இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today Februray 19, 2025: 

அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....

Continues below advertisement

மேஷம்

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். சுப செய்திகள் கிடைக்கும். அலைச்சலுக்கு உண்டான ஆதாயம் தாமதமாக கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். நன்மை நிறைந்த நாள்.

Continues below advertisement

ரிஷபம்

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில திருப்பங்கள் உருவாகும். வெற்றி நிறைந்த நாள்.

மிதுனம்

புது விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் நிதானமாக செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.

கடகம்

பொருளாதார நிலை  மத்திமமாக இருக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். சில சூழ்நிலைகள் சாதகமாக அமையும். கணவன் மனைவியிடையே வேறுபாடுகள் தோன்றும். வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்களின் வருகை உண்டாகும். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் மனஅமைதி உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள். 

சிம்மம்

கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும்.  உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். அமைதி நிறைந்த நாள்.

கன்னி

குடும்பத்தை பற்றிய எண்ணம் மேம்படும். உறவினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாகன பயணத்தில் நிதானம் வேண்டும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் திறமைகள் வெளிப்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

துலாம்

புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்பறிந்து செயல்படவும். தொழில் நிமித்தமான புதிய சிந்தனைகள் உண்டாகும். பொன், பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். உயர்வு நிறைந்த நாள்.

விருச்சிகம்

பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். குழந்தைகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். வீட்டில் சிறு மாற்றங்களை செய்வீர்கள். பணிமாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பம் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். புகழ் நிறைந்த நாள்.

தனுசு

உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். அரசு பணிகளில் இழுபறியான சூழல் மறையும். வியாபார அபிவிருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். ஆதாயம் நிறைந்த நாள்.

மகரம்

குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிநாட்டு பயணம் சார்ந்த சிந்தனை மேம்படும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். அடுத்தவர்களை பற்றிய சிந்தனையை தவிர்க்கவும். எதிரிகளின் பலம் மற்றும் பலவீனம் அறிந்து செயல்படவும். வியாபாரத்தில் புது முதலீடுகளில் கவனம் வேண்டும். உற்சாகம் நிறைந்த நாள்.

கும்பம்

சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். பயணம் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். தெய்வ சிந்தனை மனதளவில் மேம்படும். உத்தியோகத்தில் திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்ச்சி அடையும். சுற்று வட்டாரத்தில் நல்ல புகழ் உண்டாகும். சாந்தம் வேண்டிய நாள்.

மீனம்

திடீர் செலவுகள் உண்டாகும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனம் வேண்டும். வெளிவட்டாரத்தில் விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்து கொள்ளவும். எதிர்பாராத பயணங்கள் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.