தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான பேட்டரியை மாற்றிக்கொள்ளும் மின்சார வாகன பேட்டரி மாற்றும் நிலையங்கள் செயல்பட தொடங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Continues below advertisement

தமிழ்நாட்டில் மின்சார இருசக்கர மற்றும் கார்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. முன்பு இருசக்கரங்களுக்கு பேட்டரி உள் இணைத்து கொடுக்கப்பட்டிருந்ததால் அதனை ஒவ்வொரு முறையும் சார்ஜ் செய்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. பெட்ரோல் நிலையங்கள் சார்ஜிங் ஸ்டேஷன் தனியாக அமைக்கப்பட்டது. ஆனால் தற்போதைய இருசக்கர மின்சார வாகனங்களில் பேட்டரியை தனியே கழற்றி எடுத்துச் சென்று சார்ஜ் செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டிருப்பதால் பலரும் மின்சார வாகனங்காள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

Continues below advertisement

இந்த நிலையில் சென்னையில் உள்ள புறநகர் ரயில் நிலையங்களுக்கு தங்களுடைய மின்சார வாகனங்களில் வரும் பயணிகளுக்கு சிறப்பான வசதி ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதாவது மின்சார வாகன பேட்டரி மாற்றும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உங்களுடைய வாகனங்களில் பேட்டரி தீர்ந்து போனால் சில நிமிடங்களிலேயே அதனை மாற்றிக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சென்ட்ரல், எழும்பூர், பசுமைவழிச்சாலை, மந்தைவெளி, கோட்டூர்புரம், சிந்தாதிரிப்பேட்டை, திருவான்மியூர், வேளச்சேரி, பரங்கிமலை, சைதாப்பேட்டை, பல்லாவரம், வில்லிவாக்கம் மற்றும் வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இதன்மூலம் வழக்கமாக பேட்டரி செய்ய மணிக்கணக்கில் காத்திருக்கும் நேரம் தவிர்க்கப்படுகிறது. சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளை சில நிமிடங்களிலேயே  நாம் மாற்றிக்கொள்ள முடியும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த வசதியை மேற்கொள்ள 5 ஆண்டுகால ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மின்சார வாகனங்களைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு நல்ல பயனை அளிக்கும் என நம்பப்படுகிறது. 

இந்த முயற்சியால் ஆண்டுக்கு தெற்கு ரயில்வே சுமார் ரூ.53.43 லட்சம் வருவாய் ஈட்ட முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட சார்ஜ் பாயின்ட் ஆபரேட்டர்கள், மொபைல் செயலிகள் மூலம் இந்தச் சேவையை அணுக முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. பசுமைப் போக்குவரத்தை ஊக்குவிக்கவும், கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தவும் மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இம்முயற்சி கைகொடுக்கும் எனவும் தெற்கு ரயில்வே நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

இந்த வசதிகளுக்கு மிகக் குறைந்த இடமே தேவைப்படும் என்றும், இது பயணிகளின் போக்குவரத்தைப் பாதிக்காது  என்றும் இதுதொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI