மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மழையினால் பாதிக்கப்பட்ட பயிரிகளுக்கு விடுபட்ட   நிவாரணம் வழங்க கோரி  மாவட்ட ஆட்சியர் முன்பு தரையில் அமர்ந்து விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.


மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவம் தவறிய மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழிந்தது. மேலும்  தமிழகத்திலேயே ஒரே நாளில் அதிக மழையாக 43 சென்டிமீட்டர் மழையானது இங்கு  பதிவானது. இதனை பார்வையிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக்களில் உள்ள குடும்ப அட்டை ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கினார். அதன் அடிப்படையில் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் பாதிக்கப்பட்ட நெற்பயிரிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. 




இதில் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள கடக்கம், அகர ஆதனூர், பெரம்பூர், முத்தூர், அகர வல்லம், கிளியனூர் எடக்குடி, கொடை விளாகம் ஆகிய எட்டு கிராமங்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் பயிர் பாதிப்பிற்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. நிவாரணம் வழங்க கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் இன்று விவசாயிகள் காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் தலைவர் குரு கோபி கணேசன் தலைமையில் 30 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் உள்ளே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 


20 நாட்களிலேயே விளைந்த நெற் பயிர்கள்..விவசாயிகள் அதிர்ச்சி...விதை நெல்லை அரசே வழங்க கோரிக்கை




அவர்கள் அளித்த மனுவில், விடுபட்டு போன கிராமங்களுக்கான இரண்டாம் தடவையாக கணக்கெடுப்பு செய்யப்பட்ட விவசாயிகளின் 1169.360 ஹேக்டேர் நிலங்களுக்கான தொகை 2 கோடியே 33 லட்சத்து 87 ஆயிரத்து 200 ரூபாய் தொகையினை, 1738 விவசாயிகளுக்கு வழங்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும், பருவம் தப்பிய மழையினால் பாதிக்கப்பட்ட உளுந்து பயருக்கான நிவாரணமாக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட ஹெட்டேருக்கு 3000 ரூபாய் என்பதை 17 ஆயிரத்து 917 விவசாயிகளுக்கு மூன்று கோடியே 52 லட்சத்து 72 ஆயிரத்து 830 ரூபாய் வழங்க வேண்டும், மேற்கண்ட இரண்டிற்கும், பருவம் தப்பிய மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் மற்றும் பயிர் வகை பயிர்களுக்கு கணக்கெடுப்பின் அடிப்படையில் திருந்திய நிதி ஒதுக்கீடு செய்து வழங்க ஆவண செய்ய வேண்டும் என்று  கோரிக்கை விடுத்தனர். 


அதிர்ச்சி! ஒரு மாத கால நெற்பயிரை டிராக்டரை ஏற்றி அழித்த விவசாயி - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?





அப்போது மயிலாடுதுறை  மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் கலைந்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


அரை குறை ஈரப்பதத்தில் விதைகள் முளைத்து கெட்டுப் போனதால் 2ஆம் முறையாக விதை ஊண்றும் விவசாயிகள்