<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>budget</title><atom:link href="https://tamil.abplive.com/budget/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 12 Aug 2026 22:27:58 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-2026-27-budget-governor-address-chief-minister-rangasamy-270398</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-2026-27-budget-governor-address-chief-minister-rangasamy-270398#respond</comments><pubDate>Fri, 7 Aug 2026 14:59:26 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-2026-27-budget-governor-address-chief-minister-rangasamy-270398</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: புதுச்சேரியில் 2026-27-ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொட வருகின்ற 24-ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் ஆளுநர் உரையுடன் தொடங்குவதாக செயல்பாட்டு சபாநாயகர் அன்பழகன் தெரிவித்தார், அன்றைய தினம் பிற்பகல் 3 மணி அளவில் நடப்பாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்வார் என்று குறிப்பிட்டார்.&lt;/p&gt;
&lt;h2&gt;2026-27-ம் ஆண்டிற்கான பட்ஜெட்&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரி மாநிலத்தின் 2026-27-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாகச் செயல்பாட்டு சபாநாயகர் அன்பழகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;ஆகஸ்ட் 24-ல் பட்ஜெட் தாக்கல்:&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களைச் சந்தித்த செயல்பாட்டு சபாநாயகர் அன்பழகன் தெரிவிக்கையில், &quot;16-வது சட்டப்பேரவையின் முந்தையக் கூட்டம் கடந்த மே மாதம் 20-ஆம் தேதி நடைபெற்று ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர், நடப்பாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 24.08.2026 அன்று காலை 9.30 மணிக்கு மாண்புமிகு ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.&quot; மேலும், &quot;அன்றைய தினமே பிற்பகல் 3 மணி அளவில், நிதித்துறையைக் கூடுதல் பொறுப்பாக வகிக்கும் முதலமைச்சர் என்.ரங்கசாமி 2026-27-ஆம் ஆண்டிற்கான மாநில நிதிநிலை அறிக்கையைத் (பட்ஜெட்) தாக்கல் செய்வார். சட்டப்பேரவைக் கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி இறுதி முடிவு செய்யும்&quot; என்றும் அவர் குறிப்பிட்டார்.&lt;/p&gt;
&lt;h2&gt;சபாநாயகர் பதவி கோரிக்கை &amp;amp; அரசியல் நகர்வுகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;செய்தியாளர்கள் சந்திப்பில் அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர்:&lt;/p&gt;
&lt;p&gt;தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அண்ணா திமுக சார்பாக சபாநாயகர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இக்கோரிக்கை நிறைவேறும் என்ற முழு நம்பிக்கை உள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இருப்பினும், ஒருவேளை சபாநாயகர் தேர்தல் தனியாக நடத்தப்படும் பட்சத்தில், அதில் அதிமுக போட்டியிடாது.&lt;/p&gt;
&lt;p&gt;டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்ததைப் போல, நாளை புதுச்சேரிக்கு வரவிருக்கும் அவரை மரியாதை நிமித்தமாக மீண்டும் நேரில் சந்திக்கவுள்ளேன்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/04/7931238399d63241d8b766900febd30c1785850839127194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[TN Budget 2026: பள்ளிக்கல்வி முதல் பால்வளம் வரை.. 22 துறைகளில் எந்த துறைக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு?]]></title><link>https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026-27-department-sector-wise-fund-allocation-know-details-270307</link><comments>https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026-27-department-sector-wise-fund-allocation-know-details-270307#respond</comments><pubDate>Thu, 6 Aug 2026 16:48:01 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சுகுமாறன் ]]></dc:creator><category><![CDATA[ பட்ஜெட் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026-27-department-sector-wise-fund-allocation-know-details-270307</guid><description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டின் நிதி நிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. தவெக ஆட்சி அமைந்த பிறகு அமைந்த முதல் பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;எந்தெந்த துறைக்கு எவ்வளவு?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த தவெக நிதிநிலை அறிக்கையில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது? என்பதை கீழே காணலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;1. பள்ளிக்கல்வி - ரூபாய் 44 ஆயிரத்து 527 கோடி&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;2. ஊரக வளர்ச்சி - ரூபாய் 39 ஆயிரத்து 609 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;3. நகராட்சி நிர்வாகம் - ரூபாய் 29 ஆயிரத்து 863 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;4. மக்கள் நல்வாழ்வு - ரூபாய் 23 ஆயிரத்து 357 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;5. நெடுஞ்சாலை - ரூபாய் 21 ஆயிரத்து 524 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;6. உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை - 17 ஆயிரத்து 290 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;7. சிறப்பு திட்ட செயலாக்கம் - ரூபாய் 17 ஆயிரத்து 150 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;8. எரிசக்தி - ரூபாய் 15 ஆயிரத்து 828 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;9. வேளாண்மை - ரூபாய் 14 ஆயிரத்து 984 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;10. உணவு - ரூபாய் 14 ஆயிரத்து 830 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;11. போக்குவரத்து - ரூபாய் 13 ஆயிரத்து 561 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;12. வருவாய் - ரூபாய் 11 ஆயிரத்து 532 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;13. சமூகநலம் - ரூபாய் 9 ஆயிரத்து 818 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;14. வீட்டுவசதி - ரூபாய் 8 ஆயிரத்து 852 &amp;nbsp;கோடி&lt;/p&gt;
&lt;p&gt;15. உயர்கல்வி - ரூபாய் 8 ஆயிரத்து 393 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;16. கூட்டுறவு - ரூபாய் 8 ஆயிரத்து 28 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;17. கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளம் - ரூபாய் 4 ஆயிரத்து 880 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;18. தொழில் - ரூபாய் 4 ஆயிரத்து 414 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;19. சமூக நீதி - ரூபாய் 3 ஆயிரத்து 937 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;20. நீதித்துறை - ரூபாய் 2 ஆயிரத்து 486 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;21. சிறு, குறு தொழில்கள் - ரூபாய் 2 ஆயிரத்து 142 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;22. தொழிலாளர் நலன் - ரூபாய் 2 ஆயிரத்து 22 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;23. சுற்றுச்சூழல் மற்றும் வனம் - ரூபாய் ஆயிரத்து 762 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;24. பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலம் - ரூபாய் 1,700 கோடி&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;25. கைத்தறி - ரூபாய் 1,678 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;26. மாற்றுத்திறனாளிகள் நலம் - ரூபாய் 1,485 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;27. விளையாட்டு - ரூபாய் 1,051 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;28. வணிக வரி - ரூபாய் 651 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;29. பத்திரப்பதிவு - ரூபாய் 475 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;30. இயற்கை வளங்கள் - ரூபாய் 438 காேடி&lt;/p&gt;
&lt;p&gt;31. .தகவல் தொழில்நுட்பம் - ரூபாய் 398 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;32. சுற்றுலா - ரூபாய் 775 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;33. இந்து சமய அறநிலையத்துறை - ரூபாய் 708 கோடி&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பள்ளிக்கல்விக்கு முக்கியத்துவம்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் பள்ளிக்கல்விக்கு தவெக அரசு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளது. இதற்காக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூபாய் 44 ஆயிரத்து 527 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் நோக்கத்தில் ஊரக வளர்ச்சி, நகராட்சி துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில்துறைக்கு ரூபாய் 4 ஆயிரத்து 414 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டின் கடன் சுமையை கருத்தில் கொண்டு &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; அரசு இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக அந்த கட்சியினர் தெரிவித்துள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/politics/tn-cm-vijay-allots-rs-812-crore-for-gold-coin-silk-saree-annan-seer-scheme-details-scheme-270276&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/06/99cd57ada9e009ebe25ed347ec987f351786014954111102_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்]]></title><link>https://tamil.abplive.com/news/politics/pattali-makkal-katchi-anbumani-ramadoss-tamil-nadu-agricultural-budget-t-v-k-government-farmers-disappointment-270296</link><comments>https://tamil.abplive.com/news/politics/pattali-makkal-katchi-anbumani-ramadoss-tamil-nadu-agricultural-budget-t-v-k-government-farmers-disappointment-270296#respond</comments><pubDate>Thu, 6 Aug 2026 15:54:22 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/pattali-makkal-katchi-anbumani-ramadoss-tamil-nadu-agricultural-budget-t-v-k-government-farmers-disappointment-270296</guid><description><![CDATA[&lt;p&gt;சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில் ஆறாம் முறையாகவும், த.வெ.க. அரசின் சார்பில் முதல் முறையாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் நிதிநிலை அறிக்கை உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாடு அரசின் சார்பின் ஆறாம் முறையாகவும், த.வெ.க. அரசின் சார்பில் முதல் முறையாகவும் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளைப் பார்க்கும் போது எந்த நோக்கத்திற்காக வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று பாமக 13 ஆண்டுகள் போராடி வெற்றி பெற்றதோ, அந்த நோக்கத்தில் ஒரு &amp;nbsp;விழுக்காடு கூட நிறைவேறவில்லை. இந்த நிதிநிலை அறிக்கை உழவர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பும், வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடும் கணிசமாக குறைக்கப்பட்டிருக்கிறது. வேளாண்துறைக்கு மட்டும் திமுக அரசில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.15,167.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அதை விட ரூ.470.92 கோடி குறைவாக ரூ.14,696.70 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் 20 துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.58,374 கோடி என்றும், இது இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மதிப்பான ரூ.47,248 கோடியை விட ரூ.11,126 கோடி அதிகம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;உண்மையில் வேளாண் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பு குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள 20 துறைகளில் ஊரக வளர்ச்சித்துறைக்கான நிதி ஒதுக்கீடு மட்டும் இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மதிப்பான ரூ.6,329.29 கோடியிலிருந்து ரூ.11,774 கோடி உயர்த்தி மொத்தம் ரூ.18,103.02 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை நடைமுறையிலிருந்த 100 நாள் வேலைத் திட்டத்திற்கு பதிலாக 125 நாள் வேலைத் திட்டம் அறிமுகம் செய்யபட்டிருப்பதாகவும், இந்தத் திட்டத்திற்கான மத்திய அரசின் பங்கு குறைக்கப்பட்டு, மாநில அரசின் பங்கு உயர்த்தப்பட்டிருப்பதால் தான் இந்தக் கூடுதல் &amp;nbsp;நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் கள அளவில் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடப்போவதில்லை. இந்த கூடுதல் &amp;nbsp;ஒதுக்கீட்டை கழித்துப் பார்த்தால் வேளாண் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பு ரூ.46,600 கோடி மட்டும் தான். இது இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பான ரூ.47,248 கோடியை விட ரூ.648 கோடி குறைவு ஆகும்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பில் 25% வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அதன்படி நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பான ரூ.4.62 லட்சம் கோடியில் வேளாண் நிதிநிலை அறிக்கைக்காக ரூ.1.16 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதில் பாதியளவு மட்டும் தான் வேளாண்மைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் வேளாண்மைத் துறைக்கு மட்டும் வெறும் ரூ.14,696.70 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதை ஏற்கவே முடியாது.&lt;/p&gt;
&lt;p&gt;த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3500, கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.4500 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது குறித்து எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. நெல் கொள்முதலை கையாளும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு திமுக ஆட்சியின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில், ரூ.14,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் ரூ.18 கோடி மட்டும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு பார்க்கும் போது நடப்பாண்டில் நெல்லுக்காக தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகை உயர்த்தப்படாது என்றே தோன்றுகிறது. இது மிகப்பெரிய ஏமாற்றம்.&lt;/p&gt;
&lt;p&gt;கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளுடன் உழவர்கள் காத்துக் கிடப்பதைத் தடுக்கவும், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாவதைத் தடுக்கவும் கிடங்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதற்கான திட்டங்களை அறிவிக்காத அரசு, 43,500 விவசாயிகளுக்கு &amp;nbsp;ரூ.10 கோடியில் &amp;nbsp;தார்ப்பாய்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. ரூ.2298 மதிப்புள்ள தார்ப்பாய்களைக் கொண்டு பல டன் எடையுள்ள நெல்லை எவ்வாறு நனையாமல் பாதுகாக்க முடியும்? என்பது தெரியவில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;பயறு வகைகளின் சாகுபடியை &amp;nbsp;15.19 லட்சம் ஏக்கரில் இருந்து 24.70 லட்சம் ஏக்கராகவும், எண்ணெய் வித்துகளின் சாகுபடி பரப்பை 9.26 லட்சம் ஏக்கரில் இருந்து 14.89 லட்சம் ஏக்கராகவும் உயர்த்த சிறப்புத் திட்டம் &amp;nbsp;செயல்படுத்தப் படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்காக உழவர்களுக்கு ஊக்கத்தொகை எதுவும் அறிவிக்கப் படவில்லை. பிற பயிர்களுடன் ஒப்பிடும் போது பயறு மற்றும் எண்ணெய் வித்துகள் சாகுபடியில் இலாபம் குறைவாகவே கிடைக்கும் நிலையில், அதை ஈடு செய்யும் அளவுக்கு உழவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்காத நிலையில், இந்த முயற்சி வெற்றி பெறாது. இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள பல அறிவிப்புகள் &amp;nbsp;திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் &amp;amp; அறிவிப்புகளின் நீட்சியாகவே உள்ளன. புதிதாக எதுவும் இல்லை.&lt;/p&gt;
&lt;p&gt;நெல் உள்ளிட்ட 10 வகையான பயிர்களில் அதிக விளைச்சல் ஈட்டும் 3 உழவர்கள் வீதம் மொத்தம் 30 பேருக்கு வழங்கப்படும் விருதுகளுக்கு கடலூர் அஞ்சலையம்மாள் பெயர் சூட்டப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் போதாவது பயனுள்ள அறிவிப்புகளை அரசு வெளியிட வேண்டும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/21/e8c03882b1225b43ef2f717348f08a181782024005427194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்]]></title><link>https://tamil.abplive.com/business/budget/cm-vijay-tweet-over-tamilnadu-general-budget-and-agriculture-budget-claimed-it-as-futuristic-budget-tn-politics-270284</link><comments>https://tamil.abplive.com/business/budget/cm-vijay-tweet-over-tamilnadu-general-budget-and-agriculture-budget-claimed-it-as-futuristic-budget-tn-politics-270284#respond</comments><pubDate>Thu, 6 Aug 2026 13:15:41 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ பட்ஜெட் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/business/budget/cm-vijay-tweet-over-tamilnadu-general-budget-and-agriculture-budget-claimed-it-as-futuristic-budget-tn-politics-270284</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;CM Vijay On TN Budget:&lt;/strong&gt; &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த, நிதியமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் அமைச்சர் வினோத்திற்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;முதமைச்சர் விஜய் வாழ்த்து&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை திமுக தாக்கல் செய்து இருந்தது. தொடர்ந்து தேர்தலுக்குப் பிறகு இரண்டு திராவிட கட்சிகளையும் வீழ்த்தி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, தனது முதல் பட்ஜெட்டை சட்டமன்றத்தில் வெற்றிகரமாக தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில்,தமிழ்நாட்டின் வளர்ச்சியை இலக்காகவும், மக்கள் நலனை மையமாகவும் கொண்டு, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் அனைவரும் பாராட்டும் வகையில் 2026 - 27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள&amp;nbsp; நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/politics/tn-cm-vijay-allots-rs-812-crore-for-gold-coin-silk-saree-annan-seer-scheme-details-scheme-270276&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தொலைநோக்கு திட்டங்களை கொண்ட பட்ஜெட்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய திருத்திய நிதிநிலை அறிக்கையானது மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழில்முனைவோர், அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கும் புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/_bg0tQa7hrM?si=yISYjgnLPxXtHWKp&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;வேளாண்மை நிதிநிலை அறிக்கையானது, தமிழ்நாட்டின் வேளாண் வளர்ச்சியோடு, அதன் தொழில்சார்ந்த கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு, பால்வளம், உணவுப் பொருட்களைப் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் போன்ற தொழில்களையும் மேம்படுத்துவதோடு, அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனையும் வாழ்வாதாரத்தையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்&amp;rdquo; என முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/06/c5c501a900f56f0906d344409835b07c1786002223478732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!]]></title><link>https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026-new-government-anbumani-ramadoss-tamil-nadu-budget-welcome-disappointment-irrigation-projects-270206</link><comments>https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026-new-government-anbumani-ramadoss-tamil-nadu-budget-welcome-disappointment-irrigation-projects-270206#respond</comments><pubDate>Wed, 5 Aug 2026 17:06:04 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ பட்ஜெட் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026-new-government-anbumani-ramadoss-tamil-nadu-budget-welcome-disappointment-irrigation-projects-270206</guid><description><![CDATA[&lt;p&gt;சென்னை: தமிழ்நாட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய நிதிநிலை அறிக்கை குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசின் சில அறிவிப்புகளுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள அதே வேளையில், முக்கியமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது குறித்து ஏமாற்றத்தையும் பதிவிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க. அரசு தாக்கல் செய்திருக்கும் அதன் முதல் நிதிநிலை அறிக்கையில் சேவை உரிமைச் சட்டம், நீர்ப்பாசனத் திட்டங்கள், செயற்கை நுண்ணறிவுத் திறன் நகரம், முதியோர் பொழுதுபோக்கு மையங்கள் ஆகியவற்றுக்கான அறிவிப்புகள் வெளியாகியிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தியாவில் 21 மாநிலங்களில் சேவை உரிமைச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் இத்தகைய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று 13 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. இப்போது அந்த சட்டம் இயற்றப்படும் என அரசு அறிவித்திருப்பதன் மூலம் &amp;nbsp;எங்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு 1 பவுன் தங்கம், பட்டுப்புடவை வழங்கும் திட்டம், முதியோர் நலனைக் கருத்தில் கொண்டு முதல் கட்டமாக 5 மாவட்டங்களில் &amp;nbsp;நூலகம், தியான மையம், உள்ளரங்க விளையாட்டுகள் உள்ளிட்ட வசதிகளுடன் மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள் அமைக்கப்படும், அறிவகம் என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவுத்திறன் நகரம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்களாகும்.&lt;/p&gt;
&lt;p&gt;வேளாண்துறை வளர்ச்சிக்காக நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று நீண்டகாலமாக பாமக வலியுறுத்தி வருகிறது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பாசனத் திட்டங்களை செயல்படுத்தும்படி வலியுறுத்தினேன். அதற்கு ஓரளவு பயன் கிடைத்திருக்கிறது. காவிரி &amp;amp; குண்டாறு இணைப்புத் திட்டம் விரைவுபடுத்தப்படும், தென்பெண்ணையாறு &amp;amp; பாலாறு இணைப்புத் திட்டம், &amp;nbsp;தென்பெண்ணையாறு &amp;amp; செய்யாறு இணைப்புத் திட்டம் ஆகியவற்றுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு, காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணைகள் கட்டுவது குறித்து திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.10 கோடி, காவிரி பாசன மாவட்டங்களில் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு குறித்து திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.10 கோடி, காவிரி &amp;amp; கோதாவரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த &amp;nbsp;மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;அதே நேரத்தில் தருமபுரி &amp;amp; காவிரி உபரி நீர் திட்டம், அரியலூர் &amp;amp; சோழர் பாசனத் திட்டம், காவிரி &amp;amp; சரபங்கா &amp;amp; திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டம் ஆகியவை குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது பெரும் &amp;nbsp;ஏமாற்றம் அளிக்கிறது. காவிரி &amp;amp; குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த குறைந்தது 15,000 கோடி தேவைப்படும் நிலையில், அதற்கு வெறும் ரூ.150 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பது எந்த வகையிலும் போதாது. பாசனத் திட்டங்களை செயல்படுத்த ஆண்டுக்கு குறைந்தது ரூ.25,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; தேர்தல் அறிக்கையில், மகளிருக்கு மாதம் ரூ.2500, மாநிலம் முழுவதும் பேருந்துகளில் இலவச பயணம், மாதம் ஒருமுறை மின்சாரம் கணக்கெடுப்பு உள்ளிட்ட சுமார் 400 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு இருந்தன. ஆனால், அவற்றில் 40 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகள் கூட இந்த நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்படவில்லை. தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் உள்ள அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி பார்த்தால் குறைந்தது 6 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். ஆனால், அது குறித்த எந்த அறிவிப்பும் &amp;nbsp;நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;உழவர்கள் வாங்கிய பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்பது தான் அனைத்துத் &amp;nbsp;தரப்பினரின் கோரிக்கை ஆகும். ஆனால், அதற்கான அறிவிப்புகளும் இல்லை. பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு ரூ.44,527 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. திமுக அரசு தாக்கல் செய்த &amp;nbsp;நடப்பாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இது ரூ.48,534 கோடியாகவும், கடந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ரூ.46,767 கோடியாகவும் இருந்தது. இடைக்கால நிதிநிலை அறிக்கையை விட ரூ.4007 கோடி நிதி &amp;nbsp;குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை நிதி ஒதுக்கீடு குறைப்பாக மட்டும் பார்க்க முடியாது. மாறாக பள்ளிக் கல்வித்துறை வேகமாக சீரழிந்து வருவதையே இந்த நிதிக்குறைப்பு காட்டுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் 85% முதல் 90% நிதி ஊதியத்திற்காக மட்டும் தான் &amp;nbsp;செலவு செய்யப்படுகிறது. இத்தகைய சூழலில் அத்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது ஆசிரியர்கள் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருக்கக் கூடும் என்பதையே காட்டுகிறது. ஏற்கனவே அரசு பள்ளிகளில் ஒரு லட்சம் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலையில், இது நிலைமையை மேலும் மோசமாக்கும். அரசு பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர்கள் தயங்கும் நிலையை உருவாக்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;அதேபோல், தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்தப்படும் என்று ஆளுனர் உரையில் அறிவித்த தமிழ்நாடு அரசு, அதற்கான நிதியை இந்த அறிக்கையில் ஒதுக்கீடு செய்யவில்லை. கோவை &amp;amp; அரியலூர் இடையே &amp;nbsp;ரூ.4000 கோடி மதிப்பிலான மின்வழித்தடம் அமைக்கும் திட்டம் தனியார் கூட்டு முயற்சியில் செயல்படுத்தப் படும் என்று கடந்த 2024&amp;amp;ஆம் ஆண்டில் திமுக அரசில் அறிவிக்கப்பட்டது. மின்துறையை தனியார்மயமாக்கும் இந்த திட்டத்திற்கு பாமக எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அத்திட்டம் தனியார் முதலீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது.&lt;/p&gt;
&lt;p&gt;இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.10.71 லட்சம் கோடியாக இருந்த அரசின் கடன், திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் 10.98 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. வருவாய்ப் பற்றாக்குறை ரூ.48,696 கோடியிலிருந்து 55,775 கோடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மூலதன செலவுளுக்கான ஒதுக்கீடு சுமார் ரூ.3000 கோடி குறைக்கப்பட்டுள்ளது. பலவீனமான நிதி மேலாண்மையையே இது வெளிப்படுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;அரசு வேலைவாய்ப்புகள், நீர்ப்பாசனத் திட்டங்கள், வேளாண்துறைக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பது உள்ளிட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அறிவிப்புகளை பதிலுரையிலாவது அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/28/bde756bf5c909f49132ef383b1e708821785229026313194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[TN Budget 2026: ரீல், ரீல்ஸ் விடும் அரசு.. பட்ஜெட்ல ஒன்னும் இல்ல.. இபிஎஸ், பிரேமலதா கடும் விமர்சனம்!]]></title><link>https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026-political-leaders-reaction-edappadi-palanisamy-premalatha-270174</link><comments>https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026-political-leaders-reaction-edappadi-palanisamy-premalatha-270174#respond</comments><pubDate>Wed, 5 Aug 2026 13:42:52 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ பட்ஜெட் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026-political-leaders-reaction-edappadi-palanisamy-premalatha-270174</guid><description><![CDATA[&lt;p&gt;ரீல்ஸ், ரீல் விடுவது தான் இந்த ஆட்சியின் சாதனையாக உள்ளது. பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம் பெறவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ரீல்ஸ், ரீல் விடுவது தான் தவெக அரசு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்தில், &amp;ldquo;இந்த பட்ஜெட்டில் எந்தவொரு முக்கிய அறிவிப்பும் இடம் பெறவில்லை. ஒரு சில மாற்றம் இருக்கும் என சொல்லி ஏற்கனவே உள்ள திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார்கள். ஆட்சிப் பொறுப்பேற்றும் 85 நாட்கள் ஆன நிலையில் எந்தவொரு திட்டமும் கொண்டு வரவில்லை. வசனத்தைப் பேசியே ஓட்டி விட்டார்கள். எல்லாவற்றிற்கும் ரீல்ஸ், ரீல் விடுவது தான் இந்த ஆட்சியின் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. ஆட்சிக்கு வரும் முன் மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என வீர வசனம் பேசினார்கள். இந்த பட்ஜெட்டை பார்க்கும்போது எந்தவொரு திட்டமும் முழுமையாக இடம்பெறவில்லை. தேர்தல் வாக்குறுதிகள் சொன்னது நிறைவேற்றப்படவில்லை. மகளிர் உரிமைத்தொகை ரூ.2500, ஆண்டுக்கு 6 சிலிண்டர், முதியோர் உதவித்தொகை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை என பல அறிவிப்புகளை வெளியிட்டார்கள்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;TN Budget 2026 | &amp;rdquo;முதல்வர் விஜயை பார்த்தாலே ஊழல்வாதிகளுக்கு பயம் வந்துருச்சு&amp;rdquo;கர்ஜித்த  மரிய வில்சன்&quot; src=&quot;https://www.youtube.com/embed/tPcfQdAyA3o&quot; width=&quot;1022&quot; height=&quot;575&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இப்படி சொன்னது எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. வருவாய் பற்றாக்குறை ரூ.55,785 கோடி என சொல்லியிருக்கிறார்கள். நிதி பற்றாக்குறை 1,21,819 கோடி என தெரிவித்திருக்கும் நிலையில் இதையெல்லாம் &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; அரசு எப்படி சரிசெய்யப் போகிறது?.. ஏற்கனவே இருந்த திமுக அரசு நிதி ஆதாரத்தை பெருக்க நிபுணர் குழு அமைத்தனர். ஆனால் 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி கடன் தான் பெற்றார்கள்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;நிதி பற்றாக்குறை, ஒட்டுமொத்த கடன் பற்றாக்குறை என இருக்கும்போது எப்படி சரி செய்ய முடியும்?.. இதற்காக விளக்கமே சொல்லப்படவில்லை. இந்த அரசு எப்போதும்போல திமுக அரசைப் போல பட்ஜெட் என சொல்லி சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள். கால அவகாசம் கொடுத்தால் மட்டும் என்னவாக போகிறது. கடன் வாங்கி தான் அரசை நடத்த வேண்டிய சூழல் தான் இன்று நிலவுகிறது&amp;rdquo; என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பிரேமலதா கடும் விமர்சனம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா பேசுகையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், &amp;ldquo;இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் கடன் முழுமையாக தள்ளுபடி இடம்பெறாதது வருத்தத்திற்குரியது. நீர்மிகை மாநிலமாக தமிழ்நாடு உருவாக வேண்டும் என்ற கோரிக்கை இடம்பெறவில்லை. கடன் தொகையை குறைக்க என்ன வழி என்பது பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என தெரிவித்தார். அதேசமயம் கூவம் உள்ளிட்ட நதிகள் சீரமைப்பு, சாலைகள் வசதி, சூரிய சக்தி மின்சாரம், போக்குவரத்து துறையில் மின் பேருந்துகள் &amp;nbsp;போன்ற திட்டம் பற்றிய அறிவிப்பை வரவேற்கிறேன். &amp;nbsp;இது செயலாக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/essential-tips-for-oily-skin-health-tips-269923&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/05/c9ba037ce43adf19f490506bdb0691ea17859174921421322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-budget-2026-revenue-expenditure-fiscal-deficit-debt-details-270169</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-budget-2026-revenue-expenditure-fiscal-deficit-debt-details-270169#respond</comments><pubDate>Wed, 5 Aug 2026 13:42:13 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-budget-2026-revenue-expenditure-fiscal-deficit-debt-details-270169</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Tamil Nadu Budget 2026:&lt;/strong&gt; தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின்படி மாநிலத்தின் கடன் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்டை, நிதியமைச்சர் மரிய வில்சன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் முக்கிய திட்டங்கள் தொடர்பான விவரங்கள் இடம்பெற்று இருந்தன. இறுதியில் மாநிலத்தின் மொத்த வருவாய், செலவினங்கள் மற்றும் கடன் தொகை தொடர்பான விவரங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/what-should-you-look-for-when-buying-new-helmet-details-in-pics-270115&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தமிழ்நாடு அரசின் வருவாய் விவரங்கள்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 2026-27 நிதியாண்டில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 740 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது&lt;/li&gt;
&lt;li&gt;மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் 2026-27 நிதியாண்டில் 27 ஆயிரத்து 835 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடான 27 ஆயிரத்து 704 கோடி ரூபாயைவிட சற்றே அதிகரித்துள்ளது.&lt;/li&gt;
&lt;li&gt;மத்திய அரசு வரிகளில், தமிழ்நாட்டின் பங்கு 2026-27 நிதியாண்டில் 62 ஆயிரத்து 531 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மத்திய அரசு வரவு-செலவுத் திட்டம் 2026-27-இன் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டது&lt;/li&gt;
&lt;li&gt;மத்திய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள் 2026-27 நிதியாண்டில் 32 ஆயிரத்து 922 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/aDVAC4-pWvU?si=WnGqeRQRNwDRdACQ&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தமிழ்நாடு அரசின் வருவாய் விவரங்கள்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாடு அரசின் செலவினமானது 2026-27 நிதியாண்டில் 4 லட்சத்து 5 ஆயிரத்து 802 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில்&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;ஊதியங்களுக்கான செலவினம்&amp;nbsp; 2026-27 நிதியாண்டில் 91 ஆயிரத்து 32 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது&lt;/li&gt;
&lt;li&gt;ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால நலன் செலவுகளுக்காக 2026-27 நிதியாண்டில் 41 ஆயிரத்து 846 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது.&lt;/li&gt;
&lt;li&gt;ஊதியம் அல்லாத செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புகளுக்காக 19 ஆயிரத்து 698 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது.&lt;/li&gt;
&lt;li&gt;மானியங்கள் மற்றும் நிதி மாற்றங்களுக்கான செலவினம் 2026-27 நிதியாண்டில் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 494 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது&lt;/li&gt;
&lt;li&gt;முந்தைய ஆண்டுகளில் திரட்டப்பட்ட பொதுக் கடனுக்கான வட்டிக்காக 2026-27 நிதியாண்டில் 78 ஆயிரத்து 683 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;&lt;a title=&quot;TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்&quot; href=&quot;https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026-social-welfare-department-key-announcements-takeaways-tn-budget-2026-maria-wilson-270138&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படியுங்கள்: TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;மூலதன செலவு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;திருத்த வரவு-செலவுத் திட்டம் 2026-27ல் மூலதனச் செலவினம் 56,985 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;வருவாய் &amp;amp; நிதிப்பற்றாக்குறை&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;வருவாய் பற்றாக்குறை என்பது 2026-27 நிதியாண்டில் 55 ஆயிரத்து 775 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் 2026-27ல் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறையின்விகிதம் 3.00 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேம்பட்ட வரி நிர்வாகம் மற்றும் வசூல் திறன் உள்ளிட்ட வருவாய் பெருக்க நடவடிக்கைகளின் விளைவாக, இது 2027-28ல் 53,933 கோடி ரூபாயாகவும், 2028-29ல் 51,058 கோடி ரூபாயாகவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தமிழ்நாடு அரசின் மொத்த கடன்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;பொதுக்கடன்களை பொறுத்தமட்டில் இவ்வரசு 2026-27, மொத்தம் 1,73,445 கோடி ரூபாய் கடன் பெறவும், 51,971 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தவும் திட்டமிட்டுள்ளது. பொது கணக்கின் கீழுள்ள பொறுப்புகளும் பொதுக் கடனுடன் சேர்த்துக் கணக்கிடப்படுகின்றன. 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவு திட்டத்தில் மதிப்பிடப்பட்டிருந்த நிகர பொதுக்கடன் மற்றும் பொது கணக்கு பொறுப்புகள் 1,21,653 கோடி ரூபாய், 2026-27 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் 1,20,964 கோடி ரூபாயாக உள்ளது. இதன் விளைவாக, 31 மார்ச் 2027ஆம் நாளில் நிலுவைப் பொறுப்புகள் 10 லட்சத்து 98 ஆயிரத்து 768 கோடி ரூபாயாக இருக்கும் என தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/05/74402ccdf36223dc38f8a6fc0d7a783e1785917158051732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்]]></title><link>https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026-key-announcements-takeaways-for-chennai-development-maria-wilson-270148</link><comments>https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026-key-announcements-takeaways-for-chennai-development-maria-wilson-270148#respond</comments><pubDate>Wed, 5 Aug 2026 12:33:37 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ பட்ஜெட் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026-key-announcements-takeaways-for-chennai-development-maria-wilson-270148</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Tamil Nadu Budget 2026:&lt;/strong&gt; தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் சென்னை மாநகராட்சியின் குடிநீர் மற்றும் மழைநீர் தொடர்பான பல்வேறு திட்டங்களுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தமிழ்நாடு அரசு பட்ஜெட் - சென்னைக்கான அறிவிப்புகள்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்டை, நிதியமைச்சர் மரிய வில்சன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் முக்கிய திட்டங்கள் தொடர்பான விவரங்கள் இடம்பெற்று இருந்தன. அந்த வகையில் சென்னையின் பிரதான பிரச்னைகளான குடிநீர், மழைநீர் வடிகால், போக்குவரத்து நெரிசல், எதிர்கால வளர்ச்சியை கொண்டு நகரை மறுசீரமைப்பது தொடர்பான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் வெளியான சில முக்கிய திட்டங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/what-should-you-look-for-when-buying-new-helmet-details-in-pics-270115&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;சென்னையின் வளர்ச்சி &amp;amp; மேம்பாட்டிற்கான திட்டங்கள்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;சென்னை விரிவாக்க திட்டம்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்பின்படி, &amp;ldquo;சென்னை பெருநகரப் பகுதியின் விரைவான விரிவாக்கத்தைக் கருத்தில் கொண்டும், ஒருங்கிணைந்த திட்டமிடலின் தேவையை உணர்ந்தும் 5,904 சதுர கி.மீ. பரப்பளவில், விரிவுபடுத்தப்பட்ட சென்னை பெருநகரப் பகுதிக்கான ஓர் விரிவான முழுமைத் திட்டத்தை (Comprehensive Master Plan) அரசு தயாரிக்கும். இத்திட்டமானது,நீண்டகால வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான ஒரு வரைபடமாகச் செயல்படும். மேலும், இந்த முழுமைத் திட்டம் உலகளாவிய சிறந்த நடைமுறைகள் மற்றும் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட பெருநகரத் திட்டமிடல் கட்டமைப்புகளுடன் ஒப்பிடப்பட்டு தரம் மதிப்பிடப்படும். இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த அரசு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/dvhojNaw4O8?si=VxBSOVg0BVShHGvX&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;&amp;nbsp;சென்னை போக்குவரத்தை மேம்பாடுத்தும் திட்டம்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;நகர்ப்புரப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், சென்னை காவல்துறை மற்றும் பெருநகரப் போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சியின் நுண்ணறிவுப் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு இறுதிக்கட்ட செயலாக்கத்தில் உள்ளது. மேலும், பாதசாரிகளுக்கான கட்டமைப்பு வசதி, அனைவரும் சமமாக அணுகக்கூடிய வசதி மற்றும் நகர்ப்புர வடிவமைப்பு மேம்பாடு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து, விரிவான நகர்ப்புரப் போக்குவரத்து வசதிகள் மற்றும் தெருக்கள் மறுசீரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் ஒரு பகுதியாக, 20 இடங்களில் திறன்மிகு வாகன நிறுத்துமிட மேலாண்மை (smart parking management) அமைக்கப்படுவதுடன், அம்பத்தூர் மற்றும் கிண்டி தொழிற்பேட்டைகளின் சாலைகள் மறுவடிவமைக்கப்படும். சென்னையின் பசுமைப் பரப்பை மேம்படுத்தி, மக்களை மையமாகக் கொண்ட பொது இடங்களை உருவாக்கும் வகையில், குடியிருப்புப்பகுதிகள் மற்றும் முக்கிய வழித்தடங்களின் நடைபாதைகள் அழகுபடுத்தப்பட்டு பசுமையாக்கப்படும்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;பேரிடர் மீட்பு நடவடிக்கைகள்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;சென்னையை ஒரு நிலையான மற்றும் பேரிடர் காலங்களில் விரைந்து மீளும் தன்மையுள்ள நகரமாக மாற்றுவதற்கான தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக, பல்வேறு இடங்களில் நீர் நிலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில், பசுமை உட்கட்டமைப்பிற்கான மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். நகர்ப்புர வெள்ளப் பாதிப்புகளைத் தடுப்பதற்கு முக்கிய நீர்வழித் தடங்களின் கொள்ளளவை அதிகரிக்கும் பொருட்டு வெள்ளத்தடுப்புச் சுவர்களின் உயரம் உயர்த்தப்பட்டு, சங்கிலி இணைப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சுற்றுச்சூழல் வளங்கள் பாதுகாக்கப்படுவதுடன், நிலையான சமூகப் பயன்பாட்டு இடங்கள் உருவாக்கப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்&quot; href=&quot;https://tamil.abplive.com/business/budget/tamil-nadu-budget-2026-social-welfare-department-key-announcements-takeaways-tn-budget-2026-maria-wilson-270138&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படியுங்கள்: TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;சென்னையின் குடிநீர் ஆதாரம்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;சென்னையில் உள்ள அனைத்து முக்கியக் குடிநீர் ஆதாரங்களையும் குடிநீர் விநியோக நிலையங்களுடன் இணைக்கும் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் 3,108 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. 2030-31 ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும் வகையில் நடைபெற்று வரும் இத்திட்டப் பணிகள் முடிவடைந்த பின்னர், சென்னை மாநகரம் முழுவதும் சமமான மற்றும் தடையற்ற குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;கூவம் &amp;amp; அடையாறு நதி மீட்பு&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;&amp;nbsp;சியோல் நகரத்தின் சியோங் - கியே -சியோன் (Cheonggyecheon) நதி, சிங்கப்பூர் நகரத்தின் கல்லாங் (Kallang) நதி போன்றவை நதிகள் மறுசீரமைப்பின் மூலம், அந்நகரங்களின் உலகளவில் பேசப்படும் அடையாளங்களாக மாறிவிட்டன. கூவம் மற்றும் அடையாற்றினை சென்னையின் அடையாளமாக மாற்றுவதற்கு உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் பொதுமக்கள் படகு சவாரி செய்வதும், குழந்தைகள் ஆனந்தக் குளியலில் ஈடுபடுவதையும், அனைத்து வயதினரும் நதிக்கரையில் உடற்பயிற்சி செய்து தூய்மையான காற்றை சுவாசிப்பதையும் அரசு உறுதிசெய்யும்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;குளிர்சாதன பேருந்துகள்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு குளிர்சாதன வசதிகளைக் கொண்ட 1,000 புதிய மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். பேருந்துப் பணிமனைகளில் மின்சாரப் பேருந்துகளுக்கான மின்சாரம் மற்றும் இயந்திரவியல் சார்ந்த வசதிகளை ஏற்படுத்துவதற்காக, திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;மெட்ரோ ரயில் திட்டங்கள்:&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 118.9 கி.மீ. நீளத்திலான மூன்று வழித்தடங்களைக் கொண்ட கட்டம்-IIன் பணிகள் 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான தடத்தை, ஏற்கெனவே உள்ள வடபழனி மெட்ரோ நிலையத்துடன் இணைக்கப்படும் வகையில் 14.64 கி.மீ. நீளத்திலான, 11 மெட்ரோ ரயில் நிலையங்களைக் கொண்ட கட்டம்-II-ன் முதல் பகுதி, விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்படவுள்ளது. மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட பின்வரும் மெட்ரோ இரயில் திட்டங்கள் இந்திய அரசின் தீவிர பரிசீலனையின் கீழ் உள்ளன.&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை.&lt;/li&gt;
&lt;li&gt;ஆவடி வழியாக கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை&lt;/li&gt;
&lt;li&gt;ஸ்ரீபெரும்புதூர் வழியாக பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையிலான வழித்தடத் திட்டங்களுக்கு இந்திய அரசு விரைவான ஒப்புதல் வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன&amp;rdquo; என தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/li&gt;
&lt;/ul&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/30/6678ebb413b6af1734b3e695b1cca41d17853883015131321_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Vetri Veedu Thittam: வீடு கட்ட ரூ.5 லட்சம் மானியம்.. வெற்றி திட்டத்தை அறிவித்த முதல்வர் விஜய்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-budget-2026-vetri-veedu-thittam-housing-scheme-rs-5-lakh-assistance-270152</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-budget-2026-vetri-veedu-thittam-housing-scheme-rs-5-lakh-assistance-270152#respond</comments><pubDate>Wed, 5 Aug 2026 12:16:14 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-budget-2026-vetri-veedu-thittam-housing-scheme-rs-5-lakh-assistance-270152</guid><description><![CDATA[&lt;p&gt;தவெக அரசின் பட்ஜெட்டில் புதிய மாநில வீட்டு வசதி திட்டமான வெற்றி வீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இப்படியான நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெற்றி வீடு திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp; நடப்பு நிதியாண்டில் சுமார் 70 ஆயிரம் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த திட்டத்திற்காக ரூ.3,500 கோடி மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இந்த திட்டத்தில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் வீடு கட்டவதற்கு கடந்த ஆட்சிக்காலத்தில் ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்பட்டது. இதனை &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; அரசு ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது.&amp;nbsp; இதுதொடர்பான அறிவிப்பில், ஊரகப் பகுதிகளில் வாழும் வீடற்ற ஏழைக் குடும்பங்களுக்கு நிலையான வீட்டு வசதியை உறுதி செய்வதற்கு இந்த திட்டம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளாக மாநில மற்றும் மத்திய அரசுகள் பல்வேறு வீட்டுவசதித் திட்டங்களை செயல்படுத்தியிருந்தாலும், தமிழ்நாடு இன்னும் குடிசைகள் அற்ற மாநிலமாக மாறவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் சிக்கலை இந்த திட்டம் தீர்வளிக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;TN Budget 2026 | &amp;rdquo;முதல்வர் விஜயை பார்த்தாலே ஊழல்வாதிகளுக்கு பயம் வந்துருச்சு&amp;rdquo;கர்ஜித்த  மரிய வில்சன்&quot; src=&quot;https://www.youtube.com/embed/tPcfQdAyA3o&quot; width=&quot;1022&quot; height=&quot;575&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;ஊரக வளர்ச்சித்துறை மூலம் இந்த திட்டம் மேற்கொள்ளப்படும். அதுமட்டுமல்லாமல் மலைப்பகுதி ஊராட்சிகளின் மேம்பாட்டிற்காக ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் ஒரு தனித் துணைத்திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு கிராமப்புற அதிகாரமளித்தல், மாற்றம் மற்றும் மறுமலர்ச்சி முன்னெடுப்புத் திட்டம் ஆண்டிற்கு 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;முந்தைய அரசில் இருந்த திட்டங்கள்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;கடந்த 2011-2016ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதலமைச்சரால் கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்குச் சொந்தமாக வீடு கட்ட முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக ₹2.10 லட்சம் முழு மானியமாக வழங்கப்பட்டது. அதன்படி வீடு கட்ட ரூ.1.80 லட்சமும், சூரிய மின்சக்தி விளக்குகள் அமைக்க ரூ.30,000ம் ஒதுக்கப்பட்டது. இந்த வீடுகள் முற்றிலும் இலவசமாகவே பயனாளிகளுக்குக் கட்டித் தரப்பட்டன.&lt;/p&gt;
&lt;p&gt;இதனைத் தொடர்ந்து திமுக ஆட்சியில் கலைஞர் வீடு திட்டம் தொடங்கப்பட்டது. இதில் வீடு கட்ட ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/essential-tips-for-oily-skin-health-tips-269923&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/05/6be3346c668f7f793fb0b32cba8ce91e17859122544051322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Top 10 Tamil Nadu Budget 2026 : பட்ஜெட்டின் மிக முக்கியமான டாப் 10 சிறப்பம்சங்கள் மற்றும் அறிவிப்புகள்...]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/top-10-tamil-nadu-budget-2026-the-top-10-most-important-highlights-and-announcements-of-the-budget-270139</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/top-10-tamil-nadu-budget-2026-the-top-10-most-important-highlights-and-announcements-of-the-budget-270139#respond</comments><pubDate>Wed, 5 Aug 2026 11:47:33 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/top-10-tamil-nadu-budget-2026-the-top-10-most-important-highlights-and-announcements-of-the-budget-270139</guid><description><![CDATA[&lt;p&gt;முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக (TVK) அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை (2026-27), நிதியமைச்சர் என். மரிய வில்சன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் மிக முக்கியமான டாப் 10 சிறப்பம்சங்கள் மற்றும் அறிவிப்புகள்:&lt;/p&gt;
&lt;h2&gt;தமிழ்நாடு அரசின் பட்ஜெட் 2026 ( tamilnadu budget 2026 )&lt;/h2&gt;
&lt;p&gt;முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின் முதல் பட்ஜெட்டை, நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்து வருகிறார். &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு முன்னெடுக்கப்பட்ட வளர்ச்சி திட்டங்கள், ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள், அரசு நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புகள் போன்றவை பட்டியலிடப்பட்டன. மேலும், மதுபான உற்பத்தி ஆலைகளுக்கான கூடுதல் சிறப்பு கட்டணம் &amp;nbsp;பதிவுத்துறையில் நேரடியாக வர வேண்டிய அவசியமின்மை மற்றும் சுரங்க நடவடிக்கைகள் கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் மாநிலத்திற்கு கூடுதலாக சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span style=&quot;color: #fa2909;&quot;&gt;இந்த பட்ஜெட்டின் மிக முக்கியமான டாப் 10 சிறப்பம்சங்கள் மற்றும் அறிவிப்புகள்:&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;h2&gt;பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்கம், 1 பட்டுப்புடவை&lt;/h2&gt;
&lt;p&gt;பெண்களுக்கு திருமணத்தின் போது அரசு சார்பில் 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்கும் 'அண்ணன் சீர்' திட்டத்துக்கு ரூ.812 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு. அனைத்து பெண்களுக்கும் பொருந்துமா? அல்லது யாருக்கெல்லாம் பொருந்தும்? எனக் குறிப்பிடப்படவில்லை.&lt;/p&gt;
&lt;h2&gt;தாய்மாமன் தங்க மோதிடம் திட்டம்.. ரூ.560 கோடி ஒதுக்கீடு.!&lt;/h2&gt;
&lt;p&gt;'தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட'த்தின்படி அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும், மற்றும் பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் விதமாக தாய்மாமன் சீர் என்ற முறையில் குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாடு அரசின் சுகாதாரச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையின் பிறப்பை நினைவு கூறும் வகையிலும், தாய்மையின் மகிழ்ச்சி மற்றும் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையிலும் இந்த தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியதுடன் ஆண்டுதோறும் ரூ. 755.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்யவுள்ளது. இத்திட்டத்திற்கான ஒப்பந்த புள்ளிகள் உடனடியாக கோருவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தின் கீழ், 2026 ஜூன் 22 (&lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; பிறந்த நாள்) முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;புதிய பயணம் புதிய வேகம் திட்டம்&lt;/h2&gt;
&lt;p&gt;11ஆம் வகுப்பு மாணவர்கள் 5.32 லட்சம் பேருக்கு ஹெல்மெட், வாட்டர்பாட்டில் வ்பசதியுடன் ரூ.277 கோடி மதிப்பில் சைக்கிள் வழங்கப்படும்&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம்&lt;/h2&gt;
&lt;p&gt;வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம் &amp;ndash; கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் 110 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். கால்நடைகள் காப்போம் திட்டம் தொடக்கம். எதிர்பாராத இழப்புகளிலிருந்து விவசாயிகளுக்கு நிதி பாதுகாப்பு வழங்கப்படும்.புதிய கால்நடை காப்பீடு திட்டத்திற்கு ரூ.31 கோடி நிதி ஒதுக்கீடு&lt;/p&gt;
&lt;h2&gt;கர்ப்பிணி பெண்களுக்கு குட்நியூஸ்.. தாய் கேர் திட்டம் அறிவிப்பு.!&lt;/h2&gt;
&lt;p&gt;கருவுற்ற பெண்களுக்கான சேவை மற்றும் உதவி மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும். மகப்பேறு நாள் நெருங்கும் வேளையில் தங்கியிருந்து பயன்பெறலாம். கட்டணமில்லா உணவு மற்றும் மருத்துவ உதவிகள் தொடர் மருத்துவ கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகள் மொத்தம் ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு&lt;/p&gt;
&lt;h2&gt;12 மாவட்டங்களில் முதியோர் இல்லங்கள் நிறுவப்படும்&lt;/h2&gt;
&lt;p&gt;12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும். மூத்த குடிமக்களுக்கு பொழுதுபோக்கு மையங்கள் அமைக்கப்படும். நூலகம், யோகா, தியானம், உள்ளரங்க விளையாட்டு வசதிகள் முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் அமைக்கப்படும். ரூ.33 கோடி நிதி ஒதுக்கீட்டில் நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்.&lt;/p&gt;
&lt;h2&gt;வெற்றி திறன் பயிற்சித் திட்டம்&lt;/h2&gt;
&lt;p&gt;12 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கும் 1 லட்சம் வேலையில்லா இளைஞர்களுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, அரசு &amp;amp; தனியார் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து முதற்கட்டமாக 20,000 இளைஞர்களுக்கு பணியிடப் பயிற்சி, பட்டதாரிகள் மற்றும் தொழிற்கல்வி தகுதி பெற்றவர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கப்படும். நிரந்தர வேலைவாய்ப்பு இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.&lt;/p&gt;
&lt;h2&gt;வெற்றி லேப்டாப் திட்டம் (Vetri Laptop Scheme):&lt;/h2&gt;
&lt;p&gt;மாணவர்களின் கணினி அறிவை மேம்படுத்தும் வகையில் 'வெற்றி லேப்டாப் திட்டம்' உருவாக்கப்பட்டு, இதற்காக 2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;சிறப்பு அரசு சட்டக்கல்லூரி&lt;/h2&gt;
&lt;p&gt;தென் மாவட்ட மாணவர்களின் பயன்பாட்டிற்காக மதுரையில் 300 மாணவர்கள் சேர்க்கை வசதியுடன் கூடிய புதிய அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்படும்.&lt;/p&gt;
&lt;h2&gt;சூப்பர் க்ளீன் சூப்பர் கேம்பஸ் திட்டம்&lt;/h2&gt;
&lt;p&gt;அரசு பள்ளிகளில் தூய்மையான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது மாணவர்களின் நலனுக்கு அவசியமானதாகும். சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள் கழிவறை பராமரிப்பு பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.&lt;/p&gt;
&lt;h2&gt;பள்ளி பாடத்திட்டத்தை சீரமைக்க ரூ25 கோடி ஒதுக்கீடு&lt;/h2&gt;
&lt;p&gt;பள்ளி பாடத்திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய ரூ25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, போதைப்பொருள் மற்றும் அதன் தவறான பயன்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த 10581 என்ற எண் பள்ளி வளாகத்தில் காட்சிப்படுத்தப்படும். இதை செயல்படுத்த ரூ7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/05/d0a7fe5961fa01a7ded0447cb15c18a31785910560477194_original.jpg" width="220"/></item></channel></rss>