சரக்கு போக்குவரத்திற்கான வழித்தடம்
மத்திய பட்ஜெட்டை நாடே எதிர்பார்த்து இருந்த நிலையில், அதற்கு ஏற்ப பல்வேறு அறிவிப்புகள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன் படி, நீடித்த சரக்கு போக்குவரத்துக்கான சூழல் அமைப்பிற்கு உத்வேகம் அளிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். இதன் படி, புதிய பிரத்யேக சரக்கு போக்குவரத்துக்கான வழித்தடம். 20 புதிய தேசிய நீர்வழிப்பாதைகள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார். பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் உருவாக்கப்படும். உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துக்கான கப்பல் பழுதுநீக்கும் கட்டமைப்பு வாரணாசி மற்றும் பாட்னாவில் அமைக்கப்படும்.
கடலோர சரக்குப் போக்குவரத்து ஊக்குவிப்புத்திட்டம் தொடங்கப்படுவதன் மூலம் உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து மற்றும் கடலோரக் கப்பல் போக்குவரத்துக்கான் பங்களிப்பு அதிகரிக்கும் என தெரிவித்தார். மேலும் அனிமேஷன், விசுவல் எஃபக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் க்ரியேட்டர்களுக்கு என, 1,500 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் கண்டண்ட் க்ரியேட்டர் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
விபத்து காப்பீட்டிற்கு வரிவிலக்கு
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தென்னை மற்றும் முந்திரி உற்பத்தியை அதிகரிக்க தனித் திட்டம் ஏற்படுத்தப்படும்.வாகன விபத்து காப்பீட்டு தொகைகுக வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. நகராட்சி பத்திரங்கள்: பெருநகரங்களின் மேம்பாட்டுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் 1,000 கோடி ரூபாய் மதிப்பிற்கும் கூடுதலான ஒற்றை கடன் பத்திரங்களுக்கு 100 கோடி ரூபாய் ஊக்கத்தொகை.மின் நிதி நிறுவனமும், கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவனமும் மறுசீரமைக்கப்படும்.
சுகாதாரத்துறையில் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான நடவடிக்கைள்:
- சுகாதார பணிகள் சார்ந்த தொழில்முறையினருக்கான நிறுவனங்கள் மேம்படுத்தப்படும். 10 தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் அது சார்ந்த புதிய நிறுவனங்கள் உருவாக்கப்படும்.
- சுகாதாரப் பரமாரிப்புத் துறையில் உள்ள தொழில் முறை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் வலுவான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.
- ஜாம் நகரில் உள்ள உலக சுகாதார அமைப்பில் சர்வதேச பாரம்பரிய மருத்துவ மையம் மேம்படுத்தப்படும்.
- கடனுதவியுடன் கூடிய மூலதன மானியத் திட்டம் தொடங்கப்படும்; 20,000-க்கும் அதிகமான கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்; கால்நடை மற்றும் துணை கால்நடை மருத்துவக் கல்லூரிகள், பரிசோதனை ஆய்வகங்கள், இனப்பெருக்க வசதிகள் ஏற்படுத்தப்படும்.
- மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு SHE MART என்ற பெயரில் கடைகள் அமைக்கப்படும்.
- லாபம் இல்லாத நிலையை ஈடு செய்யும் நிதியம் அல்லது மூலதன ஆதரவு மூலம் மாவட்டந்தோறும் ஒரு மாணவியர் விடுதி ஏற்படுத்தப்படும்
