<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>மேட்டூர் அணை திறக்க வாய்ப்பில்லை; உழவர்களுக்குக் குறுவைத் தொகுப்புடன் ஏக்கருக்கு ரூ.5000 மானியம் வழங்குக: அன்புமணி வலியுறுத்தல்!</title><atom:link href="https://tamil.abplive.com/agriculture/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 11 Jun 2026 19:19:23 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[மயிலாடுதுறை: 7,500 ஊழியர்களுக்குப் பணி நிரந்தரம்; நெல் மூட்டைக்கு ₹40 லஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி - அமைச்சர் வேங்கடரமணன் அதிரடி!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-minister-venkatramana-job-permanent-announcement-tnn-263538</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-minister-venkatramana-job-permanent-announcement-tnn-263538#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 18:19:05 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-minister-venkatramana-job-permanent-announcement-tnn-263538</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் 7,500 ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சரும், மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான வேங்கடரமணன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாம் நாளாக பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்த தீவிர ஆய்வினை மேற்கொண்ட அமைச்சர், செய்தியாளர்களைச் சந்தித்தபோது இத்தகவலைப் பகிர்ந்து கொண்டார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஆதீன மடாதிபதியுடன் சந்திப்பு: நெல் கிடங்குகளுக்கு நிலம் கோரிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தனது மாவட்ட ஆய்வின் ஒரு பகுதியாக, அமைச்சர் வேங்கடரமணன் உலகப் புகழ்பெற்ற தருமபுரம் ஆதீன மடத்திற்குச் சென்றார். அங்கு தருமபுரம் ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். தொடர்ந்து, மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் நெல்மணிகளைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப் போதிய கிடங்கு வசதிகள் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், புதிய நவீன நெல் கிடங்குகளை அமைப்பதற்குத் தேவையான நிலங்களை வழங்கிட வேண்டும் என்று ஆதீனத்திடம் கோரிக்கை வைத்தார். அமைச்சரின் கோரிக்கையை ஏற்று, தருமபுரம் ஆதீனம் சார்பில் நான்கு முக்கிய இடங்களில் கிடங்குகள் அமைக்க நிலம் வழங்குவதாக மடாதிபதி உறுதியளித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விவசாயிகளுடன் நேரடி கலந்துரையாடல்: கோரிக்கைகளும் புகார்களும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனைத் தொடர்ந்து, நத்தம் கிராமத்திற்குச் சென்ற அமைச்சர் வேங்கடரமணன், அங்குள்ள நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்து, உள்ளூர் விவசாயிகளை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது நடப்பு குறுவை சாகுபடி நிலவரங்கள் மற்றும் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் சந்திக்கும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்துக் கேட்டறிந்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;அமைச்சரிடம் விவசாயிகள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் வருமாறு;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வாய்க்கால்களைத் தூர்வாருதல்:&lt;/strong&gt; பெருமழைக் காலங்களில் விளைநிலங்களில் தண்ணீர் தேங்காமல், எளிதாக வடிந்து செல்வதற்கு வசதியாக, தூர்ந்து போயுள்ள பழைய வடிகால் வாய்க்கால்களைக் கண்டறிந்து, அவற்றை உடனடியாக மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நெல் மூட்டைகள் விரைவான கொள்முதல்:&lt;/strong&gt; கொள்முதல் நிலையங்களில் தகுந்த பாதுகாப்பு வசதியின்றித் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளைப் பாழாவதற்கு முன்பாக, உடனடியாக அரிசி ஆலைகளுக்கு (அரவைக்கு) அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர், தேங்கிக் கிடக்கும் நெல்மணிகள் வீணாவதைத் தடுக்கப் போர்க்கால அடிப்படையில் தேவையான கிடங்குகள் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;7,500 ஊழியர்கள் பணி நிரந்தரம்: முதலமைச்சரின் கவனத்திற்குச் செல்லும் பட்டியல்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேங்கடரமணன், நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை குறித்துப் பேசுகையில்;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&quot;நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரம் செய்யப்படாமல், மிகக் குறைந்த ஊதியத்தில் தற்காலிகப் பணியாளர்களாக 7,500 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இவர்களைப் பணி நிரந்தரம் செய்வதற்கான தகுதிப் பட்டியல் தற்போது தயார் செய்யப்பட்டு எங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியல் குறித்து தமிழக முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அவர்களைப் பணி நிரந்தரம் செய்யத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ நல்நடவடிக்கைகளும் விரைந்து எடுக்கப்படும்,&quot; என்று உறுதியளித்தார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மூட்டைக்கு ரூபாய் 40 லஞ்சம்: முற்றுப்புள்ளி வைக்க அமைச்சர் அதிரடி உத்தரவு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து ஒரு மூட்டை நெல்லிற்கு 40 ரூபாய் வரை கட்டாயக் கையூட்டு (லஞ்சம்) பெறப்படுவதாக எழுப்பப்பட்ட காரசாரமான கேள்விக்கு அமைச்சர் நேரடியாகப் பதிலளித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அவர் கூறுகையில், &quot;கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தேவையான குடிநீர், நிழற்குடை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் அரசார்பில் தங்கு தடையின்றிச் செய்து தரப்படும். ஊழியர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் அதே வேளையில், விவசாயிகளைத் துன்புறுத்தும் இத்தகைய முறைகேடுகள் எக்காரணம் கொண்டும் சகித்துக் கொள்ளப்படாது. கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் பெறும் அவலநிலையை முற்றிலுமாகத் தடுக்க அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். முறைகேடுகளை ஒழிக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்&quot; என்று வேண்டுகோள் விடுத்தார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடைக் காலம் தொடங்கி உள்ளதால் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு குறித்த கேள்விக்கு, &quot;மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தங்கு தடையின்றி பொதுமக்களுக்குக் குடிநீர் வழங்குவதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறையைப் போக்க உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் விவசாயிகள் சந்திப்பின் போது, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், உணவுப்பொருள் வழங்கல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/0971e8d174a902acbee837bd289c46a41781182118914186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மயிலாடுதுறையில் பரபரப்பு: நெல் கொள்முதல் நிலையத்தில் ரூ.40 லஞ்சம் வாங்கியதை நியாயப்படுத்தினாரா உணவுத்துறை அமைச்சர்? விவசாயிகள் கடும் கொந்தளிப்பு!]]></title><link>https://tamil.abplive.com/agriculture/mayiladuthurai-tvk-minister-venkatramanan-paddy-bag-collected-40-rupees-issue-tnn-263466</link><comments>https://tamil.abplive.com/agriculture/mayiladuthurai-tvk-minister-venkatramanan-paddy-bag-collected-40-rupees-issue-tnn-263466#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 10:09:50 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ விவசாயம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/agriculture/mayiladuthurai-tvk-minister-venkatramanan-paddy-bag-collected-40-rupees-issue-tnn-263466</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) அரசின் உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 40 ரூபாய் வாங்கப்பட்டது உண்மைதான் எனப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டதோடு, அதற்கான காரணத்தைக் கூறி நியாயப்படுத்தும் வகையில் பேசியிருப்பது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அமைச்சரின் திடீர் கள ஆய்வு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, த.வெ.க தலைவர் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், துறை வாரியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுத் தீவிரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருப்புங்கூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நெல் சேமிப்பு கிடங்கு மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு (DPC) உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் நேற்று நேரில் வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளைப் பார்வையிட்ட அமைச்சர், நெல்லின் ஈரப்பதம் மற்றும் தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், அங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகள், நெல் பாதுகாப்பு முறைகள் மற்றும் கள நிலவரங்கள் குறித்து விவசாயிகளிடமும், பணியாளர்களிடமும் கலந்துரையாடினார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ரூபாய் 40 லஞ்சம்: உண்மையை ஒப்புக்கொண்ட அமைச்சர்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வெங்கடரமணனிடம், &quot;தமிழகம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைக்கு தலா 40 ரூபாய் கட்டாய வசூலாகப் பெறப்பட்டு வருகிறது என்ற தொடர் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே, இதன் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?&quot; என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதற்குப் பதிலளித்த அமைச்சர், யாரும் எதிர்பாராத விதமாகப் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை அளித்தார். அவர் பேசுகையில், &quot;அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தங்குமிடம், முறையான கழிவறை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. அப்படிப்பட்ட சவாலான சூழலில், தங்களின் அன்றாடத் தேவைகளுக்காக விவசாயிகளிடம் மூட்டைக்கு 40 ரூபாய் வாங்கி அதனை நிறைவேற்றியுள்ளனர். ஆனால், இனிவரும் காலங்களில் கொள்முதல் நிலைய ஊழியர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் இந்த அரசு போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்கும். அதனை தொடர்ந்து விவசாயிகளிடம் அரசு இருந்து ஒரு ரூபாய் கூட வாங்காதவாறு நடவடிக்கைகள் மூலம் தடுத்து நிறுத்தப்படும்&quot; என்று தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விவசாயிகள் கேள்வி - இது ஊழலை நியாயப்படுத்துவதா?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விவசாயிகளிடம் லஞ்சம் பெறப்பட்டதை அமைச்சர் ஒப்புக்கொண்ட விதம், அங்கு கூடியிருந்த விவசாய அமைப்புகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திமுக ஆட்சியின் போதே இந்த 40 ரூபாய் கட்டாய வசூல் பெரும் புகாராக வெடித்தது. தற்போது த.வெ.க ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள நிலையில், நெல் மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் கூடுதலாக பெற்றதை நியாயப்படுத்தி, ஊழலுக்கு ஆதரவாக பேசுயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 40 பெற்றது உண்மையென்றால் அதன் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய அமைச்சர் ஊழலை நியப்படுத்தும் செயல் ஏற்புடையது அல்ல என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அமைச்சர் தட்டிக் கேட்காமல், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற காரணத்தைக் கூறி லஞ்சத்தை நியாயப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இது குறித்துப் பேசிய உள்ளூர் விவசாயி ஒருவர், &quot;அடிப்படை வசதிகள் இல்லை என்றால் அதற்காக அரசிடம் தான் ஊழியர்கள் கோரிக்கை வைக்க வேண்டும். அதை விடுத்து, வெயிலிலும் மழையிலும் கஷ்டப்பட்டு நெல் விளைவித்து வரும் ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடித்து மூட்டைக்கு 40 ரூபாய் வாங்குவது அப்பட்டமான ஊழல் மற்றும் பகல் கொள்ளை ஆகும். தவறு செய்த ஊழியர்கள் மீது தீர்க்கமான விசாரணை நடத்தி, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய உணவுத்துறை அமைச்சரே, அதற்கு வக்காலத்து வாங்கிப் பேசுவது சட்டத்தின் ஆட்சியா அல்லது ஊழலுக்கான அங்கீகாரமா?&quot; என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மழைக்காலப் பாதுகாப்புக்கு புதிய அறிவிப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பரபரப்பான சூழலுக்கு மத்தியில், மழைக்காலங்களில் நெல் வீணாவதைத் தடுக்க அரசு புதிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். &quot;மழைக்காலங்களில் கொள்முதல் நிலையங்களுக்கு நெல்லை விற்பனை செய்யக் கொண்டு வரும் விவசாயிகளுக்கு, தனித்தனியாகப் பிரத்யேகத் தார்பாய்கள் (Tarpaulins) வழங்கி, அவர்களின் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகாமல் முழுமையாகப் பாதுகாக்க இந்த அரசு தகுந்த ஏற்பாடுகளைச் செய்யும்&quot; என்றும் அமைச்சர் வெங்கடரமணன் செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார். இருப்பினும், நெல் கொள்முதல் நிலைய ஊழலை அமைச்சர் கையாண்ட விதம் தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்திலும், டெல்டா மாவட்ட விவசாயிகளிடையேயும் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/0dce704c3bb8a60b761f2d23fd36778c1781152767288186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தொடங்கப்பட்ட குறுவைப்பணிகளை நிறுத்திய தஞ்சாவூர் விவசாயிகள்?]]></title><link>https://tamil.abplive.com/news/thanjavur/thanjavur-farmers-halt-kuruvai-cultivation-activities-tnn-263344</link><comments>https://tamil.abplive.com/news/thanjavur/thanjavur-farmers-halt-kuruvai-cultivation-activities-tnn-263344#respond</comments><pubDate>Wed, 10 Jun 2026 08:10:21 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தஞ்சாவூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thanjavur/thanjavur-farmers-halt-kuruvai-cultivation-activities-tnn-263344</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: ஆண்டுதோறும் வழக்கமாக ஜூன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் அதே நம்பிக்கையில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான ஆயத்தப்பணிகளை ஆவலுடன் தொடங்கினர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆனால், தற்போது மேட்டூர் அணையின் நீர் இருப்பு மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், குறிப்பிட்ட தேதியில் அணை திறக்கப்பட வாய்ப்பில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. இதனால் இந்தாண்டு குறுவை சாகுபடியை கைவிடுவது தவிர வேறு வழியில்லை என்று வலியுடன் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட வேண்டுமெனில், அணையின் நீர்மட்டம் போதிய அளவில் இருக்க வேண்டும். ஆனால் அணையின் நீர் இருப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போதைய நீர் இருப்பைக் கொண்டு அணையத் திறந்தால், அது பாசனத் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்யாது என்பதால் அணை திறப்பு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வழக்கமாக மே மாதம் 2வது வாரத்திலேயே உழவுப் பணிகள், நாற்று விடுதல் போன்ற பணிகளில் தீவிரமாக இறங்கும் விவசாயிகள், இந்த ஆண்டு பருவமழை கைகொடுக்கும் மற்றும் அணை வழக்கம்போல் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் பணிகளைத் தொடங்கினர். ஆனால் தற்போதைய நிலையில் எல் நினோ பாதிப்பால் பருவமழை தாமதமாகி உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுகுறித்து டெல்டா பகுதி விவசாயிகள் தரப்பில் கூறுகையில், இதனால், இந்த ஆண்டு குறுவை சாகுபடியைத் தொடங்க முடியாமல் லட்சக்கணக்கான விவசாயிகள் கவலையிலும், பெருத்த ஏமாற்றத்திலும் மூழ்கியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இருந்த சாதனை நெல் உற்பத்தி நிலை மாறி, நடப்பாண்டில் ஒரேயொரு போக சம்பா சாகுபடியாவது செய்ய வாய்ப்பு இருக்குமா என்ற சோகமான சூழல் உருவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;2020-ஆம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளில் (2023 தவிர) அணை சரியான நேரத்தில் திறக்கப்பட்டது. இதனால் குறுவை, சம்பா, தாளடி என முப்போக சாகுபடியும் வெற்றிகரமாக அமைந்து, நெல் உற்பத்தியில் தமிழகம் சாதனை படைத்தது. கடந்த 2024-இல் நீர் இருப்பு குறைவால் ஜூலை 28-க்கு அணை திறப்பு தள்ளிப்போனாலும், 2025-ல் உரிய காலத்தில் திறக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆனால், நடப்பாண்டு மீண்டும் நிலைமை மோசமாகி எங்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தி வருகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதியை எதிர்பார்த்துதான் எங்களது வாழ்வாதாரமே தொடங்குகிறது. இந்த ஆண்டும் நம்பி சாகுபடி பணிகளில் இறங்கினோம். ஆனால், தற்போது அணை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவது எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பம்ப் செட் பாசன வசதி உள்ள விவசாயிகள் குறைந்த அளவில்தான் உள்ளனர். அதிகளவு ஆற்று நீர் பாசனத்தை நம்பியே இருக்கிறோம். அதனால் எங்களால் முழுமையாகக் குறுவை சாகுபடியைக் மேற்கொள்ள இயலாது. போதிய தண்ணீர் இல்லாமல் போனால், நடப்பாண்டு குறுவை சாகுபடியைக் கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அணை திறக்கப்படாவிட்டால் பல லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, கர்நாடக அரசிடமிருந்து தமிழகத்திற்குத் தர வேண்டிய உரிய தண்ணீரைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தடி நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்பவர்களுக்கு மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்கப்பட வேண்டும் என்றும் விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அரசு மாற்று ஏற்பாடுகளைச் செய்யாவிட்டால், இந்த ஆண்டின் குறுவை சாகுபடி முற்றிலும் கேள்விக்குறியாகி, விவசாயிகளின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/10/501efd38f798247e4b55ce4f4d4028ae1781059074527733_original.png" width="220"/></item><item><title><![CDATA[சாலைதான் எங்களுக்கு களம்... சோதனைகள் மத்தியில் எள் அறுவடை செய்த விவசாயிகள்: நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சி]]></title><link>https://tamil.abplive.com/news/thanjavur/the-road-became-our-threshing-floor-farmers-harvest-sesame-amidst-challenges-happy-with-the-good-price-tnn-263341</link><comments>https://tamil.abplive.com/news/thanjavur/the-road-became-our-threshing-floor-farmers-harvest-sesame-amidst-challenges-happy-with-the-good-price-tnn-263341#respond</comments><pubDate>Wed, 10 Jun 2026 07:41:10 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தஞ்சாவூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thanjavur/the-road-became-our-threshing-floor-farmers-harvest-sesame-amidst-challenges-happy-with-the-good-price-tnn-263341</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: தஞ்சை அருகே திருவையாறு பைபாஸ் சாலை மாவட்ட காவல் துறை அலுவலகம் அருகில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த எள் செடிகளை காய வைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எள் செடிகளை காய வைக்க களம் இல்லாததால் சாலையில் காயவைப்பதாக வேதனையுடன் தெரிவித்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். தற்போது சம்பா, தாளடி அறுவடைப்பணிகள் முடிந்து விட்டது. வண்ணாரப்பேட்டை, ஆலக்குடி உட்பட சுற்றுப்பகுதிகளில் விவசாயிகள் எள் சாகுபடியும் செய்திருந்தனர். தற்போது இந்த எள் செடிகள் அறுவடைப்பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;களம் இல்லாததால் திருவையாறு பைபாஸில் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை அலுவலகம் அருகில் சாலையில் இந்த எள் செடிகளை &amp;nbsp;காயவைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். கடந்த 2 நாட்களாக வெயில் அதிகம் இருப்பதால் எள் செடிகள் விரைவாக காய்ந்து வருகிறது. கடந்தாண்டை விட தற்போது எள் கூடுதல் விலைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், எள் சாகுபடியைப் பொறுத்தவரை 80 முதல் 85 நாட்கள் மட்டுமே கொண்ட மிகக் குறுகிய காலப் பயிராகும். தை மற்றும் மாசிப் பட்டங்களில் (ஜனவரி - பிப்ரவரி) நெல் அறுவடை முடிந்தவுடன், நிலத்தில் உள்ள ஈரப்பதத்தைப் பயன்படுத்தி எள் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு மிகக் குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படுவதால், கோடைக் காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலங்களுக்கும் இது மிகச் சிறந்த தேர்வாக அமைகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒரு ஏக்கருக்கு விதை, உழவு, களை எடுத்தல் மற்றும் அறுவடை என மொத்தம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை மட்டுமே செலவாகிறது. முறையான பராமரிப்பு மற்றும் தரமான விதைகள் மூலம் ஒரு ஏக்கருக்கு சராசரியாக 350 கிலோ முதல் 450 கிலோ வரை எள் மகசூல் கிடைக்கிறது. தற்போதைய சந்தை நிலவரப்படி, ஒரு கிலோ எள் தரத்தைப் பொறுத்து ரூ. 150 முதல் ₹160 வரை விற்பனையாகிறது. கடந்தாண்டு ரூ.110 முதல் ரூ.130 வரை மட்டுமே விற்பனையானது. இந்தாண்டு கூடுதல் விலைக்கு விற்பனையாகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போதைய விலை நிலவரப்படி ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை வருவாய் கிடைக்கிறது. அனைத்து செலவுகளும் போக, 85 நாட்களில் விவசாயிகளுக்கு நிகர லாபமாக ரூ.35,000 முதல் ரூ.45,000 வரை லாபம் கிடைக்கிறது. தற்போது நல்லெண்ணெய் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்துள்ளதால், சந்தையில் எள்ளுக்கான தேவை ஆண்டு முழுவதும் நிலையாக உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இடைத்தரகர்கள் இன்றி நேரடியாகவே நல்ல விலைக்கு எள் விற்பனையாவதாலும், பூச்சித் தாக்குதல் மற்றும் நோய் தாக்குதல்க்ள பெரிய அளவில் இல்லாததாலும் டெல்டா பகுதி விவசாயிகள் எள் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைந்த உழைப்பில், மிகக் குறுகிய காலத்தில் கைகொடுக்கும் எள் சாகுபடி, இந்த கோடைக் காலத்தில் விவசாயிகளுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரும் பக்கபலமாக மாறியுள்ளது என்பதில் ஐயமில்லை. காய வைக்கும் களம் இருந்தால் கூடுதல் செலவுகள் குறையும். அறுவடை முடிந்து உடனேயே களத்தில் காயவைத்து விடலாம். அரசு எங்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர் விவசாயிகள்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/10/48503d540b142f90263a27299ef0ca4d1781057414315733_original.png" width="220"/></item><item><title><![CDATA["ஐந்தாயிரம் ரூபாய் தள்ளுபடி விவசாயிகளை கேலி செய்வதா?" - மயிலாடுதுறையில் தவெக அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-farmers-protest-against-tvk-government-tnn-263135</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-farmers-protest-against-tvk-government-tnn-263135#respond</comments><pubDate>Mon, 8 Jun 2026 13:42:11 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-farmers-protest-against-tvk-government-tnn-263135</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை:&amp;zwnj; &lt;/strong&gt;கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து வகையான வேளாண் கடன்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், தமிழகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணையைக் கட்டத் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் கர்நாடக அரசைக் கண்டித்து, அதனைத் தடுத்து நிறுத்தக் கோரியும் டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மயிலாடுதுறையில் இன்று பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் திரளாகப் பங்கேற்றுத் தங்களது கண்டனக் குரல்களைப் பதிவு செய்தனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தவெக-வின் தேர்தல் வாக்குறுதியும் தற்போதைய அறிவிப்பும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது, தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் விவசாயப் பெருமக்களுக்கு அளிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் பெற்றுள்ள பயிர்க் கடன்கள் மற்றும் வேளாண் கடன்கள் அனைத்தும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; தேர்தல் அறிக்கையில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குறுதியை நம்பி தமிழக விவசாயிகளும் தங்களது முழு ஆதரவை வழங்கியிருந்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இருப்பினும், சமீபத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; கூட்டுறவுச் சங்கங்களின் கடன் தள்ளுபடி குறித்து வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பானது டெல்டா பகுதி விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முதலமைச்சரின் புதிய அறிவிப்பின்படி, கூட்டுறவுச் சங்கங்களில் ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு, வெறும் ஐந்தாயிரம் ரூபாய் வரை மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் களத்தில் அறிவித்துவிட்டு, தற்போது பெயரளவில் மிகக் குறைந்த தொகையை மட்டுமே தள்ளுபடி செய்வதாக அறிவித்திருப்பது தங்களை ஏமாற்றும் செயல் என்று கூறி விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முதலமைச்சர் ஜோசப் விஜயின் இந்த பாரபட்சமான அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிய சங்கத்தின் மாவட்டத் தலைவர் அன்பழகன் தனது உரையில், &quot;தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான வறட்சி, இடுபொருட்களின் விலை உயர்வு, போதிய நீர் கிடைக்காத சூழல் போன்ற காரணங்களால் டெல்டா பகுதி விவசாயிகள் ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், கூட்டுறவு கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு எங்களுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது. ஆனால், தற்போது முதலமைச்சர் அறிவித்துள்ள ஐந்தாயிரம் ரூபாய் தள்ளுபடி என்பது விவசாயிகளின் கஷ்டத்தைக் கேலி செய்யும் வகையில் அமைந்துள்ளது. அரசு உடனடியாக இந்த அறிவிப்பை வாபஸ் பெற்று முழு தள்ளுபடியை அமல்படுத்த வேண்டும்&quot; என்று அழுத்தமாக வலியுறுத்தினார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு எச்சரிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த ஆர்ப்பாட்டத்தின் மற்றொரு முக்கியக் கோரிக்கையாகக் காவிரி ஆற்றில் மேகதாது என்ற இடத்தில் புதிய அணையைக் கட்டுவதற்குத் தீவிரமாக முயன்று வரும் கர்நாடக அரசின் நடவடிக்கைகளுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களையும் காற்றில் பறக்கவிட்டு, தமிழகத்திற்கு வரும் தண்ணீரைத் தடுக்கும் நோக்கில் கர்நாடக அரசு தன்னிச்சையாகச் செயல்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனைத் தடுத்து நிறுத்தத் தமிழக அரசு உடனடியாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றத்தில் வலுவான சட்டப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளதால், ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கத் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சிறப்புரை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறையில் நடைபெற்ற இந்த எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் துரைராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், தமிழக அரசின் தற்போதைய அணுகுமுறையைக் கடுமையாகச் சாடினார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு காட்டும் சுணக்கம் விவசாயப் பெருமக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் அரசு சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்றும் குறிப்பிட்டார். மேகதாது அணை விவகாரத்திலும், கூட்டுறவு கடன் தள்ளுபடி விவகாரத்திலும் விவசாயிகளின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால், மாநிலம் தழுவிய அளவில் அடுத்தகட்டமாகப் பிரம்மாண்ட போராட்டங்கள் வெடிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக மற்றும் கர்நாடக அரசுகளுக்கு எதிராகவும் வான் அதிரக் கோஷங்களை எழுப்பினர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம், மயிலாடுதுறை காவல்துறையினர் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். விவசாயிகளின் இந்த உணர்ச்சிப்பூர்வமான போராட்டம் மயிலாடுதுறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/08/e19644e73cdc65be8f243fde6503a34e1780906299214186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[26 லட்சம் ஏக்கர் தரிசாகும் பேராபத்து: மேக்கேதாட்டு அணைக்கு எதிராக விழிக்குமா தமிழகம்?]]></title><link>https://tamil.abplive.com/news/thanjavur/26-lakh-acres-of-land-will-become-barren-will-tamil-nadu-wake-up-against-the-mekkedathu-dam-tnn-263044</link><comments>https://tamil.abplive.com/news/thanjavur/26-lakh-acres-of-land-will-become-barren-will-tamil-nadu-wake-up-against-the-mekkedathu-dam-tnn-263044#respond</comments><pubDate>Sun, 7 Jun 2026 18:57:37 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தஞ்சாவூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thanjavur/26-lakh-acres-of-land-will-become-barren-will-tamil-nadu-wake-up-against-the-mekkedathu-dam-tnn-263044</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: கர்நாடக மாநிலத்திலுள்ள மேக்கேதாட்டில் புதிய அணை கட்டுவதற்கான நடவடிக்கையை அம்மாநில அரசு முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. இதனால் தமிழகத்திற்கு வழக்கமாகக் கிடைக்கும் உபரி நீர் (மிகை நீர்) வரத்தும் முற்றிலுமாகத் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஐம்பது ஆண்டு கால காவிரி நீர் போராட்டம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் இடையே 50 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப் போராட்டமும், அரசியல் முரண்பாடுகளும் நீடித்து வருகின்றன. நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு: தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. 2007 இறுதித் தீர்ப்பு: நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் இந்த அளவு 192 டி.எம்.சி.யாகக் குறைக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;2018 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு:&lt;/strong&gt; கர்நாடக அரசின் மேல்முறையீட்டால், உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கான தண்ணீரின் அளவை 177.25 டி.எம்.சி.யாக மேலும் குறைத்து தீர்ப்பளித்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தேவையும் யதார்த்தமும்: விவசாயிகளின் அதிருப்தி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழக டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா மற்றும் தாளடி ஆகிய முப்போக சாகுபடிகளுக்கு ஆண்டுதோறும் 250 முதல் 300 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், உச்ச நீதிமன்றம் ஒதுக்கிய 177.25 டி.எம்.சி தண்ணீரே விவசாயத்திற்குப் போதுமானதாக இல்லை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தக் குறைந்தபட்சத் தண்ணீரைக் கூட கர்நாடகா தானாகத் திறப்பதில்லை. அங்குள்ள 4 அணைகளும் நிரம்பி வழிந்தால் மட்டுமே தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதைப் பெறுவதற்கே தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் சட்டப்படி போராட வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கடந்த 25 ஆண்டுகால நீர்வரத்து புள்ளிவிவரம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த 25 ஆண்டு கால வரலாற்றை உற்று நோக்கினால், தமிழகத்திற்குப் பெருவெள்ளக் காலங்களில் மட்டுமே உபரி நீர் கிடைத்துள்ளது தெரியவருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பெருவெள்ள ஆண்டுகள்:&lt;/strong&gt; கடந்த 25 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் மட்டுமே (2005-06, 2007-08, 2018-19, 2022-23, 2025-26) காவிரியில் பெருவெள்ளம் ஏற்பட்டு உபரி நீர் கடலில் கலந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வறட்சி ஆண்டுகள்:&lt;/strong&gt; 6 ஆண்டுகளில் 100 டி.எம்.சி.க்கும் குறைவாகவே தண்ணீர் வந்ததால் கடும் வறட்சி நிலவியது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பற்றாக்குறை ஆண்டுகள்:&lt;/strong&gt; 9 ஆண்டுகளில் 200 டி.எம்.சி.க்குள்ளும், 11 ஆண்டுகளில் 200 முதல் 250 டி.எம்.சி.க்குள்ளும் மட்டுமே நீர்வரத்து இருந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் காரணமாக மேட்டூர் அணை திறப்பு தள்ளிப்போய், முப்போக சாகுபடி என்பது சுருங்கி, வெறும் ஒரு போக சம்பா சாகுபடி மட்டுமே செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மேக்கேதாட்டு திட்டமும் கர்நாடகாவின் பிடிவாதமும்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்திற்கு வரும் எஞ்சிய உபரி நீரையும் தடுத்து நிறுத்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு என்ற இடத்தில் 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புதிய அணையைக் கட்ட அம்மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திட்ட மதிப்பு: இத்திட்டத்திற்காகக் கடந்த ஆண்டு ₹9,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் ₹1,000 கோடி உடனடியாக விடுவிக்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஏற்கெனவே உள்ள 4 அணைகளை விடவும் இது பல மடங்கு பெரியது என்பதால், இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு உபரி நீர் கூட கிடைக்காது என்பது உறுதியாகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;26 லட்சம் ஏக்கர் நிலம் தரிசாகும் பேராபத்து!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுகுறித்து சமூகஆர்வலர்கள் தரப்பில் விடுத்துள்ள &amp;nbsp;எச்சரிக்கை:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&quot;கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே சட்டவிரோதமாக ஹேமாவதி, ஹேரங்கி, கபினி என பல அணைகள் கட்டப்பட்டு தமிழகத்தின் நீர் உரிமை முடக்கப்பட்டது. இப்போது மேக்கேதாட்டுவில் 67 டி.எம்.சி.யில் அணை கட்ட முயல்கிறார்கள். இதனால் தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரம் கடுமையாகப் பாதிக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், 12 மாவட்டங்களில் உள்ள 26 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்குப் பாசன நீர் கிடைக்காமல் அவை தரிசு நிலங்களாக மாறும். இதன் விளைவாகக் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அகதிகளாக மாறும் பேராபத்து உள்ளது. இதைத் தடுக்க ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot; data-path-to-node=&quot;27&quot;&gt;கடந்த 25 ஆண்டுகளில் மேட்டூர் அணைக்குக் கிடைத்த நீர்வரத்து (டி.எம்.சி.யில்)&lt;/h3&gt;
&lt;table data-path-to-node=&quot;28&quot;&gt;
&lt;thead&gt;
&lt;tr&gt;
&lt;td&gt;ஆண்டு&lt;/td&gt;
&lt;td&gt;நீர்வரத்து (டி.எம்.சி.)&lt;/td&gt;
&lt;td&gt;ஆண்டு&lt;/td&gt;
&lt;td&gt;நீர்வரத்து (டி.எம்.சி.)&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;/thead&gt;
&lt;tbody&gt;
&lt;tr&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,1,0,0&quot;&gt;&lt;span data-path-to-node=&quot;28,1,0,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;2001 - 02&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,1,1,0&quot;&gt;162.73&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,1,2,0&quot;&gt;&lt;span data-path-to-node=&quot;28,1,2,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;2014 - 15&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,1,3,0&quot;&gt;208.10&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,2,0,0&quot;&gt;&lt;span data-path-to-node=&quot;28,2,0,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;2002 - 03&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,2,1,0&quot;&gt;93.52&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,2,2,0&quot;&gt;&lt;span data-path-to-node=&quot;28,2,2,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;2015 - 16&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,2,3,0&quot;&gt;96.67&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,3,0,0&quot;&gt;&lt;span data-path-to-node=&quot;28,3,0,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;2003 - 04&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,3,1,0&quot;&gt;67.14&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,3,2,0&quot;&gt;&lt;span data-path-to-node=&quot;28,3,2,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;2016 - 17&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,3,3,0&quot;&gt;61.08&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,4,0,0&quot;&gt;&lt;span data-path-to-node=&quot;28,4,0,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;2004 - 05&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,4,1,0&quot;&gt;164.00&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,4,2,0&quot;&gt;&lt;span data-path-to-node=&quot;28,4,2,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;2017 - 18&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,4,3,0&quot;&gt;110.29&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,5,0,0&quot;&gt;&lt;span data-path-to-node=&quot;28,5,0,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;2005 - 06&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,5,1,0&quot;&gt;402.18 &lt;span data-path-to-node=&quot;28,5,1,0&quot; data-index-in-node=&quot;7&quot;&gt;(பெருவெள்ளம்)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,5,2,0&quot;&gt;&lt;span data-path-to-node=&quot;28,5,2,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;2018 - 19&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,5,3,0&quot;&gt;371.53 &lt;span data-path-to-node=&quot;28,5,3,0&quot; data-index-in-node=&quot;7&quot;&gt;(பெருவெள்ளம்)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,6,0,0&quot;&gt;&lt;span data-path-to-node=&quot;28,6,0,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;2006 - 07&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,6,1,0&quot;&gt;235.93&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,6,2,0&quot;&gt;&lt;span data-path-to-node=&quot;28,6,2,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;2019 - 20&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,6,3,0&quot;&gt;258.90&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,7,0,0&quot;&gt;&lt;span data-path-to-node=&quot;28,7,0,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;2007 - 08&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,7,1,0&quot;&gt;344.72 &lt;span data-path-to-node=&quot;28,7,1,0&quot; data-index-in-node=&quot;7&quot;&gt;(பெருவெள்ளம்)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,7,2,0&quot;&gt;&lt;span data-path-to-node=&quot;28,7,2,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;2020 - 21&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,7,3,0&quot;&gt;204.25&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,8,0,0&quot;&gt;&lt;span data-path-to-node=&quot;28,8,0,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;2008 - 09&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,8,1,0&quot;&gt;203.75&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,8,2,0&quot;&gt;&lt;span data-path-to-node=&quot;28,8,2,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;2021 - 22&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,8,3,0&quot;&gt;280.25&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,9,0,0&quot;&gt;&lt;span data-path-to-node=&quot;28,9,0,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;2009 - 10&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,9,1,0&quot;&gt;219.72&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,9,2,0&quot;&gt;&lt;span data-path-to-node=&quot;28,9,2,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;2022 - 23&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,9,3,0&quot;&gt;657.57 &lt;span data-path-to-node=&quot;28,9,3,0&quot; data-index-in-node=&quot;7&quot;&gt;(உச்சபட்ச வரத்து)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,10,0,0&quot;&gt;&lt;span data-path-to-node=&quot;28,10,0,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;2010 - 11&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,10,1,0&quot;&gt;202.17&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,10,2,0&quot;&gt;&lt;span data-path-to-node=&quot;28,10,2,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;2023 - 24&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,10,3,0&quot;&gt;81.17&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,11,0,0&quot;&gt;&lt;span data-path-to-node=&quot;28,11,0,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;2011 - 12&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,11,1,0&quot;&gt;206.78&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,11,2,0&quot;&gt;&lt;span data-path-to-node=&quot;28,11,2,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;2024 - 25&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,11,3,0&quot;&gt;290.84&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,12,0,0&quot;&gt;&lt;span data-path-to-node=&quot;28,12,0,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;2012 - 13&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,12,1,0&quot;&gt;69.71&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,12,2,0&quot;&gt;&lt;span data-path-to-node=&quot;28,12,2,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;2025 - 26&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,12,3,0&quot;&gt;329.97 &lt;span data-path-to-node=&quot;28,12,3,0&quot; data-index-in-node=&quot;7&quot;&gt;(பெருவெள்ளம்)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,13,0,0&quot;&gt;&lt;span data-path-to-node=&quot;28,13,0,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;2013 - 14&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&lt;span data-path-to-node=&quot;28,13,1,0&quot;&gt;235.61&lt;/span&gt;&lt;/td&gt;
&lt;td&gt;&amp;nbsp;&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;/tbody&gt;
&lt;/table&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேற்கண்ட புள்ளிவிவரங்கள் உணர்த்தும் உண்மை என்னவென்றால், கர்நாடகா உபரி நீரைத் தேக்க அணை கட்டினால், தமிழகத்தின் விவசாய வரைபடமே மாறும் அபாயம் உள்ளது. தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு சட்ட ரீதியான முட்டுக்கட்டைகளைப் பலப்படுத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மண்ணின் மடி வறண்டு கிடந்தால்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எப்படித் தீரும் தமிழ்நாட்டின் பசி?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;உபரி நீரையும் சிறைபிடிக்கத் துடிக்கும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மேக்கேதாட்டுவின் சுவர்கள்,&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முறிக்கப் பார்ப்பது வெறும் அணையை அல்ல,&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நம் உழவர்களின் நரம்புகளை!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;இருபத்தாறு லட்சம் ஏக்கர் நிலங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நாளை தரிசாக மாறுவதா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சோழ வளநாடு சோற்றுக்கின்றிச் தவித்து&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மக்கள் அகதிகளாய் அலைவதா?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சட்டத்தின் கதவுகளும், மக்களின் குரல்களும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒன்றாக ஒலிக்கும் காலம் இது;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காவிரி என்பது வெறும் நீரல்ல,&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழினத்தின் உயிர்நாடி என்றுணர்ந்து&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விழித்து நின்றால் மட்டுமே &amp;ndash; நாளை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விவசாயப் பூமி தழைத்திருக்கும்! இதை உணருமா கர்நாடகம்&lt;/strong&gt; என்று கேள்வி எழுப்புகின்றனர் விவசாயிகள் நலம் விரும்பிகள்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/07/f44a81229cd33700ffbcfac521b5d7191780838819885733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ரசாயன உரங்களுக்கு மாற்று என்ன? மயிலாடுதுறை விவசாயிகளுக்கு ஆட்சியர் சொல்லும் சீக்ரெட்!]]></title><link>https://tamil.abplive.com/agriculture/mayiladuthurai-khet-bachao-abhiyan-agriculture-camp-tnn-262951</link><comments>https://tamil.abplive.com/agriculture/mayiladuthurai-khet-bachao-abhiyan-agriculture-camp-tnn-262951#respond</comments><pubDate>Sat, 6 Jun 2026 22:50:44 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ விவசாயம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/agriculture/mayiladuthurai-khet-bachao-abhiyan-agriculture-camp-tnn-262951</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், விளைநிலங்களின் வளத்தை மீட்டெடுத்து அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக ஒப்படைக்கவும் ஒரு மாபெரும் விழிப்புணர்வு இயக்கத்திற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து 241 கிராம பஞ்சாயத்துகளிலும் ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு &amp;lsquo;விளைநிலம் காப்போம் இயக்கம்&amp;rsquo; (கேத் பச்சாவோ அபியான் - Khet Bachao Abhiyan) திட்டத்தின் கீழ் சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் விரிவாக விளக்கமளித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மண்வள அட்டை:&lt;/strong&gt; நிலத்தின் ஆரோக்கியத்தை அறியும் வழிகாட்டி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இவ்வியக்கத்தின் முதன்மைக் குறிக்கோளாக மண்வளப் பாதுகாப்பு அமைகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&quot;விவசாயிகள் தங்களின் விளைநிலங்களின் தன்மையை அறிந்து அதற்கேற்ப பயிர் செய்வதே லாபகரமான விவசாயத்திற்கு அடித்தளமாகும். இந்த முகாம்களில், விவசாயிகளுக்கு மண்வள அட்டை (Soil Health Card) பயன்படுத்துவதன் உண்மையான நோக்கம் மற்றும் அதன் பயன்கள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்படும். தங்கள் நிலத்தின் மண்ணை எவ்வாறு ஆய்வு செய்ய வேண்டும், மண்ணில் உள்ள சத்துக்களின் குறைபாடுகளை எவ்வாறு கண்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும் மற்றும் மண்வளத்தினை எவ்வாறு நிலையான முறையில் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த நேரடி தொழில்நுட்ப விளக்கங்களும், ஆலோசனைகளும் வேளாண் வல்லுநர்களால் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.&quot;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மாற்று விவசாய தொழில்நுட்பங்கள்: ரசாயனத்திற்கு முற்றுப்புள்ளி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்கால விவசாயத்தில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் மிதமிஞ்சிய பயன்பாடு மண்ணின் உயிரோட்டத்தை பாழாக்கி வருகிறது. இதற்கு மாற்றாக இயற்கை வழி வேளாண்மையை ஊக்குவிக்கும் நோக்கில் இம்முகாம்களில் பல்வேறு தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ரசாயனக் குறைப்பு:&lt;/strong&gt; ரசாயன உரங்கள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் வீரியமிக்க ரசாயன பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை அதிக அளவில் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;அங்கக மற்றும் இயற்கை உரங்கள்:&lt;/strong&gt; மண்ணின் இயற்கை வளத்தை மீட்டெடுக்க மாற்றாக அங்கக (Organic) உரங்கள் மற்றும் இயற்கை உரங்களைப் பயன்படுத்தும் முறைகள் கற்றுத்தரப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரங்கள்:&lt;/strong&gt; மண்ணிற்கு தழைச்சத்தை இயற்கையாகவே வழங்கும் பசுந்தாள் உரப்பயிர்கள் (தக்கைப்பூண்டு, சணப்பை போன்றவை) மற்றும் பசுந்தழை பயிர்களின் பயன்பாடுகள் குறித்து விளக்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நவீன தொழில்நுட்பங்கள்:&lt;/strong&gt; பயிர்களுக்குத் தேவையான நுண்ணூட்டச் சத்துக்களை (Micronutrients) சரியான விகிதத்தில் எவ்வாறு பயன்படுத்துவது, நவீன தொழில்நுட்பங்களான நானோ உரங்கள் (Nano Fertilizers) மற்றும் திரவ உயிர் உரங்கள் (Liquid Bio-fertilizers) ஆகியவற்றின் பயன்பாடுகள் மற்றும் அவற்றால் ஏற்படும் செலவுக் குறைப்பு குறித்து செயல்விளக்கம் அளிக்கப்படும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விவசாயிகளின் ஆரோக்கிய மேம்பாடு: சரிவிகித உணவு முறை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இவ்வியக்கம் விவசாய நிலங்களை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், விவசாயிகளின் குடும்ப ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் உன்னத நோக்கத்தைக் கொண்டுள்ளது. பொதுவாக உழவர்கள் நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கிறார்கள், ஆனால் அவர்களின் ஆரோக்கியமும் பேணப்பட வேண்டும் என்ற நோக்கில் இம்முகாமில் சிறப்பு வழிகாட்டுதல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன்படி, பொதுமக்களின் அன்றாட உணவுப் பழக்கத்தில் ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும். குறிப்பாக, சமையலில் அதிகப்படியான சமையல் எண்ணெய் நுகர்வினை எவ்வாறு குறைப்பது, தேவையற்ற கொழுப்புகள் உடலுக்கு ஏற்படுத்தும் தீங்குகள் என்னென்ன என்பது பற்றிய விழிப்புணர்வு ஊட்டப்படும். மேலும், உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் சமவிகிதத்தில் கிடைக்கும் வகையில், அன்றாட உணவுப் பழக்கவழக்கத்தில் &amp;lsquo;சரிவிகித உணவு முறையினை&amp;rsquo; (Balanced Diet) எவ்வாறு பின்பற்றுவது என்பது குறித்த ஊட்டச்சத்து வழிகாட்டுதல்களும் இந்த முகாம்களின் வாயிலாக விவசாயிகளுக்குக் கற்றுத்தரப்படும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஆட்சியரின்&amp;nbsp; வேண்டுகோள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டத்தின் ஒட்டுமொத்த விவசாயப் புரட்சிக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இந்த ஒரு மாத கால முகாம் மிக முக்கியப் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த நல்வாய்ப்பினை மாவட்டத்தின் அனைத்துப் பகுதி விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், விடுத்துள்ள அழைப்பில், &quot;மயிலாடுதுறை மாவட்டத்தின் 241 கிராம ஊராட்சிகளிலும் உள்ள அனைத்து விவசாயப் பெருங்குடி மக்களும், தத்தமது கிராமங்களில் நடைபெறும் இந்த &amp;lsquo;விளைநிலம் காப்போம் இயக்கம்&amp;rsquo; விழிப்புணர்வு முகாம்களில் எவ்வித தொய்வுமின்றி, பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும். வேளாண் துறை அதிகாரிகள் வழங்கும் நவீன தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற்று, தங்கள் நிலத்தின் வளத்தைப் பாதுகாப்பதோடு, ஆரோக்கியமான வாழ்வையும் பெற்று அனைவரும் பயன்பெற வேண்டும்&quot; எனத் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முகாம் நடைபெறும் தேதிகள் மற்றும் இடங்கள் குறித்த விபரங்கள் அந்தந்த கிராம ஊராட்சி அலுவலகங்கள் மற்றும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மூலம் விவசாயிகளுக்கு உடனுக்குடன் அறிவிக்கப்படும் என வேளாண்மை உழவர் நலத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/06/5b6947f8e19183c3d7a955e7bbf482d21780766392789186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கண்ணீர் வடிக்கும் காவிரி டெல்டா: குறுவை சாகுபடி கைநழுவுகிறது; சம்பா சாகுபடியாவது தப்புமா?]]></title><link>https://tamil.abplive.com/news/thanjavur/a-blow-to-delta-farmers-historic-kuruvai-season-under-threat-as-mettur-water-halves-tnn-262937</link><comments>https://tamil.abplive.com/news/thanjavur/a-blow-to-delta-farmers-historic-kuruvai-season-under-threat-as-mettur-water-halves-tnn-262937#respond</comments><pubDate>Sat, 6 Jun 2026 19:21:19 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தஞ்சாவூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thanjavur/a-blow-to-delta-farmers-historic-kuruvai-season-under-threat-as-mettur-water-halves-tnn-262937</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் மிகக் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. தென்மேற்கு பருவமழையும் கைகொடுக்காத நிலையில், ஜூன் 12-ஆம் தேதி பாசனத்திற்காக அணை திறக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் முற்றிலுமாக மங்கியுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனால், இந்த ஆண்டு குறுவை சாகுபடியைத் தொடங்க முடியாமல் லட்சக்கணக்கான விவசாயிகள் கவலையிலும், பெருத்த ஏமாற்றத்திலும் மூழ்கியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இருந்த சாதனை நெல் உற்பத்தி நிலை மாறி, நடப்பாண்டில் ஒரேயொரு போக சம்பா சாகுபடியாவது செய்ய வாய்ப்பு இருக்குமா என்ற சோகமான சூழல் உருவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கடந்த கால சாதனையும் தற்போதைய பின்னடைவும்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த 2012 முதல் தொடர்ந்து 8 ஆண்டுகள் மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்படாமல் டெல்டா விவசாயிகள் தவித்தனர். ஆனால், 2020-ஆம் ஆண்டு முதல் நிலைமை மாறி, கடந்த 4 ஆண்டுகளில் (2023 தவிர) அணை சரியான நேரத்தில் திறக்கப்பட்டது. இதனால் குறுவை, சம்பா, தாளடி என முப்போக சாகுபடியும் வெற்றிகரமாக அமைந்து, நெல் உற்பத்தியில் தமிழகம் சாதனை படைத்தது. கடந்த 2024-இல் நீர் இருப்பு குறைவால் ஜூலை 28-க்கு அணை திறப்பு தள்ளிப்போனாலும், 2025-ல் உரிய காலத்தில் திறக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆனால், நடப்பாண்டு மீண்டும் நிலைமை மோசமாகி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தி வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பாதியாக குறைந்த நீர் இருப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.52 அடியாகவும், நீர் இருப்பு 82.15 டி.எம்.சி.-யாகவும் இருந்தது. ஆனால் தற்போது நீர் இருப்பு 50 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்து, வெறும் 41.55 டி.எம்.சி. மட்டுமே உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முப்போக சாகுபடிக்கு ஒட்டுமொத்தமாக சுமார் 300 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும் நிலையில், தற்போதைய நீர் இருப்பை வைத்துக்கொண்டு வழக்கமான தேதியான ஜூன் 12 அன்று அணையைத் திறக்க முடியாத இக்கட்டான நிலை நீடிக்கிறது. தமிழக அரசும் இதுவரை மேட்டூர் அணை திறப்பது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மே மாதம் 3வது வாரத்திலேயே மழை பெய்ததால் நம்பிக்கையடைந்த விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொள்ள ஆயத்தமாகினர். வயல்களில் இயற்கை எருவை கொட்டியும், வயலை உழுதும் தயாராகினர். ஆனால் இப்போது நம்பிக்கை கருகி போய்விடும் நிலையில் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஆற்றுப்பாசனத்தை மட்டுமே நம்பியிருக்கும் விவசாயிகள் கவலையடைந்துள்ள நிலையில், மோட்டார் பம்ப்செட் வசதியுள்ள ஒருசில விவசாயிகள் மட்டுமே முன்பட்ட குறுவை சாகுபடியைத் தொடங்கியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பாதியாகக் குறைக்கப்பட்ட சாகுபடி இலக்கு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தண்ணீர் பற்றாக்குறை காரணமாக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி இலக்கு நடப்பாண்டு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சாகுபடி பரப்பு: 6.31 லட்சம் ஏக்கர், நடப்பாண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு: 3.44 லட்சம் ஏக்கர் மட்டுமே.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மாவட்ட வாரியான நடப்பாண்டு சாகுபடி இலக்கு:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தஞ்சாவூர்: 1.57 லட்சம் ஏக்கர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திருவாரூர்: 97 ஆயிரம் ஏக்கர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: 87 ஆயிரம் ஏக்கர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நாகப்பட்டினம்: 3 ஆயிரம் ஏக்கர்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;எல் நினோ ஆண்டாக இருக்கும் என கணிப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நடப்பாண்டு 'எல் நினோ' ஆண்டாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதோடு, மே 24-ல் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தைக் கடந்தும் இன்னும் தீவிரமடையவில்லை. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை இல்லாததால், கர்நாடக அணைகளின் நீர் இருப்பு கவலைக்கிடமாக உள்ளது:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கிருஷ்ணராஜ சாகர்: 23%&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கபினி: 24%&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஹேரங்கி: 34%&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஹேமாவதி: 40%&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கர்நாடக அணைகள் நிரம்பி வழிந்தால் மட்டுமே தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்கும். இனி மழை தொடங்கினாலும், கர்நாடக அணைகள் நிரம்பி, மேட்டூர் அணைக்கு நீர் வந்து சேரக் குறைந்தது ஒரு மாதமாகும் என்பதால் ஜூன் 12 அணை திறப்பு சாத்தியமில்லை எனத் தெரிகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வல்லுநர்கள் எச்சரிக்கை: ஆகஸ்டில் திறப்பதே உசிதம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுகுறித்து மூத்த வேளாண் வல்லுநர்கள் தரப்பில் கூறுகையில், &quot;நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விடக் குறைவாகவே இருக்கும் என வானிலை மையம் கூறுகிறது. ஜூன் 20-க்குள் அணையைத் திறந்தால் மட்டுமே குறுவை சாகுபடி செய்ய முடியும். ஜூலை முதல் வாரத்தில் திறந்து சாகுபடி செய்தால், அறுவடை நேரத்தில் பயிர்கள் வடகிழக்கு பருவமழையில் சிக்கி அழிந்துவிடும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது மேட்டூரில் உள்ள 40 டி.எம்.சி.-யில் 35 டி.எம்.சி. மட்டுமே திறக்க முடியும். வரத்து இல்லாததால் இது 20-25 நாட்களுக்கு மட்டுமே தாங்கும். எனவே, குறுவையைத் தவிர்த்துவிட்டு, ஒரு போக சம்பா சாகுபடிக்கு மட்டும் ஆகஸ்ட் 2-வது வாரத்தில் அணையைத் திறப்பதே நல்லது&quot; என்று தெரிவித்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கர்நாடகாவின் கைகளில் சம்பா சாகுபடி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒரு போக சம்பா சாகுபடிக்கு மட்டும் தோராயமாக 200 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். மேட்டூர் அணையில் உள்ள 35 டி.எம்.சி.-யுடன், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடக அரசு நமக்குத் தர வேண்டிய 167 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட்டால் மட்டுமே மொத்தம் 202 டி.எம்.சி. பெற்று சம்பா சாகுபடியையாவது காப்பாற்ற முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சுருக்கமாகச் சொன்னால், நடப்பாண்டு டெல்டாவின் குறுவை சாகுபடி முற்றிலும் கைநழுவிப் போன சூழலில், எஞ்சியிருக்கும் சம்பா சாகுபடியின் வெற்றியும் கர்நாடகா திறந்துவிடும் தண்ணீரின் அளவிலேயே உள்ளது என்பது டெல்டா விவசாயிகளைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/06/44911b3e6a6104a412a1cd21be2a9b731780753797388733_original.png" width="220"/></item><item><title><![CDATA[மதுரையில் எகிறிய மல்லிகைப் பூ விலை.. (06.06.2026) இன்றைய முழு விலை நிலவரம் என்ன?]]></title><link>https://tamil.abplive.com/agriculture/madurai-jasmine-price-skyrockets-today-full-price-list-inside-tnn-262908</link><comments>https://tamil.abplive.com/agriculture/madurai-jasmine-price-skyrockets-today-full-price-list-inside-tnn-262908#respond</comments><pubDate>Sat, 6 Jun 2026 14:33:03 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ விவசாயம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/agriculture/madurai-jasmine-price-skyrockets-today-full-price-list-inside-tnn-262908</guid><description><![CDATA[&lt;p&gt;மதுரை மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.1200 முதல் ரூ.1300 வரை விற்பனை ஆகிறது. அதே பிற பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மதுரை மல்லிகைப் பூ விற்பனை&lt;/strong&gt; &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;மதுரை மல்லி என்பது மதுரை, விருதுநகர், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படும் சிறப்பு வாய்ந்த பூவாகும். மதுரை மையமாக உள்ளதால் மல்லிகைப் பூ மற்றும் பிற பூக்களுக்கு வணிகம் செய்ய ஏதுவாக உள்ளது. குறிப்பாக மல்லிகைப் பூ கி.மு 300-ஆம் ஆண்டிலிருந்து பயிரிடப்பட்டு வருகின்றன. இதற்கான குறிப்புகள் சங்க இலக்கியங்களில் மற்றும் கோயில் சிற்பங்களில் காணப்படுகின்றன. இப்பூக்கள் தங்களது தனித்துவமான மணம் மற்றும் நறுமணத்திற்காக பிரசித்தி பெற்றவை. இதனால் வெளியூர் பயணிகள் மதுரை வரும் போது மல்லிகைப் பூவை விரும்பி வாங்குகின்றனர். இதே போல் கோயில் நகரமான மதுரையில் பிற பூக்களின் விற்பனையும் எப்போது சூடுபறக்கும். இந்நிலையில் இன்று நான்கு மாதங்கள் கழித்து மல்லிகைப் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்:&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை மல்லி கிலோ ரூ.1200 முதல் ரூ.1300 வரை,&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;பிச்சி ரூ.500,&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;முல்லை ரூ.400 முதல் ரூ.500,&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;செவ்வந்தி ரூ.300 முதல் ரூ.350,&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;சம்பங்கி ரூ.100,&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;செண்டு மல்லி ரூ.50,&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;கனகாம்பரம் ரூ.800 முதல் ரூ.1000வரை,&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;ரோஸ் ரூ.250,&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;பட்டன் ரோஸ் ரூ.150,&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;பன்னீர் ரோஸ் ரூ.300,&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;கோழிக்கொண்டை ரூ.150,&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;அரளி ரூ.250,&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;மரிக்கொழுந்து ரூ.150,&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;தாமரை (ஒன்றுக்கு) ரூ.10 முதல் 20 வரை என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ல் பூக்களின் விலை எப்படி உள்ளது என்பதை காணலாம்.&lt;/div&gt;
&lt;p&gt;அடுத்தடுத்து பெய்து வரும் மழை காரணமாக மல்லிகை விளைச்சல் குறைந்துள்ளது. நாளை முகூர்த்த நாள் என்பதாலும் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மதுரை மலர் சந்தைக்கு வரத்தும் குறைவாக உள்ளது. வரும் நாட்களில் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உண்டு இதனால் விலையும் குறையலாம். மாட்டுத்தாவணி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன்&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/06/aa52359aea49d746a4d8e0ca0d175cc51780736557304184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[மேட்டூர் அணை திறக்க வாய்ப்பில்லை; உழவர்களுக்குக் குறுவைத் தொகுப்புடன் ஏக்கருக்கு ரூ.5000 மானியம் வழங்குக: அன்புமணி வலியுறுத்தல்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/unlikely-that-mettur-dam-will-be-opened-anbumani-urges-government-to-provide-farmers-with-a-subsidy-of-5000-per-acre-alongside-the-kuruvai-package-262875</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/unlikely-that-mettur-dam-will-be-opened-anbumani-urges-government-to-provide-farmers-with-a-subsidy-of-5000-per-acre-alongside-the-kuruvai-package-262875#respond</comments><pubDate>Sat, 6 Jun 2026 11:09:00 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/unlikely-that-mettur-dam-will-be-opened-anbumani-urges-government-to-provide-farmers-with-a-subsidy-of-5000-per-acre-alongside-the-kuruvai-package-262875</guid><description><![CDATA[&lt;p&gt;சென்னை: மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதாலும், கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததாலும் நடப்பாண்டில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வாய்ப்பில்லை என்பது உறுதியாகிவிட்டது. எனவே, நிலத்தடி நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்ய ஏதுவாக, உழவர்களுக்குக் குறுவைத் தொகுப்புடன் ஏக்கருக்கு ரூ.5,000 இடுபொருள் மானியம் வழங்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,&lt;/p&gt;
&lt;p&gt;மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாலும், &amp;nbsp;தென்மேற்கு பருவமழை &amp;nbsp;தீவிரமடைவதற்கான வாய்ப்புகள் தென்படாததாலும் &amp;nbsp;காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படாது என்பது உறுதியாகி விட்டது. இத்தகைய சூழலில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி குறுவை சாகுபடி &amp;nbsp;செய்யத் தேவையான உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12&amp;amp;ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால், 93.47 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில், இன்றைய நிலவரப்படி வெறும் 41.60 டி.எம்.சி, அதாவது 79 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;அணையிலிருந்து பாசனத்திற்கு &amp;nbsp; தண்ணீர் திறக்க வேண்டும் என்றால், அணையின் நீர்மட்டம் 90 அடிக்கும் கூடுதலாக உயர்வதுடன், அணைக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் வந்தால் தான் குறுவை சாகுபடி காலம் முழுமைக்கும் தண்ணீர் வழங்க முடியும். அதற்கு இன்னும் குறைந்தது &amp;nbsp;12 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படுவதுடன், &amp;nbsp;வினாடிக்கு குறைந்தது 18 ஆயிரம் கன அடி வீதம் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வர வேண்டியது கட்டாயமாகும்.&lt;/p&gt;
&lt;p&gt;ஆனால், இன்றைய நிலையில் கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள &amp;nbsp;கிருஷ்ணராஜ சாகர் அணையில் 11.49 டி.எம்.சி, கபினி அணையில் 4.47 டி.எம்.சி, ஹாரங்கி அணையில் 2.97 டி.எம்.சி, ஹேமாவதி அணையில் 11.41 டி.எம்.சி என மொத்தம் 33.45 டி.எம்.சி மட்டுமே தண்ணீர் உள்ளது. 4 அணைகளின் மொத்தக் கொள்ளளவான 114.57 டி.எம்.சியில் 29.08 % &amp;nbsp;மட்டுமே என்பதால் இருக்கும் நீரை கர்நாடகம் திறந்து விட வாய்ப்பில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;கடந்த ஆண்டு குறுவை பருவத்தின் போது தான், அதற்கு முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.13 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. நடப்பாண்டில் உரிய காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாவிட்டால், குறுவை நெல் சாகுபடி செய்யப்படும் பரப்பு 3 லட்சம் ஏக்கருக்கும் கீழாக குறைந்து விடும். இதனால் உழவர்களுக்கு வருவாய் இழப்பும், தொழிலாளர்களுக்கு வேலையிழப்பும் ஏற்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த பாதிப்புகளை ஓரளவுக்காவது கட்டுப்படுத்த வேண்டும் என்றால் நிலத்தடி நீரை &amp;nbsp;பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்வதும், அதற்காக உழவர்களுக்கு உதவ வேண்டியதும் அரசின் கடமை ஆகும். இதற்காக &amp;nbsp;காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட &amp;nbsp;தமிழகம் முழுவதும் உள்ள &amp;nbsp;உழவர்களுக்கு விதைகள், உரங்கள், நுண்ணூட்ட சத்துகள் உள்ளிட்டவற்றை மானியத்தில் வழங்கும் குறுவைத் தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். கடந்த ஆட்சியில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மட்டுமே குறுவைத் தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் உச்சவரம்பின்றி அனைவருக்கும் குறுவைத் தொகுப்பு வழங்கப்பட வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;அத்துடன் &amp;nbsp;24 மணி நேரமும் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கவும், &amp;nbsp;இடுபொருள் மானியமாக &amp;nbsp;ஏக்கருக்கு &amp;nbsp;ரூ.5,000 வீதம் &amp;nbsp;வழங்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை &amp;nbsp;எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/04/b6be7323176eb452381bb08d311d86191780549319377194_original.jpg" width="220"/></item></channel></rss>