<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>budget</title><atom:link href="https://tamil.abplive.com/budget/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Sat, 2 May 2026 05:10:18 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[மதுரையில் ரூ.229 கோடி மதிப்பில் புதிய சிறைச்சாலைகள்.. கைதிகளின் நலனுக்காகவும் அரசு அதிரடி திட்டம்!]]></title><link>https://tamil.abplive.com/business/budget/madurai-new-prisons-in-government-action-plan-for-the-welfare-of-prisoners-tnn-250687</link><comments>https://tamil.abplive.com/business/budget/madurai-new-prisons-in-government-action-plan-for-the-welfare-of-prisoners-tnn-250687#respond</comments><pubDate>Wed, 18 Feb 2026 23:08:59 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ பட்ஜெட் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/business/budget/madurai-new-prisons-in-government-action-plan-for-the-welfare-of-prisoners-tnn-250687</guid><description><![CDATA[&lt;p&gt;மாநிலம் முழுவதும் சிறைச்சாலை உட்கட்டமைப்பை மேம்படுத்த தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;பட்ஜெட்டில் சிறைக்கும் முக்கியதுவம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று தமிழ்நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த இரண்டு பட்ஜெட் தாக்கலின்போதும், கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு பல்வேறு துறைகளில் செய்துள்ள சாதனைகள் குறித்து பட்டியலிடப்பட்டது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக அரசின் சாதனைகள் அடங்கிய பட்டியலுடன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;சிறைச்சாலை குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;புதிய சிறைச்சாலை அமைப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். கோவையில் உள்ள தற்போதைய மத்திய சிறைச்சாலையும் பெண்கள் சிறப்பு சிறைச்சாலையும் மாற்றி அமைக்கும் ரூபாய்.327 கோடி மதிப்பிலான திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது எனவும். தஞ்சாவூர், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் புதிய மாவட்ட சிறைச்சாலை வளாகங்களை அமைக்கும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும். தற்போதைய தேவைகள் மற்றும் கைதிகளின் நலனை கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் சிறைச்சாலை உட்கட்டமைப்பை மேம்படுத்த தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது&amp;rdquo; எனவும் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;நெரிசல் அதிகரித்து வருவதால் புதிய சிறைகள் கட்டுவது அவசியமாகியுள்ளது&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இந்த முன்னேற்றம் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், &amp;ldquo;ஒருகாலத்தில் நகர மையத்தில் இருந்த சென்னை மத்திய சிறைச்சாலை பின்னர் நகர புறப்பகுதிக்குச் மாற்றப்பட்டு புழல் சிறையாக உருவாக்கப்பட்டது. மத்திய சிறைகளில் அதிக நெரிசல் அதிகரித்து வருவதால் புதிய சிறைகள் கட்டுவது அவசியமாகியுள்ளது. இதே காரணம் மதுரை சிறைத் திட்டத்திற்கும் பொருந்துகிறது. எனினும், மதுரை சிறையைச் சுற்றியுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து கண்காணிப்பு அதிகாரிகள் உரிய விசாரணை நடத்துவதும் முக்கியம்&amp;rdquo; என்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;முந்தைய நிதியாண்டின் ரூ.15,011 கோடியிலிருந்து அதிகரித்துள்ளது&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;சிறைகள் மற்றும் திருத்த சேவைகள் துறை உள்துறை, மதுவிலக்கு மற்றும் வருவாய் துறையின் கீழ் செயல்படுகிறது. 2025-26 நிதியாண்டு பட்ஜெட்டில் இத்துறைக்கு ரூ.15,111 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் ரூ.15,011 கோடியிலிருந்து அதிகரித்துள்ளது. என்பதும் குறிப்பிடதக்கது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/02/18/f522cdeea926de637798113322d5f9401771436133871184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[தமிழகத்தின் IT புரட்சி: 25,500 வேலைவாய்ப்புகள்! புதிய TIDEL பூங்காக்கள் மூலம் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!]]></title><link>https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-s-it-revolution-25-500-jobs-a-golden-opportunity-for-the-youth-through-the-new-tidel-parks-250536</link><comments>https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-s-it-revolution-25-500-jobs-a-golden-opportunity-for-the-youth-through-the-new-tidel-parks-250536#respond</comments><pubDate>Tue, 17 Feb 2026 15:40:22 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ பட்ஜெட் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-s-it-revolution-25-500-jobs-a-golden-opportunity-for-the-youth-through-the-new-tidel-parks-250536</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாடு அரசு தனது இடைக்கால பட்ஜெட் 2026-இல் தகவல் தொழில்நுட்பத் துறையை மேலும் விரிவுபடுத்தும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் IT துறையை வளர்ச்சி அடைய செய்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் பல்வேறு TIDEL பூங்காக்கள் மற்றும் மினி IT பூங்காக்கள் அமைத்து வருவதை சுட்டிக்காட்டின. திருச்சி, மதுரை, ஓசூர் ஆகிய மூன்று இடங்களில் புதிய TIDEL பூங்காக்கள் பெரிய அளவில் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்துக்கு மொத்தம் ரூ.1,070 கோடி செலவிடப்பட உள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த பூங்காக்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு IT நிறுவனங்களை ஈர்த்து, உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும். குறிப்பாக திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் IT தொழில் வளர்ச்சி வேகமெடுக்கும். இந்தியாவில் ஐடி துறை வளர்ச்சி அடையும் வேளையில் தமிழ்நாட்டிற்கும் ஐடி துறை நிறுவனங்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக சென்னையில் முதல் முதலாக 1998ஆம் ஆண்டு டைடல் பார்க் கட்டுமானம் துவங்கியது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/02/17/368b5dcbee960565df061f1947e0e4481771322981814193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னையில் மட்டுமே இருந்த டைடல் பார்க் மாநிலத்தின் மற்ற மாவட்டங்களுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தது தமிழக அரசு. இதற்காக நியோ டைடல் பார்க் திட்டத்தை அறிமுகம் செய்து, அதை தொடர்ந்து மினி டைடல் பார்க் எனவும் பிரித்தது. விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், காரைக்குடி ஆகிய ஏழு இடங்களில் TIDEL Neo மினி IT பூங்காக்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவை சிறு மற்றும் நடுத்தர IT நிறுவனங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக இந்த neo டைடல் பார்க் திறக்கப்பட்ட 48 மணிநேரத்திற்குள் மொத்த அலுவலகமும் புக் செய்யப்பட்டது. இத்திட்டம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்களுக்கு அருகிலேயே உயர்தர வேலைவாய்ப்பை உருவாக்குகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதை தொடர்ந்து நாமக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, நாகப்பட்டினம், கரூர், புதுக்கோட்டை ஆகிய ஒன்பது மாவட்டங்களில் மினி IT பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்துக்கு ரூ.388 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவை மாவட்ட அளவில் IT தொழிலை வளர்த்து, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் ஆரம்பக்கட்ட பணியாக இருக்கும். இதன் பயன்பாடு, வளர்ச்சி ஆகியவைற்றை அடிப்படையாக கொண்டு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். மாநிலம் முழுவதும் IT துறையை விரிவுபடுத்தும் இத்திட்டங்கள் மூலம் 25,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நிதியமைச்சர் இன்று இடைக்கால பட்ஜெட்டில் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/02/17/65551c202d3b66dd19e525bb0e416aeb1771322997304193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;TIDEL Neo மற்றும் மினி IT பூங்காக்கள் சிறிய நகரங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு உயர்தர IT வேலைகளை அருகிலேயே கொண்டு வருகின்றன. பெருநகரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் குறைவதால் குடும்ப பிரிவு, பயணச் செலவு, வாடகை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் குறைகின்றன. மொத்தத்தில், TIDEL பூங்காக்கள் தமிழ்நாட்டின் 2ஆம், 3ஆம் நிலை நகரங்களை IT மையங்களாக மாற்றி, வேலைவாய்ப்பு, வருமானம், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை உயர்த்தி, சென்னை மட்டும் சார்ந்த வளர்ச்சியை சமநிலைப்படுத்துகின்றன. இது மாநிலத்தின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/02/17/e2143e6faa35dabf1ccf9984890ab85f1771323095254193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[Annamalai: திமுக பட்ஜெட்டில் கூவம், அடையாறு சுத்தம் செய்யும் நகைச்சுவை மிஸ்ஸிங்! ₹1,500 கோடி எங்கே போனது? அண்ணாமலை கேள்வி]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tn-ex-bjp-leader-annamalai-reacts-to-tamilnadu-interim-budget-2026-250531</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tn-ex-bjp-leader-annamalai-reacts-to-tamilnadu-interim-budget-2026-250531#respond</comments><pubDate>Tue, 17 Feb 2026 15:14:42 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tn-ex-bjp-leader-annamalai-reacts-to-tamilnadu-interim-budget-2026-250531</guid><description><![CDATA[&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;ldquo;திமுக பட்ஜெட் என்றாலே தவறாமல் இடம்பெறும், கூவத்தைச் சுத்தம் செய்வோம், அடையாறை சுத்தம் செய்வோம் என்று கூறி ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யும் நகைச்சுவை, இந்த ஆண்டு இடம்பெறவில்லை என்பது, உண்மையாகவே வருத்தமளிக்கிறது&amp;rdquo; என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கிண்டல் செய்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:&lt;/p&gt;
&lt;p&gt;கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்களை ஏமாற்றி வந்த திமுக அரசு, தனது கடைசி பட்ஜெட் உரையிலும் பொதுமக்களை ஏமாற்றுவதை விடவில்லை. தூய்மைப் பணியாளர்கள், பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் கோரும் ஆசிரியப் பெருமக்கள், அரசு மருத்துவர்கள், லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பணிகளை விற்பனை செய்து வரும் திமுக அமைச்சர்களை எதிர்த்துப் போராடும் இளைஞர்கள் என, கடந்த ஐந்து ஆண்டுகளில், எந்தத் தரப்பு மக்களின் கோரிக்கைகளையுமே கண்டுகொள்ளாமல், கடைசி பட்ஜெட்டில் கூட பொய்களை மட்டுமே சொல்லுவேன் என்று அடம்பிடித்திருக்கிறார் தமிழக நிதியமைச்சர். கட்டிடங்கள் இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நம் குழந்தைகள், அடிப்படை வசதிகள் கூட இல்லாத மாணவர் விடுதிகள், பள்ளி மாணவர்களிடையே பெருகி வரும் போதைப் பொருள் கலாச்சாரம் என எது குறித்தும் அக்கறை இல்லாமல், வழக்கம்போல பொய்களை வாசித்துச் சென்றிருக்கிறார்.&lt;/p&gt;
&lt;h2&gt;மெட்ரோ திட்டம் வரக்கூடாது என்று&lt;/h2&gt;
&lt;p&gt;கடந்த ஐந்து ஆண்டுகளில், திமுக வாங்கிக் குவித்த தமிழகத்தின் மொத்த கடன் தொகை, வரும் மார்ச் 31, 2027ல் 10,62,248 கோடியாக இருக்கும் என கூறியிருக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யவில்லை. எதற்காக திமுக இத்தனை லட்சம் கோடி கடன் வாங்கியது? எங்கே சென்றது இந்த நிதி மொத்தமும்? திமுகவுக்கு வாக்களிக்காத கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களில், மெட்ரோ திட்டம் வரக்கூடாது என்று, வேண்டுமென்றே தவறான திட்ட அறிக்கையை வழங்கிவிட்டு, தற்போது மத்திய அரசு மீது குற்றம் சுமத்தும் தமிழக நிதியமைச்சர், திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை? உண்மையாகவே மெட்ரோ திட்டம் வர வேண்டுமென்று அக்கறை திமுகவுக்கு இல்லை. அதனால்தான், நான்கு மாதங்கள் ஆகியும், திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.&lt;/p&gt;
&lt;h2&gt;₹1,500 கோடி எங்கே போனது?&lt;/h2&gt;
&lt;p&gt;நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, அவசர அவசரமாக பட்ஜெட் அறிக்கையை வாசித்ததைப் பார்த்தால், 'அப்பாடா, இதை விரைவில் முடித்து விட்டால், இனி எப்போதும் நமக்கு இந்த பட்ஜெட் அறிக்கை வாசிக்கும் தொல்லை இருக்காது. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பொழுது போக்கலாம்' என்ற நிம்மதிப் பெருமூச்சுதான் வெளிப்படுகிறது. முதலமைச்சரின் தந்தை மறைந்த கருணாநிதி அவர்கள் காலத்தில் இருந்து, திமுக பட்ஜெட் என்றாலே தவறாமல் இடம்பெறும், கூவத்தைச் சுத்தம் செய்வோம், அடையாறை சுத்தம் செய்வோம் என்று கூறி ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யும் நகைச்சுவை, இந்த ஆண்டு இடம்பெறவில்லை என்பது, உண்மையாகவே வருத்தமளிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, அடையாறைச் சுத்தம் செய்ய ஆண்டுக்கு ₹1,500 கோடி ஒதுக்கீடு செய்ததாகக் கூறிய நிதி எங்கு போனது என்பதும் தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/late-night-dinners-health-risks-you-should-know-250488&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/23/e55c8e2e74121900a0183bbb3fd6aa891698066400384102_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[TN Budget 2026: ரூ.10.71 லட்சம் கோடி கடன் சுமை, ரூ.48,696 கோடி பற்றாக்குறை, புதுசா ரூ.1.79 லட்சம் கடன் - தமிழக அரசின் நிலை]]></title><link>https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-analysis-2026-tn-govt-fiscal-deficit-revenue-debt-expenditure-250515</link><comments>https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-analysis-2026-tn-govt-fiscal-deficit-revenue-debt-expenditure-250515#respond</comments><pubDate>Tue, 17 Feb 2026 12:32:38 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ பட்ஜெட் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-analysis-2026-tn-govt-fiscal-deficit-revenue-debt-expenditure-250515</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Tamil Nadu Interim Budget 2026:&lt;/strong&gt; தமிழ்நாடு அரசு வரும் 2026-27 நிதியாண்டில் 1.79 லட்சம் கோடி ரூபாயை கடனாக பெற திட்டமிட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தமிழ்நாட்டின் பொருளாதார நிலை&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் அறிக்கையின்படி, மாநிலமானது வலுவான பொருளாதார வளர்ச்சியுடன், பெயரளவு மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) மதிப்பு 2025-26 ஆம் ஆண்டில் 14.5 சதவிகிதமாக வளர்ச்சியடையும் எனவும், உண்மையான வளர்ச்சி 9 சதவிகிமாகவும், சராசரி பணவீக்கம் 5.5 சதவிகிமாகவும் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 2027-28 மற்றும் 2028-29 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி ஆண்டுக்கு 14 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தமிழ்நாட்டின் வருவாய் விவரங்கள்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;வருவாய் வரவினங்கள்:&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;மத்திய அரசின் நிதிப் பகிர்வு உட்பட, மாநில அரசின் மொத்த வருவாய் 2025-26 நிதியாண்டில் 3,09,697.92 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட நிலையில்,&amp;nbsp; 2026-27 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் இந்த தொகையானது 3,44,575.31 கோடி ரூபாயாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h3&gt;மாநில அரசின் சொந்த வரி, வரி அல்லாத வருவாய்:&lt;/h3&gt;
&lt;p&gt;மாநில அரசின் சொந்த வரி வருவாய், 2025-26 நிதியாண்டில் 2,06,540.36 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்த நிலையில்,&amp;nbsp; 2026-27 நிதியாண்டில் 2,29,579.12 கோடி ரூபாயாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதேநேரம், 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில் இந்த வரி அல்லாத வருவாய் 27 ஆயிரத்து 703 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3&gt;மத்திய அரசின் வரிகளில் மாநில அரசின் பங்கு&lt;/h3&gt;
&lt;p&gt;2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் 56,819.23 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்த மத்திய அரசின் வரிகளில் மாநில அரசுக்கான பங்கு, 2026-27 ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் 62,530.65 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தமிழ்நாடு அரசின் செலவின விவரங்கள்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில் வருவாய் செலவினங்கள் 3,93,271.63 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2025-26 நிதியாண்டிற்கானதை காட்டிலும் 3.79 சதவிகிதம் அதிகமாகும். இதில் ஊதிய செலவினங்களுக்கு மட்டுமே 94 ஆயிரத்து 377 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சம்பளம் அல்லாத செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பிற்கான செலவினமாக 18 ஆயிரத்து 735 கோடி ரூபாயாகவும், ஓய்வூதியம் தொடர்பான செலவினங்களுக்காக 45 ஆயிரத்து 323 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.&amp;nbsp; மானியங்கள் மற்றும் நிதி மாற்றங்களுக்காக ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 108 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசின் கடனுக்கான வட்டி செலுத்துவதற்காக 78 ஆயிரத்து 677 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நடப்பு நிதியாண்டில் 51 ஆயிரத்து 442 கோடியை மூலதன செலவிற்காக ஒதுக்கப்பட்ட நிலையில், 2026-27 நிதியாண்டிற்காக 59 ஆயிரத்து 561 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/food/how-long-does-it-take-to-digest-a-samosa-details-in-pics-250388&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தமிழ்நாடு அரசின் நிதி, வருவாய் பற்றாக்குறை&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;2026-27 நிதியாண்டிற்கான இடைக்காலபட்ஜெட்டில் மாநில அரசின் வருவாய்ப் பற்றாக்குறை 48,696.32 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.&amp;nbsp; மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) மதிப்பில் நிதிப்பற்றாக்குறையின் விகிதம், 3.00 சதவிகிதமாக உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தமிழ்நாடு அரசின் கடன் விவரங்கள்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;மத்திய அரசு நிர்ணயிக்கும் ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில், கடன் பெறுதலும் திரும்பச் செலுத்துதலும் மதிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, 2026-27 ஆம் ஆண்டில் மாநில அரசு 1,79,809.65 கோடி ரூபாய் அளவிற்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. அதேநேரம், 60,413.42 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுக் கடனை அரசு திருப்பிச் செலுத்த உள்ளது. இதன் விளைவாக, 31.03.2027 அன்று நிலுவையில் உள்ள கடன் 10,71,770.34 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. 2026-27 ஆம் ஆண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இது 26.35 சதவிகிதம் ஆக இருக்கும்&amp;rdquo;என தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/02/01/ae2bfb45189d026c59e85d9d2a2bd8f81769912357102102_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[TN Budget 2026: தூத்துக்குடி, தொழில்துறைக்கு மெகா ஜாக்பாட்..! அள்ளிக்கொடுத்த அரசு - புதுப்புது திட்டங்கள், வேலைவாய்ப்புகள்]]></title><link>https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026-industrial-sector-got-4282-crore-new-policy-shipbuilding-yard-worth-rs-5200-crore-250498</link><comments>https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026-industrial-sector-got-4282-crore-new-policy-shipbuilding-yard-worth-rs-5200-crore-250498#respond</comments><pubDate>Tue, 17 Feb 2026 11:29:17 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ பட்ஜெட் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026-industrial-sector-got-4282-crore-new-policy-shipbuilding-yard-worth-rs-5200-crore-250498</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Tamil Nadu Budget 2026:&lt;/strong&gt; தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறைக்கு என ரூ.4,282 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;இடைக்கால பட்ஜெட் - தொழில்துறை நிதி ஒதுக்கீடு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் ஒவ்வொரு துறையிலும் கடந்த 4 ஆண்டுகளில் திமுக சார்பில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள், நடைபெற்று வரும் பணிகள் மற்றும் 2026-27 நிதியாண்டில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் தொடர்பான விவரங்கள் இடம்பெற்று இருந்தன. அந்த வகையில், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கும் தொழில்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்தும், எந்தெந்த மாவட்டங்களில் வலுவான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன என்பது குறித்தும் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/food/how-long-does-it-take-to-digest-a-samosa-details-in-pics-250388&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ரூ.4,282 கோடி நிதி ஒதுக்கீடு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;நிதியமைச்சர் பட்ஜெட் உரையின்படி, 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி எனும் இலக்குடன் இயங்கும் தமிழ்நாடு அரசு, உலக முதலீட்டாளர் மாநாடு, TN-Rising போன்ற முன்னெடுப்புகள் மூலம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொழில் முதலீடுகளை மிகப்பெரும் அளவில் ஈர்த்து வருகிறது. அந்த வகையில் &amp;nbsp;36 லட்சத்திற்கும் மேலான வேலைவாய்ப்புகள் உருவாகும் வகையில், 12.37 லட்சம் கோடி ரூபாய் உறுதி அளிக்கப்பட்ட முதலீடுகளுக்கான 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளனவாம். அதனை மேலும் அதிகரிக்கும் விதமாக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு 4,282 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;புதிய தொழிற்பூங்காக்கள்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&amp;nbsp;தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு வரை 15 மாவட்டங்களில் 32,525 ஏக்கர் பரப்பளவில் 24 சிப்காட் தொழிற்பூங்காக்கள் செயல்பட்டு வந்தது. திமுக தலைமையிலான அரசு&amp;nbsp; பொறுப்பேற்ற பின், மேலும் 12 புதிய மாவட்டங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, தற்போது 49,468 ஏக்கர் பரப்பளவில் 54 தொழிற்பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன.&amp;nbsp; கூடுதலாக 28,392 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 'தமிழ்நாடு அறிவுசார் நகரம்' மற்றும் சென்னைக்கு அருகில் 2,000 ஏக்கர் பரப்பளவில் உலகளாவிய நகரம்' ஆகிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஸ்ரீபெரும்புதூரில் 706 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 18,720 படுக்கை வசதிகள் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய பணியாளர் விடுதி அமைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;புதிய டைடல் பூங்காக்கள்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;திருச்சி, மதுரை மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் மொத்தம் 1,070 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய டைடல் பூங்காக்கள் நிறுவப்பட்டு வருகின்றன. கூடுதலாக விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர் மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில் டைடல் நியோ மினி தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமன்றி, நாமக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, நாகப்பட்டினம், கரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மொத்தம் 388 கோடி ரூபாய் செலவில் மினி தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் நிறுவப்பட்டு வருகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியை பரவலான முறையில் விரிவுபடுத்துவதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் 25,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;செமி கண்டக்டர் மையம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&amp;nbsp;'தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் 2030' எதிர்வரும் ஐந்தாண்டுகளுக்கான செயல்திட்டத்தின் அடிப்படையில், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை (IIT Madras) உடன் இணைந்து சென்னை தரமணி பகுதியில், மேம்பட்ட செமிகண்டக்டர் தொழில்நுட்ப மையம் (Centre for Advanced Semiconductor Technologies) மற்றும் செமிகண்டக்டர் வடிவமைப்பு மற்றும் சோதனைக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான திறன்மிகு மையம் (Centre of Excellence) அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;கப்பல் கட்டுமானம் மற்றும் கப்பல் இயந்திர உற்பத்தித் துறைகளில் முதலீடுகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட 'தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை' விரைவில் வெளியிடப்படும்போது, கப்பல் கட்டும் தொழிலில் ஒரு உலகளாவிய மையமாக தமிழ்நாடு உருவெடுக்கும். சிப்காட் நிறுவனம் வ.உ.சிதம்பரனார் (VOC) துறைமுக ஆணையத்துடன் இணைந்து, ஒரு சிறப்பு நோக்க நிறுவனம் (SPV) மூலம் தூத்துக்குடியில் 5,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய கப்பல் கட்டும் தொகுப்பினை நிறுவி வருகிறது. கூடுதலாக, ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஒரு உலகளாவிய முன்னணி கப்பல் கட்டும் நிறுவனம் உள்ளிட்ட, முன்னணி கப்பல் கட்டும் நிறுவனங்களுடன் சுமார் 30,000 கோடி ரூபாய் மதிப்புள்ள உறுதியான முதலீட்டுப் பொறுப்புறுதியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அரசின் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தூத்துக்குடி துறைமுகம் அருகே சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 1800 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த இரண்டு புதிய கப்பல் கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் தளங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையெழுத்தானது. அதன்படி,&amp;nbsp; கொச்சின் ஷிப்யார்டு மற்றும் மசகான் டாக் ஆகிய நிறுவனங்கள் முறையே தலா 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளன. துறைமுகத்திற்கு அருகிலேயே &amp;nbsp;தமிழக அரசு மற்றும் சிப்காட் (SIPCOT) மூலம் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், &amp;nbsp;நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கணிக்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன், தென் கொரியாவின் HD Hyundai நிறுவனம் போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்களிப்புடன், 2047-ம் ஆண்டிற்குள் இந்திய கடல்சார் துறையை உலக அளவில் முன்னணியில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;br /&gt;இந்தத் திட்டம், தமிழகத்தில் கடலோரப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இதையொட்டியே 'தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை' விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/02/17/cbe77794c00f20397767d69c16df5dbd1771307665927732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[TN Budget 2026: பள்ளிக்கல்வி, உயர்கல்விக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? - மாணவர்களுக்கு அரசு செய்தது என்ன? - பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்]]></title><link>https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-interim-budget-2026-education-budget-allocation-thangam-thennarasu-budget-announcements-250501</link><comments>https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-interim-budget-2026-education-budget-allocation-thangam-thennarasu-budget-announcements-250501#respond</comments><pubDate>Tue, 17 Feb 2026 11:18:42 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ பட்ஜெட் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-interim-budget-2026-education-budget-allocation-thangam-thennarasu-budget-announcements-250501</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடியும் உயர்க்கல்வித்துறைக்கு ரூ.8505 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 2026-27ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும், 38 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாட்டில் இதுவரை 6,75,885 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்லூரி கனவு திட்டத்தில் இதுவரை 2 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;உயர்க்கல்வித்துறைக்கு ரூ.8505 கோடி நிதி ஒதுக்கீடு&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;உயர்க்கல்வித்துறைக்கு ரூ.8505 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் அறிவித்துள்ளார். உயர்க்கல்வி சேர்க்கை 47% அதிகரித்துள்ளதாகவும் உயர்க்கல்வியில் தேசிய சராசரியை விட 2 மடங்கு அதிகமாக தமிழ்நாட்டின் சராசரி உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், சிறப்பு திட்ட செயலாக்க துறைக்கு ரூ.17,088 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கோப்பை திட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு இதுவரை ரூ.101 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இளைஞர் நலன், விளையாட்டு துறைக்கு &amp;nbsp;ரூ.718 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;புதுமைப் பெண் திட்டம்&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தில் ரூ.6,85,296 மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் 5,40,511 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;அம்பேத்கர் உயர்கல்வி திட்டம் - 383 மாணவர்கள் பயன்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அம்பேத்கர் உயர்கல்வி திட்டத்தின் கீழ் 285 ரூ.160 கோடியில் மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், தகவல் தொழில்நுட்ப துறைக்கு ரூ.219 கோடி செய்யப்பட்டுள்ளதாகவும் திருச்சி, மதுரை, ஓசூரில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/lifestyle/how-to-take-care-of-parents-250489&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/02/17/426ee3919d54895d69a95865769d0b291771307025241113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[TN Budget 2026: யாருக்கு ஜாக்பாட்? இடைக்கால பட்ஜெட்டில் எந்த துறைக்கு எவ்வளவு நிதி - தமிழக அரசு அறிவிப்பு]]></title><link>https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-interim-budget-2026-sector-wise-budget-allocation-thangam-thennarasu-budget-announcements-250493</link><comments>https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-interim-budget-2026-sector-wise-budget-allocation-thangam-thennarasu-budget-announcements-250493#respond</comments><pubDate>Tue, 17 Feb 2026 10:23:23 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ பட்ஜெட் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-interim-budget-2026-sector-wise-budget-allocation-thangam-thennarasu-budget-announcements-250493</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Tamil Nadu Interim Budget 2026: &lt;/strong&gt;தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் உயர்கல்வித்துறைக்கு ரூ.8,505 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான தற்போதைய அரசின் கடைசி பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரது 9.30 மணியளவில், பட்ஜெட் உரையை தொடங்கினார். அப்போது துறை ரீதியாக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களை அறிவித்தார். சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு, 2026-27 நிதியாண்டிற்கான விரிவான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;இடைக்கால பட்ஜெட் - துறை வாரியான நிதி ஒதுக்கீடு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;பள்ளிக் கல்வித்துறை - ரூ.48,534 கோடி&lt;/li&gt;
&lt;li&gt;உயர்கல்வித்துறை - ரூ.8,505 கோடி&lt;/li&gt;
&lt;li&gt;மாற்றுத்திறனாளிகள் நலத்துறை - ரூ.1,471 கோடி&lt;/li&gt;
&lt;li&gt;சிறப்பு திட்ட செயலாக்க துறை - ரூ.17,088 கோடி&lt;/li&gt;
&lt;li&gt;இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை - ரூ. 718 கோடி&lt;/li&gt;
&lt;li&gt;ஊரக வளர்ச்சித்துறை - ரூ.28,687 கோடி&lt;/li&gt;
&lt;li&gt;நகப்புற வளர்ச்சித்துறை - ரூ.28,827 கோடி&lt;/li&gt;
&lt;li&gt;நதிகள் மேம்பாட்டு திட்டம் - ரூ.374 கோடி&lt;/li&gt;
&lt;li&gt;தொழிலாளர் நலத்துறை - ரூ.1,996 கோடி&lt;/li&gt;
&lt;li&gt;41 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்க ரூ.291 கோடி ஒதுக்கீடு&lt;/li&gt;
&lt;li&gt;முதலமைச்சரின் இளைஞர் விளையாட்டு திருவிழா - ரூ.43 கோடி&lt;/li&gt;
&lt;li&gt;மருத்துவத்துறை - ரூ.22,090 கோடி&lt;/li&gt;
&lt;li&gt;கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.8,911 கோடி நிதி ஒதுக்கீடு&lt;/li&gt;
&lt;li&gt;செமி கண்டக்டர் இயக்கம் செயல்திட்டத்திற்காக 5 ஆண்டுகளுக்கு ரூ.500 நிதி ஒதுக்கீடு&lt;/li&gt;
&lt;li&gt;தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகதுறைக்கு ரூ.4,882 கோடி நிதி ஒதுக்கீடு&lt;/li&gt;
&lt;li&gt;தகவல் தொழில்நுட்பத்துறை - ரூ.219 கோடி&lt;/li&gt;
&lt;li&gt;நீர்வளத்துறை - 10,076 கோடி&lt;/li&gt;
&lt;li&gt;மின்சாரத்துறை - ரூ.18,091 கோடி&lt;/li&gt;
&lt;li&gt;கூட்டு குடிநீர் திட்டம் - ரூ.809 கோடி&lt;/li&gt;
&lt;li&gt;அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - ரூ.6000 கோடி&lt;/li&gt;
&lt;li&gt;போக்குவரத்து துறை - 13,062 கோடி&lt;/li&gt;
&lt;li&gt;சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை - ரூ.1,943 கோடி&lt;/li&gt;
&lt;li&gt;நெடுஞ்சாலை, சிறுமுகங்கள் துறை - ரூ.21,132 கோடி&lt;/li&gt;
&lt;li&gt;ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை - ரூ.3934 கோடி&lt;/li&gt;
&lt;li&gt;மகளிர் விடியல் பயணத்திற்கு ரூ.4000 கோடி&lt;/li&gt;
&lt;li&gt;&amp;nbsp;&lt;/li&gt;
&lt;/ul&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/02/17/bd1850e03b4aa7d53abe30f50a43b0781771303892375732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[TN Budget 2026: தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்.. காது குத்தும் விழா என கலாய்த்த அதிமுக!]]></title><link>https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-interim-budget-2026-aiadmk-criticized-and-mentioned-ear-priecing-ceremony-250486</link><comments>https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-interim-budget-2026-aiadmk-criticized-and-mentioned-ear-priecing-ceremony-250486#respond</comments><pubDate>Tue, 17 Feb 2026 09:36:27 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ பட்ஜெட் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-interim-budget-2026-aiadmk-criticized-and-mentioned-ear-priecing-ceremony-250486</guid><description><![CDATA[&lt;p&gt;தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதனை மாபெரும் காது குத்தும் விழா என அதிமுக விமர்சித்து அழைப்பிதழ் அடித்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;2026 தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் இரு மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழக சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதனை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. இப்படியான நிலையில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்களும் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;அப்படியாக அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் வருகை தந்த போது கையோடு அழைப்பிதழ் ஒன்றையும் எடுத்து வந்திருந்தனர். அதில், &amp;ldquo;மாபெரும் காது குத்தும் விழா&amp;rdquo; என இடம் பெற்றிருந்தது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;மேலும்&amp;nbsp; கடந்த நாலரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழாஇந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;அதுமட்டுமல்லாமல், &amp;ldquo;நாள்: பிப்ரவரி 17, 2026&lt;br /&gt;இடம்: தமிழக சட்டமன்றம்&lt;br /&gt;நேரம்: காலை 10 மணி முதல்&lt;br /&gt;இவ்விழாவிற்கு தலைமை தாங்குபவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்&lt;br /&gt;மாண்புமிகு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் முன்னின்று காது குத்துவார்&amp;rdquo; என இடம் பெற்றிருந்தது.&lt;/p&gt;
&lt;blockquote class=&quot;twitter-tweet&quot; data-dnt=&quot;true&quot;&gt;
&lt;p dir=&quot;ltr&quot; lang=&quot;ta&quot;&gt;கடந்த நாலரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நாள்: பிப்ரவரி 17, 2026&lt;br /&gt;இடம்: தமிழக சட்டமன்றம்&lt;br /&gt;நேரம்: காலை 10 மணி முதல்&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விழாவிற்கு தலைமை தாங்குபவர் மாண்புமிகு தமிழ்நாடு&amp;hellip; &lt;a href=&quot;https://t.co/OTnhRin9mO&quot;&gt;pic.twitter.com/OTnhRin9mO&lt;/a&gt;&lt;/p&gt;
&amp;mdash; AIADMK - SayYesToWomenSafety&amp;amp;AIADMK (@AIADMKOfficial) &lt;a href=&quot;https://twitter.com/AIADMKOfficial/status/2023611130942550199?ref_src=twsrc%5Etfw&quot;&gt;February 17, 2026&lt;/a&gt;&lt;/blockquote&gt;
&lt;p&gt;
&lt;script src=&quot;https://platform.twitter.com/widgets.js&quot; async=&quot;&quot; charset=&quot;utf-8&quot;&gt;&lt;/script&gt;
&lt;/p&gt;
&lt;p&gt;இறுதியாக அந்த அழைப்பிதழில் கூவம் சுத்திகரிப்பு நிதி, சென்னை மழைநீர் வடிகால் திட்டத்திற்கு நிதி,&amp;nbsp; சிங்காரச் சென்னை திட்டத்திற்கு நீதி என்று விதவிதமாக காது குத்தப்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம். பின்குறிப்பு வகையில், &amp;ldquo;சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என பல்வேறு முறைகளில் மொய் வைக்கலாம்&amp;rdquo; என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ஊடகத்தினரிடம் காட்டினர். இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/02/17/abe3a614c17c6298581abe8a9f58d0d71771301128807572_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Tamil Nadu Budget 2026 LIVE: இடைக்கால வேளாண் பட்ஜெட் தாக்கல்.. என்னென்ன அறிவிப்புகள்!]]></title><link>https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026-live-updates-fm-thangam-thennarasu-speech-tn-interim-budget-announcements-key-highlights-250463</link><comments>https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026-live-updates-fm-thangam-thennarasu-speech-tn-interim-budget-announcements-key-highlights-250463#respond</comments><pubDate>Tue, 17 Feb 2026 08:17:53 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ABP NADU ]]></dc:creator><category><![CDATA[ பட்ஜெட் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026-live-updates-fm-thangam-thennarasu-speech-tn-interim-budget-announcements-key-highlights-250463</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Tamil Nadu Interim Budget 2026:&lt;/strong&gt;&amp;nbsp;தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த மாத இறுதியில் அல்லது வரும் மார்ச் மாத தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று கருதப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த நிலையில், தமிழ்நாட்டின் இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. மு.க.ஸ்டாலினின் இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட் இந்த பட்ஜெட் ஆகும். வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிடும் என்று கருதப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;அதாவது, இந்த அறிவிப்புகள் வாக்காளர்களை கவரும் வகையிலே இருக்கும் என்றே கருதப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம், நான் முதல்வன், புதுமைப் பெண் திட்டம் என்று பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் நிலையில், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் அறிவிப்புகளை வெளியிடும் என்றே கருதப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பெண்கள் வாக்குகள்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;வரும் தேர்தலில் பெண்களின் வாக்குகள் ஆட்சியைத் தீர்மானிப்பது யார்? என்பதை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக திகழும் என்று கருதப்படுகிறது. இதனால், பெண்களின் வாக்குகளை தக்க வைக்கும் வகையில் ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;போக்குவரத்து துறையில் சென்னையை போன்று மற்ற மாநகரங்களையும் உயர்த்தும் வகையில் மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் மெட்ரோ சேவைகளை செயல்படுத்தும் திட்டம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்ந்திருக்கும் நிலையில் அதை கட்டுப்படுத்துவதற்கான அறிவிப்பு என பல்வேறு அறிவிப்புகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;குறிவைக்கப்படும் வாக்குகள்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த அறிவிப்புகளை மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் செயல்படுத்த முடியும் என்பதால் அதற்கேற்பவே அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என்று கருதப்படுகிறது. விவசாயம், தொழில்நுட்பம், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்துறையில் பல்வேறு அறிவிப்புகள் இருக்கலாம் என்றே கருதப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இடைக்கால பட்ஜெட் என்பதால் வாக்குகளை குறிவைத்தே திமுக அரசின் அறிவிப்புகள் இருக்கும் என்றே கருதப்படுகிறது. திமுக தங்களின் மற்ற திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அளிக்கும் என்றும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/02/17/2f21dc72a16be66bebc626a44880cf5d1771310140604572_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[TN Budget 2026: குறிவைக்கப்படும் வாக்காளர்கள், எகிறும் எதிர்பார்ப்புகள்.. இடைக்கால பட்ஜெட்டில் சாதிக்குமா திமுக?]]></title><link>https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026fm-thangam-thennarasu-speech-tn-interim-budget-announcements-expectations-ahead-of-assembly-election-250473</link><comments>https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026fm-thangam-thennarasu-speech-tn-interim-budget-announcements-expectations-ahead-of-assembly-election-250473#respond</comments><pubDate>Tue, 17 Feb 2026 06:27:55 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ பட்ஜெட் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026fm-thangam-thennarasu-speech-tn-interim-budget-announcements-expectations-ahead-of-assembly-election-250473</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Tamil Nadu Interim Budget 2026:&lt;/strong&gt; தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்யப்படும் இன்றைய இடைக்கால பட்ஜெட் மீது, நிலவும் எதிர்பார்ப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தமிழ்நாடு அரசு - இடைக்கால பட்ஜெட்..&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு,திமுக தலைமையிலான அரசு அடுத்த நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. தேர்தல் முடிவுக்குப் பின் புதியதாக அமையும் அரசு 2026-27 நிதியாண்டிற்கான விரிவான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முதன்முறையாக இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்ய உள்ளார். காலை 9.30 மணிக்கு அவரது உரை தொடங்க உள்ளது. தேர்தல் நடைபெற உள்ளதை கருத்தில் கொண்டு, வாக்காளர்களை கவரும் விதமாக பல முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களை கவரும் விதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/personal-finance/9-things-you-should-never-spend-money-on-while-traveling-details-250358&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;இடைக்கால பட்ஜெட் எதிர்பார்ப்புகள்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டுகளில், வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமான கவர்ச்சிகர திட்டங்கள் இடம்பெறுவது என்பது வழக்கமே. ஏற்கான்வே பொங்கல் பரிசாக 3000 ரூபாய் மற்றும் 3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகையை முன்கூட்டியே வங்கிக் கணக்கில் வைப்பு வைத்தது போன்ற அரசின் செயல்பாடுகள் மகளிர் வாக்காளர்களை திமுக பக்கம் ஈர்த்துள்ளன.&amp;nbsp; இதனை மேலும் வலுப்படுத்தும் விதமாக விலைவாசியை குறைப்பதற்கான நடவடிக்கைகள், நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்புகள் ஏதேனும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, விவசாய கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகளும் இடம்பெற வேண்டும் என வெகுஜன பிரிவை சேர்ந்த மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;எடப்பாடிக்கு ஷாக் கொடுப்பாரா ஸ்டாலின்?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து விட வேண்டும் என தீர்மானத்தில் உள்ள திமுகவிற்கு, சவால் விடுக்கும் விதமாக பல அதிரடியான வாக்குறுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி,&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;குடும்பை அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.2000 உதவித்தொகை&lt;/li&gt;
&lt;li&gt;பெண்களை போன்று ஆண்களுக்கும் இலவச பேருந்து சேவை&lt;/li&gt;
&lt;li&gt;ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்&lt;/li&gt;
&lt;li&gt;அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டிற்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள்&lt;/li&gt;
&lt;li&gt;மாணவர்கள் பெற்றுள்ள கல்விக்கடன் தள்ளுபடி&lt;/li&gt;
&lt;li&gt;கூட்டுறவு வங்கிகளில் மாற்றுத்திறனாளிகள் பெற்றுள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும்&lt;/li&gt;
&lt;li&gt;ஜல்லிக்கட்டின் போது உயிரிழக்கும் வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி&lt;/li&gt;
&lt;li&gt;வீடற்ற ஏழைகளுக்கு ஊரகப் பகுதிகளில் நிலம் வாங்கி கான்கிரீட் வீடுகளும், நகர்ப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டித் தரப்படும்&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;p&gt;என அதிரடியான வாக்குறுதிகளை அளித்துள்ளார். இவற்றை ஈடுசெய்யும் வகையில் &lt;a title=&quot;முதலமைச்சர் ஸ்டாலின்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/cm-mk-stalin&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;முதலமைச்சர் ஸ்டாலின்&lt;/a&gt; தலைமையிலான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் பல கவர்ச்சிகர திட்டங்கள் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் மகளிர் உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் என ஸ்டாலினும் அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/01/23/7f4718577baf48e1ba2d210b0710db1e1769161557015102_original.jpg" width="220"/></item></channel></rss>