Car Brands Left India: இந்திய ஆட்டோமொபைல்  சந்தையை விட்டே வெளியேறிய, 5 கார் உற்பத்தி நிறுவனங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


ஃபோர்ட்:


போட்டி நிறைந்த இந்திய ஆட்டோமொபைல் சந்தை சில பிராண்டுகளுக்கு ஆபத்தானதாக மாறியுள்ளது. நாட்டின் முன்னணி கார் விற்பனை நிறுவனமாக இருந்த ஃபோர்டு அதற்கு ஒரு சிறந்த உதாரணம். ஃபோர்டு செப்டம்பர் 2021இல் இந்தியாவில் இருந்து வெளியேற முடிவு செய்தது. அதிக விற்பனையாகும் கார் மாடல்கள் இல்லாதது மற்றும் SUV துணைப் பிரிவுகளில் இல்லாதது இந்த பிராண்டை நாட்டை விட்டு வெளியேறச் செய்தது. எண்டெவர் வெற்றியை ருசித்தாலும், ஃபோர்டு லாபம் பார்க்க வேறு சில தயாரிப்புகளை வைத்திருக்க வேண்டியிருந்தது. அவர்களின் பிற கார்களான ஃப்ரீஸ்டைல், ஃபிகோ ஆஸ்பயர் போன்றவை விரிவான போட்டியின் காரணமாக பின்னடைவைச் சந்தித்தன. இறுதியில், 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்பட, ஃபோர்ட் நிறுவனம் இந்தியாவை விட்டே வெளியேறியது.


ஃபியட்


இந்திய கார் வரலாற்றில் மிகவும் பிரபலமான பிராண்டுகளில் ஒன்றான ஃபியட் இரண்டாவது முறையாக உள்நாட்டில் இருந்து வெளியேறியது. போதிய விற்பனை இல்லாதது மற்றும் அதிக செயல்பாட்டுச் செலவுகள் காரணமாக ஃபியட் இந்தியாவில் தனது செயல்பாடுகளை 2019ம் ஆண்டு நிறுத்தியது. BS6 விதிமுறைகளின்படி அதன் மிகவும் பிரபலமான 1.3-லிட்டர் மல்டிஜெட் டீசல் இன்ஜின்களை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இத்தாலிய வாகன உற்பத்தியாளர் நாட்டை விட்டு வெளியேறினார். சந்தையில் பெரிய வரவேற்பு இல்லாத சூழலில், இன்ஜினை மேம்படுத்துதல் என்பது பிராண்டிற்கு தேவையில்லாத பெரும் செலவாக கருதப்பட்டது. இந்த காரணத்திற்காக, ஃபியட்டிடமிருந்து கடன் வாங்கும் டீசல் வகைகளை மாருதி நிறுவனம் நிறுத்த வேண்டியிருந்தது. கடைசி கால கட்டத்தில் ஃபியட் நிறுவனம் மாதத்திற்கே, வெறும் 100 யூனிட்கள் அளவிற்கு மட்டுமே விற்பனையை எட்டியது குறிப்பிடத்தக்கது.  


செவர்லே:


ஒரு காலத்தில் ஐந்தாவது பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமாக இருந்த ஜெனரல் மோட்டார்ஸ் புனே மற்றும் குஜராத்தில் வாகனங்களை தயாரித்து வந்தது. டவேரா, க்ரூஸ், ஆப்ட்ரா, என்ஜாய் போன்ற அவர்களது கார்கள் பெரும் வெற்றியைப் பெற்றதோடு, நாட்டில் பல கார் பிரிவுகளை நிறுவிய பெருமயையும் கொண்டுள்ளன. ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவில் தனது பயணத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு ஓப்பல் மற்றும் செவர்லே போன்ற பிராண்டுகளுடன் தொடங்கியது. இருப்பினும், ஓப்பல் முன்கூட்டியே வெளியேற வேண்டியிருந்தது. மறுபுறம், செவர்லெ அர்த்தமுள்ள தயாரிப்புகளுடன் வெற்றி பெற்றது. இருப்பினும், காலம் செல்ல செல்ல, போட்டி வளர்ந்து, இறுதியில் குறைந்த விற்பனை காரணமாக இந்த பிராண்ட் நாட்டை விட்டு வெளியேற வழிவகுத்தது. 


மிட்சுபிஷி


ஒரு காலத்தில் பஜெரோ மற்றும் லான்சர் போன்ற கார்களுக்கு பெயர் பெற்ற இந்த ஜப்பானிய உற்பத்தி நிறுவனம் மிகப்பெரிய வெற்றியை கண்டது. 1998 ஆம் ஆண்டில், அதன் முதல் காரான லான்சர் இந்திய சந்தையில் சலசலப்பை ஏற்படுத்தி கவனம் ஈர்த்தது. ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் மிட்சுபிஷிக்கு கார்களை உற்பத்தி செய்யும் பொறுப்பை ஏற்றது. இது ஜப்பானியர்களுக்கு எச்எம் மீது நிறைய சார்புகளை உருவாக்கியது. காலப்போக்கில், ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனமும் அதன் செயல்பாடுகளை நிறுத்தியது, இது மிட்சுபிஷிக்கு பல தடைகளை உருவாக்கியது. மிட்சுபிஷி ஒரு வலுவான விற்பனைக்குப் பிறகு, அதற்கு நிகரான சேவை மற்றும் உதிரி பாகங்கள் நெட்வொர்க்கைக் கொண்டிருக்க முடியாமல் போனதற்கு இது ஒரு காரணமாகும். இந்த காரணிகள் அனைத்தும் மிட்சுபிஷியை இந்திய சந்தையில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தின.


டாட்சன்:


மலிவு விலை சிறிய கார் பிராண்ட் ஆன டாட்சன் இந்திய சந்தையில் வெற்றி பெற தவறிவிட்டது. அதன் தாய் நிறுவனமான நிசான் குறைந்த தேவை காரணமாக அதை நிறுத்த வேண்டியிருந்தது. பல்வேறு காரணங்களால் வாங்குபவர்களை கவர முடியவில்லை.  Datsun ரெடி-GO, GO மற்றும் GO+ போன்ற எண்ட்ரி லெவல் கார்களுடன் சந்தையில் தனது பயணத்தை தொடங்கினாலும், இந்தியாவில் அதன் பிடியைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.


Car loan Information:

Calculate Car Loan EMI