேலைவாய்ப்பை உருவாக்குகிறது.
இதை தொடர்ந்து நாமக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, நாகப்பட்டினம், கரூர், புதுக்கோட்டை ஆகிய ஒன்பது மாவட்டங்களில் மினி IT பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்துக்கு ரூ.388 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவை மாவட்ட அளவில் IT தொழிலை வளர்த்து, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் ஆரம்பக்கட்ட பணியாக இருக்கும். இதன் பயன்பாடு, வளர்ச்சி ஆகியவைற்றை அடிப்படையாக கொண்டு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். மாநிலம் முழுவதும் IT துறையை விரிவுபடுத்தும் இத்திட்டங்கள் மூலம் 25,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நிதியமைச்சர் இன்று இடைக்கால பட்ஜெட்டில் தெரிவித்தார்.
TIDEL Neo மற்றும் மினி IT பூங்காக்கள் சிறிய நகரங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு உயர்தர IT வேலைகளை அருகிலேயே கொண்டு வருகின்றன. பெருநகரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் குறைவதால் குடும்ப பிரிவு, பயணச் செலவு, வாடகை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் குறைகின்றன. மொத்தத்தில், TIDEL பூங்காக்கள் தமிழ்நாட்டின் 2ஆம், 3ஆம் நிலை நகரங்களை IT மையங்களாக மாற்றி, வேலைவாய்ப்பு, வருமானம், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை உயர்த்தி, சென்னை மட்டும் சார்ந்த வளர்ச்சியை சமநிலைப்படுத்துகின்றன. இது மாநிலத்தின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.























