<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>Stroke Awareness: "பக்கவாதம் குறித்து கவலை வேண்டாம்" .. அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் குறித்த முழு விபரம் இதோ..!</title><atom:link href="https://tamil.abplive.com/brand-wire/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 11 Jun 2026 17:50:34 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[Pulchra Fashion : புல்க்ரா ஃபேஷன்: ஜெய்பூர் பருத்தி நைட்டிகள் சிறந்த உறக்கத்திற்கான தீர்வு]]></title><link>https://tamil.abplive.com/brand-wire/pulchra-fusion-nighty-jaipuri-cotton-nighty-nighties-good-sleep-guarantee-204001</link><comments>https://tamil.abplive.com/brand-wire/pulchra-fusion-nighty-jaipuri-cotton-nighty-nighties-good-sleep-guarantee-204001#respond</comments><pubDate>Mon, 14 Oct 2024 17:38:16 +0530 </pubDate><dc:creator><![CDATA[ தாக்‌ஷா ]]></dc:creator><category><![CDATA[ Brand Wire ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/brand-wire/pulchra-fusion-nighty-jaipuri-cotton-nighty-nighties-good-sleep-guarantee-204001</guid><description><![CDATA[&lt;p&gt;நமது அன்றாட வாழ்க்கை முழுக்க, இரவின் தரமான உறக்கம் மிக முக்கியமானது. நல்ல உடல் நலனையும், மனநிலையையும் பாதுகாக்க நன்றாக உறங்குவது அவசியம். இதற்காக, உங்கள் துாக்கத்தை மேலும் சிறப்பாக மாற்றுவதற்காக,&amp;nbsp;புல்க்ரா ஃபேஷன்&lt;a href=&quot;https://pulchrafashion.com/product-category/cotton-nighty/&quot;&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;a href=&quot;https://pulchrafashion.com/product-category/cotton-nighty/&quot;&gt;ஜெய்பூரி பருத்தி நைட்டிகளை&lt;/a&gt;&amp;nbsp;அறிமுகப்படுத்துகிறது. இந்த நைட்டிகள் பாரம்பரிய ஜெய்பூர் கைத்தறி பருத்தியால் செய்யப்பட்டவை, இது உங்கள் தோற்சாலைக்கு சுதந்திரமாக சுவாசிக்கும் அனுபவத்தை தருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;ஏன்&lt;/strong&gt; &lt;strong&gt;ஜெய்பூர்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;பருத்தி&lt;/strong&gt;?&lt;/p&gt;
&lt;p&gt;ஜெய்பூர் பருத்தி தனிப்பட்ட தன்மை கொண்டது. இது எளிமையிலும், நுட்பத்திலும் மிக்கது. இவை மிகவும் மெல்லிய நூலால் நெய்யப்பட்டதால், உடலை குளிர்ச்சியுடன் வைத்துக்கொள்ளும். குறிப்பாக, வெப்பம் அதிகமாக இருக்கும் நாட்களில் இதை அணிவது மிகவும் ஆரோக்கியமானது. உங்கள் தினசரி இரவுகளில் இதனைப் பயன்படுத்தினால், உங்கள் தோல் மிகவும் வசதியாக இருக்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;புல்க்ரா&lt;/strong&gt; &lt;strong&gt;ஃபேஷனின்&lt;/strong&gt; &lt;strong&gt;நம்பகத்தன்மை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;புல்க்ரா ஃபேஷன் எப்போதும் உங்களின் வசதிக்காகவே தயாரிப்பு செய்கிறது. நம் கைவினைப் பொருட்கள் பாரம்பரியத்துடன் இழையினும், அவற்றின் உபயோக்திறனும் உச்சமாக இருக்கும். இதனுடன், நம்&amp;nbsp;ஜெய்பூரி பருத்தி நைட்டிகள்&amp;nbsp;இப்பொழுது புழக்கத்தில் உள்ளவை. இவற்றின் வழியாக நீங்கள் அனுபவிக்கபோகும் குளிர்ச்சி, மென்மை மற்றும் வசதி, உங்கள் தூக்கத்தை மிகவும் இன்பமாக மாற்றும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;உங்களுக்கான&lt;/strong&gt; &lt;strong&gt;சரியான&lt;/strong&gt; &lt;strong&gt;தேர்வு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;புல்க்ரா ஃபேஷனில் நாங்கள் பலவிதமான வடிவமைப்புகள் மற்றும் மாடல்களை வழங்குகிறோம்.&lt;a href=&quot;https://pulchrafashion.com/product-category/cotton-nighty/&quot;&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;a href=&quot;https://pulchrafashion.com/product-category/cotton-nighty/&quot;&gt;பருத்தி நைட்டிகள்&lt;/a&gt;&amp;nbsp;வகையில் உள்ள நம் புது வரவுகளை இன்றே ஆர்டர் செய்து பார்த்து மகிழுங்கள்.&lt;/p&gt;
&lt;p&gt;(பொறுப்பு துறப்பு: ABP Network Pvt. Ltd மற்றும்/அல்லது ABP Live இந்த கட்டுரையின் உள்ளடக்கத்துக்கு பொறுப்பேற்காது. வாசகர்கள் ஆராய்ந்து இத்தயாரிப்புகளை வாங்கலாம், பயன்படுத்தலாம்.)&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/16/98fdde9b673e68adafaa91e560503b121729065402048109_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்?;  கொலையா? தற்கொலையா? - விசாரணையை துரிதப்படுத்திய போலீஸ்]]></title><link>https://tamil.abplive.com/news/tirunelveli/nellai-east-district-congress-president-death-case-police-have-intensified-the-investigation-tnn-181582</link><comments>https://tamil.abplive.com/news/tirunelveli/nellai-east-district-congress-president-death-case-police-have-intensified-the-investigation-tnn-181582#respond</comments><pubDate>Sat, 4 May 2024 17:10:32 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ரேவதி ]]></dc:creator><category><![CDATA[ நெல்லை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tirunelveli/nellai-east-district-congress-president-death-case-police-have-intensified-the-investigation-tnn-181582</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவர் கேபிகே ஜெயக்குமார். இவர் நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த கரைசுத்துபுதூர் பகுதியை சேர்ந்தவர். பாரம்பரிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவருக்கு ஒரு மனைவி இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். 3 ஆண்டுகளுக்கு மேலாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார். கேபிகே ஜெயக்குமார் கடந்த 30 ஆம் தேதி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாருக்கு புகார் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் தனது வீட்டை சுற்றி சில நபர்கள் வருவதாகவும் திருடு உள்ளிட்ட சம்பவத்தில் ஈடுபட முயற்சி நடப்பதாகவும், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பதாகவும்&amp;nbsp; காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களை சுட்டிக்காட்டி நான்கு பக்க புகார் ஒன்றை அனுப்பி இருந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டாம் தேதி இரவு முதல் தனது தந்தையை காணவில்லை என கூறி நெல்லை மாவட்டம் உவரி காவல் நிலையத்தில் கேபிகே ஜெயக்குமார் மகன் கருத்தையா ஜெப்ரின் புகார் ஒன்றை அளித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதன் அடிப்படையில் நெல்லை மாவட்டம் உவரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதுடன் மூன்று தனி படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணிகளையும் மேற்கொண்டனர். இந்த சூழலில் கரைசுத்து புதூர் பகுதியில் உள்ள ஜெயக்குமார் இல்லத்திற்கு பின்புறம் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தென்னை மற்றும் தேக்கு மரங்கள் அமைந்துள்ள தோப்பு பகுதியில் இன்று காலை பணிக்கு சென்ற நபர்கள் எரிந்த நிலையில் உடல் ஒன்று தோட்டத்தில் இருப்பதை பார்த்து காவல்துறையினர் மற்றும் ஜெயக்குமார் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து உறவினர்கள் பார்த்த போது பாதி எரிந்த நிலையில் இருக்கும் உடல் ஜெயக்குமார் &amp;nbsp;என உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வள்ளியூர் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவ இடத்தில் தடைய அறிவியல் துறை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும் சம்பவத்தை முதலில் பார்த்தவர்கள் அங்கு இருந்தவர்கள் உறவினர்கள் என பலரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சூழலில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து உடல் கைப்பற்றப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் புகார் தாரரான கருத்தையா ஜெபரின் மற்றும் ஜெயக்குமார் மனைவி உள்ளிட்டவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கே பி கே ஜெயக்குமார் ஆதரவாளர்கள் என திரளானோர் கே பி கே ஜெயக்குமார் இல்லத்தில் குவிந்தனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உடற்கூறு ஆய்வுக்கு பின் உடலை வாங்க போவதில்லை என உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உடற்கூறு &amp;nbsp;ஆய்விற்காக அனுப்பப்பட்ட உடலில் கம்பிகள் சுற்றி இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உவரி காவல்துறையினர் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் உயிரிழந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த 30ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அளித்த புகாரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் பெயர்கள் அடங்கிய புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் உரிய விசாரணையை காவல்துறையினர் நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாது அப்பகுதி மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/04/9a9dcdba2376bf2ab0c4c734758cc8e81714818565995571_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[Stroke Awareness: "பக்கவாதம் குறித்து கவலை வேண்டாம்" .. அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் குறித்த முழு விபரம் இதோ..!]]></title><link>https://tamil.abplive.com/brand-wire/stroke-awareness-symptoms-and-treatment-full-details-here-147930</link><comments>https://tamil.abplive.com/brand-wire/stroke-awareness-symptoms-and-treatment-full-details-here-147930#respond</comments><pubDate>Tue, 31 Oct 2023 19:15:45 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ABP NADU ]]></dc:creator><category><![CDATA[ Brand Wire ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/brand-wire/stroke-awareness-symptoms-and-treatment-full-details-here-147930</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;பக்கவாதம் குறித்து கவலை வேண்டாம்; அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் எளிமைபடுத்தப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;டாக்டர்&lt;/strong&gt; &lt;strong&gt;ஹரிஹரபிரகாஷ்&lt;/strong&gt;&lt;strong&gt; R, &lt;/strong&gt;&lt;strong&gt;கன்சல்டன்ட்&lt;/strong&gt; &lt;strong&gt;இன்டர்வென்ஷனல்&lt;/strong&gt; &lt;strong&gt;ரேடியாலஜிஸ்ட்&lt;/strong&gt;&lt;strong&gt;, &lt;/strong&gt;&lt;strong&gt;ராயல்கேர்&lt;/strong&gt; &lt;strong&gt;சூப்பர்&lt;/strong&gt; &lt;strong&gt;ஸ்பெஷாலிட்டி&lt;/strong&gt; &lt;strong&gt;மருத்துவமனை&lt;/strong&gt;&lt;strong&gt;, &lt;/strong&gt;&lt;strong&gt;கோயம்புத்தூர்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;டாக்டர்&lt;/strong&gt; &lt;strong&gt;சம்பத்குமார்&lt;/strong&gt;&lt;strong&gt; P, &lt;/strong&gt;&lt;strong&gt;கன்சல்டன்ட்&lt;/strong&gt; &lt;strong&gt;இன்டர்வென்ஷனல்&lt;/strong&gt; &lt;strong&gt;ரேடியாலஜிஸ்ட்&lt;/strong&gt;&lt;strong&gt;, &lt;/strong&gt;&lt;strong&gt;ராயல்கேர்&lt;/strong&gt; &lt;strong&gt;சூப்பர்&lt;/strong&gt; &lt;strong&gt;ஸ்பெஷாலிட்டி&lt;/strong&gt; &lt;strong&gt;மருத்துவமனை&lt;/strong&gt;&lt;strong&gt;, &lt;/strong&gt;&lt;strong&gt;கோயம்புத்தூர்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;உலகம் முழுவதும் ஆண்டுதோறும் அக்டோபர் 29&amp;ndash;ந்தேதி உலக பக்கவாத தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த உலக பக்கவாதம் தினம் இந்தியாவில் அதிகரித்து வரும் பக்கவாத நோயை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;பக்கவாத நோயானது உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்களை பாதிக்கிறது. நமது மூளையானது உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் மிகவும் அற்புதமான உறுப்பு ஆகும். ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு, மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ரத்த ஓட்டம் இல்லாவிட்டால், உடலின் அந்த பகுதி சரியாக வேலை செய்யாது. பக்கவாதத்தின் விளைவுகள் என்பது முதன்மையாக மூளையில் ரத்த ஓட்டம் தடைபட்ட இடம் மற்றும் மூளை திசுக்களின் பாதிப்பு அளவைப் பொறுத்ததாகும்.&lt;/p&gt;
&lt;p&gt;பக்கவாதம் ஒருவரின் அறிவாற்றலை பாதிப்பதோடு, கடுமையான நரம்பியல் செயலிழப்பு மற்றும் இயலாமைக்கு வழிவகுக்கிறது. அத்துடன் ஒரு நோயாளியின் அன்றாட வாழ்க்கை முறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இறப்புக்கான காரணங்களில் பக்கவாதம் மூன்றாவது இடத்திலும், இயலாமைக்கான ஆறாவது முக்கிய காரணமாகவும் உள்ளது.&amp;nbsp; இயலாமை மற்றும் இறப்புக்கு இது ஒரு முக்கிய காரணமாக உள்ளது. ஆனால் பலருக்கு இது குறித்தும், இதன் அறிகுறிகள், சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் தெரியவில்லை. பக்கவாதம் 80% வரை தடுக்கக்கூடிய நோய் என்பதை அறிந்தால் நீங்கள் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள். &amp;nbsp;பக்கவாதத்தைத் தடுப்பது என்பது ஆரம்பகால நிலையில் கண்டறிந்து அதற்கு சரியான மருத்துவ சிகிச்சையை அளிப்பதாகும். உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 90.5 சதவீத பக்கவாத நோய்கள் மாற்றியமைக்கக்கூடிய ஆபத்து காரணிகளால் ஏற்படுவதும், 74.2 சதவீத பக்கவாதம் நடத்தை காரணமாக அதாவது புகை பிடித்தல், மோசமான உணவு பழக்கவழக்கம், குறைந்த அளவிலான உடல் செயல்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக ஏற்படுகிறது என்று தெரிய வந்திருக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;ஆபத்து&lt;/strong&gt; &lt;strong&gt;காரணிகளை&lt;/strong&gt; &lt;strong&gt;அறிந்து&lt;/strong&gt; &lt;strong&gt;கொள்ளுங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;பக்கவாதம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள உள்ளன. அதிக உடல் பருமன், போதிய உடற்பயிற்சியின்மை, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், புகைபிடித்தல் மற்றும் அதிக மது அருந்துதல் போன்றவற்றால் பக்கவாதம் ஏற்படுகிறது. தைராய்டு நோயினாலும் பக்கவாதம் ஏற்படலாம். ஏட்ரியல் பைப்ரிலேஷன் மற்றும் கார்டியோஎம்போலிக் ஸ்ட்ரோக் ஆகியவை ஹைப்பர் தைராய்டிசத்தால் ஏற்படுகிறது. பெருந்தமனி தடிப்பு மற்றும் பிற இதய ஆபத்து காரணிகள் ஹைப்போ தைராய்டிசத்தால் அதிகரிக்கின்றன. எனவே இதற்கான சாத்தியமான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் டாக்டர் ஹரிஹரபிரகாஷ் வலியுறுத்தி உள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;உயர்&lt;/strong&gt; &lt;strong&gt;ரத்த&lt;/strong&gt; &lt;strong&gt;அழுத்தம்&lt;/strong&gt;: உயர் ரத்த அழுத்தம் உடல் முழுவதும் உள்ள ரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது,&amp;nbsp; இதனால் அவை எளிதில் வெடிக்கும் அல்லது அடைபடும்&amp;nbsp; நிலைமைகளை உருவாக்குகிறது. மூளையில் பலவீனமான ரத்த நாளங்கள் பக்கவாதம் ஏற்படும் அதிக ஆபத்தில் உங்களை வைக்கின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;நீரிழிவு&lt;/strong&gt; &lt;strong&gt;நோய்&lt;/strong&gt; : நீரிழிவு நோய் என்பது பக்கவாதத்திற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளது. இது பல்வேறு இடங்களில் ரத்த நாளங்களில் நோயியல் மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, பெருமூளையில் ரத்த நாளங்களை நேரடியாக பாதிப்பதால் அவை பக்கவாதத்திற்கு வழிவகுக்கின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;உயர்&lt;/strong&gt; &lt;strong&gt;உடல்&lt;/strong&gt; &lt;strong&gt;நிறை&lt;/strong&gt; &lt;strong&gt;குறியீட்டெண்&lt;/strong&gt;: அதிக உடல் நிறை குறியீட்டெண் (BMI) பக்கவாதத்தை, குறிப்பாக இஸ்கிமிக் பக்கவாதத்திற்கான அபாயத்தை அதிகரிக்கலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;குறைந்த&lt;/strong&gt; &lt;strong&gt;அல்லது&lt;/strong&gt; &lt;strong&gt;போதிய&lt;/strong&gt; &lt;strong&gt;உடற்பயிற்சியின்மை&lt;/strong&gt;:&amp;nbsp; வழக்கமான உடற்பயிற்சி பக்கவாதத்துடன் தொடர்புடைய நிகழ்வுகளையும் இறப்புகளையும் குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;புகை&lt;/strong&gt; &lt;strong&gt;பிடித்தல்&lt;/strong&gt;: புகை பிடிப்பதால் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. ஒரு நாளைக்கு 20 சிகரெட்டுகள் புகைப்பவருக்கு, புகைபிடிக்காதவர்களை விட பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு ஆறு மடங்கு அதிகமாக இருக்கிறது. நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால், அதை விட்டுவிடுவது பக்கவாதம் மற்றும் பிற நோய்கள் வராமல் உங்களைப் பாதுகாக்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மது&lt;/strong&gt; &lt;strong&gt;அருந்துதல்&lt;/strong&gt;: அதிக ஆல்கஹால் எடுத்துக் கொள்ளும்போது பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;அறிகுறிகளை&lt;/strong&gt; &lt;strong&gt;அறிந்து&lt;/strong&gt; &lt;strong&gt;கொள்ளுங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பக்கவாதம் யாருக்கும், எந்த வயதிலும், எந்த நேரத்திலும் ஏற்படலாம், மேலும் இது குறித்த எச்சரிக்கைகளை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிக்கப்படாமல் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் 19 லட்சம் மூளை செல்கள் இறக்கின்றன. &quot;நேரமே மூளை-Time is brain&quot; என்ற சொற்றொடர், பக்கவாதம் எவ்வளவு விரைவாகவும், மீளமுடியாமல் மனித நரம்பு திசுக்களை சேதப்படுத்துகிறது என்பதையும், விரைவான சிகிச்சை தேவைப்படுகிறது என்பதையும் வலியுறுத்துகிறது.&amp;nbsp; பக்கவாதத்திற்கு ஆரம்பகால மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளும்போது அது அவரது வாழ்நாளை அதிகரிக்கச் செய்வதோடு, பக்கவாதத்தின் தன்மையையும் வெகுவாக குறைக்கிறது. பிற உடல்நலப் பிரச்சினைகளைப் போல் இல்லாமல் இது தொடர்பான அறிகுறி தெரிந்தவுடன் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும். பக்கவாதத்தை ஒரு தீவிர நோயாக கருத்தில் கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்று டாக்டர் சம்பத்குமார் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;பக்கவாததத்திற்கான சிகிச்சையைப் பெறுவதற்கான மிக முக்கியமான அம்சம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் பின்வரும் அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;sup&gt;&amp;nbsp;&lt;/sup&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பக்கவாததின்&amp;nbsp; அறிகுறிகளை BE FAST என எளிதில் நினைவில் வைத்து கொள்ளலாம்&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;Balance: &lt;/strong&gt;&lt;strong&gt;தடுமாற்றம்&lt;/strong&gt; - திடீரென தடுமாற்றம் அல்லது ஒருங்கிணைப்பு இழப்பு அல்லது திடீரென தலைச்சுற்றல் ஏற்படுகிறதா?&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;Eye: &lt;/strong&gt;&lt;strong&gt;கண்கள்&lt;/strong&gt; - ஒன்று அல்லது இரண்டு கண்களில் இருந்து திடீரென்று பார்ப்பதில் சிரமம் உள்ளதா?&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;Face: &lt;/strong&gt;&lt;strong&gt;முகம்&lt;/strong&gt; - முகத்தில் சமச்சீரற்ற தன்மை உள்ளதா அல்லது சீரற்ற புன்னகையை நீங்கள் கவனிக்கிறீர்களா?&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;Arms: &lt;/strong&gt;&lt;strong&gt;கைகள்&lt;/strong&gt; - கைகளில் பலவீனம் அல்லது உணர்வின்மை உள்ளதா, மேலும் இரு கைகளையும் சமமாக உயர்த்த முடிகிறதா?&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;Speech: &lt;/strong&gt;&lt;strong&gt;பேச்சு&lt;/strong&gt; - பேச்சு மந்தமாக உள்ளதா அல்லது குழப்பமான மன நிலை ஏற்படுகிறதா அல்லது வார்த்தைகளை உருவாக்குவது சிரமம் உள்ளதா?&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;Time: &lt;/strong&gt;&lt;strong&gt;நேரம்&lt;/strong&gt; - மேலே உள்ள அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால், அவசர உதவியை அழைக்க வேண்டிய நேரம் இது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;பக்கவாதத்திற்கான&lt;/strong&gt; &lt;strong&gt;சிகிச்சை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;நோயாளியை முழுமையாக பரிசோதித்து துவக்க நிலை சிகிச்சையை அளிக்க வேண்டும். அவசரநிலை பக்கவாத குழு உடல் மற்றும் மருத்துவ நரம்பியல் பரிசோதனைகள் மற்றும் இமேஜிங் மதிப்பீடு உட்பட முழு மருத்துவ விவரங்களையும் தெரிவிக்கும். பக்கவாதம் ஏற்பட்ட 4 முதல் 5 மணி நேரத்திற்குள், ரத்த உறைவைக் கரைக்க உதவும் ஒரு மருந்தை நரம்பு வழியாக கொடுக்கலாம். சில சந்தர்ப்பங்களில், குறிப்பாக த்ரோம்போலிடிக் மருந்துகள் பயன் அளிக்காத நிலையில், மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி எனப்படும் வடிகுழாய் செயல்முறை ஒரு சிறந்த சிகிச்சை முறையாகும். மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி செயல்முறையும் நேரம் சார்ந்த சிகிச்சை முறையாகும். அறிகுறி தோன்றிய 24 மணி நேரத்திற்குள் இந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். சில சந்தர்ப்பங்களில், நோயாளியின் மூளையின் அழுத்தத்தை குறைக்க அறுவை சிகிச்சையும் தேவைப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;பக்கவாத நோயானது &quot;அமைதியான அச்சுறுத்தல்&quot; என்று குறிப்பிடப்படுகிறது, ஏனெனில் அது திடீரென்று எந்தவித அறிகுறியும் இல்லாமல் தாக்கும் நோய் ஆகும். இது உயிருக்கு ஆபத்தைக்கூட ஏற்படுத்தலாம். ஆனால் அதற்கான காரணங்களை நன்கு புரிந்து, அதன் அறிகுறிகளுக்கு ஏற்ப உடனடி மருத்துவ சிகிச்சை எடுத்து, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அதன் தாக்கம் வெகுவாக குறையும். பக்கவாதம் தொடர்பான விழிப்புணர்வு மிகவும் அவசியம் ஆகும்; இது ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கிய முதல் படியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/01/e832bc2afed581262c393659562114f91698832100216571_original.png" width="220"/></item></channel></rss>