நாள்: 24.12.2023 -  ஞாயிற்று கிழமை


நல்ல நேரம்:


காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை


மாலை 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை


இராகு:


மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை


குளிகை:


மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


எமகண்டம்:


நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை


சூலம் - மேற்கு


மேஷம்


எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் பிறக்கும். தனவரவுகளில் சற்று விழிப்புணர்வுடன் இருக்கவும். உயர்பொறுப்பில் இருப்பவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பரந்த மனப்பான்மை மூலம் பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.


ரிஷபம்


உறவினர்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்ப்பது நல்லது. கனிவான பேச்சுக்களின் மூலம் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகளில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பழைய நினைவுகள் பற்றிய எண்ணம் மேம்படும். வாகன மாற்றம் சார்ந்த முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். மறதி நிறைந்த நாள்.


மிதுனம்


நெருங்கியவர்களுடன் விட்டுக்கொடுத்துச் செல்லவும். நண்பர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். கடன் பிரச்சனைகள் குறையும். வெளியூர் பயணங்களால் புதிய மாற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். பொறுமை வேண்டிய நாள்.


கடகம்


உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம்  மேம்படும். எதிர்ப்புகள் விலகும் நாள்.


சிம்மம்


கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். பூர்வீகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உறவினர்களின் மூலம் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். எதிர்பாராத சில மாற்றங்களின் மூலம் புதுமையான சூழ்நிலைகள் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.


கன்னி


எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த சிக்கல்கள் படிப்படியாக குறையும். நீர்நிலை சார்ந்த பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். இணையம் சார்ந்த துறைகளில் ஆதாயம் ஏற்படும். சலனம் நிறைந்த நாள்.


துலாம்


வியாபாரப் பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். நயமான பேச்சுக்களை நம்பி முடிவு எடுப்பதை தவிர்க்கவும். சமூகம் தொடர்பான பணிகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். புதிய நபர்களிடம் பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். திட்டமிட்ட சில பணிகள் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்படும். அரசு சார்ந்த துறைகளில் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. விழிப்புணர்வு வேண்டிய நாள்.


விருச்சிகம்:


பொன், பொருள் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வாகன பயணத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.  குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கல்வி சார்ந்த பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பெருமை நிறைந்த நாள்.


தனுசு


உயர் அதிகாரிகளின் நட்புகள் கிடைக்கும். தாய்வழி உறவுகளின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும்.  கலை சார்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நிர்வாகத்தில் தனித்திறமை புலப்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். நிறைவு நிறைந்த நாள்.


மகரம்


வரவுக்கு ஏற்ப செலவுகள் உண்டாகும். வியாபாரப் பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்லவும். உறவினர்களுடன் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஓய்வு நிறைந்த நாள்.


கும்பம்


பயணங்களின்போது புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவதன் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். வியாபாரப் பணிகளில் நண்பர்களின் ஆதரவு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. நட்பு நிறைந்த நாள்.


மீனம்


வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வழக்குகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்.  அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். போட்டிகளில் பங்கேற்று பாராட்டுகளைப் பெறுவீர்கள். தடைகள் விலகும் நாள்.