<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>காகிதத்தில் 110... களத்தில் 30!  கிணறு வெட்டிய ரசீது கதையாக மாறிய விவசாயிகளின் நிலை...</title><atom:link href="https://tamil.abplive.com/agriculture/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 17 Sep 2026 07:07:47 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[கடைமடையில் காவிரி! கொண்டாட்டம் ஒரு பக்கம்... பெரும் கவலை மறுபக்கம்!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-poombuhar-melaiyur-dam-cauvery-water-farmers-demand-tnn-274726</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-poombuhar-melaiyur-dam-cauvery-water-farmers-demand-tnn-274726#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 17:18:56 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-poombuhar-melaiyur-dam-cauvery-water-farmers-demand-tnn-274726</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை:&lt;/strong&gt; டெல்டா காவிரி பாசன பகுதியின் வாழ்வாதாரமாக விளங்கும் மேட்டூர் அணை, நடப்பு சம்பா சாகுபடி பருவத்திற்காக கடந்த ஒன்றாம் தேதி காலதாமதமாக தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரானது படிப்படியாகப் பயணித்து, கல்லணையை அடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆறாம் தேதி கல்லணையிலிருந்தும் காவிரி பாசனக் கால்வாய்களுக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காவிரி ஆற்றின் பல்வேறு கிளைகள் மற்றும் வாய்க்கால்கள் வழியாகப் பயணித்த இந்த நதிநீர், பத்து நாட்கள் தொடர் பயணத்திற்குப் பிறகு காவிரி கடலோடு கலக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பூம்புகார் பகுதிக்கு முன்னதாக அமைந்துள்ள மேலையூர் கதவணைப் பகுதிக்கு வந்து சேர்ந்தது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கடைசி கதவணையில் காவிரிக்குச் சிறப்பு வரவேற்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிக முக்கிய மற்றும் கடைசி கதவணை மேலையூர் கதவணையாகும். கடந்த 13ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட எல்லைக்கு வந்தடைந்த காவிரி நீரானது, வினாடிக்கு 803 கன அடி வீதம் ஆற்றின் வழியே பாய்ந்து, பல கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து இந்த இறுதி கதவணை நிலையை எட்டியுள்ளது. காவிரி அன்னையின் வரவைக் கொண்டாடும் விதமாக, கதவணைப் பகுதியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சங்கர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் அப்பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து சிறப்பு பூஜைகள் நடத்தினர். பாயந்து வந்த காவிரி நீருக்கு மலர்களைத் தூவி, தீபாராதனை காட்டி விவசாயிகள் மிகுந்த உவகையுடனும் மரியாதையுடனும் வழிபாடு செய்து காவிரி நீரை முறைப்படி வரவேற்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தண்ணீர் வரத்து குறைவு: சாகுபடிக்குச் சவாலான சூழல்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மகிழ்ச்சியோடு வரவேற்பு அளிக்கப்பட்ட போதிலும், கதவணைக்கு வந்து சேர்ந்துள்ள தண்ணீரின் அளவு மிகவும் குறைவாக இருப்பது அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலையூர் கதவணையில் அதிகபட்சமாக 7.5 அடி உயரம் வரை தண்ணீரைத் தேக்கி வைத்துப் பாசனத்திற்குப் பயன்படுத்த முடியும் என்ற நிலையில், தற்போது வெறும் இரண்டடி நீர் மட்டுமே வந்து சேர்ந்துள்ளது. இதனால் இந்த கத அணையை நம்பி இருக்கும் சுமார் 3,016 ஏக்கர் பாசனப் பரப்புப் பகுதிகளுக்குப் பயிர்களுக்குத் தேவையான போதிய தண்ணீர் தங்கு தடையின்றி கிடைப்பதில் பெரும் சிரமம் உருவாகியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சம்பா சாகுபடியைச் சீராக மேற்கொண்டு அறுவடை நிலையை அடைய வேண்டுமானால், குறைந்தபட்சம் 100 நாட்களுக்காவது எவ்விதத் தடங்கலும் இன்றி தொடர்ந்து தண்ணீர் வரத்து இருப்பது அவசியமாகும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அரசுக்கு விவசாயிகள் முன்வைக்கும் அவசரக் கோரிக்கைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது வந்துள்ள குறைந்த அளவிலான நீரைக் கொண்டு சம்பா பயிர்களைப் பாதுகாப்பது கடினம் என்பதால், பாசனப் பகுதி விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவை கணிசமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தடையின்றி காவிரி நீர் கடைமடை வரை வந்து சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய சட்டப்படியான நதிநீரைப் பெறுவதற்கு கர்நாடக அரசுடன் பேசி, உரிய காவிரி நீரை விரைந்து கேட்டுப் பெற தமிழக அரசு தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பெரிய ஏரிகளுக்கு நீர் வழங்குவதில் நீடிக்கும் சிக்கல்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காவிரியில் தண்ணீர் வரத்து மிகக் குறைந்த அளவில் இருப்பதால், மயிலாடுதுறை மாவட்டத்தின் மிக முக்கியப் பாசன ஆதாரங்களாகவும் பெரிய ஏரிகளாகவும் விளங்கும் திருவாலி ஏரி மற்றும் பெருந்தோட்டம் ஏரி ஆகியவற்றிற்குத் தண்ணீர் கொண்டு செல்வதில் தற்போது பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த இரு பெரிய ஏரிகளும் நிரம்பினால் மட்டுமே சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நில நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், நேரடிப் பாசனத்திற்கும் நீர் உறுதியாகும். ஆனால், ஆற்றில் பாய்ந்து வரும் தற்போதைய குறைந்த அளவு நீரைக் கொண்டு ஏரிகளை நிரப்புவது சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது. எனவே, சம்பா பயிர்கள் வாடாமல் காக்கவும், மாவட்டத்தின் முக்கிய நீர்நிலைகளான திருவாலி, பெருந்தோட்டம் ஏரிகளை முழுமையாக நிரப்பவும் அரசு கூடுதல் தண்ணீரை உடனடியாகக் காவிரியில் திறந்து விட வேண்டும் என்பதே பாசன பகுதி மக்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/56b555109bbd9f5380859ebd5669b93e1789559290782186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்கள்... விவசாயிகளே உஷார்... உஷார்: மழையில்லாததால் அதிகரிக்கும் பாதிப்பு]]></title><link>https://tamil.abplive.com/news/thanjavur/whiteflies-attacking-coconut-trees-farmers-be-alert-infestation-rising-due-to-lack-of-rain-tnn-274705</link><comments>https://tamil.abplive.com/news/thanjavur/whiteflies-attacking-coconut-trees-farmers-be-alert-infestation-rising-due-to-lack-of-rain-tnn-274705#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 14:55:59 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தஞ்சாவூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thanjavur/whiteflies-attacking-coconut-trees-farmers-be-alert-infestation-rising-due-to-lack-of-rain-tnn-274705</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் தென்னை மரங்களை தாக்கி வரும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த விவசாயிகள் ஒருங்கிணைந்த இயற்கை மற்றும் உயிரியல் முறைகளை கையாள வேண்டும் என்று வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக போதிய மழை இல்லாததால் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்துள்ளதாகவும், விவசாயிகள் ஆரம்ப நிலையிலேயே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/96ecc57b27fe3eb500ef3739f757d4731789550648855733_original.jpg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தென்னை ஓலைகளில் முட்டையிடும் வெள்ளை ஈக்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தென்னை மரங்களில் தற்போது ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. இவ்வகை வெள்ளை ஈக்கள் தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் சுருள் வடிவில் சுமார் 50 முதல் 65 முட்டைகள் வரை இடுகின்றன. இந்த முட்டைகள் சுமார் 4 முதல் 7 நாட்களில் குஞ்சுகளாக பொரிக்கின்றன. பின்னர் அவை தென்னை ஓலைகளில் இருந்து சாற்றை உறிஞ்சி வளர்கின்றன. இதனால் ஓலைகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், மரத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் பாதிப்பு ஏற்படக்கூடும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்கள் பறக்கத் தொடங்குவதால், அருகில் உள்ள தென்னை மரங்கள் மற்றும் அடுத்தடுத்த தோப்புகளுக்கும் வேகமாக பரவும் தன்மை கொண்டவை. இதனால் ஒரு சில மரங்களில் காணப்படும் தாக்குதல் கவனிக்கப்படாமல் விட்டால், நாளடைவில் முழு தோப்புக்கும் பரவும் அபாயம் உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;இரவு நேரத்தில் விளக்குப் பொறி வைக்கலாம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த விவசாயிகள் முதற்கட்டமாக விளக்குப் பொறிகளை பயன்படுத்தலாம். ஏக்கருக்கு 2 விளக்குப் பொறிகளை அமைத்து, இரவு 7 மணி முதல் 11 மணி வரை விளக்குகளை எரியவிடுவதன் மூலம் வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். இது ரசாயன பூச்சிக்கொல்லிகளை அதிகம் பயன்படுத்தாமல் பூச்சிகளின் எண்ணிக்கையை குறைக்க உதவும் ஒரு எளிய முறையாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மஞ்சள் ஒட்டுப்பொறி மூலம் கட்டுப்படுத்தலாம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வெள்ளை ஈக்களை கண்காணித்து கட்டுப்படுத்த மற்றொரு முக்கியமான வழிமுறையாக மஞ்சள் ஒட்டுப்பொறிகளை பயன்படுத்தலாம். ஏக்கருக்கு 10 மஞ்சள் ஒட்டுப்பொறிகள் என்ற அளவில் அமைத்து, அவற்றை தரையில் இருந்து சுமார் 5 அடி உயரத்தில் கட்டி வைக்கலாம். அல்லது தென்னை மரத்தின் தண்டுப் பகுதியில் சுற்றிலும் அமைத்தும் பயன்படுத்தலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மஞ்சள் நிறத்தால் கவரப்படும் வெள்ளை ஈக்கள் ஒட்டுப்பொறியில் சிக்குவதன் மூலம் அவற்றின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தண்ணீரை அதிக அழுத்தத்தில் பீய்ச்சி அடிக்கலாம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வெள்ளை ஈ தாக்குதல் காணப்படும் மரங்களில் உள்ள ஓலைகளின் மீது தண்ணீரை விசைத்தெளிப்பான் மூலம் அதிக அழுத்தத்துடன் பீய்ச்சி அடிப்பதும் பயனுள்ள கட்டுப்பாட்டு முறையாகும். இதன் மூலம் ஓலைகளில் ஒட்டியிருக்கும் வெள்ளை ஈக்கள் மற்றும் அவற்றின் முட்டைகளை அகற்ற முடியும். குறிப்பாக ஓலைகளின் அடிப்பகுதியில் தண்ணீர் நன்றாக படும் வகையில் தெளிப்பது முக்கியம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;இயற்கை எதிரிகளை பயன்படுத்தலாம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த உயிரியல் முறைகளையும் விவசாயிகள் பயன்படுத்தலாம். கிரைசோபெர்லா என்ற இயற்கை எதிரியை ஏக்கருக்கு சுமார் 500 எண்ணிக்கையில் ஓலைகளின் அடிப்பகுதியில் கட்டி விடலாம். கிரைசோபெர்லா வெள்ளை ஈக்களின் புழுக்களை உணவாக உட்கொண்டு அவற்றின் எண்ணிக்கையை குறைக்க உதவும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதேபோல் காக்ஸினெல்லிட் பொறிவண்டுகள் மற்றும் என்கார்சியா ஒட்டுண்ணிகள் போன்ற இயற்கை எதிரிகளையும் ஓலைகளில் பயன்படுத்துவதன் மூலம் வெள்ளை ஈக்களின் தாக்குதலை கட்டுப்படுத்த முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வேப்பெண்ணெய் தெளிப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தெளிப்பு முறையை பயன்படுத்த விரும்பும் விவசாயிகள், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி வேப்பெண்ணெய் அல்லது 2 மில்லி அசாடிராக்டின் கலந்து, அதனுடன் 1 மில்லி ஒட்டுத்திரவம் சேர்த்து தெளிக்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தக் கலவையை குறிப்பாக தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் நன்றாக படும் வகையில் தெளிப்பது அவசியம் என வேளாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ரசாயன மருந்துகளை தவிர்த்தால் நன்மை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வெள்ளை ஈ தாக்குதல் காணப்படும் தோப்புகளில் தேவையில்லாமல் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது முக்கியம். பூச்சிக்கொல்லிகளை அதிகளவில் பயன்படுத்துவதால் வெள்ளை ஈக்களின் இயற்கை எதிரிகளும் அழிக்கப்படக்கூடும். இயற்கை எதிரிகள் பாதுகாக்கப்பட்டால் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து, அவை இயற்கையாகவே வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மழையில்லாததால் தாக்குதல் அதிகரிப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக மழை இல்லாத சூழல் நிலவி வருவதால் தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகமாக காணப்படுவதாக வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எனவே, விவசாயிகள் தங்களது தென்னந்தோப்புகளை தொடர்ந்து கண்காணித்து, ஆரம்பத்திலேயே வெள்ளை ஈக்களை கண்டறிந்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒருங்கிணைந்த முறையில் விளக்குப்பொறி, மஞ்சள் ஒட்டுப்பொறி, தண்ணீர் பீய்ச்சுதல், இயற்கை எதிரிகள் மற்றும் வேப்பெண்ணெய் போன்ற முறைகளை பயன்படுத்துவதன் மூலம் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/9163230b0883b22e24e98f3fcd62c2741789550632026733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கண்டிதம்பட்டு விவசாயிகளை கண்டுக்கொள்ளுமா அரசு? கண்ணீருடன் காத்திருப்பு]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/will-the-government-pay-heed-to-the-farmers-of-kandithambattu-waiting-in-tears-274699</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/will-the-government-pay-heed-to-the-farmers-of-kandithambattu-waiting-in-tears-274699#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 13:41:37 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/will-the-government-pay-heed-to-the-farmers-of-kandithambattu-waiting-in-tears-274699</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அறுவடை செய்த நெல் மணிகளை 15 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் குவித்து வைத்து வேதனையுடன் காத்திருக்கின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு, சொக்கலை, கா.புதூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள், இந்தாண்டு பம்புசெட் பாசனத்தை நம்பி குறுவை சாகுபடி செய்திருந்தனர். தற்போது பயிர்கள் அறுவடைக்கு வந்துள்ள நிலையில், பல்வேறு வயல்களில் அறுவடை பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பருவநிலை உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில், பம்புசெட் மூலம் கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி மேற்கொண்டனர். வயல்களில் நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாரானதைத் தொடர்ந்து, விவசாயிகள் அறுவடை இயந்திரங்களை கொண்டு வந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அறுவடை செய்யப்பட்ட நெல்லை உடனடியாக விற்பனை செய்யும் நோக்கில், விவசாயிகள் கண்டிதம்பட்டில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால், கொள்முதல் பணிகள் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் தங்களது நெல் மணிகளை குவியலாக கொள்முதல் நிலைய வளாகத்தில் கொண்டு வந்து குவித்து வைத்து, கொள்முதலுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது கண்டிதம்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஏராளமான விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை 15 நாட்களுக்கும் மேலாக குவித்து வைத்து காத்திருக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒருபுறம் வயல்களில் அறுவடை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் காத்திருப்பதால் அடுத்தகட்ட சாகுபடி பணிகளையும் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கொள்முதல் நிலையத்தில் நீண்ட நாட்களாக நெல் மணிகள் குவிந்து கிடப்பதால், திடீரென மழை பெய்தால் நெல் நனைந்து பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட நேரிடும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பல மாதங்களாக உழைத்து, விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து, பாசனம், அறுவடை என பல்வேறு செலவுகளை செய்து விளைவித்த நெல்லை பாதுகாப்பாக விற்பனை செய்வதில் ஏற்படும் தாமதம் தங்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். கூறப்படு.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனால் கண்டிதம்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை அதிகாரிகள் உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அறுவடை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அடுத்தடுத்து வரும் நெல் மூட்டைகளையும் தாமதமின்றி கொள்முதல் செய்ய தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்து, விவசாயிகளின் நீண்ட நாள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், கண்டிதம்பட்டு கிராமத்தில் பம்ப்செட் வாயிலாக குறுவை சாகுபடி செய்து தற்போது அறுவடைப்பணிகள் நடந்து வருகிறது. ஆனால் கடந்த 15 நாட்களாக கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அறுவடைசெய்த நெல்லை குவித்து வைத்து காத்திருக்கிறோம். மழை வேறு அவ்வபோது பெய்வதால் நெல் மணிகள் நனைந்து பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இன்னும் பல விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அறுவடை செய்யாமல் காத்திருக்கின்றனர். பெரிய அளவில் பெய்தால் அறுவடை செய்யப்படாமல் உள்ள வயல்களில் பயிர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும். எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் உடனே கொள்முதல் நிலையத்தை திறந்து விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/4192ed377d09134c7b26458dc77a650c1789546238156733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மதுரை மாட்டுத்தாவணி (16.09.2026) காய்கறி விலை: கும்பாபிஷேகத்திற்கு முன் இன்றைய நிலவரம்!]]></title><link>https://tamil.abplive.com/agriculture/madurai-mattuthavani-vegetable-market-prices-meenakshi-amman-kumbabishekam-tnn-274684</link><comments>https://tamil.abplive.com/agriculture/madurai-mattuthavani-vegetable-market-prices-meenakshi-amman-kumbabishekam-tnn-274684#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 11:10:29 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ விவசாயம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/agriculture/madurai-mattuthavani-vegetable-market-prices-meenakshi-amman-kumbabishekam-tnn-274684</guid><description><![CDATA[&lt;p&gt;மதுரையில் நாளை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் இன்று (16.09.2026) காய்கறி நிலவரம் குறித்து காணலாம்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;மாட்டுத்தாவணி காய்கறி மாட்கெட் விலை நிலவரம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்கெட்டில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் டன் கணக்கில் காய்கறிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மாவட்டம் முழுவதும் மொத்தம் மற்றும் சில்லரையாக விற்பனைக்கும் சொந்த தேவைக்கும் வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் இன்று (16.09.2026) காய்கறி விலை நிலவரம் குறித்து பார்க்கலாம். மேலும் நாளை மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள சூழலில் போக்குவரத்து காரணமாக நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாட்டுத்தாவணியில் கூட்டம் அதிகளவு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;1. கத்திரிக்காய் கிலோ ரூபாய் 30, 40.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;2. கம்மா கத்திரிக்காய் கிலோ ரூபாய் 30, 40&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;3. வெண்டைக்காய் கிலோ ரூபாய் 20, 30&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;4. பாவற்காய் கிலோ ரூபாய் 40,50&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;5. புடலங்காய் கிலோ ரூபாய் 30, 40&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;6. உருட்டு மிளகாய் கிலோ ரூபாய் 70, 80&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;7.&amp;nbsp; சம்பா மிளகாய் கிலோ ரூபாய் 70, 80&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;8. சீனிவரக்காய் கிலோ ரூபாய் 30, 40&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;9. பீர்க்கங்காய் கிலோ ரூபாய் 30, 40&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;10.&amp;nbsp; சுரக்காய் கிலோ ரூபாய் 20,40&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;11. முருங்கை பீன்ஸ் கிலோ ரூபாய் 80,100&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;12. ரிங் பீன்ஸ கிலோ ரூபாய் 90,100&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;13. நைஸ் அவரை கிலோ ரூபாய் 80,100&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;14. பெல்ட் அவரை கிலோ ரூபாய் 80,100&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;15. பட்டை அவரை கிலோ ரூபாய் 100,120&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;16. நாட்டு வெங்காயம் கிலோ ரூபாய் 80,100&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;17. ஒட்டு வெங்காயம்&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;18. பல்லாரி கிலோ ரூபாய் 50,75&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;19. மாங்கா கலலாமை கிலோ ரூபாய் 200&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;20. மாங்கா நாடு கிலோ ரூபாய் 120&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;21. உருளை கிலோ ரூபாய் 30, 60&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;22. முட்டை கோஸ் கிலோ ரூபாய் 30,40&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;23. கேரட்&amp;nbsp; கிலோ ரூபாய் 50, 60&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;24. பட்டானி கிலோ ரூபாய் 140,160&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;25. பட்டர் பீன்ஸ் கிலோ ரூபாய் 120,230&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;26. சோயா பீன்ஸ் கிலோ ரூபாய் 80,110&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;27. நெல்லிக்காய் கிலோ ரூபாய் 80,100&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;28. கருவேப்பிலை கிலோ ரூபாய் 50,60&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;29. மல்லி கட்டு 50&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;30. புதினா கட்டு 50&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;31. இஞ்சி கிலோ ரூபாய் 80, 170&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;15 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டியின் விலை 150, 350 சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி 20,30&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/2ba3113e199ca514499a8b36a9cfb4d31789537196933184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[விவசாயிகளின் நிலம் பறிப்பு: திமுக அரசின் சட்டத்தை ரத்து செய்ய சண்முகம் வலியுறுத்தல்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/farmers-land-seizure-marxist-communist-party-shanmugam-urges-dmk-government-to-repeal-law-274681</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/farmers-land-seizure-marxist-communist-party-shanmugam-urges-dmk-government-to-repeal-law-274681#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 10:46:52 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/farmers-land-seizure-marxist-communist-party-shanmugam-urges-dmk-government-to-repeal-law-274681</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;போராட்டம் நடத்தும்&amp;nbsp; விவசாயிகளை வீட்டுக்காவலில் வைப்பது கண்டனத்துக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தூத்துக்குடியில் வரும் 27 முதல் 29-ஆம் தேதி வரை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 31-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. அதற்காக&amp;nbsp; திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 31-வது மாநில மாநாடு கருத்தரங்கம் நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இதில் நிலம் நமது உரிமை என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கலந்து கொண்டு உரையற்றினார். அப்போது திடீரென மின் தடை ஏற்பட்டது. உடனடியாக உரை நிறுத்திய சண்முகம் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் ஜெனரேட்டர் போடப்பட்ட பின் அவர் பேச தொடங்கினார். அதன்பின் 15 நிமிடங்கள் கழித்து மின்சாரம் விநியோகிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அதன்பின் தொடர்ந்து பேசிய சண்முகம், &amp;ldquo;90 ஆண்டுகளுக்கு மேலாக அகில இந்திய விவசாயிகள் சங்கம் செயல்பட்டு வருகிறது.1942-இல் அதன் கிளையாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்பதற்காக இதுவரை போராடி வருகிறோம். நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்குவதில் காங்கிரஸ், திமுக, அதிமுகவினர் தோல்வி அடைந்து விட்டார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;2006-இல் தரிசு நிலங்களை குடும்பத்திற்கு 2 ஏக்கர் வழங்குவதாக கருணாநிதி கூறியிருந்தார். அதனை எதிர்பார்த்து கொண்டிருந்தோம். நிலத்தை காணோம் எனக்கூறினர். நிலம் எங்காவது காணாமல் போகுமா?&lt;br /&gt;சட்டமன்றத்தில் கருணாநிதி கூறினார் கையளவு உள்ளது. 50 லட்சம் ஏக்கர் கையளவு நிலமா?. இட ஒதுக்கீட்டுக்காக குரல் எழுப்பும் திமுக, நில ஒதுக்கீட்டுக்காக குரல் எழுப்பவில்லை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/PSZirwzh-4E?si=Do-qelVJ1AhMPjhT&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;விவசாயிகளிடம் நிலங்களை இருந்து எப்படி பிடுங்குவது என ஆட்சியளார்கள் மிக மோசமான நிலையில் உள்ளனர். நெய்வேலி விவசாயிகள் இன்னமும் போராடி கொண்டிருக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகமான பஞ்சமி நிலம் உள்ளது. காணாமல் போன நிலத்தை கண்டுபிடிக்க அரசை வலியுறுத்துகிறேன்&amp;rdquo; என்று கூறினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், &amp;ldquo;நிலம் என்பது விவசாயிகளுக்கு பொருத்தவரை மிக முக்கியமான ஒன்று &amp;nbsp;விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறிக்கக்கூடிய காரியத்தில் ஆட்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். அதற்கான புதிய புதிய சட்டங்களை இயற்றுகிறார்கள், இதன் விளைவாக விவசாயிகளை விட்டு விவசாயத்தை வெளியேற்றுவதும், அதனால் விவசாய வேளாண் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;ஏற்கனவே திமுக 2021-26 ஆட்சி காலத்தில் நிலம் ஒருங்கிணைப்பு சட்டம் 2023 என்ற பெயரில் ஒரு சட்டத்தை கொண்டு கொண்டு வந்து நீர் நிலையாக இருந்தாலும், கிராமத்திற்குபொதுவான நிலமாக இருந்தாலும், நஞ்சை நிலமாக இருந்தாலும், புஞ்சை நிலமாக இருந்தாலும், எந்தத் துறைக்கு சொந்தமான நிலமாக இருந்தாலும், அரசாங்கம் ஒரு திட்டத்திற்கு தேவை என்று நினைத்தால் சிறப்பு திட்டம் என்று அதற்கு ஒரு பெயரைக் கொடுத்து எல்லாத் துறைக்கு சொந்தமான நிலையை கையகப்படுத்திக் கொள்ளலாம் என்று மிக மோசமான ஒரு சட்டத்தை ஏற்கனவே அவர்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள். அந்த சட்டம் கொண்டு வந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில அளவில் பல போராட்டங்கள் நடைபெற்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இப்போது வந்துள்ள புதிய தவெக ஆட்சி இந்த மோசமான நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் எதிர்காலத்திற்கு பாதகமான ஏரிகளை குளங்களை நீர்நிலைகள் உட்பட தனியாக அம்சங்கள் என்பது அந்த சட்டங்கள் இருக்கிறது. ஆகவேதான் அந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வற்புறுத்துவது. கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் நடந்து முடிந்திருக்க கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரில் கடைசி நாளில் பல புதிய சட்டங்கள் என்பது இந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதில் நிலம் சம்பந்தமாக ஒரு சட்டம் நஞ்சை நிலங்களை வேறு பணிகளுக்கு மாற்றுவதற்கு ஏற்கனவே உள்ளாட்சி மன்றம் அற்புதங்களை பெற வேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர்களே இது பெற வேண்டும் என 1971 ஆம் ஆண்டில் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் தான் இப்போது திருத்தம் கொண்டு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் பெற வேண்டியது இல்லை உள்ளாட்சி மன்றங்களின் தீர்மானங்களும் தேவையில்லை மாநில நகர நிர்வாகம் ஒப்புதல் இயக்குனர் கொடுத்தால் போதும் என்ற சட்டம் நிறைவேற்றி இருக்கிறார்கள். இது உள்ளாட்சிஅதிகாரத்தை பறிக்கக் கூடியது. நிலம் சம்பந்தமாக வருவாய் துறைக்குதான் தெரியும், நகர நிர்வாக துறைக்கு தெரியாது. ஆகவே அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;திருச்சியில் விவசாயிகள் போராடும் நிலையில் வீட்டுக்காவலில் வைப்பது கண்டனத்துக்குரியது. உடனடியாக அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். விவசாய சங்க தலைவர்களிடம் பேசி அரசு தீர்வு காண வேண்டும்.&amp;nbsp;&lt;br /&gt;இப்போது கூட எங்கள் ஆதரவில்தான் &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; ஆட்சி இருக்கிறது, சகலத்திற்கும் ஆதரவை தெரிவித்துக் கொண்டிருக்கிறோம்?. அப்போது என்ன கடைபிடித்தோமோ இப்போதும் அதைத்தான் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறோம். இரட்டை நிலைப்பாடு என்பது கிடையாது, ஆட்சிக்கு ஆதரவு என்பது &amp;nbsp;நாங்கள் எடுத்த அரசியல் நிலைப்பாடு தொடர்கிறது; இந்த இடத்தில் நாங்கள் எந்த அணியிலும் இல்லை அதே நேரத்தில் தேர்தலை புறக்கணிக்க வேண்டாம் என இடதுசாரிகள் போட்டியிடுகிறது; இதில் என்ன இரட்டை நிலைப்பாடு?&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட வேண்டியது அனைத்துக் கட்சியின் கோரிக்கை, எந்த இடத்தை தேர்வு செய்தார்கள். அந்த இடத்தின் தன்மை குறிதது சொல்ல வேண்டும், கும்மிடிப்பூண்டி என பொதுவாக கூறியிருக்கின்றனர்&amp;rdquo; என்று அவர் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/food/make-this-tasty-breakfast-with-leftover-rice-274564&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/d150867cf9ce1f1608a8b21d258050c31789535705388113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[குமுறல் முடிந்தது... குளிர்ச்சி தொடங்கியது! மயிலாடுதுறை எல்லையைத் தொட்டது மேட்டூர் நீர்!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-cauvery-water-reaches-thiruvalankadu-shutter-release-tnn-274424</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-cauvery-water-reaches-thiruvalankadu-shutter-release-tnn-274424#respond</comments><pubDate>Sun, 13 Sep 2026 19:53:21 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-cauvery-water-reaches-thiruvalankadu-shutter-release-tnn-274424</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை:&lt;/strong&gt; தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாய மற்றும் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீரானது, தனது நீண்ட நெடிய பயணத்தைக் கடந்து தற்போது கடைமடை மாவட்டமான மயிலாடுதுறையை வந்தடைந்துள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக பாசனத்திற்குத் தண்ணீரின்றி வாடி நின்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மேட்டூர் அணை திறப்பும் பாசன திட்டமும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுவாக டெல்டா மாவட்டங்களின் குறுவை மற்றும் சம்பா சாகுபடிப் பணிகளுக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறந்து விடப்படுவது தொன்றுதொட்டு வரும் வழக்கமாகும். ஆனால் இந்த ஆண்டு காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தாலும், அணையின் நீர்மட்டம் குறைந்த அளவிலேயே இருந்ததாலும் வழக்கமான தேதியில் தண்ணீரைத் திறக்க இயலாத சூழல் நிலவியது. இதனால் டெல்டா விவசாயிகள் தங்களது சாகுபடிப் பணிகளைத் தொடங்குவதில் பெரும் தாமதமும் கவலையும் அடைந்திருந்தனர். இந்த நிலையை போக்கும் வகையில், தென்மேற்கு பருவமழை கை கொடுத்ததைத் தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஜோசப் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; செப்டம்பர் 1-ஆம் தேதி அன்று மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி நீரை முறைப்படி திறந்து வைத்தார். தொடக்கத்தில் பாசனத்தின் தொடக்கக் கட்டத் தேவைகளுக்காக விநாடிக்கு 3,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு, பின்னர் அணையின் நீர்வரத்து மற்றும் தேவைகளுக்கேற்ப இதன் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டது.&amp;nbsp;இந்த சுழற்சியில் முதற்கட்டமாக 45 நாட்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று அரசினாலும் நீர்வள ஆதாரத்துறையினாலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கடைமடை எல்லையில் நீர் வரத்தும் சிறப்பு வரவேற்பும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேட்டூரில் இருந்து புறப்பட்ட காவிரி நீரானது திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைக் கடந்து, இன்று காலை 10 மணி அளவில் காவிரி கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையை வந்தடைந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தின் நுழைவு வாயிலான திருவாலங்காடு முதல் கதவணை மற்றும் விக்ரமன் ஆறுகளின் தலைப்பு பகுதியில் அமைந்துள்ள நீர் தேக்கியை நீர் வந்தடைந்த போது, அப்பகுதியில் திருவிழா போன்ற சூழல் நிலவியது. கரையெங்கும் திரண்டிருந்த ஏராளமான விவசாயிகளும் பொதுமக்களும் காவிரி தாயை வணங்கி மகிழ்ந்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொடர்ந்து, நிகழ்விடத்தில் முகாமிட்டிருந்த நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் சங்கர் மற்றும் உதவி பொறியாளர் யாஷிகா ஆகியோரின் முன்னிலையில் காவிரி அன்னையை வரவேற்கும் சிறப்பு நிகழ்வுகள் விமரிசையாக நடைபெற்றன. காவிரி ஆற்றிற்குப் புனித தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதிகாரிகளும் பொதுமக்களும் ஆற்றின் நீரில் மலர்களைத் தூவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, பாசனத் தேவைகளுக்காக கதவணைகள் உயர்த்தப்பட்டு, நொடிக்கு 803 கன அடி தண்ணீர் விக்ரமன் ஆறு மற்றும் காவிரி முதன்மை ஆறுகளில் திறந்து விடப்பட்டது. துள்ளி ஓடி வரும் காவிரி நீரைக் கண்டு கரையோரம் திரண்டிருந்த விவசாயிகள் கைகூப்பி தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விநியோக முறையும் அதிகாரிகளின் விளக்கமும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காவிரி நீர் விநியோகம் தொடர்பாக நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் விரிவான விளக்கங்களை அளித்துள்ளனர். மேட்டூர் அணையின் பாரம்பரிய நீர் மேலாண்மை விதிகளின் படி, ஆற்றில் திறக்கப்படும் நீரானது முதன்முதலில் காவிரி கடலுடன் சங்கமிக்கும் பூம்புகாருக்குச் சற்று முன்னதாக அமைந்துள்ள மேலையூர் கடைமடை கதவணை பகுதியைச் சென்று அடைய வேண்டும். இவ்வாறு பிரதான ஆற்றில் நீர் கடைமடை வரை முழுமையாகச் சென்றடைந்த பிறகே, அதன் குறுக்கே உள்ள பிற கிளை ஆறுகள், பாசன வாய்க்கால்கள் மற்றும் விநியோகக் கால்வாய்களுக்குத் தண்ணீர் பிரித்து அனுப்பப்படுவது வழக்கமாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனடிப்படையில், தற்போது திறந்து விடப்பட்டுள்ள நீரானது அடுத்த ஓரிரு தினங்களில் மேலையூர் கடைமடை கதவணையை முழுமையாகச் சென்றடையும் என்றும், அதன் பின்னர் அனைத்துக் கிளை ஆறுகள் மற்றும் கிராமப்புற வாய்க்கால்களுக்குத் தண்ணீர் முறைப்படி பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி நீர் சென்று சேருவதை உறுதி செய்ய நீர்வளத்துறை ஊழியர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விவசாயிகளின் கோரிக்கையும் எதிர்பார்ப்பும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நீண்ட எதிர்பார்ப்பிற்குப் பிறகு காவிரி நீர் கடைமடைக்கு வந்தடைந்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள காவிரி டெல்டா விவசாயிகள், அரசுக்கு முக்கியமான கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளனர். தாமதமாக நீர் வந்து சேர்ந்துள்ளதால், சம்பா சாகுபடி பணிகளை விரைந்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர். எனவே, பாசனக் கால்வாய்களில் தண்ணீரை 'முறை வைப்பு' (சுழற்சி முறை) அடிப்படையில் திறக்காமல், தொடர்ந்து இடைவெளியின்றி முழு கொள்ளளவில் திறக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தடைபடாத நீர் விநியோகம் இருந்தால் மட்டுமே கடைக்கோடி வயல்கள் வரை நீர் சென்று சேர்ந்து, சம்பா மற்றும் தாளடி சாகுபடிகளை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். காவிரி நீர் வரத்தால் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் விவசாயப் பணிகள் தற்போது களைய கட்டத் தொடங்கியுள்ளன.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/13/6878281222e0cedf648c35c497da2d361789309349317186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மதுரை மக்களே இந்த விடயம் தெரியாம.. வியாழக்கிழமை மாட்டுத்தாவணி மார்கெட் பக்கம் போயிராதீங்க !]]></title><link>https://tamil.abplive.com/agriculture/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-2026-mattuthavani-vegetable-market-holiday-tnn-274385</link><comments>https://tamil.abplive.com/agriculture/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-2026-mattuthavani-vegetable-market-holiday-tnn-274385#respond</comments><pubDate>Sun, 13 Sep 2026 12:23:04 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ விவசாயம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/agriculture/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-2026-mattuthavani-vegetable-market-holiday-tnn-274385</guid><description><![CDATA[&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு ஆணை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு, விழா நடைபெறும் நாளான 17.09.2026 (வியாழக்கிழமை) அன்று மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;குடமுழுக்கு விழாவினைக் காண இலட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தருவார்கள்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை மாவட்ட எல்லைக்குட்பட்ட அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இவ்விடுமுறை பொருந்தும். இவ்விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, 26.09.2026 (சனிக்கிழமை) அன்று மதுரை மாவட்டத்தில் முழு பணிநாளாகச் செயல்படும். இந்த விடுமுறை செலாவணி முறிச் சட்டம், 1881-ன் (Negotiable Instruments Act, 1881) கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசரப் பணிகளைக் கவனிக்கும் வகையில் மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறைந்தபட்சப் பணியாளர்களுடன் இயங்கும். குடமுழுக்கு விழாவினைக் காண இலட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தருவார்கள் என்பதால், பொதுமக்களின் வசதிக்காகவும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகவும் இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் 17/09/26 வியாழக்கிழமை விடுமுறை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை மாநகரில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் ஆலய திருக்குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) வைபவம் வருகின்ற 17.09.2026-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளதையொட்டி மதுரை மாநகர், மாநகரைச் சுற்றியுள்ள பகுதிகள், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து இலட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பேருந்துகள், இரயில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கும்பாபிஷேக விழாவினை காண வந்து செல்லக்கூடும் என்பதால், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திருக்கோவிலுக்கு வந்து செல்வதற்கும் போக்குவரத்து இடையூறு இல்லாமல் சீரான போக்குவரத்தினை ஏற்படுத்தும் பொருட்டும் மதுரை மாநகர காவல்துறையின் உத்தரவு படி நமது வணிக வளாகம் விடுமுறை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/13/041c190a1d4d00295e2f3b412e9517d81789282329339184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[Vinayagar Chaturthi 2026 ; மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட் (13.09.2026) பூக்கள் விலை நிலவரம் !]]></title><link>https://tamil.abplive.com/agriculture/ganesh-chaturthi-2026-madurai-malligai-price-increase-mattuthavani-flower-market-low-production-tnn-274383</link><comments>https://tamil.abplive.com/agriculture/ganesh-chaturthi-2026-madurai-malligai-price-increase-mattuthavani-flower-market-low-production-tnn-274383#respond</comments><pubDate>Sun, 13 Sep 2026 11:54:02 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ விவசாயம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/agriculture/ganesh-chaturthi-2026-madurai-malligai-price-increase-mattuthavani-flower-market-low-production-tnn-274383</guid><description><![CDATA[&lt;p&gt;மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலை நிலவரம் குறித்த முழு நிலவரம்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் ( 13.09.2026) விலை நிலவரம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது மலர் வணிக வளாகம். இங்கு வாடிப்பட்டி அலங்காநல்லூர் பாலமேடு திருப்பரங்குன்றம் திருமங்கலம் வலையங்குளம் சிலைமான் வரிச்சியூர் மேலூர் கொட்டாம்பட்டி ஆகிய பகுதிகளில் விளைவிக்கப்படுகின்ற பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. மேலும் அண்டை மாவட்டங்களான திண்டுக்கல் தேனி சிவகங்கை இராமநாதபுரம் விருதுநகர் மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் வியாபாரிகளால் மதுரை மலர் சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt; மதுரை மல்லிகைக்கு உலகளாவிய சந்தை வாய்ப்பு உண்டு&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மேற்கண்ட பகுதிகளில் விளையும் மதுரை மல்லிகைக்கு உலகளாவிய சந்தை வாய்ப்பு உண்டு. இதன் நறுமணம், நீடித்த தன்மை போன்றவை காரணமாக மதுரை மல்லிகைக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கி உள்ளது. இதன் காரணமாக மதுரையிலிருந்து துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கும், மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்:&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;
&lt;p&gt;மதுரை மல்லிகைப் பூ கிலோ கிலோ ரூ.1500 முதல் ரூ.1700,&lt;/p&gt;
&lt;p&gt;பிச்சிப் பூ கிலோ ரூ.1000,&lt;/p&gt;
&lt;p&gt;முல்லைப் பூ கிலோ ரூ.900,&lt;/p&gt;
&lt;p&gt;செவ்வந்தி பூ கிலோ&amp;nbsp; ரூ.250,&lt;/p&gt;
&lt;p&gt;சம்பங்கிப் பூ கிலோ ரூ.300,&lt;/p&gt;
&lt;p&gt;செண்டு மல்லிப் பூ கிலோ ரூ.80,&lt;/p&gt;
&lt;p&gt;கனகாம்பரம் பூ கிலோ ரூ.1000 - ரூ.2000 வரை,&lt;/p&gt;
&lt;p&gt;ரோஸ் கிலோ ரூ.300,&lt;/p&gt;
&lt;p&gt;பட்டன் ரோஸ் கிலோ ரூ.250,&lt;/p&gt;
&lt;p&gt;பன்னீர் ரோஸ் கிலோ ரூ.350,&lt;/p&gt;
&lt;p&gt;கோழிக்கொண்டை&amp;nbsp; பூ கிலோ ரூ.80,&lt;/p&gt;
&lt;p&gt;அரளிப் பூ கிலோ ரூ.250,&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;மரிக்கொழுந்து ரூ.150,&lt;/p&gt;
&lt;p&gt;தாமரை (ஒன்றுக்கு) ரூ.50 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;நாளை செப்டம்பர் 14ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாப்பட இருக்கிறது. அந்தந்த மாநிலங்கள், மாவட்டங்கள், நகரங்கள், கிராமங்களில் இதற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் செய்து வருகின்றனர். வீடுகளிலும் &lt;a title=&quot;விநாயகர் சதுர்த்தி&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vinayagar-chaturthi-2026&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விநாயகர் சதுர்த்தி&lt;/a&gt;யை கொண்டாட பெண்கள் அதற்கான பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மதுரையில் பூ மார்கெட்டில் பூக்கள் விலை அதிகளவு உயராமல் நிதானமாக உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/10/8c4d2551bf80966e18274bc4ef6e9c3d_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சோதியக்குடி ஊராட்சியை சூறையாடிய சூறைக்காற்று தென்னை, வாழை மரங்கள் சாய்ந்து பெரும் சேதம்!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-sirkazhi-heavy-rain-sothiyakudi-crop-damage-tnn-273943</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-sirkazhi-heavy-rain-sothiyakudi-crop-damage-tnn-273943#respond</comments><pubDate>Tue, 8 Sep 2026 19:47:52 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-sirkazhi-heavy-rain-sothiyakudi-crop-damage-tnn-273943</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை:&lt;/strong&gt; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென வீசிய பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சீர்காழி அருகே அமைந்துள்ள சோதியக்குடி ஊராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த இயற்கை சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சோதியக்குடி, கீரங்குடி, கொன்னக்காட்டு படுகை, மாதிரி வேலூர், சிதம்பரநாதபுரம், மடப்புரம், சாமியம், கடுக்காய்மரம் மற்றும் குன்னம் உள்ளிட்ட கிராமங்களில் நள்ளிரவில் வீசிய வீரியமிக்க காற்று, அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்கியுள்ளது. மழை மற்றும் காற்றின் கொடூரத் தாக்குதலால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களும் உட்கட்டமைப்புகளும் பெருமளவில் சேதமடைந்துள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை சாகுபடி நாசம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் பெருமளவில் குறுவை சாகுபடியையே நம்பியுள்ளனர். நிலத்தை உழுது, உரம் போட்டு, அல்லும் பகலும் பாடுபட்டு வளர்த்த நெற்பயிர்கள் அனைத்தும் தற்போது அறுவடைக்கு முற்றிலுமாகத் தயாராக இருந்தன. இன்னும் சில தினங்களில் அறுவடைப் பணிகளைத் தொடங்கவிருந்த நிலையில், நேற்று முன்தினம் வீசிய சூறாவளிக் காற்றும் கனமழையும் விவசாயிகளின் கனவைச் சிதைத்துவிட்டது. சோதியக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவை நெற்பயிர்கள் அனைத்தும் நிலைகுலைந்து தரைமட்டமாகச் சாய்ந்துள்ளன. தொடர் மழையின் காரணமாக வயல்களில் நீர் தேங்கியுள்ளதால், சாய்ந்த நெற்பயிர்கள் முழுமையாகத் தண்ணீரில் மூழ்கி அழுகும் அபாய நிலை உருவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தோட்டக்கலைப் பயிர்களும் பெருமளவில் சேதம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நெற்பயிர்கள் மட்டுமன்றி, அப்பகுதி மக்களின் மற்றொரு முக்கிய வாழ்வாதாரமாக விளங்கும் தோட்டக்கலைப் பயிர்களும் இந்தச் சூறாவளிக் காற்றிற்குத் தப்பவில்லை. கிராமங்களில் பரவலாக வளர்க்கப்பட்டு வந்த தென்னை மரங்கள், மாமரங்கள் மற்றும் வாழைத் தோட்டங்கள் பலத்த காற்றின் வேகத்தைத் தாங்க முடியாமல் வேரோடும், நடுப்பகுதியிலும் முறிந்து விழுந்துள்ளன. குறிப்பாக, காய்க்கும் பருவத்தில் இருந்த தென்னை மற்றும் மாமரங்கள் வீழ்ந்து கிடப்பது விவசாயிகளுக்கு ஈடுசெய்ய முடியாத பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. குலை தள்ளிய வாழை மரங்கள் அனைத்தும் காற்றில் சரிந்து கிடப்பதால், அப்பகுதியே பெரும் புயல் தாக்கியது போன்ற தோற்றத்தை அளிக்கிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;50-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மழையை விடவும் வீசிய சூறாவளிக் காற்றின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன. சோதியக்குடி ஊராட்சியை இணைக்கும் பிரதான பாதைகள் மற்றும் விவசாய நிலப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த ஏராளமான மின்சாரக் கம்பங்கள் அடியோடு முறிந்து கீழே விழுந்துள்ளன. மின்சாரக் கம்பிகள் அனைத்தும் அறுந்து வீதிகளிலும் வயல்வெளிகளிலும் சிதறிக் கிடக்கின்றன. அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை என்றாலும், மின்சாரக் கட்டமைப்பு முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ளதால் அப்பகுதியில் மின் விநியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;இரண்டாவது நாளாக இருளில் மூழ்கிய கிராமங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மின்சாரக் கம்பங்கள் முறிந்து விழுந்ததன் காரணமாக, நேற்று முதல் தொடர்ந்து இரண்டாவது நாளாகப் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் முற்றிலும் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. மின்சாரம் இல்லாததால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு, கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், செல்போன் கோபுரங்களின் இயக்கம் பாதிக்கப்பட்டதால் வெளி உலகத் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. முறிந்து விழுந்த மின்கம்பங்களை அகற்றி, புதிய கம்பங்களை நட்டு, உயர் அழுத்த மின்சாரக் கம்பிகளை மீண்டும் இணைக்கும் பணிகள் சவாலானவை என்பதால், சீரான மின் விநியோகம் திரும்பக் குறைந்தது நான்கு நாட்களுக்கு மேல் ஆகும் என்று கிராம மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்கக் கோரிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொடர் இருள், குடிநீர் தட்டுப்பாடு மற்றும் பயிர் இழப்பால் சோதியக்குடி ஊராட்சி மக்கள் பெரும் வேதனைக்கு ஆளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு உடனடியாக மின்சார வாரிய ஊழியர்களை அனுப்பி, போர்க்கால அடிப்படையில் புதிய மின்கம்பங்களை நட்டு மின் விநியோகத்தைச் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல, தண்ணீரில் மூழ்கி அழுகி வரும் 70 ஏக்கர் நெற்பயிர்களையும், சேதமடைந்த தென்னை, மா, வாழை உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களையும் வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை உடனடியாக நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். சேதக் கணக்கெடுப்பை விரைவாக நடத்தி, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக அரசு உரிய நிவாரணத் தொகையை உடனடியாக வழங்கி உதவ வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/08/21a207e0058d87243cc585dacb611a901788876882464186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[காகிதத்தில் 110... களத்தில் 30!  கிணறு வெட்டிய ரசீது கதையாக மாறிய விவசாயிகளின் நிலை...]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/mayiladuthurai-farmers-protest-tamil-nadu-civil-supplies-corporation-paddy-procurement-rain-damage-273810</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/mayiladuthurai-farmers-protest-tamil-nadu-civil-supplies-corporation-paddy-procurement-rain-damage-273810#respond</comments><pubDate>Mon, 7 Sep 2026 14:29:20 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/mayiladuthurai-farmers-protest-tamil-nadu-civil-supplies-corporation-paddy-procurement-rain-damage-273810</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து, அறுவடை செய்த நெல்லை தாமதமின்றி கொள்முதல் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகம் முன்பு விவசாயிகள் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தாக்கம் ஏற்படுத்திய குறுவை சாகுபடி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் விவசாயிகள் ஆர்வத்துடன் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்திருந்தனர். தற்போது மாவட்டம் முழுவதும் குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் தாங்கள் கஷ்டப்பட்டு அறுவடை செய்த நெல்மணிகளை உடனடியாக அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் களத்துமேடுகளிலும், சாலை ஓரங்களிலும் திரட்டி வைத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஆட்சியரின் அறிவிப்பும் கள நிலவரமும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முன்னதாக, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்டம் முழுவதும் 105 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகமும் மாவட்ட ஆட்சியரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். ஆனால், கள நிலவரப்படி வெறும் 30க்கும் குறைவான இடங்களில் மட்டுமே தற்போது கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. &quot;அப்போ ஆட்சியர் சொன்ன மீதி 105 கொள்முதல் நிலையங்கள் எங்கே?&quot; என்று விவசாயிகள் கொதிப்புடன் கேள்வி எழுப்புகின்றனர். &amp;zwnj;அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நம்பி நெல்லை கொண்டு வந்து குவித்த விவசாயிகள், தற்போது திறக்கப்படாத கொள்முதல் நிலையங்களின் வாசலில் கதியற்று காத்துக்கிடக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;10 நாட்களாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெரும்பாலான கொள்முதல் நிலையங்கள் செயல்படாததால், ஒவ்வொரு நிலையத்தின் அருகிலும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளியில் தேங்கிக் கிடக்கின்றன. கொள்முதல் செய்ய ஆட்களும், தேவையான சாக்கு மூட்டைகளும், தார்ப்பாய்களும் உடனடியாக வழங்கப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கனமழையால் வீணான உழைப்பு: விவசாயிகள் வேதனை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தச் சூழலில், கடந்த இரண்டு தினங்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரெனப் பெய்த கனமழை விவசாயிகளின் தலையில் பேரிடியாக விழுந்தது. உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால், திறந்தவெளியில் குவிக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நனைந்த நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளதாகவும், நிறமாற்றம் அடைந்து அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர். இதனால் தங்களுக்கு ஏக்கருக்கு பல ஆயிரக்கணக்கில் நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நுகர்பொருள் வாணிபக் கழக முற்றுகை &amp;amp; சாலை மறியல்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மழையினால் ஏற்பட்ட சேதத்தையும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கையும் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அவசரப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கொள்முதல் நிலையங்களை உடனடியாக இயக்க வேண்டும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* தேங்கிக் கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் தங்கு தடையின்றி கொள்முதல் செய்ய வேண்டும்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* மழையில் நனைந்து சேதமடைந்த நெல்லுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;போக்குவரத்து பாதிப்பு &amp;amp; அதிகாரிகள் பேச்சுவார்த்தை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விவசாயிகளின் இந்த அதிரடி போராட்டத்தால் மயிலாடுதுறை - கும்பகோணம் பிரதான சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும், நுகர்பொருள் வாணிபக் கழக உயர் அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் அவசர பேச்சுவார்த்தை நடத்தினர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அனைத்து கொள்முதல் நிலையங்களையும் உடனடியாக முழு அளவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கூடுதல் சாக்கு மூட்டைகள் மற்றும் லாரிகள் வரவழைக்கப்பட்டு நெல் கொள்முதல் விரைவுபடுத்தப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். அதிகாரிகளின் உறுதிமொழியைத் தொடர்ந்து விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இருப்பினும், ஓரிரு நாட்களில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மாவட்டம் தழுவிய அளவில் பெரிய அளவிலான தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/07/767e866f231a151ada9ab20dcad300d91788771475190186_original.jpg" width="220"/></item></channel></rss>