<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>budget</title><atom:link href="https://tamil.abplive.com/budget/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 17 Sep 2026 07:09:48 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[குழந்தை பிறந்தால் ரூ.3,000 பரிசு! மாணவர்களுக்கு டேப்லெட்... பெண்களுக்கு ரூ.75 ஆயிரம்! புதுச்சேரி பட்ஜெட் அதிரடி]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-budget-chief-minister-rangasamy-welfare-announcements-students-free-tablets-children-gift-box-welfare-schemes-272353</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-budget-chief-minister-rangasamy-welfare-announcements-students-free-tablets-children-gift-box-welfare-schemes-272353#respond</comments><pubDate>Tue, 25 Aug 2026 10:01:06 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-budget-chief-minister-rangasamy-welfare-announcements-students-free-tablets-children-gift-box-welfare-schemes-272353</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: புதுச்சேரியில் 2026-27-ம் ஆண்டுக்கான ரூ.14,300 கோடி மதிப்பிலான வரியில்லா பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். புதிய வரி விதிப்புகள் எதுவும் இடம்பெறாத இந்த பட்ஜெட்டில், குழந்தைகள், மாணவர்கள், பெண்கள், மீனவர்கள், குடும்ப அட்டைதாரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்காக முக்கியமான மக்கள் நல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;பொதுமக்களின் அன்றாட தேவைகள், கல்வி, பெண்கள் நலன், சமூக பாதுகாப்பு, விவசாயம், பால் உற்பத்தி மற்றும் மீனவர் நலன் ஆகியவற்றை மையமாகக் கொண்டு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h2&gt;குழந்தைகள் பிறந்தவுடன் ரூ.3,000 பரிசு பெட்டகம்&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரியில் இனி புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு ரூ.3 ஆயிரம் மதிப்பிலான பரிசு பெட்டகம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;பிறந்த குழந்தைகளின் ஆரம்பகால தேவைகளுக்கு உதவும் வகையில் இந்த பரிசு பெட்டகம் வழங்கப்பட உள்ளது. குழந்தை பிறந்த குடும்பங்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் இந்த பரிசு, பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;ரேஷன் கடைகளில் அரிசியுடன் கூடுதல் பொருட்கள்&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் அரிசியுடன், மேலும் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களை தொகுப்பாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இதன்படி, கோதுமை மாவு, துவரம் பருப்பு, கேழ்வரகு மாவு, சர்க்கரை, நெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;இதன் மூலம் குடும்பங்களின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்தவும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் ஏற்படும் பொருளாதார சுமையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி&lt;/h2&gt;
&lt;p&gt;அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;உயர்கல்விக்காக தொலைதூர பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களின் போக்குவரத்து செலவை குறைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் கல்லூரி மாணவர்கள் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;16,250 மாணவர்களுக்கு இலவச டேப்லெட்டுகள்&lt;/h2&gt;
&lt;p&gt;கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் 16,250 மாணவர்களுக்கு இலவச டேப்லெட்டுகள் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;மாணவர்கள் இணையவழி கல்வி மற்றும் டிஜிட்டல் கற்றல் வளங்களை பயன்படுத்துவதற்கு இந்த டேப்லெட்டுகள் உதவியாக இருக்கும்.&lt;/p&gt;
&lt;h2&gt;150 மாணவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை&lt;/h2&gt;
&lt;p&gt;டிஜிட்டல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் 150 மாணவர்களுக்கு சிறப்பு டிஜிட்டல் பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சிக்காக தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு எதிர்கால வேலைவாய்ப்புகளுக்குத் தேவையான டிஜிட்டல் திறன்களை வளர்க்கும் வாய்ப்பு ஏற்படும்.&lt;/p&gt;
&lt;h2&gt;குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகை விரிவாக்கம்&lt;/h2&gt;
&lt;p&gt;வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை திட்டம், தகுதியுள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதன் மூலம் தற்போது திட்டத்தின் வரம்புக்குள் வராத தகுதியான குடும்ப தலைவிகளும் உதவித்தொகையை பெறும் வாய்ப்பு கிடைக்கும்.&lt;/p&gt;
&lt;h2&gt;ஏழை பெண்களின் திருமண உதவி ரூ.75 ஆயிரமாக உயர்வு&lt;/h2&gt;
&lt;p&gt;ஏழை பெண்களின் திருமண நிதியுதவி ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆதரவற்ற பெண்கள் மற்றும் விதவைகளின் மகள்களுக்கான திருமண நிதியுதவி ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஏழை மற்றும் சமூக ரீதியாக ஆதரவற்ற குடும்பங்களுக்கு திருமணச் செலவினங்களை சமாளிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரி அரசு கூட்டுறவு நிறுவனமான பாண்லே மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலின் விலை, பாலின் தரத்தின் அடிப்படையில் உயர்த்தப்படும். இதன்படி, ஊக்கத்தொகை உட்பட அதிகபட்சமாக லிட்டருக்கு ரூ.41 வரை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தரமான பால் உற்பத்தியை ஊக்குவிக்கவும், பால் உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மீனவர்களுக்கு முதியோர் உதவித்தொகை&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரியில் 1,000 மீனவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர் சமூகத்தில் வயது முதிர்ந்தவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;வரி விதிப்பு இல்லாத பட்ஜெட்&lt;/h2&gt;
&lt;p&gt;2026-27-ம் ஆண்டுக்கான புதுச்சேரி பட்ஜெட் ரூ.14,300 கோடி மதிப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் வகையில் புதிய வரி விதிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம், குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் உணவுப் பொருட்கள், மாணவர்களுக்கு இலவச பஸ் மற்றும் டேப்லெட்டுகள், பெண்களுக்கு உயர்த்தப்பட்ட திருமண உதவித்தொகை, மீனவர்களுக்கு முதியோர் உதவித்தொகை என பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை உள்ளடக்கியதாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/25/873184e3e794934bc25ac14a1b9a8b611787632210366194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்! அரிசியுடன் கோதுமை மாவு, பருப்பு, நெய்... பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு!]]></title><link>https://tamil.abplive.com/business/budget/budget-gift-for-the-people-of-puducherry-a-package-of-essential-food-items-along-with-rice-272349</link><comments>https://tamil.abplive.com/business/budget/budget-gift-for-the-people-of-puducherry-a-package-of-essential-food-items-along-with-rice-272349#respond</comments><pubDate>Tue, 25 Aug 2026 09:51:51 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ பட்ஜெட் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/business/budget/budget-gift-for-the-people-of-puducherry-a-package-of-essential-food-items-along-with-rice-272349</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் அரிசியின் அளவை மாற்றியமைத்து, அரிசியுடன் கோதுமை மாவு, துவரம் பருப்பு, கேழ்வரகு மாவு, சர்க்கரை, நெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.14,300 கோடிக்கான வரியில்லா பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்து உரையாற்றினார். இதில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்காக பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.&lt;/p&gt;
&lt;h2&gt;பால் உற்பத்தியாளர்களுக்கு சலுகைகள்&lt;/h2&gt;
&lt;p&gt;தரமான பால் உற்பத்தியை அதிகரிக்கவும், பால் கறப்பதில் நிலவும் ஆள்பற்றாக்குறையை குறைக்கவும் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் 150 பயனாளிகளுக்கு நவீன பால் கறக்கும் இயந்திரங்கள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;பால் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக இல்லாத கால்நடை விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் 3,450 கறவைப் பசுக்கள் வழங்கப்படும். மேலும், மாட்டுத் தீவனம் மற்றும் 4 ஆயிரம் கன்றுகளுக்கு கன்றுத் தீவனமும் வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;h2&gt;குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் தொகுப்பு&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரி மக்களின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசியுடன் அத்தியாவசிய உணவுப் பொருட்களை தொகுப்பாக வழங்க அரசு உத்தேசித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த தொகுப்பில் கோதுமை மாவு, துவரம் பருப்பு, கேழ்வரகு மாவு, சர்க்கரை, நெய் உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;பாண்லே நிறுவனத்தில் புதிய பால் பண்ணை&lt;/h2&gt;
&lt;p&gt;தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பாண்லே நிறுவனத்தில் முழுமையான தானியங்கி வசதியுடன் தினமும் 2 லட்சம் லிட்டர் பாலை சுத்திகரித்து பேக்கிங் செய்யும் திறன் கொண்ட புதிய பால் பண்ணை அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், புதுச்சேரி அரசு கூட்டுறவு நிறுவனமான பாண்லே மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலின் விலை, பாலின் தரத்தின் அடிப்படையில் உயர்த்தப்படும். அதிகபட்சமாக ஊக்கத்தொகை உட்பட லிட்டருக்கு ரூ.41 வரை வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;h2&gt;நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள்&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரி நியாய விலைக் கடைகள் மூலம் துவரம் பருப்பு, உளுந்து, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அடக்க விலையில் விற்பனை செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், புதுச்சேரியின் முக்கியமான 10 இடங்களில் சிறிய அளவிலான அடக்க விலைக் கடைகள் அமைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/25/d719e7a606a62ce88dcef4b64287e5991787631667646194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[1,000 அரசு பணியிடங்கள்... விரைவில் எழுத்துத் தேர்வு! புதுவை இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-government-jobs-puduvai-selection-commission-transparent-recruitment-272261</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-government-jobs-puduvai-selection-commission-transparent-recruitment-272261#respond</comments><pubDate>Mon, 24 Aug 2026 14:06:33 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-government-jobs-puduvai-selection-commission-transparent-recruitment-272261</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: புதுச்சேரியில் விரைவில் சுமார் 1,000 புதிய அரசு பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அறிவித்துள்ளார். அரசுப் பணியாளர் தேர்வுகளை விரைவாகவும் வெளிப்படையாகவும் நடத்துவதற்காக புதுவை தேர்வாணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒருங்கிணைந்த உயர்நிலை, மேல்நிலை மற்றும் பட்டதாரி நிலைத் தேர்வுகள் மூலம் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;புதுவை சட்டப்பேரவையின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. பேரவைத்தலைவர் தேர்தல் நடைபெறாத நிலையில், முதல்முறையாக தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் தலைமையில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. முதல் நாள் கூட்டத்தை தொடங்கி வைப்பதற்காக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்தார். அவரை தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;தொடர்ந்து துணைநிலை ஆளுநருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து சட்டப்பேரவை கூட்ட அரங்கிற்கு சென்ற துணைநிலை ஆளுநர், பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்தார். தமிழ்த்தாய் வாழ்த்து, வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் பாடப்பட்டதை தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தனது உரையை நிகழ்த்தினார்.&lt;/p&gt;
&lt;h2&gt;புதுச்சேரியின் பொருளாதார வளர்ச்சி&lt;/h2&gt;
&lt;p&gt;தனது உரையில் புதுச்சேரியின் பொருளாதார வளர்ச்சி குறித்து பேசிய துணைநிலை ஆளுநர், கடந்த சில ஆண்டுகளில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்தார். 2020-21-ம் ஆண்டில் 2.21 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டிபி வளர்ச்சி, 2025-26-ம் ஆண்டில் 8.12 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதேபோல், புதுச்சேரியின் தனிநபர் வருமானம் ரூ.3 லட்சத்து 23 ஆயிரத்து 745-ல் இருந்து ரூ.3 லட்சத்து 44 ஆயிரத்து 926 ஆக உயர்ந்துள்ளது. இது 6.5 சதவீத வளர்ச்சியாகும் என்றும் அவர் தெரிவித்தார். மாநிலத்தின் மொத்த வருவாய் ரூ.12,346.80 கோடியில் இருந்து ரூ.13,397.69 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.6,848.29 கோடியில் இருந்து ரூ.7,631.53 கோடியாக உயர்ந்து 11.44 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும் துணைநிலை ஆளுநர் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;h2&gt;4,160 அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டன&lt;/h2&gt;
&lt;p&gt;கடந்த 5 ஆண்டுகளில் தகுதி மற்றும் வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் சுமார் 4,160 அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்று துணைநிலை ஆளுநர் கூறினார். மேலும், புதுச்சேரியில் விரைவில் சுமார் 1,000 புதிய பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளதாகவும் அவர் அறிவித்தார். அரசுப் பணியாளர் தேர்வுகளை விரைவாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதற்காக புதுவை தேர்வாணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருங்கிணைந்த உயர்நிலை, மேல்நிலை மற்றும் பட்டதாரி நிலைத் தேர்வுகள் நடத்தப்பட்டு அரசு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு புதுச்சேரியில் அரசு வேலைக்காக தயாராகி வரும் இளைஞர்களுக்கு முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;ரூ.436 கோடியில் உயர்மட்ட சாலை திட்டம்&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை குறைத்து, சாலை கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் துணைநிலை ஆளுநர் தெரிவித்தார். அதன்படி, இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரை தேசிய நெடுஞ்சாலை 32-ல் ரூ.436.18 கோடி மதிப்பில் உயர்மட்ட சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், நடேசன் நகர் முதல் முள்ளோடை வரை உள்ள உயர்மட்ட சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான மொத்த திட்ட மதிப்பு ரூ.1,500 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. காரைக்காலில் நண்டலாறு முதல் வாஞ்சூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 45ஏ, ரூ.57 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பொதுமக்களின் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு, புதுச்சேரி அரசு சார்பில் 20 புதிய பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. இதில் குளிர்சாதன வசதி கொண்ட சொகுசு பேருந்துகளும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;ரூ.4,800 கோடியில் புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம்&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத் திட்டம் அரசின் முக்கிய எதிர்கால திட்டங்களில் ஒன்றாக இருக்கும் என துணைநிலை ஆளுநர் தெரிவித்தார். தற்போது 1,500 மீட்டராக உள்ள விமான நிலைய ஓடுபாதை 2,300 மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் பெரிய ரக விமானங்களை புதுச்சேரி விமான நிலையத்தில் இயக்குவதற்கான வாய்ப்பு உருவாகும். மேலும், புதிய பயணிகள் முனையம், நவீன பாதுகாப்பு வசதிகள் மற்றும் விமானங்கள் நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட உள்ளன. இந்த விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.4,800 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டம் நிறைவேற்றப்பட்டால் புதுச்சேரி முக்கியமான பிராந்திய விமானப் போக்குவரத்து மையமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;தகவல் தொழில்நுட்ப பொருளாதார மண்டலம்&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரியில் தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்தவும், அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. உழவர்கரை மற்றும் தட்டாஞ்சாவடி பகுதிகளில் ரூ.725 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பொருளாதார மண்டலம் அமைக்கப்பட உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பால் உருவாக்கப்படும் இந்தியாவின் முதல் சிறப்பு பொருளாதார மண்டலமாக இது அமையும் என்று துணைநிலை ஆளுநர் தெரிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;கரசூரில் ரூ.2,500 கோடியில் பன்முக சிறப்பு பொருளாதார மண்டலம்&lt;/h2&gt;
&lt;p&gt;கரசூரில் 213.12 ஏக்கர் பரப்பளவில் பன்முக சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான முதலீடு சுமார் ரூ.2,500 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 40 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் புதுச்சேரியில் தொழில் முதலீடுகளை அதிகரித்து, இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;காரைக்கால், மாஹே, ஏனாமில் அடிப்படை வசதிகள் மேம்பாடு&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பிற பிராந்தியங்களான காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளிலும் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தனியார் முதலீட்டுடன் இந்த பகுதிகளில் 24 மணி நேர குடிநீர் விநியோகம், பாதாளச் சாக்கடை, வடிகால் வசதிகள், சாலைகள், பாலங்கள் மற்றும் கடற்கரை நடைபாதைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளதாக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;ஒட்டுமொத்தமாக, அரசு பணியிடங்கள் நிரப்புதல், சாலை மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு மேம்பாடு, விமான நிலைய விரிவாக்கம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் வளர்ச்சி, புதிய வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் துணைநிலை ஆளுநரின் உரையில் இடம்பெற்றன. குறிப்பாக, 1,000 புதிய அரசு பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு, அரசு வேலைக்காக காத்திருக்கும் புதுச்சேரி இளைஞர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/24/da68af1f03779096dff5dde6cb132b2c1787560408510194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Puducherry Budget : ரூ.14,300 கோடி பட்ஜெட்... வரி இல்லை! புதுச்சேரி மக்களுக்கு இன்று வெளியாகும் அதிரடி அறிவிப்புகள்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-assembly-budget-rangasamy-14300-crore-tax-free-full-272224</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-assembly-budget-rangasamy-14300-crore-tax-free-full-272224#respond</comments><pubDate>Mon, 24 Aug 2026 10:29:11 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-assembly-budget-rangasamy-14300-crore-tax-free-full-272224</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி : புதுச்சேரி 16-வது சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஆகஸ்ட் 24) காலை கவர்னர் கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, மாலை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, ரூ.14,300 கோடிக்கான முழுமையான பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்கிறார். புதிய வரிகள் ஏதுமின்றி வரியில்லாத பட்ஜெட்டாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுவதால், புதுச்சேரி மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட்&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரி சட்டசபை தேர்தல் நடைபெறவிருந்த சூழலில், நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை உடனடியாக தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அரசின் அன்றாட நிர்வாகச் செலவுகள் மற்றும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதற்காக ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 5 மாதங்களுக்கு ரூ.5,396 கோடிக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த இடைக்கால பட்ஜெட்டின் காலம் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால், மீதமுள்ள நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய புதுச்சேரி அரசு நடவடிக்கை மேற்கொண்டது.&lt;/p&gt;
&lt;p&gt;இதற்காக ரூ.14,300 கோடி மதிப்பிலான பட்ஜெட் வரைவு தயாரிக்கப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. மத்திய அரசும் புதுச்சேரி அரசு சமர்ப்பித்த ரூ.14,300 கோடி பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 24-ம் தேதி முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அரசு அறிவித்தது.&lt;/p&gt;
&lt;h2&gt;கவர்னர் உரையுடன் தொடக்கம்&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரி சட்டசபையில் இன்று காலை 10 மணிக்கு கவர்னர் கைலாஷ்நாதன் உரையாற்றினார். இதன் மூலம் பட்ஜெட் கூட்டத்தொடர் முறைப்படி தொடங்கியது. கவர்னர் தனது உரையில் புதுச்சேரி அரசின் முக்கிய திட்டங்கள், நிர்வாக நடவடிக்கைகள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கவர்னர் உரையைத் தொடர்ந்து, அதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டசபை உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்க உள்ளனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;மாலை 3.45 மணிக்கு பட்ஜெட்&lt;/h2&gt;
&lt;p&gt;இதன் பின்னர் இன்று மாலை சுமார் 3.45 மணியளவில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி அரசின் ரூ.14,300 கோடி மதிப்பிலான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்படும் நிதி, செயல்படுத்தப்பட உள்ள புதிய திட்டங்கள், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம்பெறும்.&lt;/p&gt;
&lt;h2&gt;புதிய வரிகள் இல்லாத பட்ஜெட்?&lt;/h2&gt;
&lt;p&gt;முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு கூடுதல் வரிச்சுமை ஏற்படுத்தும் வகையில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் ரங்கசாமி தொடர்ந்து வரியில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், இந்த முறையும் அதே பாணி தொடரும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் மீது கூடுதல் வரிச்சுமை ஏற்படுமா என்ற கவலை பொதுமக்களிடம் இருக்காது என அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;முதியோர், பெண்கள், இளைஞர்களுக்கு முக்கியத்துவம்?&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த பட்ஜெட்டில் சமூக நலத்திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முதியோர் உதவித்தொகை, பெண்களுக்கான நலத்திட்டங்கள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;அதேபோல், புதுச்சேரியின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் சாலை, குடிநீர், நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;சபாநாயகர் விவகாரத்துக்கு நடுவே பட்ஜெட்&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரி சட்டசபையில் நிரந்தர சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளை நிரப்புவது தொடர்பாக ஆளும் கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் திட்டமிட்டபடி இன்று பட்ஜெட் தாக்கல் நடைபெறுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;மக்கள் எதிர்பார்ப்பு என்ன?&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்கு பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் முழுமையான பட்ஜெட் என்பதால், இது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. புதிய வரிகள் இல்லாத பட்ஜெட், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்களுக்கு கூடுதல் நிதி, பெண்கள் மற்றும் முதியோருக்கான புதிய அறிவிப்புகள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு வாய்ப்புகள், சாலை மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு என பல்வேறு அறிவிப்புகளை புதுச்சேரி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;மொத்தம் ரூ.14,300 கோடி மதிப்பிலான இந்த பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது, புதுச்சேரியின் வளர்ச்சிக்காக அரசு முன்வைக்கும் புதிய திட்டங்கள் என்ன, பொதுமக்களுக்கு கிடைக்கப்போகும் சலுகைகள் என்ன என்பது முதல்வர் ரங்கசாமியின் பட்ஜெட் உரையில் இன்று மாலை தெரியவரும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/24/94134844840f4e784848584f75ddaedb1787547396082194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-2026-27-budget-governor-address-chief-minister-rangasamy-270398</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-2026-27-budget-governor-address-chief-minister-rangasamy-270398#respond</comments><pubDate>Fri, 7 Aug 2026 14:59:26 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-2026-27-budget-governor-address-chief-minister-rangasamy-270398</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: புதுச்சேரியில் 2026-27-ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொட வருகின்ற 24-ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் ஆளுநர் உரையுடன் தொடங்குவதாக செயல்பாட்டு சபாநாயகர் அன்பழகன் தெரிவித்தார், அன்றைய தினம் பிற்பகல் 3 மணி அளவில் நடப்பாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்வார் என்று குறிப்பிட்டார்.&lt;/p&gt;
&lt;h2&gt;2026-27-ம் ஆண்டிற்கான பட்ஜெட்&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரி மாநிலத்தின் 2026-27-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாகச் செயல்பாட்டு சபாநாயகர் அன்பழகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;ஆகஸ்ட் 24-ல் பட்ஜெட் தாக்கல்:&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களைச் சந்தித்த செயல்பாட்டு சபாநாயகர் அன்பழகன் தெரிவிக்கையில், &quot;16-வது சட்டப்பேரவையின் முந்தையக் கூட்டம் கடந்த மே மாதம் 20-ஆம் தேதி நடைபெற்று ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர், நடப்பாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 24.08.2026 அன்று காலை 9.30 மணிக்கு மாண்புமிகு ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.&quot; மேலும், &quot;அன்றைய தினமே பிற்பகல் 3 மணி அளவில், நிதித்துறையைக் கூடுதல் பொறுப்பாக வகிக்கும் முதலமைச்சர் என்.ரங்கசாமி 2026-27-ஆம் ஆண்டிற்கான மாநில நிதிநிலை அறிக்கையைத் (பட்ஜெட்) தாக்கல் செய்வார். சட்டப்பேரவைக் கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி இறுதி முடிவு செய்யும்&quot; என்றும் அவர் குறிப்பிட்டார்.&lt;/p&gt;
&lt;h2&gt;சபாநாயகர் பதவி கோரிக்கை &amp;amp; அரசியல் நகர்வுகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;செய்தியாளர்கள் சந்திப்பில் அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர்:&lt;/p&gt;
&lt;p&gt;தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அண்ணா திமுக சார்பாக சபாநாயகர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இக்கோரிக்கை நிறைவேறும் என்ற முழு நம்பிக்கை உள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இருப்பினும், ஒருவேளை சபாநாயகர் தேர்தல் தனியாக நடத்தப்படும் பட்சத்தில், அதில் அதிமுக போட்டியிடாது.&lt;/p&gt;
&lt;p&gt;டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்ததைப் போல, நாளை புதுச்சேரிக்கு வரவிருக்கும் அவரை மரியாதை நிமித்தமாக மீண்டும் நேரில் சந்திக்கவுள்ளேன்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/04/7931238399d63241d8b766900febd30c1785850839127194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[TN Budget 2026: பள்ளிக்கல்வி முதல் பால்வளம் வரை.. 22 துறைகளில் எந்த துறைக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு?]]></title><link>https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026-27-department-sector-wise-fund-allocation-know-details-270307</link><comments>https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026-27-department-sector-wise-fund-allocation-know-details-270307#respond</comments><pubDate>Thu, 6 Aug 2026 16:48:01 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சுகுமாறன் ]]></dc:creator><category><![CDATA[ பட்ஜெட் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026-27-department-sector-wise-fund-allocation-know-details-270307</guid><description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டின் நிதி நிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. தவெக ஆட்சி அமைந்த பிறகு அமைந்த முதல் பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;எந்தெந்த துறைக்கு எவ்வளவு?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த தவெக நிதிநிலை அறிக்கையில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது? என்பதை கீழே காணலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;1. பள்ளிக்கல்வி - ரூபாய் 44 ஆயிரத்து 527 கோடி&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;2. ஊரக வளர்ச்சி - ரூபாய் 39 ஆயிரத்து 609 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;3. நகராட்சி நிர்வாகம் - ரூபாய் 29 ஆயிரத்து 863 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;4. மக்கள் நல்வாழ்வு - ரூபாய் 23 ஆயிரத்து 357 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;5. நெடுஞ்சாலை - ரூபாய் 21 ஆயிரத்து 524 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;6. உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை - 17 ஆயிரத்து 290 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;7. சிறப்பு திட்ட செயலாக்கம் - ரூபாய் 17 ஆயிரத்து 150 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;8. எரிசக்தி - ரூபாய் 15 ஆயிரத்து 828 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;9. வேளாண்மை - ரூபாய் 14 ஆயிரத்து 984 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;10. உணவு - ரூபாய் 14 ஆயிரத்து 830 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;11. போக்குவரத்து - ரூபாய் 13 ஆயிரத்து 561 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;12. வருவாய் - ரூபாய் 11 ஆயிரத்து 532 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;13. சமூகநலம் - ரூபாய் 9 ஆயிரத்து 818 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;14. வீட்டுவசதி - ரூபாய் 8 ஆயிரத்து 852 &amp;nbsp;கோடி&lt;/p&gt;
&lt;p&gt;15. உயர்கல்வி - ரூபாய் 8 ஆயிரத்து 393 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;16. கூட்டுறவு - ரூபாய் 8 ஆயிரத்து 28 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;17. கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளம் - ரூபாய் 4 ஆயிரத்து 880 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;18. தொழில் - ரூபாய் 4 ஆயிரத்து 414 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;19. சமூக நீதி - ரூபாய் 3 ஆயிரத்து 937 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;20. நீதித்துறை - ரூபாய் 2 ஆயிரத்து 486 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;21. சிறு, குறு தொழில்கள் - ரூபாய் 2 ஆயிரத்து 142 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;22. தொழிலாளர் நலன் - ரூபாய் 2 ஆயிரத்து 22 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;23. சுற்றுச்சூழல் மற்றும் வனம் - ரூபாய் ஆயிரத்து 762 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;24. பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலம் - ரூபாய் 1,700 கோடி&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;25. கைத்தறி - ரூபாய் 1,678 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;26. மாற்றுத்திறனாளிகள் நலம் - ரூபாய் 1,485 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;27. விளையாட்டு - ரூபாய் 1,051 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;28. வணிக வரி - ரூபாய் 651 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;29. பத்திரப்பதிவு - ரூபாய் 475 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;30. இயற்கை வளங்கள் - ரூபாய் 438 காேடி&lt;/p&gt;
&lt;p&gt;31. .தகவல் தொழில்நுட்பம் - ரூபாய் 398 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;32. சுற்றுலா - ரூபாய் 775 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;33. இந்து சமய அறநிலையத்துறை - ரூபாய் 708 கோடி&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பள்ளிக்கல்விக்கு முக்கியத்துவம்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் பள்ளிக்கல்விக்கு தவெக அரசு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளது. இதற்காக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூபாய் 44 ஆயிரத்து 527 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் நோக்கத்தில் ஊரக வளர்ச்சி, நகராட்சி துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில்துறைக்கு ரூபாய் 4 ஆயிரத்து 414 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டின் கடன் சுமையை கருத்தில் கொண்டு &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; அரசு இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக அந்த கட்சியினர் தெரிவித்துள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/politics/tn-cm-vijay-allots-rs-812-crore-for-gold-coin-silk-saree-annan-seer-scheme-details-scheme-270276&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/06/99cd57ada9e009ebe25ed347ec987f351786014954111102_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்]]></title><link>https://tamil.abplive.com/news/politics/pattali-makkal-katchi-anbumani-ramadoss-tamil-nadu-agricultural-budget-t-v-k-government-farmers-disappointment-270296</link><comments>https://tamil.abplive.com/news/politics/pattali-makkal-katchi-anbumani-ramadoss-tamil-nadu-agricultural-budget-t-v-k-government-farmers-disappointment-270296#respond</comments><pubDate>Thu, 6 Aug 2026 15:54:22 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/pattali-makkal-katchi-anbumani-ramadoss-tamil-nadu-agricultural-budget-t-v-k-government-farmers-disappointment-270296</guid><description><![CDATA[&lt;p&gt;சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில் ஆறாம் முறையாகவும், த.வெ.க. அரசின் சார்பில் முதல் முறையாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் நிதிநிலை அறிக்கை உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாடு அரசின் சார்பின் ஆறாம் முறையாகவும், த.வெ.க. அரசின் சார்பில் முதல் முறையாகவும் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளைப் பார்க்கும் போது எந்த நோக்கத்திற்காக வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று பாமக 13 ஆண்டுகள் போராடி வெற்றி பெற்றதோ, அந்த நோக்கத்தில் ஒரு &amp;nbsp;விழுக்காடு கூட நிறைவேறவில்லை. இந்த நிதிநிலை அறிக்கை உழவர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பும், வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடும் கணிசமாக குறைக்கப்பட்டிருக்கிறது. வேளாண்துறைக்கு மட்டும் திமுக அரசில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.15,167.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அதை விட ரூ.470.92 கோடி குறைவாக ரூ.14,696.70 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் 20 துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.58,374 கோடி என்றும், இது இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மதிப்பான ரூ.47,248 கோடியை விட ரூ.11,126 கோடி அதிகம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;உண்மையில் வேளாண் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பு குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள 20 துறைகளில் ஊரக வளர்ச்சித்துறைக்கான நிதி ஒதுக்கீடு மட்டும் இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மதிப்பான ரூ.6,329.29 கோடியிலிருந்து ரூ.11,774 கோடி உயர்த்தி மொத்தம் ரூ.18,103.02 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை நடைமுறையிலிருந்த 100 நாள் வேலைத் திட்டத்திற்கு பதிலாக 125 நாள் வேலைத் திட்டம் அறிமுகம் செய்யபட்டிருப்பதாகவும், இந்தத் திட்டத்திற்கான மத்திய அரசின் பங்கு குறைக்கப்பட்டு, மாநில அரசின் பங்கு உயர்த்தப்பட்டிருப்பதால் தான் இந்தக் கூடுதல் &amp;nbsp;நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் கள அளவில் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடப்போவதில்லை. இந்த கூடுதல் &amp;nbsp;ஒதுக்கீட்டை கழித்துப் பார்த்தால் வேளாண் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பு ரூ.46,600 கோடி மட்டும் தான். இது இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பான ரூ.47,248 கோடியை விட ரூ.648 கோடி குறைவு ஆகும்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பில் 25% வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அதன்படி நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பான ரூ.4.62 லட்சம் கோடியில் வேளாண் நிதிநிலை அறிக்கைக்காக ரூ.1.16 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதில் பாதியளவு மட்டும் தான் வேளாண்மைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் வேளாண்மைத் துறைக்கு மட்டும் வெறும் ரூ.14,696.70 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதை ஏற்கவே முடியாது.&lt;/p&gt;
&lt;p&gt;த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3500, கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.4500 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது குறித்து எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. நெல் கொள்முதலை கையாளும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு திமுக ஆட்சியின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில், ரூ.14,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் ரூ.18 கோடி மட்டும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு பார்க்கும் போது நடப்பாண்டில் நெல்லுக்காக தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகை உயர்த்தப்படாது என்றே தோன்றுகிறது. இது மிகப்பெரிய ஏமாற்றம்.&lt;/p&gt;
&lt;p&gt;கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளுடன் உழவர்கள் காத்துக் கிடப்பதைத் தடுக்கவும், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாவதைத் தடுக்கவும் கிடங்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதற்கான திட்டங்களை அறிவிக்காத அரசு, 43,500 விவசாயிகளுக்கு &amp;nbsp;ரூ.10 கோடியில் &amp;nbsp;தார்ப்பாய்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. ரூ.2298 மதிப்புள்ள தார்ப்பாய்களைக் கொண்டு பல டன் எடையுள்ள நெல்லை எவ்வாறு நனையாமல் பாதுகாக்க முடியும்? என்பது தெரியவில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;பயறு வகைகளின் சாகுபடியை &amp;nbsp;15.19 லட்சம் ஏக்கரில் இருந்து 24.70 லட்சம் ஏக்கராகவும், எண்ணெய் வித்துகளின் சாகுபடி பரப்பை 9.26 லட்சம் ஏக்கரில் இருந்து 14.89 லட்சம் ஏக்கராகவும் உயர்த்த சிறப்புத் திட்டம் &amp;nbsp;செயல்படுத்தப் படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்காக உழவர்களுக்கு ஊக்கத்தொகை எதுவும் அறிவிக்கப் படவில்லை. பிற பயிர்களுடன் ஒப்பிடும் போது பயறு மற்றும் எண்ணெய் வித்துகள் சாகுபடியில் இலாபம் குறைவாகவே கிடைக்கும் நிலையில், அதை ஈடு செய்யும் அளவுக்கு உழவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்காத நிலையில், இந்த முயற்சி வெற்றி பெறாது. இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள பல அறிவிப்புகள் &amp;nbsp;திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் &amp;amp; அறிவிப்புகளின் நீட்சியாகவே உள்ளன. புதிதாக எதுவும் இல்லை.&lt;/p&gt;
&lt;p&gt;நெல் உள்ளிட்ட 10 வகையான பயிர்களில் அதிக விளைச்சல் ஈட்டும் 3 உழவர்கள் வீதம் மொத்தம் 30 பேருக்கு வழங்கப்படும் விருதுகளுக்கு கடலூர் அஞ்சலையம்மாள் பெயர் சூட்டப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் போதாவது பயனுள்ள அறிவிப்புகளை அரசு வெளியிட வேண்டும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/21/e8c03882b1225b43ef2f717348f08a181782024005427194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்]]></title><link>https://tamil.abplive.com/business/budget/cm-vijay-tweet-over-tamilnadu-general-budget-and-agriculture-budget-claimed-it-as-futuristic-budget-tn-politics-270284</link><comments>https://tamil.abplive.com/business/budget/cm-vijay-tweet-over-tamilnadu-general-budget-and-agriculture-budget-claimed-it-as-futuristic-budget-tn-politics-270284#respond</comments><pubDate>Thu, 6 Aug 2026 13:15:41 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ பட்ஜெட் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/business/budget/cm-vijay-tweet-over-tamilnadu-general-budget-and-agriculture-budget-claimed-it-as-futuristic-budget-tn-politics-270284</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;CM Vijay On TN Budget:&lt;/strong&gt; &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த, நிதியமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் அமைச்சர் வினோத்திற்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;முதமைச்சர் விஜய் வாழ்த்து&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை திமுக தாக்கல் செய்து இருந்தது. தொடர்ந்து தேர்தலுக்குப் பிறகு இரண்டு திராவிட கட்சிகளையும் வீழ்த்தி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, தனது முதல் பட்ஜெட்டை சட்டமன்றத்தில் வெற்றிகரமாக தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில்,தமிழ்நாட்டின் வளர்ச்சியை இலக்காகவும், மக்கள் நலனை மையமாகவும் கொண்டு, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் அனைவரும் பாராட்டும் வகையில் 2026 - 27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள&amp;nbsp; நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/politics/tn-cm-vijay-allots-rs-812-crore-for-gold-coin-silk-saree-annan-seer-scheme-details-scheme-270276&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தொலைநோக்கு திட்டங்களை கொண்ட பட்ஜெட்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய திருத்திய நிதிநிலை அறிக்கையானது மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழில்முனைவோர், அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கும் புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/_bg0tQa7hrM?si=yISYjgnLPxXtHWKp&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;வேளாண்மை நிதிநிலை அறிக்கையானது, தமிழ்நாட்டின் வேளாண் வளர்ச்சியோடு, அதன் தொழில்சார்ந்த கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு, பால்வளம், உணவுப் பொருட்களைப் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் போன்ற தொழில்களையும் மேம்படுத்துவதோடு, அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனையும் வாழ்வாதாரத்தையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்&amp;rdquo; என முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/06/c5c501a900f56f0906d344409835b07c1786002223478732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!]]></title><link>https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026-new-government-anbumani-ramadoss-tamil-nadu-budget-welcome-disappointment-irrigation-projects-270206</link><comments>https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026-new-government-anbumani-ramadoss-tamil-nadu-budget-welcome-disappointment-irrigation-projects-270206#respond</comments><pubDate>Wed, 5 Aug 2026 17:06:04 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ பட்ஜெட் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026-new-government-anbumani-ramadoss-tamil-nadu-budget-welcome-disappointment-irrigation-projects-270206</guid><description><![CDATA[&lt;p&gt;சென்னை: தமிழ்நாட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய நிதிநிலை அறிக்கை குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசின் சில அறிவிப்புகளுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள அதே வேளையில், முக்கியமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது குறித்து ஏமாற்றத்தையும் பதிவிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க. அரசு தாக்கல் செய்திருக்கும் அதன் முதல் நிதிநிலை அறிக்கையில் சேவை உரிமைச் சட்டம், நீர்ப்பாசனத் திட்டங்கள், செயற்கை நுண்ணறிவுத் திறன் நகரம், முதியோர் பொழுதுபோக்கு மையங்கள் ஆகியவற்றுக்கான அறிவிப்புகள் வெளியாகியிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தியாவில் 21 மாநிலங்களில் சேவை உரிமைச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் இத்தகைய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று 13 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. இப்போது அந்த சட்டம் இயற்றப்படும் என அரசு அறிவித்திருப்பதன் மூலம் &amp;nbsp;எங்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு 1 பவுன் தங்கம், பட்டுப்புடவை வழங்கும் திட்டம், முதியோர் நலனைக் கருத்தில் கொண்டு முதல் கட்டமாக 5 மாவட்டங்களில் &amp;nbsp;நூலகம், தியான மையம், உள்ளரங்க விளையாட்டுகள் உள்ளிட்ட வசதிகளுடன் மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள் அமைக்கப்படும், அறிவகம் என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவுத்திறன் நகரம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்களாகும்.&lt;/p&gt;
&lt;p&gt;வேளாண்துறை வளர்ச்சிக்காக நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று நீண்டகாலமாக பாமக வலியுறுத்தி வருகிறது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பாசனத் திட்டங்களை செயல்படுத்தும்படி வலியுறுத்தினேன். அதற்கு ஓரளவு பயன் கிடைத்திருக்கிறது. காவிரி &amp;amp; குண்டாறு இணைப்புத் திட்டம் விரைவுபடுத்தப்படும், தென்பெண்ணையாறு &amp;amp; பாலாறு இணைப்புத் திட்டம், &amp;nbsp;தென்பெண்ணையாறு &amp;amp; செய்யாறு இணைப்புத் திட்டம் ஆகியவற்றுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு, காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணைகள் கட்டுவது குறித்து திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.10 கோடி, காவிரி பாசன மாவட்டங்களில் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு குறித்து திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.10 கோடி, காவிரி &amp;amp; கோதாவரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த &amp;nbsp;மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;அதே நேரத்தில் தருமபுரி &amp;amp; காவிரி உபரி நீர் திட்டம், அரியலூர் &amp;amp; சோழர் பாசனத் திட்டம், காவிரி &amp;amp; சரபங்கா &amp;amp; திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டம் ஆகியவை குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது பெரும் &amp;nbsp;ஏமாற்றம் அளிக்கிறது. காவிரி &amp;amp; குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த குறைந்தது 15,000 கோடி தேவைப்படும் நிலையில், அதற்கு வெறும் ரூ.150 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பது எந்த வகையிலும் போதாது. பாசனத் திட்டங்களை செயல்படுத்த ஆண்டுக்கு குறைந்தது ரூ.25,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; தேர்தல் அறிக்கையில், மகளிருக்கு மாதம் ரூ.2500, மாநிலம் முழுவதும் பேருந்துகளில் இலவச பயணம், மாதம் ஒருமுறை மின்சாரம் கணக்கெடுப்பு உள்ளிட்ட சுமார் 400 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு இருந்தன. ஆனால், அவற்றில் 40 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகள் கூட இந்த நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்படவில்லை. தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் உள்ள அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி பார்த்தால் குறைந்தது 6 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். ஆனால், அது குறித்த எந்த அறிவிப்பும் &amp;nbsp;நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;உழவர்கள் வாங்கிய பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்பது தான் அனைத்துத் &amp;nbsp;தரப்பினரின் கோரிக்கை ஆகும். ஆனால், அதற்கான அறிவிப்புகளும் இல்லை. பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு ரூ.44,527 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. திமுக அரசு தாக்கல் செய்த &amp;nbsp;நடப்பாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இது ரூ.48,534 கோடியாகவும், கடந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ரூ.46,767 கோடியாகவும் இருந்தது. இடைக்கால நிதிநிலை அறிக்கையை விட ரூ.4007 கோடி நிதி &amp;nbsp;குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை நிதி ஒதுக்கீடு குறைப்பாக மட்டும் பார்க்க முடியாது. மாறாக பள்ளிக் கல்வித்துறை வேகமாக சீரழிந்து வருவதையே இந்த நிதிக்குறைப்பு காட்டுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் 85% முதல் 90% நிதி ஊதியத்திற்காக மட்டும் தான் &amp;nbsp;செலவு செய்யப்படுகிறது. இத்தகைய சூழலில் அத்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது ஆசிரியர்கள் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருக்கக் கூடும் என்பதையே காட்டுகிறது. ஏற்கனவே அரசு பள்ளிகளில் ஒரு லட்சம் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலையில், இது நிலைமையை மேலும் மோசமாக்கும். அரசு பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர்கள் தயங்கும் நிலையை உருவாக்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;அதேபோல், தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்தப்படும் என்று ஆளுனர் உரையில் அறிவித்த தமிழ்நாடு அரசு, அதற்கான நிதியை இந்த அறிக்கையில் ஒதுக்கீடு செய்யவில்லை. கோவை &amp;amp; அரியலூர் இடையே &amp;nbsp;ரூ.4000 கோடி மதிப்பிலான மின்வழித்தடம் அமைக்கும் திட்டம் தனியார் கூட்டு முயற்சியில் செயல்படுத்தப் படும் என்று கடந்த 2024&amp;amp;ஆம் ஆண்டில் திமுக அரசில் அறிவிக்கப்பட்டது. மின்துறையை தனியார்மயமாக்கும் இந்த திட்டத்திற்கு பாமக எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அத்திட்டம் தனியார் முதலீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது.&lt;/p&gt;
&lt;p&gt;இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.10.71 லட்சம் கோடியாக இருந்த அரசின் கடன், திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் 10.98 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. வருவாய்ப் பற்றாக்குறை ரூ.48,696 கோடியிலிருந்து 55,775 கோடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மூலதன செலவுளுக்கான ஒதுக்கீடு சுமார் ரூ.3000 கோடி குறைக்கப்பட்டுள்ளது. பலவீனமான நிதி மேலாண்மையையே இது வெளிப்படுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;அரசு வேலைவாய்ப்புகள், நீர்ப்பாசனத் திட்டங்கள், வேளாண்துறைக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பது உள்ளிட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அறிவிப்புகளை பதிலுரையிலாவது அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/28/bde756bf5c909f49132ef383b1e708821785229026313194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[TN Budget 2026: ரீல், ரீல்ஸ் விடும் அரசு.. பட்ஜெட்ல ஒன்னும் இல்ல.. இபிஎஸ், பிரேமலதா கடும் விமர்சனம்!]]></title><link>https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026-political-leaders-reaction-edappadi-palanisamy-premalatha-270174</link><comments>https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026-political-leaders-reaction-edappadi-palanisamy-premalatha-270174#respond</comments><pubDate>Wed, 5 Aug 2026 13:42:52 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ பட்ஜெட் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026-political-leaders-reaction-edappadi-palanisamy-premalatha-270174</guid><description><![CDATA[&lt;p&gt;ரீல்ஸ், ரீல் விடுவது தான் இந்த ஆட்சியின் சாதனையாக உள்ளது. பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம் பெறவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ரீல்ஸ், ரீல் விடுவது தான் தவெக அரசு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்தில், &amp;ldquo;இந்த பட்ஜெட்டில் எந்தவொரு முக்கிய அறிவிப்பும் இடம் பெறவில்லை. ஒரு சில மாற்றம் இருக்கும் என சொல்லி ஏற்கனவே உள்ள திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார்கள். ஆட்சிப் பொறுப்பேற்றும் 85 நாட்கள் ஆன நிலையில் எந்தவொரு திட்டமும் கொண்டு வரவில்லை. வசனத்தைப் பேசியே ஓட்டி விட்டார்கள். எல்லாவற்றிற்கும் ரீல்ஸ், ரீல் விடுவது தான் இந்த ஆட்சியின் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. ஆட்சிக்கு வரும் முன் மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என வீர வசனம் பேசினார்கள். இந்த பட்ஜெட்டை பார்க்கும்போது எந்தவொரு திட்டமும் முழுமையாக இடம்பெறவில்லை. தேர்தல் வாக்குறுதிகள் சொன்னது நிறைவேற்றப்படவில்லை. மகளிர் உரிமைத்தொகை ரூ.2500, ஆண்டுக்கு 6 சிலிண்டர், முதியோர் உதவித்தொகை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை என பல அறிவிப்புகளை வெளியிட்டார்கள்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;TN Budget 2026 | &amp;rdquo;முதல்வர் விஜயை பார்த்தாலே ஊழல்வாதிகளுக்கு பயம் வந்துருச்சு&amp;rdquo;கர்ஜித்த  மரிய வில்சன்&quot; src=&quot;https://www.youtube.com/embed/tPcfQdAyA3o&quot; width=&quot;1022&quot; height=&quot;575&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இப்படி சொன்னது எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. வருவாய் பற்றாக்குறை ரூ.55,785 கோடி என சொல்லியிருக்கிறார்கள். நிதி பற்றாக்குறை 1,21,819 கோடி என தெரிவித்திருக்கும் நிலையில் இதையெல்லாம் &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; அரசு எப்படி சரிசெய்யப் போகிறது?.. ஏற்கனவே இருந்த திமுக அரசு நிதி ஆதாரத்தை பெருக்க நிபுணர் குழு அமைத்தனர். ஆனால் 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி கடன் தான் பெற்றார்கள்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;நிதி பற்றாக்குறை, ஒட்டுமொத்த கடன் பற்றாக்குறை என இருக்கும்போது எப்படி சரி செய்ய முடியும்?.. இதற்காக விளக்கமே சொல்லப்படவில்லை. இந்த அரசு எப்போதும்போல திமுக அரசைப் போல பட்ஜெட் என சொல்லி சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள். கால அவகாசம் கொடுத்தால் மட்டும் என்னவாக போகிறது. கடன் வாங்கி தான் அரசை நடத்த வேண்டிய சூழல் தான் இன்று நிலவுகிறது&amp;rdquo; என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பிரேமலதா கடும் விமர்சனம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா பேசுகையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், &amp;ldquo;இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் கடன் முழுமையாக தள்ளுபடி இடம்பெறாதது வருத்தத்திற்குரியது. நீர்மிகை மாநிலமாக தமிழ்நாடு உருவாக வேண்டும் என்ற கோரிக்கை இடம்பெறவில்லை. கடன் தொகையை குறைக்க என்ன வழி என்பது பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என தெரிவித்தார். அதேசமயம் கூவம் உள்ளிட்ட நதிகள் சீரமைப்பு, சாலைகள் வசதி, சூரிய சக்தி மின்சாரம், போக்குவரத்து துறையில் மின் பேருந்துகள் &amp;nbsp;போன்ற திட்டம் பற்றிய அறிவிப்பை வரவேற்கிறேன். &amp;nbsp;இது செயலாக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/essential-tips-for-oily-skin-health-tips-269923&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/05/c9ba037ce43adf19f490506bdb0691ea17859174921421322_original.jpg" width="220"/></item></channel></rss>