மேலும் அறிய

கவலைப்பட வேண்டாம்... என்ன செய்யணும்னு நாங்க சொல்றோம்!!!

தென்னை மரங்கள் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும் தென்னந்தோப்புகளில் மகசூல் சரியில்லை என்று விவசாயிகள் கவலையடைகின்றனர். தீர்வு குறித்து வேளாண்துறை ஆலோசனை அளித்துள்ளது.

தஞ்சாவூர்: கஜா புயலுக்கு பின்னர் தஞ்சை மாவட்ட அளவில் தென்னை மரங்கள் வளர்ப்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில் தென்னந்தோப்புகளில் மகசூல் சரியில்லை என கவலைப்பட வேண்டாம். கன்றுகள் நடுவது முதல் கண்காணித்தால் காய்க்கும் திறன் அதிகரிக்கும் என வேளாண்துறை ஆலோசனை அளித்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் நெல் பயிர் பிரதானமாக இருந்தாலும், நிலக்கடலை, சோளம், உளுந்து, பயறு போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலின் போது தென்னை மரங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தென்னை மரங்கள் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும் தென்னந்தோப்புகளில் மகசூல் சரியில்லை என்று விவசாயிகள் கவலையடைகின்றனர். இதற்கு என்ன தீர்வு என்பது குறித்து வேளாண்துறை ஆலோசனை அளித்துள்ளது.

தென்னை ஒரு கற்பக விருட்சம். இதனுடைய அனைத்து பாகங்களும் ஒரு வகையில் பயன்தரக்கூடியதாக உள்ளது. தென்னையை குறிப்பிட்ட இடைவெளியில் நடுவதன் மூலம் சூரிய ஒளியை பயன்படுத்தி மாவு பொருள் தயார் செய்கிறது. சூரிய வெளிச்சம் கிடைக்காத போது பூக்கள் வளர்ச்சிக்கான ஹார்மோன் உற்பத்தியும் தடைபடுகிறது. எனவே சரியான இடைவெளியில் தென்னை நாற்றுகளை நடவு செய்வது அவசியமாகிறது.

தென்னையில் நிலையான விளைச்சலைப் பெற 25×25 அடி இடைவெளியில் நட வேண்டும். வளர்ச்சி அடைந்த தென்னையின் வேர்பகுதி ஒரு கன மீட்டர் சுற்றளவு இருக்க வேண்டும். ஒரு கன மீட்டரில் சுமார் 7500 வேர்கள் உற்பத்தியாகிறது. எனவே 3×3×3 அடி குழிகள் தென்னங்கன்று நடுவதற்கு ஏற்றதாகும். இவ்வாறு நடப்படும் மரங்களில் பாளைகள் 45 மாதங்களில் வெளி வருகின்றன. மேலும் தண்டு பகுதி, அடி முதல் நுனி வரை சீராக காணப்படும். இவ்வாறு நடப்படும் மரங்கள் புயலினால் பாதிப்படையாமல் நன்கு வளரும் தன்மை கொண்டிருக்கும். இவ்வாறு நடவு செய்வதால் எக்டருக்கு 175 மரங்கள் சதுர முறையில் நட முடியும். வாய்க்கால் ஓரத்திலும், வரப்புகளிலும் ஒற்றை வரிசையாக நடவு செய்யும் போது 20 அடி இடைவெளியில் நட வேண்டும்.

முக்கோண முறையில் 22 அடி இடைவெளியில் குட்டை ரகங்களை எக்டேருக்கு 236 மரங்களும், 25 அடி இடைவெளியில் நடும் போது 205 மரங்களும் நடலாம். குழிகளை தோண்டி நடவு செய்யும் முன் காய்ந்த சருகுகளை இட்டு எரிப்பதன் மூலம் பூச்சி, பூஞ்சாணம் நூற்புழுக்களின் தாக்குதலை தவிர்க்கலாம். குழியில் ஒரு அடி ஆழத்திற்கு மண்ணுடன் மக்கிய தொழுஉரத்தையும் கலந்து நிரப்ப வேண்டும். கன்றுகளில் உள்ள வேர்களை நீக்கி குழியில் கன்றின் தேங்காய் பகுதி பதியும்படி நட வேண்டும்.

கன்றுகள் புதிய வேர்கள் பிடிக்கும் வரை ஆடாமல் இருக்க நீண்ட குச்சிகளை ஊன்றி, கன்றை குச்சியில் கட்டி விட வேண்டும். நடப்பட்ட கன்று வெயிலில் வாடி வதங்காமல் இருக்க பனை, தென்னை ஓலைகளைக் கட்டி 3 மாதங்கள் வரை நிழல் கொடுக்க வேண்டும். குழியில் ஈரம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

தென்னைக்கு மண் பரிசோதனைப்படி உரமிடுதல் மிகவும் சிறந்தது. முதல் ஆண்டில் தென்னையின் தூரிலிருந்து 60 செ.மீ தூரத்திலும் ஒவ்வொரு ஆண்டும் 30 செ.மீ கூடுதல் தூரத்தில் வட்ட பாத்திகளை அமைத்து உரத்தினை பரவலாக இட்டு நன்கு கொத்தி விட்டு நீர் பாய்ச்ச வேண்டும். உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியா தென்னந்தோப்பு கழிவுகள், ஆலை சாம்பல் சர்க்கரை ஆலை கழிவு போன்றவைகளை இட்டு மண் வளத்தை கூட்டலாம்.

5 வருடத்திற்கு மேற்பட்ட மரங்களுக்கு சுட்ட சுண்ணாம்பு-1 கிலோ, மக்னீசியம் சல்பேட் 500 கிராம், சாதா உப்பு 2 கிலோ வீதம் இட்டு கொத்தி விட்டு நீர் பாய்ச்சலாம். இவ்வாறு செய்வதன் மூலம் ஒரு மரத்திற்கு ஒரு வருடத்தில் 250 காய்களுக்கு குறையாமல் கிடைக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
Embed widget